கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

02 May, 2018

மனைவியுடன் தனியாக செல்லும் ஆண்களே உஷார்...!


"சார், கல்வி பெரிசா? செல்வம் பெரிசா?"

"உன் பாக்கெட்ல ஒரு பத்து பைசாவாச்சும் இருக்கா???"

"நூறு ரூபாயே இருக்கு, கேட்டதுக்கு பதில் சொல்லுங்க சார்....!"

"ஏன்யா உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா??"

"சார் வார்த்தையை அளந்து பேசுங்க.. அப்புறம் நானும் திருப்பிக் கேப்பேன்.... தாங்க மாட்டீங்க..!"

"பாத்தியா காசு இருக்கான்னு கேட்டப்ப வராத கோபம், அறிவிருக்கான்னு கேட்டதும் எவ்வளவு வந்துச்சு...!!

இப்ப சொல்லு பணம் பெருசா?? அறிவு பெருசா???" :)

******************************


ஆண்கள் கவனத்திற்கு:
(மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும்போது உஷாராக இருக்கவும்)

ஒரு கணவனும் மனைவியும் லிப்ட் ல 10 வது மாடியிலிருந்து கீழே வந்து் கொண்டிருக்கிறார்கள்.

5வது மாடியில் அழகான இளம்பெண் ஒருத்தி லிப்ட் ல ஏறி அந்த கணவன் பக்கத்தில் நிற்க,

அவன் அவளின் அழகில் மயங்கி ஜொள் விடுகிறான்.

சிறிது நேரத்துக்குப்பின் அந்த இளம்பெண் இவனது கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு

\"இனி இப்படி செய்தால் செருப்பு பிஞ்சிரும்\" னு சொல்லிட்டு அவனிடமிருந்து விலகி நிற்கிறாள்.

இவனுக்கோ தன் மனைவி முன்னிலையில் அடிவாங்கிய அவமானம்.

லிப்ட் ல இருந்து இறங்கி வெகுநேரமாகியும் மனைவியிடம் பேச வெட்கி வாயடைத்தான்.

வீட்டிற்கு நடக்கிறார்கள்.

மனைவி : ஏங்க அதையே நினைச்சிகிட்டு.... விடுங்க.....
ஏதாவது பேசிட்டு வாங்க.......

கணவன் : இல்லடி, நான் லிப்ட் ல...

மனைவி : அட, அத தான் விடுங்க னு சொன்னேன்ல.

நீங்க ஜொள் விடுறத பொறுக்காம நான்தான் அவ இடுப்பைக் கிள்ளுனேன்.

கணவன் : (அடிப்பாவி.. சண்டாளி..) மகிழ்ச்சி 😂

இந்த கதையின் நீதி.
ஒரு கண்ணால் இளம்பெண்களை ரசித்தாலும், மறு கண்ணால் மனைவியை கண்காணிக்க வேண்டும்....... ஏன்னா வில்லி கூடவே இருக்கா......

உஷாரய்யா .... உஷாரய்யா....

******************************



( தொலைபேசியில் ஒரு பதற்றமான குரல்...)

"டேய் மச்சான்...
எங்கடா இருக்க?"

"வீட்லதான்டா இருக்கேன்..."

"அப்பாடா... இப்பதான்டா நிம்மதியா இருக்கு...!!"

"ஏன்டா? என்ன விஷயம்??"

"அதில்லடா..... காலையில பேப்பரை பார்த்தேன். அதுல, உங்க தெருவுல வெட்டியா சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் கார்பரேசன்-காரங்க புடிச்சுட்டு போனதா செய்தி போட்டிருந்துச்சு.

அதான்... எங்க நீ மாட்டிகிட்டீயோன்னு பயந்தே போயிட்டேன்.....

******************************


கூட்டம் திமிறிக்கொண்டிருந்த ஒரு கல்யாண வரவேற்பில் மிக அழகான பெண்ணைத் தேடிப் பிடித்துப் பேசினார் நடுத்தர வயது இளைஞர் ஒருவர்.

அவர் : மேடம் .. .. இந்த கல்யாண கலாட்டாவுல என் பொண்டாட்டியைத் தொலைச்சுட்டேன் கொஞ்ச நேரம் என்கூட பேசிட்டிருக்க முடியுமா ? என்று கேட்டார்.

அழகிக்கு கோபம் வந்துவிட்டது.

அழகி : ஏய் மிஸ்டர் என்னை என்னன்னு நெனைச்சுட்டீங்க ? நான் எதுக்கு உங்ககூட பேசணும் ? என்றாள் சீற்றத்தோடு.

அவர் : ஸாரி, மேடம் .. .. .. தப்பா நெனைச்சுக்காதீங்க. அழகான ஒரு பொண்ணோட நான் பேசிட்டு இருக்கறப்பல்லாம் எங்கிருந்தாலும் உடனே ஒடிவந்து என் முன்னால ஆஜராயிடுவா என் பொண்டாட்டி அதுக்காகச் சொன்னேன் - பணிவாகச் சொன்னார் இவர்.

******************************


5 comments:

  1. எல்லாமே பழைய ஜோக்கு..

    ReplyDelete
    Replies
    1. அதுக்காகத்தான் தலைப்பை புதுசா வச்சிருக்கேன்...

      Delete

  2. சில ஜோக் படித்தவை சில ஜோக்ஸ் படிக்காதவை நல்ல கலெக்ஷன்... தொடருங்கள்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...