13 March, 2024

இன்னும் ஒரு அடி முன்னே...


வணக்கம் நண்பர்களே...

2004 ஆம் ஆண்டில் தூங்காத விழிகளோடு.... என்ற கவிதை நூலும், 2006-ஆம் ஆண்டு என் பேர் பிரம்மன்... என்ற கவிதை நூலும் வெளியிட்டு மகிழ்ந்த நான் 2010 முதல் இத்தளத்தில் எழுதி வருகிறேன்... நீண்ட நாட்களுக்கு பிறகு என் கவிதை தொகுப்பை வெளிவர முயற்சித்ததின் விளைவாக....

 "சிதறிய மனசின் சில்லுகள்"

"என் இரவுகளின் அரிதாரங்கள்"
என்ற இரு கவிதை நூல்களை கடந்தஆண்டு 2024 டிசம்பர் 3-ம் தேதியன்று திருவள்ளுர் மைய நூலகத்தில் சான்றோர் பெருமக்களால் வெளியிடப்பட்டது.
அன்று முதல் ஆன்றோர் மற்றும் சான்றோர் பெருமக்களாலும் , நண்பர்கள் மற்றும் ஆசிரிய சகோதர சகோதரிகளாலும் அளித்த வரும் ஆதரவில், அவர்களால் வழங்கி வரும் பாராட்டு மழையில் நெகிழ்ந்துக்கொண்டு இருக்கிறேன்.
மாவட்டம் தாண்டி என் நூல் பயணித்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சி. முன்பின் தெரியாத வாசகர்களின் பாராட்டு தான் எனக்கு கிடைத்திருக்கின்ற மிகப்பெரிய வெகுமதியாய் கருதுகிறேன்.
மகிழ்வுடன்... நன்றிகள்...

நூல் வேண்டுவோர் தொடர்பு கொள்க...


இலக்கிய உலகில் இன்னும் ஒரு அடி முன்னோக்கிய நகர காலம் கொடுத்த இந்த ஆசீர்வாதத்திற்கு தலைவணங்குகிறேன்...

நன்றி வணக்கம்...

No comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!