31 July, 2018

கருணாநிதியின் காலத்தால் அழிக்க முடியாத வசனங்கள்.. 1


தமிழ்த் திரையுலகில் பல அடுக்கு மொழி வசனங்களாலும், அதிரடியான வார்த்தைகளாலும் பல வெற்றிப் படங்களை தனது கதை வசனத்தில் வெளிக் கொணர்ந்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இன்றளவும் இவரின் பராசக்தி வசனங்கள் மக்களிடம் மிகுந்த தாக்கத்தை எற்படுத்துபவை.

சிறுவயது முதலே மொழிப்பற்று அதிகம் கொண்ட கருணாநிதி, கவிதைகள், நாவல்கள் மற்றும் மடல்களை எழுதி, தனது எழுத்துத் திறமையை வளர்த்து வந்தார். அதனை அடுத்தக்கட்டத்திற்குக் கொண்டுசென்ற அவர், நாடகங்களுக்கும் படங்களுக்கும் திரைக்கதைகளை எழுதினார்.தமிழ் சினிமாவில் எழுத்து மொழியே உரையாடலாக இருந்தது.. பாமர மக்களின், எளியவர்களின் வாழ்க்கை பேசாப் பொருளாக இருந்தது.

எல்லாப் படங்களிலும் சமூக கருத்துகளைப் பதிவு செய்திருந்தாலும், தற்கால சமூக பிரச்சனைகள், மூட நம்பிக்கைகள் என அனைத்தையும் முன்னிறுத்தியது சிவாஜி கணேஷ் நடிப்பில் வெளியான பராசக்தி படம்தான் என்றால் மிகையாகாது. சினிமாத் துறையில் அவர் செய்யாத காரியங்களே இல்லை என்று கூறலாம். அவர் படங்களுக்கு கதை, திரைக்கதை, பாடல்கள், வசனங்கள் என அனைத்திலும் தனது சீரிய எழுத்துகளால் கர்ஜித்தவர் கருணாநிதி. இப்படி தமிழ் சினிமாவில் மறக்க முடியாத, மறுக்க முடியாத வசனங்களை வலம் வர செய்த கலைஞரின் காலத்தால் அழிக்க முடியாத வசனங்களின் சிறப்பு தொகுப்பு.

பராசக்தி

எல்லாப் படங்களிலும் சமூக கருத்துகளைப் பதிவு செய்திருந்தாலும், தற்கால சமூக பிரச்சனைகள், மூட நம்பிக்கைகள் என அனைத்தையும் முன்னிறுத்தியது சிவாஜி கணேஷ் நடிப்பில் வெளியான பராசக்தி (1952) படம்தான் என்றால் மிகையாகாது. 





மனோகரா

அரசர்: மனோகரா! உன்னை எதற்காக அழைத்திருக்கிறேன் தெரியுமா?

மனோகரன்: திருத்திக் கொள்ளுங்கள் அரசே! அழைத்து வரவில்லை என்னை. இழுத்துவரச் செய்திருக்கிறீர்கள்.

அரசர்: என் கட்டளையைத் தெரிந்து கொண்டிருப்பாய் நீ.

மனோகரன்: கட்டளையா இது? கரை காண முடியாத ஆசை! பொன்னும், மணியும், மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து கண்ணே முத்தே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி, தந்தத்தால் ஆன கட்டிலிலே, சந்தனத் தொட்டிலிலே, `வீரனே! என் விழி நிறைந்தவனே!' என்று யாரைச் சீராட்டி பாராட்டினீர்களோ அவனை அந்த மனோகரனை சங்கிலியால் பிணைத்து, சபை நடுவே நிறுத்தி சந்தோஷம் கொண்டாட வேண்டும் என்ற தங்கள் தணியாத ஆசைக்குப் பெயர் கட்டளையா தந்தையே?

இப்படியாய் அனல் பறந்த வசனங்கள்... 




பூம்புகார்



ராஜா ராணி


4 comments:

  1. மறக்கக்கூடிய வசனங்களா என்ன?
    அருமை
    நன்றி நண்பரே

    ReplyDelete
  2. பராசக்தி மட்டும் பாத்திருக்கேன் ,
    இணைப்பு கொடுத்துட்டீங்க ல
    பாக்குறேன்..

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!