கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

17 April, 2018

விடிஞ்சது கூட தெரியாம இப்படியா பண்ணுவாங்க


மனைவி: ஏங்க இன்னும் போனையே நோண்டிக் கிட்டு இருக்கிங்க...

கணவன் : தூக்கம் வரலம்மா, வந்ததும் தூங்கிடுவேன்.

மனைவி: விடிஞ்சி ஒரு மணி நேரம் ஆவுது எருமை ....!!

கணவன் : ????!!!!???!?////?!!!??????


*******************************


மனைவி மூன்று வயது பையனுக்கு ராஜா கதை சொன்னாள்...

பையன் : நான் பெரியவன் ஆனதும் எனக்கும் மூணு பொண்டாட்டி வேணும்...

அம்மா : எதுக்குடா மூணு ?!!?

பையன் : ஒருத்தி சமைப்பா, ஒருத்தி துணி துவைப்பா, ஒருத்தி பாட்டு பாடுவா...

அம்மா : நாலாவதா ஒண்ணு கட்டிக்கோயேன் ராத்திரி தூங்கறதுக்கு...

பையன் : வேண்டாம்..ம்மா.. நான் உன்கூடதான் தூங்குவேன்...

அம்மாவிற்கு கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது...

அம்மா : அப்போ அந்த மூணு பொண்டாட்டியும் யார்கூட தூங்குவாங்க...?


பையன் : அப்பாகூட தூங்கட்டும்...

இதை கேட்டுக்கொண்டிருந்த அப்பா கண்ணில் இப்போது ஆனந்த கண்ணீர் வருகிறது !!!


*******************************



டாக்டர் : நர்ஸ் அந்த நோயாளிக்கு பிபி இருக்கா?

நர்ஸ் : இல்ல

டாக்டர் : பல்ஸ் இருக்கா?

நர்ஸ் : இல்ல

டாக்டர் : சுகர் இருக்கா?

நர்ஸ் : உயிரே இல்ல, அப்புறம் எப்படி இது எல்லாம் இருக்கும்?


*******************************

1 comment:

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...