கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

17 September, 2020

வெண்தாடி வேந்தரே....

 


அக்னி குஞ்சு என்ற பழுதுபடாத பகுத்தறிவு நெருப்பு ஒன்றை இந்த சமூகத்தில் விதைத்தாய்  அது இளமையோடு இன்னும் கொழுந்துவிட்டு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது….

மத சாயம் பூசிக்கொண்டு நீ பகுத்தறிவு பேசி இருந்தால் அதை வதம் என்று வர்ணனை செய்திருப்பார்கள்

உன் பகுத்தறிவுக்கு கருப்பு வண்ணம் ஏற்றி அதை கணைகளால் கொடுத்ததால் என்னவோ  அது கொலையாக கருதப்படுகிறது….

சமூக மாற்றம் வேண்டி காத்திருந்தவர்கள் பகுத்தறிவு தீயில் வெந்து பீனிக்ஸ் பறவை போல் எழுந்து கொண்டார்கள் . அதை சகித்துக் கொள்ளாத சிலர்தான் சிறகுவெந்து இன்னும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் உன்னை சபித்துக் கொண்டிருக்கிறார்கள்

சுயமரியாதை என்று சூடு பட்டவுடன்தான்  சமூகம்  பல நூற்றாண்டுகளாய் தன்மேல் படிந்திருந்த தூசியை தட்டி கொஞ்சம் தன்மானத்தோடு வாழ பழகிக் கொண்டது…. சுயமரியாதை என்பது கோட்டை கொத்தளத்தில் உள்ளவர்களுக்கு மட்டும்தானா குடிசைகளுக்கு ஒத்துவராத என்ன…?

ஒரு நூற்றாண்டு கழிந்தும் அதே பழமையை எதிர்த்து ஒரு சிலர் மட்டும்  அவர் மீது கல்லெறிந்து கொண்டிருப்பது இன்னும் வேதனையாகத்தான் இருக்கிறது

வேரறுந்த வெறும் வெற்று வார்த்தைகளை விதைத்து இருந்தால் அது மண்ணோடு மண்ணாகிருக்கும்விதைத்த வார்த்தையில் வீரியம் இருந்ததால்தான் இன்னும் விதைத்தவனை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்

இன்னும் நூறு ஆண்டு கழித்தும் கல்லெறிபவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்பகுத்தறிவைப் பயன்படுத்தி சுயமரியாதையோடு வாழ்ந்து முடித்தவர்களுக்குதான் தெரியும் அதன் உண்மையான உணர்வு


பகுத்தறிவு பகலவனை நினைவுகூர்ந்தவாறு....

கவிதைவீதி சௌந்தர்….

17-09-2020.

 

1 comment:

  1. அருமையான அற்புதமான படைப்பு..வாழ்த்துகள்..

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...