11 January, 2016

பழமாகி பின் பூத்தவை...!

கல்லிலே கலை வண்ணம் கண்டார்.... கல்லில் மட்டும் அல்ல காய்கறிகளிலும்.. பழங்களில் கூட கலைநயம் காணலாம் என இந்த படைப்புகள் நிறுபிக்கிறது.... இதை உருவாக்கிய படைப்பாளிகளுக்கும் படைப்புளுக்கும் ஒரு சல்யூட்...
*******************

படங்கள் மற்றும்.. ஒருசில அறியத்தகவலுடன்...

தேன், மிக எளிதாக ஜீரணமடையும் ஒரு உணவுப்பொருள். ஏன் தெரியுமா? அது ஏற்கனவே தேனீக்களால் ஜீரணிக்கப்பட்டுவிட்டது.


நீங்கள் உங்கள் கைவிரல்களை 'நெட்டி' முறிக்கும்போது ஏற்ப்படும் சத்தத்திற்கு காரணம்...நம் உடம்பில் நைட்ரஜன் வாயுவில் உள்ள குமிழ்கள் உடைவதே.


ரத்த ஓட்டம் இல்லாத மனித உடலில் உள்ள ஒரே பாகம்...கண்விழித்திரை. அது நேரடியாக காற்றில் இருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொள்கிறது.


எறும்புகளின் கொடுக்கில் உள்ள அமிலம் என்ன?
பார்மிக் அமிலம்


நமது மூளை, ஒரு சிறந்த கணிப்போறியைவிட நுட்பமானது. அதில், சுமார் 100 மில்லியன் நரம்பு செல்கள் உள்ளன


ஒரு மனிதன் மரணமடையும்போது, முதலில் செயல் இழக்கும் உறுப்பு..அவனது காதுகள்.


ஒரு மனிதனின் விழித்திரைகள் 45 சதவிதம் அதிகமாக விரிவடைகின்றன...அவன் தனக்கு பிரியமானவற்றை காணும்பொழுது.


இந்த உலகின் மொத்த பெட்ரோல் உற்பத்தியில் 29 சதமும்,உலகின் மொத்த மின் உற்பத்தில் 33 சதமும் ஒரேயடியாக பயன்படுத்திக்கொள்ளும் நாடு.. அமெரிக்கா.


காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.


இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

இந்தியாவில் முதல் நினைவு நாணயம் நேருஜிக்கு 1964ல் வெளியிடப்பட்டது.

ஆணும், பெண்ணும் உதடுகளில் முத்தமிடும்போது 278 வகையான பாக்ட்ரியாக்கள் பரிமாறிக்கொள்ளபடுகின்றன.

பால் கலக்காத தேநீர் பருகுவதால் உடல் எடை குறைவதாக ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 
அதிலும் பச்சைத் தேநீர் (கிரீன் டீ)

சூரியனுக்குள் எத்தனை பூமிகளை வைக்கலாம் தெரியுமா? 
10 லட்சம் பூமிகள்!

சூரியகாந்திச் செடிகளை வளருங்கள். உங்கள் வீட்டில் யாருக்கும் ஜலதோஷம் எட்டிப் பார்க்காது.
 
யானையின் வாழ்நாள் 80 வருடங்கள்.
ஆமையின் வாழ்நாள் 300 வருடங்கள்.
 

மனித உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை 
- 200 000
முதுகு தண்டுவடத்தின் சராசரி நீளம் 430 மில்லிமீட்டர்.


200 கோடி பேருக்கு ஒருவர் தான் 116 வயதைக் கடந்து வாழ்கிறார்கள்.


உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.


உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).
.உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).


உலகில் மின்னல் தாக்கி அதிகம் இறக்கும் மக்கள் அமெரிக்கர்கள்.


நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.


உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.


ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.


நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியது.


ஆந்தையால் ஓரே நேரத்தில் இரு கண்களாலும் இரு வேறு காட்சிகளைக் காண முடியும்.


பெண் சிலந்திப் பூச்சிகள், ஆண் சிலந்தியுடனான உறவுக்குப் பின் அதைக் கொன்று விடுகின்றன.


விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.


மிருகங்களில் குறைந்த நேரம் தூங்கும் மிருகம் கழுதை. இது ஒரு நாளில் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும்.


இந்தியாவில் தமிழில் தான் 'பைபிள் ' முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.


சமம் என்பதற்கு அடையாளமான = என்ற குறியீடு
1557ம் ஆண்டு முதல் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ரசித்தமைக்கும் வாசித்தமைக்கும் மிக்க நன்றி..!

4 comments:

  1. வணக்கம்
    ஐயா
    சொல்லிய தகவலும் படங்களும் பிரமிக்கவைக்கிறது..த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. படங்களும் தகவல்களும் அருமை

    ReplyDelete
  3. படங்களும் தகவல்களும் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!