கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

09 April, 2018

சில ஆசிரியர்கள் இப்படியா....


அரசு பள்ளியில் தையல் ஆசிரியையாக பணியாற்றி, ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரின் வீட்டுக்கு, திருமண அழைப்பிதழ் கொடுக்க, நண்பருடன் சென்றிருந்தேன்...

வீட்டில் இருந்த மூன்று தையல் மிஷின்களில், பள்ளி மாணவியர் சிலர் தையல் கற்றுக் கொண்டிருந்தனர். ஆசிரியையின் உறவினரான என் நண்பர், 'வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பின், சும்மா இல்லாமல், தையல் சொல்லிக் கொடுத்து, மாதம் ஒரு தொகையை சம்பாதிக்கிறீங்க போலிருக்கே... கூடவே, பென்ஷன் பணம் வேறு; செம குஷி தான்...' என்றார்.

அதற்கு அந்த ஆசிரியை, 'தம்பி, வீட்டில் நானும், என் கணவர் மட்டும் தான் இருக்கோம்; மகனும், மகளும் திருமணமாகி வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தில் இருக்கிறாங்க. எங்களுக்கு பேச்சுத் துணைக்கும், மன ஆறுதலுக்காகவும், வீடு சற்று கலகலப்பாக இருக்கவும், நாலு பேருக்கு உதவியாய் இருக்கலாம்ன்னு தான், இந்த தையல் மிஷின்கள வாங்கிப் போட்டிருக்கேன். 

'பள்ளிக் கூடத்து பிள்ளைக மட்டுமின்றி, ஏழைப் பெண்களுக்கும், இலவசமாக தையல் வகுப்பு நடத்துறேன்; கட்டணம் வாங்குறதில்ல. பென்ஷன் பணம் வருது; அது போதும்...' என்று, 'நச்'சென்று பேசி, மனதில் உயர்ந்து விட்டார்.

ஓய்வு காலத்தை, மகன், மகள், பேரக் குழந்தைகளுடன் செலவிட வாய்ப்பில்லாதோர், இதுபோன்று, தாம் கற்ற கல்வி மற்றும் கைத்தொழிலை பிறருக்கு கற்றுக் கொடுப்பதால், ஓய்வு காலம் நிம்மதியாய் கழிவதுடன், தனிமை உணர்வும் ஏற்படாது!  (திண்டுக்கல் ராமு அவர்களின் கடிதம்...)


பணி ஓய்வுக்கு பிறகு பல்வேறு ஆசிரிய பெருமக்கள்  தன்னுடைய நிறைவு காலத்தை இதுபோன்ற மனநிறைவு தரும் பணியை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்..

எனக்கு தெரிந்த ஆசிரியர்களில் ஒரு ஆசிரியர் அவர் பணி நிறைவுக்கு பிறகு  அந்த பகுதியில் உள்ள ஏழை மாணவர்களுக்கு என்று இயங்கிக்கொண்டிருக்கும் இரண்டு விடுதிகளுக்கு சென்று அங்கு இருக்கும் மாணவ மாணவர்களுக்கு இலவசமாக மாலை நேர வகுப்புகள் எடுத்துவருகிறார்கள்... அவர்களுக்கு தேவைப்படும் போது தன்னுடைய செலவிவேயே பல்வேறு கல்வி உதவிகளை செய்து வருகிறார்...

மேலும் ஒருவர்... நகரில் இருக்கும் வங்கி, தபால் நிலையம், காவல் நிலையம், வட்டாச்சியர் அலுவலகம் என ஒரு நாளைக்கு ஒரு இடம் என சென்று அமர்ந்துக்கொண்டு அங்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு படிவங்கள் புர்த்தி செய்வது அவர்களுக்கு மனு எழுதிக்கொடுப்பது என்று தன்னுடைய சேவையை செய்துக்கொண்டிருக்கிறார்...

ஏன்சார்... வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டியதுதானே என்று ஒருநாள் கேட்டே விட்டேன்... அதற்கு அவர்.. வீட்டில் தனியாக இருப்பதை விட இதுபோன்ற செயல்கள் தான் என் மனதுக்கு நிறைவை தருகிறது..  மேலும் பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்க நேர்கிறது... சில சமயம் தன்னுடை ய நண்பர்கள்.. முன்னாள் மாணவர்கள் ஆகியோரை சந்தித்து உரையாடுகிறேன்.. இந்த வசதி வீட்டில் இருந்தால் கிடைக்காது என்ற விளக்கமும் கொடுத்தார்... வாழ்த்துக்கள் என்று சொல்லி அவர் பணியை பாராட்டிவிட்டு வந்தேன்

இதுபோன்ற நீங்கள் சந்தித்த வித்தியாசமான ஆசிரியர்களை பற்றிச் சொன்னால் மகிழ்வாக இருக்கும்...

3 comments:

  1. அற்புதமான மனிதர்கள். மனிதாபிமானம் நிறைந்தவர்கள். தொடரட்டும் அவர்களது சேவைகள்.

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. இதுபோன்ற ஆசிரியர்கள் நிறையபேர் இருக்கிறார்கள் நண்பரே

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...