கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

28 August, 2018

இப்படி செய்யலாமா பெண்களே...


 
வசர அவசரமாக ஓடி
ஒதுங்கி நின்றேன்
அடை மழையை
பார்த்தவுடன்...!


நின்று..
நிதானமாக...
நனைந்து...
நீர் சொட்டச் சொட்ட
பொறுமையாக
வந்தடைந்தது...

என்
பால்ய மனசு...!

*************************


ப்தமின்றி 
உடைப்படும்
ஒரு நீர்குமிழிபோல்....

என் 
கனவுகளில்
கல் எறிந்துவிட்டுப் 
போகிறாய்....

அர்த்தமற்றதாகி விட்டது
என் அத்தனை 
இரவுகளும்...!

******************************


ந்திக்கும் தருவாயில்
அவளிடம்
இப்படியாய்
பேசவேண்டும் என...

மேறுகேற்றி 
வைந்திருந்த
அத்தனை
வார்த்தைகளும்....

மனசெனும்
பெருவெயியில்
சிக்கி சிதைந்து
போகிறது...

பேசாமல்
திரும்பிய
சந்திப்புகளின் முடிவில்...!

***************************
பேசும் படம்....

வாசித்தமைக்கு மிக்க நன்றி..! 


21 August, 2018

ராத்திரில தூங்குனா சிக்ஸ்பேக் வருமா..?





ஏம்மா!! காலையிலே வீட்டுச் செலவுக்கு பணம் கொடுத்தப்போ பத்தாதுன்னு சொன்னே ?? இப்போ பியூட்டி பார்லருக்கு போய்ட்டு வந்திருக்க.??


ஏன்யா ?? லூஸாய்யா நீ ?? 
இதை வச்சு மேக்கப் பண்ணிக்கன்னு நீ தானே சொன்னே ??

********************************



சிரித்தபின் சிந்திக்க வைக்கிற கேள்வி...


பெருசு கேட்டாரே, ஒரு கேள்வி!


விஞ்ஞானிகள் ரொம்ப நாளா ஆய்வு பண்ணிகிட்டு இருந்த ஒரு ஆய்வு கூடத்தில் வயசான வாட்ச்மேன் ஒருவர் இருந்துருக்காரு. அவுங்க இவரை கண்டுக்க கூட மாட்டாங்க. ஒரு நாள் விஞ்ஞானிகள் ரொம்ப ஜாலியா ஆடி பாடிக்கிட்டு இருக்கவும் "என்ன விசயம்"ன்னு கேட்டிருக்கார்.


அவங்களும் "எங்க ஆய்வு முடிய போகுது அதான்"னு சொல்ல இவரு "அப்படி என்ன ஆய்வு பண்ணுனீங்க"ன்னு கேட்டிருக்கார். "எந்த பொருளையும் கரைக்கிற திரவத்தை கண்டுபுடிக்கிற ஆய்வு" ன்னு சொல்லவும். உடனே இவரு ஒரே கேள்விதான் கேட்டாராம். அந்த விஞ்ஞானிகள் அந்த ஆய்வையே கைவிட்டுடாங்களாம்.


அது என்னான்னா?"


அத கண்டுபுடிச்சி எதுல சார் ஊத்தி வைப்பிங்க"ன்னு கேட்டாராம்.


********************************



நண்பர் 1 : பகல்ல தூங்குனா தொப்பை வருமாம்..


நண்பர் 2 : அப்போ ராத்திரியில தூங்குனா சிக்ஸ் பேக் வருமா?


நண்பர் 1 : .....


********************************


நோயாளி : வேகமா ஓடினா மூச்சு பிடிச்சிக்குதே டாக்டர்.


டாக்டர் : அப்ப மெதுவா ஓடுங்க...


நோயாளி : மெதுவா ஓடினா போலீஸ் பிடிக்குதே...


டாக்டர் : ..........

********************************



நபர் 1 : பொண்ணு அழுதுக்கிட்டே இருக்கே.. ஏன் மாப்பிள்ளையைப் பிடிக்கலையா?


நபர் 2 : அதெல்லாம் இல்ல... சீரியல் பார்க்கும் நேரத்துல பொண்ணு பார்க்க வந்துருக்கீங்கல்ல... அதான்..


நபர் 1 : ........

********************************


யாருகிட்ட...

சமிபத்தில் ரசித்த நகைச்சுவை துணுக்குகள்....

20 August, 2018

என்னடா நினைச்சிகிட்டு இருக்கீங்க..!



என்னடா நினைச்சிகிட்டு இருக்கீங்க...
உங்க மனசுல...

என்ன பார்த்த
உங்களுக்கு எப்படி தெரியுது...!

உங்க பகுதிகெல்லாம்
வரலன்னா...
ஏன் வர்லேன்னு தவியா தவிக்கிறது...

சரி போனாபோகுதுன்னு வந்தா
வா.. வான்னு பல்லகாட்றது
கவிதையா எழுதி கொல்றது...

அப்படியும் கொஞ்ச நாள்
தொடர்ந்து வந்தா
ஏன்டா வந்தேன்னு சபிக்கிறது...

இதுல என்னவச்சி
ஆளாளுக்கு சண்டவேற....
இப்ப போடுங்கடா சண்ட பார்க்கலாம்...

நான் வந்து கொஞ்சம் ஓவராத்தான்
பண்ணியிருக்கேன்...
அதற்கு காரணம் யாரு..!
நீங்க பண்ண அட்டகாசம்தான்ட...

என்னுடைய நண்பர்களை
நீங்க பழிவாங்குறீங்க...
அத பார்த்துகிட்டு நான் சும்மா
இருப்பேன்னு நினைச்சிங்களா..?

ஒரு பகுதிக்கு வந்தா
என்னை அங்கேயே
தங்க வைக்கனும்....

அதசெய்யாம
அப்படியே போக விட்றீங்க
அப்புறம் வந்து... ஐய்யோ
போய்ட்டானேன்னு கவலை படுறீங்க...

இப்படி இருந்தா எப்படிடா
நன்னாரி பயலுகளா...

சரி சரி இனிமேலாவது
பார்த்து நடந்துக்கங்க...

உங்க பகுதிக்கு
நான் வந்த தங்குறதுக்கு
சரியான ஏற்பாடு பண்ணிவைங்க....

நான் வந்து தங்குற
இடத்திலெல்லாம் நீங்க
உட்கார்ந்துகிட்டு
என்ன இம்ச பண்ணாதிங்க...

நான் வாழுற இடத்தை
ஏங்கிட்ட கொடுத்துடுங்க

என் இடம் தேடி நான் வரும்போது
ஒரு பய நிக்ககூடாது...
அப்படி நின்னா
நான் நானா இருக்கமாட்டேன்...

உங்களுக்கு புரிய
வைக்கிறதுக்குதான் நான்
இப்படி கோவமா
நடந்துக்க வேண்டி இருக்குது....

என்ன புரிஞ்தா...!

இந்த முறை என் கோவத்தை
கொஞ்சம் அதிகதமாகத்தான்
காட்டிட்டேன்
என்னை மன்னிச்சிடுங்க...

என்னை எப்படி நாசம் பன்றீங்கன்னு...
நீங்களே பாருங்க... ( கீழ்படம்)

அரசாங்கம் பண்ற தப்புக்கு
அப்பாவி பொதுமக்களுக்கு
நீங்கதான் மாட்டிக்கீறீங்க...

இப்படிக்கு...
தண்ணீர்

குறிப்பு

நண்பர்கள் - மரங்கள்
தங்குமிடம் - ஏரி, குளம், அணை.

கவிதைவீதி சௌந்தர்
20-08-2018



இது கவிதை பதிவல்ல...
ஒரு விழிப்புணர்வு பதிவு

18 August, 2018

எங்கையாவது கவரிங் ஸ்கூட்டர் கிடைக்குமா...


 சொல்லுங்க உங்களுக்கு என்ன பிரச்சனை

எனக்கு என் மனைவி கூட வாழ பிடிக்கலைங்க எனக்கு டைவர்ஸ் வாங்கி கொடுங்க...

சரி 5000 செலவாகுங்க பரவாயில்லையா..

இவ்வளவா...! எனக்கு கல்யான செலவே 500 தாங்க ஆச்சி...!

எப்பவுமே சுதந்திரம் சும்மா கிடைக்காது தம்பி...


********************************



மாமியார் : இந்தாங்க மாப்பிள்ளை நீங்க கேட்ட மோதிரம்!

மருமகன் : இதை வாங்கி தந்ததுக்கு நீங்க ஸ்கூட்டரே வாங்கி தந்திருக்கலாம்!

மாமியார் : வாங்கியிருக்கலாம்தான்! ஆனா கவரிங் ஸ்கூட்டர் எங்கே கிடைக்குது?

********************************



ராமு : சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிட வேண்டிய மருந்தை சாப்பாட்டுக்குப் பின்னாடி குடிச்சிட்டேன் !

சோமு : அடடா... அப்புறம் ?

ராமு : மறுபடியும் ஒரு தடவை சாப்பிட வேண்டியதாயிடுச்சு !

சோமு : அடப்பாவி...!!!!!!

********************************


கடைக்காரர் : டாக்ஸி டிரைவரா இருந்தவனை 
ஜவுளிக்கடையில் வைத்தது தப்பா போச்சு ?

மற்றவர் : ஏன்?

கடைக்காரர் : துணி எடுக்க வருபவர்களிடம் 
மீட்டருக்கு மேல் எவ்வளவு தருவீங்கன்னு கேட்கிறான்..

********************************


ஒருவர் : எனக்கு தூக்கத்தில் உளர்ற வியாதி 
இருக்குன்னு சர்ட்டிபிகேட் தர முடியுமா டாக்டர்?

டாக்டர் : ஏன்?

ஒருவர் : என் மனைவியை திட்ட 
வேற வழி தெரியலை டாக்டர்...

டாக்டர் : !!!!!!!!!!!!

********************************

பின்விளைவுகள் பயங்கரமா இருக்கும் என்பது இதுதானோ..!!!
பார்த்து சூதானா இரும்மா...!

17 August, 2018

சீமானை வச்சி செய்யும் சோசியல் மீடியா... இப்ப வாஜ்பாயோடு...



சமீபத்தில் ஒரு பொதுமேடையில் சீமான் அவர்கள் பேசும்போது சோழர்கள் 60 ஆயிரம் யானைப்படையை வைத்திருந்தார்கள்... அவர்கள் கடல் கடந்து போருக்கு போகும்போது அந்த 60 ஆயிரம் யானைகளையும் ஒரே கப்பலில் கொண்டுப்போவார்கள் என்றும்.... யானைகள் மட்டுமன்றி அதனுடன் பாகன்கள் போர் கருவிகள் யானைக்கான உணவுகள் மற்ற படை வீரர்கள் என அத்தனையும் கப்பலில் செல்லும்... கப்பல்கள் அப்படியிருந்தது என்றும்  இந்த யானைப்படையை பார்த்தே எதிரிபடை சரண்அடைந்துவிடும் என்று பேசியிருந்தார்...

என்ன கப்பலில் 60 ஆயிரம் யானைகளை ஏற்றினார்களா என்று முகநூலில் பாகுபாடின்றி வறுத்தெடுத்துகொண்டு இருக்கிறார்கள்....

அதுபோக இதற்கு முன்னர் மறைந்த கலைஞர் பற்றி இரங்கல் தெரிவிக்கும் போது நான் கலைஞர் சட்டைப்பையில் உள்ள பேனாவை எடுத்து எழுதும் அளவுக்கு நெருக்கம் இருந்தது என்று குறிப்பிட்டிருந்தார்...

இதற்கும் பல்வேரு தரப்பில் இருந்து விமர்சனம் எழுந்தது மட்டுமின்றி என்ன கலைஞர் பேனா எடுத்து எழுதும் அளவுக்கு நெருக்கமா என்று மீம்ஸ்க்கள் முகவுநூல் டிவிட்டர் பதிவுகள் வறுத்தெடுத்தன.. 

சீமான் சொல்வது அத்தனையும் கட்டுகதைகளே என்று ஆளாளுக்கு நகைச்சுவை பதிவிட்டு கலாய்க்க தொடங்கிவிட்டார்கள்...

சீமான் அவர்கள் பிரபாகரன் சந்திப்பைப்பற்றி அவர் இருக்கும் போது ஏதும் வாய்திறக்காது அவரது மரணத்துக்கு பிறகு... நானும் அவரும் அப்படி இப்படி என்று அளந்து விட்டுக்கொண்டிருக்கிறார்... போர் பயிற்சி... குண்டு விழுந்தது... ஆமைக்கறி சாப்பிட்டோம் என்று வந்ததை சொல்வதை கண்டு சோசியல் மீடியாவில் அவர்குறித்து நகைச்சுவை பதிவுகள் அறங்கேறி வருகிறது....

அவர் எப்பவும் இப்படிதான்.. தலைவர்கள் இருக்கும் போது அவர்கள் பற்றி குறிப்பிடாமல் அவர் இறந்த பிறகு வந்து எனக்கு இப்படி பழக்கம் அப்படி பழக்கம் என்று அளந்துவிடுவார் என்று கற்பனையோடு எழுத ஆரம்பித்துவிட்டார்கள்..



தற்போது வாஜ்பாய் இறப்பை ஒடடி சீமான் எப்படி பேட்டிக் கொடுப்பார் என்று முகநூலில் பன்னிகுட்டி ராமசாமி எழுதிய பதிவு இது.. (Maram r)

(சீமான் சொல்வது போல்) திடீர்னு ஒருநாள் நடுராத்திரி ஒரு போன் கால்.. அதுவும் இந்தில வருது.. என்ன பேசுறதுன்னே புரியல.. அப்புறம் ஒருத்தர் பிஎம் உங்க கிட்ட பேசனுமாம் பேசுங்கனு சொல்றார்.. எனக்கு இந்த ஏஎம், பிஎம் தான் தெரியும் இது எந்த பிஎம்னு கேக்கிறேன்.. அதுக்குள்ள மே வாஜ்பாயி போல்ரஹாஹூனு கணீர்னு நம்ம வாஜ்பாயி குரல் கேக்குது.. 

நான் அப்படியே திகைச்சுப் போயிட்டேன்.. சீட்டுல இருந்து எந்திரிச்சி என்ன சார் வேணும்னு கேட்டேன்.. அதுக்கு அவரு பாகிஸ்தான் எந்த நேரத்துலயும் போர் தொடுக்குற மாதிரி இருக்கு.. அத எப்படி தடுக்குறதுனு தெரியல ரொம்ப கவலையா இருக்குன்னாரு.

 நான் உடனே இதுக்கு ஏன் சார் கவலைப்படுறீங்க. அணுகுண்டு இருக்கானு கேட்டேன்... இருக்குன்னு சொன்னார்.. அத தூக்கி போட்ருங்கன்னு சொல்லிட்டேன்.. அவரு பதறிப்போய் அது ரொம்ப ஆபத்து, அணு ஆயுத போர் வந்துடும்னாரு..


நான் அதுக்கு அட அந்த குண்ட நம்ம ஊரு மேல போடுங்க சார்னு சொன்னேன்.. அத கேட்டு அவரு மிரண்டுட்டாரு.. என்னங்க சொல்றீங்கனு கேட்டார்.. ஆமா நம்மூர்லயே ஆள் இல்லாத இடமா பாத்து போடுங்க.. அது வெடிக்கிறத நாலு பக்கமும் இருந்து போட்டோ புடிச்சி பத்திரிக்கைல போடுங்க அத பாத்துட்டு பாக்கிஸ்தான்காரன் பயந்து ஓடிருவான் பாருங்கன்னு சொன்னேன்.. 

அத கேட்டு அப்படியே அசந்துபோய்ட்டார்.. சீமான் ஜீ.. பகூத் அச்சா ஐடியா ஜீ னு திரும்ப திரும்ப சொல்லி சந்தோசப்பட்டார்.. அடுத்த நாள் காலைல பேப்பர்ல நியூஸ் போடுறான்.. இந்தியா அணுகுண்டு சோதனை செய்ததுன்னு... பாருங்க.. இதுக்கெல்லாம் யார் காரணம்.. சிந்திக்கனும்...

சிரிச்சி வயிறு வலிக்குது...

16 August, 2018

நினைவலைகள் - கார்கில் நாயகன் அடல் பிஹாரி வாஜ்பாய்




பாஜவின் மாபெரும் பிதாமகரும், 3 முறை பிரதமர் பதவியை வகித்தவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் டெல்லியில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 93.

மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியர் நகரில் டிசம்பர் 25, 1924 ல் பிறந்தவர் வாஜ்பாய். அவர் ஒரு நல்ல கவிஞரும் கூட. தாயார் பெயர் கிருஷ்ணா தேவி, தந்தையின் பெயர் ஷியாம் லால் 

வாஜ்பாய். அடிப்படையில் வாஜ்பாய் ஆர்எஸ்எஸ் தொண்டர். 1977 ல் அன்றைய மொரார்ஜி தேசாய் பிரதமரமாக இருந்த ஆட்சியில் ஜனசங்கம் கட்சியின் பிரதிநிதியாக, வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் வாஜ்பாய். பின்னர் பாரதீய ஜனதா கட்சி 1980 முறைப்படி தொடங்கப்பட்ட போது அதன் நிறுவன ஸ்தாபகராக இருந்தவர் வாஜ்பாய்.


40 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் வாஜ்பாய். பத்து முறை மக்களவை உறுப்பினராகவும், இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர் வாஜ்பாய். 

1996 ல் 13 நாட்களும், 1998 பிப்ரவரி – 1999 ஏப்ரல் வரையில் 14 மாதங்களும் பிரதமராக இருந்தவர். வாஜ்பாயின் இந்த ஆட்சியை, ஒரு வாக்கில் கலைத்த பெருமை மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வை சேரும். ஆனால் 1999 செப்டம்பரில் நடந்த மக்களவை தேர்தலில் வென்று 2004 மே மாதம் வரையில், அதாவது கிட்டத்தட்ட முழு ஆட்சிக் காலத்தையும் அனுபவித்தவர். 



காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியின் பிரதமர், ஐந்தாண்டுகள் தொடர்ந்து இந்தியாவை ஆண்ட பெருமைக்கு சொந்தக்காரர் அடல் பிஹாரி வாஜ்பாய் மட்டும்தான்.

இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ விருதை வென்ற அவர், ஒரு சிறந்த கவிஞரும் கூட. அவர், ‘ட்வென்டி-ஒன் போயம்ஸ்’, ‘க்யா கோயா க்யா பாயா: அடல் பிஹாரி வாஜ்பாய், வ்யக்தித்வா அவுர் கவிதம்’, ‘மேரி இக்யாவனா கவிதம்’, ‘ஸ்ரேஷ்ட கபிதா’, எனப் பல கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். 

‘லோகமான்ய திலகர் விருது’, ‘சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது’, ‘பாரத ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப பந்த் விருது’ எனப் பல விருதுகளை வென்றுள்ள முன்னாள் பிரதம மந்திரியான அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு மற்றும் அரசியலில் அவரது பங்களிப்பையும், அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.



குவாலியரில் இருக்கும் கோர்கியில் உள்ள சரஸ்வதி ஷிஷு மந்திரில் தனது பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த பின்னர், குவாலியர் விக்டோரியா கல்லூரியில் (இப்போதைய லக்ஷ்மி பாய் கல்லூரி) சேர்ந்தார்.

ஆரம்பத்தில் இருந்து படிப்பில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்த அவர், தனது கல்லூரியில் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தில் அதிகமதிப்பெண்கள் வித்தியாசத்தில் தேர்ச்சிப் பெற்று, இளங்கலைப் பட்டம் வென்றார். பிறகு, கான்பூரில் உள்ள டிஏவி கல்லூரியில் சேர்ந்த அவர், அரசியலில் முதுகலைப் (எம். ஏ) பட்டத்தையும் முதல் வகுப்பில் தேர்ச்சியுற்று பெற்றார்.


ஆரம்பகாலப் பணிகள்


தனது முதுகலைப் படிப்பை வெற்றிகரமாக முடித்த அவர், இந்துமத அமைப்பான ‘ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்’ன் ஒரு முழுநேர தொழிலாளியாக மாறினார். சட்டம் பயில வேண்டுமென்ற ஆர்வம் கொண்ட அவர், அதைத் தீவிரமாகப் பயின்றார்.

இந்திய சுதந்திரத்திற்காக மாபெரும் தலைவர்களும், புரட்சியாளர்களும் போராடிக் கொண்டிருந்ததால், அவர் சட்டப் படிப்பைப் பாதியிலே கைவிட்டு, ஒரு பத்திரிக்கையாளராக உருவெடுத்தார்.

பத்திரிக்கையாளராக மாறிய அவர், ‘ராஷ்ட்ர தர்மா’, ‘பஞ்ச்ஜன்யா’, ‘ஸ்வதேஷ்’ மற்றும் ‘வீர் அர்ஜுன்’ போன்ற நாளிதழ்களைத் திருத்தும் பணியில் ஈடுபட்டார். ஆர். எஸ். எஸ்-ன் முழு நேர ஊழியர்கள் போலவே, அவர் இறுதி வரை திருமணமாகாமலேயே ஒரு பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார்.




அரசியல் பிரவேசம்

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில், தனது மூத்த சகோதரரான பிரேம் என்பவருடன் கைதாகி சிறை சென்ற அவர், 23 நாட்கள் கழித்து விடுதலையானார். ஆர். எஸ். எஸ். சின் ஒரு அமைப்பான ‘பாரதிய ஜன சங்’-ன் ஒரு பகுதியாக மாறிய அவர், அதன் தலைவரான ஷ்யாமா பிரசாத் முகர்ஜியுடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்ததன் பேரில், கைது செய்யப்பட்டார்.

சிறையிலே முகர்ஜி அவர்கள் மரணமடைந்ததால், அவர் 1957ல் பல்ராம்பூர் தொகுதியிலிருந்து மக்களவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பேச்சாற்றல் அப்போதைய பிரதமராக இருந்த நேருவையும், பிற சட்டமன்ற உறுப்பினர்களையும் கவர்ந்ததால், அவர் பலரின் நன்மதிப்பைப் பெற்றார்.

ஜன சங்கின் தலைவரான தீனதயாள் உபாத்யாய் அவர்கள் திடீரென மரணமடைந்ததால், ஜன சங்கின் தலைமைப் பொறுப்பு, வாஜ்பாயின் கைகளில் வந்தது. 1977ல், அவர் ஜன சங்கை, புதிதாய் உருவான அமைப்பான ஜனதா பார்டியுடன் இணைத்தார்.

அக்கட்சி, பொதுத் தேர்தலில் வெற்றிப் பெற்றதால், அவர் வெளியுறவுத் துறை அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார். மொரார்ஜி தேசாயின் ராஜினாமாவிற்குப் பின்னர், ஜனதா கட்சிக் கலைக்கப்பட்டதால், பாரதிய ஜன சங் மற்றும் ஆர். எஸ். எஸ். அமைப்பை இணைத்து,

அவரது நீண்ட கால நண்பர்களான எல். கே. அத்வானி மற்றும் பைரோன் சிங் ஷெகாவத் ஆகியோருடன் இணைந்து ‘பாரதிய ஜனதா கட்சியை’ 1980ல் உருவாக்கினார். 1995ல் சட்டமன்றத் தேர்தலில், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் பி.ஜே.பி வெற்றிப் பெற்றதால், அரசியலில் அக்கட்சி முக்கியத்துவம் பெற்றது. மேலும், 1996ல் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் அக்கட்சி வெற்றிக் கோடியை நாட்டியது.



பிரதமராக வாஜ்பாய்

1996-ல் நடந்த பொதுத் தேர்தலில், பி.ஜே.பி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததால், அப்போதைய பிரதமரான ஷங்கர் தயால் ஷர்மா அவர்கள், அவரைப் பிரதமராகப் பொறுப்பேற்க சொன்னார்.

இந்தியாவின் 11வது பிரதரமராகப் பதவியேற்ற அவர், மற்ற கட்சிகளின் ஆதரவு கிடைக்காததால், பதவியேற்ற 13 நாட்கள் கழித்து, பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.


ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, அக்கட்சிக் கலைக்கப்பட்டதால், மறுபடியும் தேர்தல் நடந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியை அமைக்கும் விதமாக, அவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

13 மாதங்கள் கழித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தனது ஆதரவைப் பின் வாங்கியதால், அடுத்தத் தேர்தல் நடக்கும் வரை அவர் பிரதமர் பதவியில் இருந்தார்.

இதற்கிடையில், காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக, இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே சுமூகமான முடிவை அமலாக்க புதிய சமாதான முன்னெடுப்புகளை வரைந்தார்.

1999 ஆம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தானுக்கிடையே நடந்த ‘கார்கில்’ போரில் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் விஜய்’ என்ற செயல்பாட்டை செயல்படுத்தி, பாகிஸ்தான் ராணுவத்திற்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதால், அப்போதைய பாகிஸ்தான் பிரதமரான நவாஸ் ஷெரிப் போரை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார். கார்கில் போரில் வெற்றிப் பெற்றது,

அவர்களின் தலைமையை மிகவும் தைரியமான மற்றும் வலுவானத் தலைமை என்று நாடு முழுவதும் போற்றச்செய்தது. இந்த வெற்றியை நினைவில் நிறுத்தும்படியாக, ஜூலை மாதம் 26 ஆம் தேதி, 2012 ஆம் ஆண்டில், ‘கார்கில் விஜய் திவஸ்’ என நயமிக்கப்பட்ட அவருக்கு, பா.ஜ. க தலைவர் நிதின் கத்காரி அவர்கள், மும்பையில் ஒரு மெழுகு சிலையைத் திறந்து வைத்தார்.


கார்கில் போரில் மிகத் திறமையாக செயல்பட்டதால், 1999 ஆம் ஆண்டில், நடந்த பொதுத் தேர்தலில், பா. ஜ. க 303 இடங்களில் அதிக வாக்குகள் வெற்றிபெற்று,

அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி, 1999 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவியை ஏற்கச் செய்தது. மூன்றாவது முறை அவர், பிரதமராகப் பதவியேற்ற பின்னர், காத்மண்டு மற்றும் டெல்லிக்கிடையே செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தல், 2001ல் பாராளுமன்றம் மீது தாக்குதல், 2௦௦2-ல் குஜராத் வன்முறை, போன்ற பல பிரச்சனைகள் 2004ல் நடந்த பொதுத் தேர்தலில், பா. ஜ. க கட்சியைப் பெரும் தோல்வியை சந்திக்க செய்தது.


மூன்று முறை பிரதமர் பதவியில் இருந்த அவர், 2௦௦4ல் நடந்தத் தேர்தலில் தோல்வியுற்றதால், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அரசியலிலிருந்து தான் ஓய்வுப் பெறப் போவதாக அறிவித்தார்.




எழுத்தாளராக வாஜ்பாய்

அவர், தனது கல்லூரியில் இருந்தே ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தில் ஆர்வமுடையவராக இருந்ததோடு மட்டுமல்லாமல், அதில் அதிகமதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப்பெற்றதால், அவருக்கு இலக்கியத்தின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது எனலாம். 


இதனால், அவர் ஒரு எழுத்தாளராக உருவெடுத்தார். தனது சுயசரிதையை எழுதியதோடு மட்டுமல்லாமல், ‘ட்வென்டி-ஒன் போயம்ஸ்’, ‘க்யா கோயா க்யா பாயா: அடல் பிஹாரி வாஜ்பாய், வ்யக்தித்வா அவுர் கவிதம்’, ‘மேரி இக்யாவனா கவிதம்’, ‘ஸ்ரேஷ்ட கபிதா’, எனப் பல கவிதைத் தொகுப்புகளை படைத்துள்ளார்.


மகத்தான சாதனைகள்



சாலை கட்டமைப்பு

நரசிம்மராவ் ஏற்படுத்திய பொருளாதார சீர்திருத்தத்தால், நாட்டில் கார்களின் எண்ணிக்கை அதிகமானது. ஆனால், அவை செல்வதற்கான சாலைகளை பற்றி அவர் சிந்திக்கவில்லை. இதனை உணர்ந்த வாஜ்பாய், வேகமான மற்றும் நெருக்கடியில்லாத போக்குவரத்துக்கு 'தங்க நாற்கரச்சாலை' திட்டத்தை தொடங்கினார். 

இதன் மூலம், நாட்டின் முக்கிய நகரங்களான டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னையை இணைத்தார். அதே போல, 'பிரதம மந்திர கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தை' தொடங்கி, சாலைகள் இல்லாத கிராமங்களிலும், சாலை வசதியை உருவாக்கினார். இந்த இரண்டு திட்டங்களும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவின.


கார்கில் வெற்றி

பாகிஸ்தான் உடனான கார்கில் போரில் கிடைத்த வெற்றிக்கு வாஜ்பாயின் துணிச்சலான முடிவும், நடவடிக்கையும் காரணமாக அமைந்தன. பாகிஸ்தானின் சதியை முறியடிக்க 'ஆப்பரேஷன் விஜய்' என்ற பெயரில் இந்தியா 1999 மே 26ம் தேதி ராணுவ நடவடிக்கையை தொடங்கியது 

இரு நாடுகளுக்கு இடையேயான இந்த போர்,அணு ஆயுத யுத்தத்துக்கு வழி வகுத்துவிடுமோ என உலக நாடுகள் அச்சமடைந்தன. தோல்வி உறுதியென தெரிந்த பின், ஆதரவு தேடி அமெரிக்காவுக்கு ஓடினார் பாக்., அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப். 

அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டனும் பாகிஸ்தானின் போக்கை விமர்சிக்க, வேறு வழியில்லாமல் பின்வாங்க உடன்பட்டது பாகிஸ்தான். ஜூலை 26ல் கார்கில் மலையில் வெற்றிக்கொடி நாட்டியது இந்தியா.



லாகூருக்கு பஸ்

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானுடன், பேச்சுவார்த்தை மூலம் நல்லுறவு ஏற்பட பல்வேறு முயற்சிகளை எடுத்தவர் வாஜ்பாய். இவரது பதவிக்காலத்தில், பாகிஸ்தானின் லாகூருக்கு 1999 பிப்., 19ல் 'பஸ்' போக்குவரத்து தொடங்கப்பட்டது. 

கல்வி வளர்ச்சி

கடந்த 2001ல், சர்வ சிக் ஷா அபியான் என்ற சமூகநலத் திட்டம் தொடங்கப் பட்டது. இதன் மூலம், 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்பட்டது. 

இதன் காரணமாக 4 ஆண்டுகளில், நாட்டில் இடையிலேயே பள்ளியில் இருந்து விலகும் மாணவர்களின் எண்ணிக்கையில் 60 சதவீதம் தடுக்கப்பட்டது. இவரது திட்டத்தை பின்பற்றி தான், தற்போதைய ஆர்.டி.இ., எனப்படும் அனைவருக்கு இலவசக் கட்டாயக் கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


தொலை தொடர்பு

தொலை தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்தினார். அருண் ஜோரியுடன் இணைந்து பல திட்டங்கள் தீட்டப்பட்டது. டிராயின் பல்வேறு பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டன. பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தொடங்கப்பட்டது. 

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், புதிய முறை தொடங்கப்பட்டது. 

பொதுத்துறை நிறுவனங்களில் நிதிப்பற்றாக்குறையை குறைத்தார். இதனால் பொதுத்துறை நிறுவனங்கள் வளர்ச்சி பெற்றன. 

எரிபொருள் விலையில் ஒழுங்குபடுத்துதல், அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு, சிறப்பு பொருளாதார மண்டலங்கள், பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப், தொழிலாளர் ஒழுங்குமுறை உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

டில்லி மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி வழங்கினார். முதல்கட்ட ரயில் சேவையையும் இவரே தொடங்கி வைத்தார். 

அறிவியல் திட்டங்களுக்கு அதி நிதி ஒதுக்கினார். 2008ம் ஆண்டுக்குள், இந்தியா சார்பில் நிலவுக்கு 'சந்திராயன்-1' விண்கலம் செலுத்தப்படும் என 2003 சுதந்திர தின உரையிலேயே வாஜ்பாய் தெரிவித்தார்.



தனியார் மயம்

வியாபாரம் மற்றும் தொழிற்சாலைகளில் அரசின் முதலீடுகளை குறைக்கும் நடவடிக்கையை எடுத்தார். பாரத் அலுமினியம் கம்பெனி, இந்துஸ்தான் ஜின்க், இந்தியன் பெட்ரோகெமிக்கல் கார்ப்பரேஷன் மற்றும் வி.எஸ்.என்.எல்., போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகளை குறைத்தார். மேலும் மாநில அரசின் நிறுவனங்களையும், தனியார் மயப்படுத்தினார். 


வெளியுறவு

அணு ஆயுத சோதனைக்குப்பின், அமெரிக்காவுடன் நிலவி வந்த பனிப்போரும், வாஜ்பாயின் அணுகுமுறையால், 2000ம் ஆண்டு, அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் வருகைக்குப்பின் தளர்த்தப்பட்டது. அதே போல, சீனாஉடன் எல்லை பிரச்னைக்கு தீர்வு, இஸ்ரேலுடன் ராணுவ ஒத்துழைப்பு போன்ற வெளியுறவு கொள்கையிலும் சிறப்பாக செயல்பட்டார். 


அணு ஆயுத நாடு

கடந்த 1998 மே 11ல் ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில், இந்தியா வெற்றிகரமாக அணு ஆயுத சோதனை நடத்தியது. இதன்மூலம் அணு ஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது. இதில் முன்னாள் ஜனாதிபதியும், அணு விஞ்ஞானியுமான மறைந்த அப்துல் கலாம் முக்கிய பங்கு வகித்தார். 

சோதனை முடிவடைந்த பின்தான், அமெரிக்காவுக்கே இவ்விஷயம் தெரிந்தது. அணு ஆயுத சோதனை, நாடு முழுவதும் மக்களால் பாராட்டப்பட்டது. அதே நேரத்தில் சி.டி.பி.டி. விஷயத்தில் உறுதியாக நின்றதோடு, இந்தியா மீது, அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையையும் துணிவுடன் எதிர்கொண்டார்.

விருதுகள் 

1992 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

1993 – கான்பூர் பல்கலைக்கழகத்தில் இருந்து ‘இலக்கியத்தில் டாக்டர் பட்டம்’ பெற்றார். 

1994 – ‘லோகமான்ய திலகர் விருது’ 

1994 – ‘சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது’ வழங்கப்பட்டது. 

1994 – ‘பாரத் ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப பந்த் விருது’ பெற்றார் 

மக்களுக்கு பிடிக்காத கட்சியில் இருந்த வந்து 
மக்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்த பிரதமர்

14 August, 2018

இந்த ஆசை யாருக்கெல்லாம் இருக்கிறது..!






கோடி 
பட்டாம்பூச்சிகள்
பறந்து வருவதை போல்
இருக்கும்..

என் 
மூன்று வயது
குட்டி தேவதை 
நடந்துவருவது...!


தத்திவந்து
என்னை 
தவழுகையில்...

குற்றால
சாரலின் சுகம்
அத்தனையும்
என்னை சுற்றி கிடக்கும்...!


சுண்டு விரல்
என் தேகம்
தொடுகையில்...

அமைதிக்கடலை
தாலாட்டும்
தென்றல் போல்
இருக்கும்...!


என்னை 
கட்டியணைத்து
முத்தமிட்டால்...

எனை ஒட்டிக்கொள்ளும்
துருவப்பகுதியின்
அத்தனை 
குளிரும்...!


எங்கள்
இருவருக்கான
புரிதல் என்பது....

இரண்டு
அன்னப்பறவைகள்
மௌனத்தால்
பேசிகொள்வதுபோல்...


இறுதியாய்....

மெல்லிய 
தென்றல் வந்து
படர்கையில்...

காம்பிடம் 
சொல்லாமலே
விடைப்பெற்றுப் 
கொள்ளுமே
பூக்கள்...


அப்படியாகத்தான்
நிகழவேண்டும்
என் 
மரணமும்..!


இது...
யாராவது என்னிடம்
“உன் மரணம் எப்படி நிகழவேண்டும்“ 
என  கேட்டால் 
அதற்கான பதில்...



நன்றிகள்...
வருகைக்கும்... வாசித்தமைக்கு


13 August, 2018

இது சாப்பிடவா... இல்ல பார்க்கவா...



ஒரு விஐபி வீட்டில் பரிமாறப்பட்டதாக வந்த உணவு படையல் புகைப்படங்களும்...
சில ஆச்சரிய தகவல்களும்...


 
ஆரல் கடல், சாக்கடல், காஸ்பியன் கடல் இவை மூன்றும் கடல் என்ற பெயரைக் கொண்ட ஏரிகள் ஆகும்.


 
காண்டா மிருகத்தின் கொம்பு மற்ற மிருகங்களின் கொம்புகளிலிருந்து வேறுபடுகிறது. இதன் கொம்பு எலும்பால் ஆனது அல்ல. தோலிலிருந்தே உருவானது.


 
உலகில் கிடைக்கும் தங்கத்தில் பாதி அளவை தரும் நாடு தென்னாப்பிரிக்கா (ஒரு ஆண்டுக்கு 700 டன்).


 
நாகபாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டுப் பாம்பு, கட்டுவிரியான் ஆகியவை மிகவும் கொடிய நச்சுள்ள பாம்புகள்.


 
அக்குரன், அந்திமான், கண்ணன், சந்தன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன் ஆகியோர் இடை ஏழு வள்ளல்கள்.


 
சூரியன் அஸ்தமனத்துக்கு முன் சிவப்பாக தோன்றும். ஆனால், அது பச்சையாகத் தோன்றுவது அண்டார்டிக்காவில் மட்டும் தான்


 
காரில் செல்லும் போது மழை, இடி வந்தால் காரை விட்டு இறங்காமலிருப்பதே நல்லது. காரணம், பூமிக்கும், காருக்கும் பாசிடிவ் சார்ஜ் கவராமலிருப்பது தான்.


 
பாரி, ஆய், எழினி, நள்ளி, மலயன், பேகன், ஓரி ஆகியோர் கடை ஏழு வள்ளல்கள்.


 
அக்டோபர் 8-ம் தேதி விமானப்படை தினம்.


 
முத்துத் தீவு என அழைக்கப்படும் நாடு பஹ்ரெய்ன்.


 
அரசாங்கமே வட்டிக் கடை நடத்தும் நாடு மலேசியா.


 
தென்னாப்பிரிக்காவில் ஒரு ஆண், ஒரு பெண்ணை பார்க்க வந்தால் அந்த பெண் மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது வழக்கமாக இருந்தது. அந்த ஆண் தன் மனத்திற்கு பிடித்தவனாக இருந்தால் நீளமான மெழுகுவர்த்தியும், பிடிக்காதவனாக இருந்தால் சிறிய மெழுகுவர்த்தியையும் ஏற்றி வைப்பாள்.


 
பச்சைத் தங்கம் என அழைக்கப்படும் மரம் யூகாலிப்டஸ் மரம்.



* பாம்புகளில் 3,000 வகையான பாம்புகள் உலகம் முழுவதும் உள்ளன. இந்தியாவில் மட்டும் 350 வகைகள் உள்ளன.


 
நீரை உறிஞ்சி குடிக்கும் ஒரே பறவை புறா தான்.


 
நச்சுள்ள பாம்பு இன்னொரு பாம்பைக் கடித்தால் கடிப்பட்ட பாம்பு இறந்து விடும்.


 
கரையான்களால் அரிக்க முடியாத மரம் தேக்கு மரம்.



 ஆப்பிரிக்காவில் ரத்த வேர்வை சிந்தும் நீர்யானை உள்ளது.



நன்றி...!
Related Posts Plugin for WordPress, Blogger...