கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label சிரிப்பு. Show all posts
Showing posts with label சிரிப்பு. Show all posts

16 January, 2025

இந்த மாடுகளை காப்பாத்த யாருமே இல்லையா...

ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடக்கிறதோ இல்லையோ மாட்டுப் பொங்கல் அன்று வாசலில் போடும் காளைகளின் உருவங்கள் இணையத்தில் வைரல் ஆகிவிடுகிறது ...

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு மாட்டுப் பொங்கல் அன்று வாசலில் போட்ட கோலங்களின் புகைப்படங்கள் தான் இவை...

இந்த மாடுகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.... 

டாக்டருக்கு படிக்கும் பசு

காட்டு ஓனான் காளை

சிகப்பு பூச்சி பசு

நான் சிகப்பு மனிதன் பசு

சிரிக்கும் பசு

ஒப்புக்கு சப்பான் காளை

டைனோசர் மாடல் பசு

கட்சிக்கொடி மாடல் பசு

ஆதி காலத்து பசு

பாவம் இந்த பசு

சிலந்திவலை பசு

பன்னிக்குட்டி பசு

அவுட்லைன் காளை

பறக்கும் காளை

ஒட்டக குட்டி பசு

கால் இல்லா காளை

டாம் அண்ட் ஜெர்ரி காளை

மூட்டைப்பூச்சி காளை 

அல்ஜிப்ரா மாடல் காளை

காட்டுப் பன்னி காளை

முள்ளம் பன்றி காளை 

இப்படியும் ஒரு காளை 

ஒனிடா மூஞசி காளை

ஓனான் காளை

பூனை முக காளை 

கம்யூனிஸ்ட் பசு

கரப்பான் பூச்சி பசு 

ஒல்லிக்குச்சி பசு

கட்டெறும்பு காளை

இது காளையா பசுவா அடேய்களா


ஜிம்னாஸ்டிக் காளை

&&&&&&&&&

பாவம்டா இந்த மாடுங்க...
இவைகளை காப்பாற்ற யாருமே இல்லையா...




08 June, 2020

இப்படியும் சில... ஓஷோ -நகைச்சுவை கதைகள்....




தியானம்

ஒரு பெண்மணி தன் தோழியிடம் சொன்னாள், ”இன்றைக்கு உன்னிடம் ஒரு நல்ல செய்தி சொல்லப் போகிறேன். இதுவரை எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருந்த என் மகன் இன்று தியான வகுப்பில் சேர்ந்துள்ளான் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 

”தோழி சொன்னாள், ’விபரம் தெரியாமல் பேசாதே. தியானம் என்பதே சும்மா இருப்பதுதான். உன் மகன் இதுவரை தனியே சும்மா இருந்தான். இப்போது கூட்டத்தோடு சும்மா இருக்கப் போகிறான். அவ்வளவு தான் வித்தியாசம்.’ 

**********************




தையல்காரன். 

தையல்காரன் ஒருவன் இருந்தான் அவன் பெயர் சம்பாச்சு. அவனிடம் மேல் சட்டை தைக்கக் கொடுத்திருந்த ஒருவன் வந்து சட்டையைப் போட்டுப் பார்த்ததில் ஒரு கை  குட்டையாக இருந்தது. அதை சரி செய்ய வேண்டும் என்று அவன் சொன்னபோது சம்பாச்சு சொன்னான், 

”இந்த துணி கலை நயம்வாய்ந்த துணி. இதைத் திரும்பத் தைத்தால் அதன் நயம் கெட்டுவிடும். கையைக் கொஞ்சம் உள்ளுக்குள் இழுத்துக் கொண்டால் சரியாகிவிடும். ”சரியென்று பார்த்தால் முதுகுப் பக்கம் துணி அதிகமாக இருந்ததால் மிக லூசாக இருந்தது. இதற்கென்ன செய்வது என்று கேட்டதற்கு, ”கொஞ்சம் கூனிக் கொள்ளுங்கள். சரியாக இருக்கும். இவ்வளவு நல்ல துணியை மீண்டும் பிரித்து அதன் அழகைக் கெடுக்க விரும்பவில்லை.” என்றான் சம்பாச்சு. 

வேறு வழியின்றி அவன் சொன்ன மாதிரியே அந்த சட்டையைப் போட்டுக் கொண்டு சற்றுக் கூனியவாறு நடந்து கொண்டு கடையை விட்டு வெளியேறினான். வழியில் ஒருவன் அவனைப் பார்த்து, ’இந்த சட்டைமிக அழகாக இருக்கிறது. இதை சம்பாச்சு தான் தைத்திருக்க வேண்டும் என்று உறுதியாகச் சொல்கிறேன் என்றான். சட்டைக்காரனுக்கோ மிக ஆச்சரியம். ”எவ்வாறு இவ்வளவு சரியாகச் சொன்னாய்?” என்று கேட்டான். வந்தவன் சொன்னான், 

”எனக்கு எப்படித் தெரியும் என்றா கேட்கிறீர்கள்? சம்பாச்சுவால் தான் உங்களைப் போன்ற கூனனுக்கு இவ்வளவு அழகாக ஆடையை தைக்க முடியும்.”


**********************



சந்தர்ப்பம் 

ஒரு வியாபாரி பகல் உணவுக்காக விடுதியை நோக்கி சென்றான். எதிரே வந்த ஒருவன் அவனை நிறுத்தினான். ”என்னை உங்களுக்கு நினைவு இருக்குமா என்று தெரியவில்லை. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் இந்த நகரத்திற்கு நான் வந்தேன். அப்போது உங்களிடம் கொஞ்சம் பணம்கேட்டேன். நீங்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினீர்கள். ஒரு மனிதனை வெற்றிப்பாதையில் செல்ல இது வழி வகுக்கட்டும் என்று வாழ்த்திக் கொடுத்தீர்கள், ”என்று சொன்னான். 

அந்த வியாபாரி சிறிது யோசித்துவிட்டு, ”ஆமாம், எனக்கு ஞாபகம் வந்து விட்டது. அப்புறம் சொல்லுங்கள்” என்று ஆவலுடன் கேட்டான். அதற்கு அவன், ”நல்லது, இப்போதும் அதைப் போல ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கொடுக்க விரும்புகிறீர்களா?” என்று கேட்டான். 

**********************



ரொம்ப நல்லது 


மாக்கி என்பவள் தன பழைய சினேகிதி டோரவைக் காண மிக ஆவலுடன் வந்தாள். 

மாக்கி: ஹே டோரா, என்ன ஆச்சரியம்! உன்னைப் பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன! என்ன சமாச்சாரங்கள்? 

டோரா: ஒன்றுமில்லை, உன்னைக் கடைசியாகப் பார்த்த பின் கல்யாணம் செய்து கொண்டேன். 

மாக்கி: கல்யாணம் ஆகி விட்டதா! ரொம்ப நல்ல செய்தி தான்! 

டோரா: அப்படி ஒன்றும் பிரமாதமான வாழ்க்கை அமைய வில்லை. அவன் மிகவும் மோசமானவன். 

மாக்கி: என்ன மோசமானவனா? நான் மிகவும் வருத்தப்படுகிறேன். 

டோரா: அப்படி ஒன்றும் மோசமில்லை. அவனிடம் நிறைய பணம் இருந்தது. 

மாக்கி : பரவாயில்லையே, பணத்தோடு கணவனை அடைந்திருக்கிறாய் என்று சொல். ரொம்ப நல்லது. 

டோரா: அப்படி ஒன்றும் நல்லதாக இல்லை. அவன் ஒரு கஞ்சன். 

மாக்கி: பணம் இருந்தும் கஞ்சன் என்கிறாய். வருத்தமாக இருக்கிறது. 

டோரா: இது ஒன்றும் பெரிய வருத்தமில்லை. அவன் சொந்தமாக ஒரு பெரிய வீடு கட்டியிருக்கிறான். 

மாக்கி: சொந்தமாக வீடா! ரொம்ப நல்ல செய்தி தான். 

டோரா: அப்படி ஒன்றும் நல்ல செய்தி இல்லை. அந்த வீடு எரிந்து விட்டது. 

மாக்கி: என்ன எரிந்து விட்டதா? கேட்கவே சங்கடமாக இருக்கிறதே? 

டோரா: இதல் சங்கடப்பட ஒன்றும் இல்லை. அந்த வீடு எரிந்த போது என் கணவனும் உள்ளே இருந்தான்!


**********************

09 September, 2019

இப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....



வெளியே போய்விட்டு இரவு வீடு திரும்பினர்...
 கணவனும் மனைவியும்..

கதவில் போட்டிருந்த பூட்டு மக்கர் செய்தது....

 "இந்தாங்க, நீங்க டார்ச் அடிங்க நான் திறக்கறேன்"னுட்டு மனைவி ரொம்ப நேரமா சாவியப் போட்டு சுத்தி சுத்திப் பார்த்து சலிப்படைஞ்சு போய்" நான் டார்ச் பிடிக்கிறேன் நீங்க தெறங்க"ன்னா.

அதன்பிறகு அந்தக்கணவர் சாவியப் போட்டதுமே "க்ளிக்" பூட்டு திறந்து விட்டது.

அதப்பார்த்துட்டு அந்த மனைவி கணவனைப் பார்த்து  கோபமாகச் சொன்னா  "இப்பத் தெரிஞ்சுதா டார்ச் எப்புடி புடிக்கணும்னு" ன்னு. !

#இப்படியெல்லாம் யோசிச்சி... ரசிச்சி கணவரை திட்டிதீர்க்க இவர்களால் மட்டும்தான் முடியும்... நாம எது செய்தாலும் குறையாகத்தான் பார்க்குறாங்க.... இப்படித்தான் போயிகிட்டு இருக்கும் இங்குட்டும்...

**********************


தலைவர் செடி நடும்போது கூடவே ஒருத்தர் இருக்காரே... 
அவரு யாரு?

அவரா... கூடவே இருந்து குழி பறிப்பவர்..!

#செமையான சிந்தனை... அழகிய ரசிக்கும்படியான நகைச்சுவையும் கூட... இப்பெல்லாம் தலைவர்கூட மட்டுமல்ல எல்லார்கூடையும்....

**********************

நீங்க ஒண்டியா எல்லா வேலையும் பாக்குறீங்களே...
ஒரு நர்ஸ் வச்சுக்கிட்டா என்ன டாக்டர்?"

"அதுக்கு என் மனைவி ஒத்துக்கமாட்டாங்க."

"ஏன் டாக்டர்?"

"ஏற்கெனவே இங்கே நர்ஸா இருந்தவங்கதான் அவுங்க!"

#அடேய் இப்படித்தான் வலைச்சிபோட்டயா.... அப்ப எப்படி ஒத்துப்பாங்க...
*********************************



நகர சாலை ஒன்றில் விபத்து ஒன்று ஏற்பட்டுவிட்டது....

அதில் பலியானவரை சுற்றி ஒரு பெருங்கூட்டம்
கூடி இருந்தது....

அப்போது அங்கு வந்த ஒரு பத்திரிகை நிருபர்...

அந்த விபத்தை நெருக்கமாக பார்க்க முடியாததால் தவித்து கொண்டு இருந்தார்....

அவருக்கு சட்டென ஒரு யோசனை வந்தது....

இந்த விபத்தில் இறந்து போனவரின் தந்தை நான் என்று அவர் வருத்தமுடன் அங்கிருந்தவர்களிடம் கூறினார்.

நான் அருகில் செல்ல வேண்டும், தயவு செய்து வழிவிடுங்கள் என்று கதறும் தோனியில் நடித்தார்....

உடனே, அந்தக் கூட்டத்தினர் விலகி நின்று, அவருக்காக வழி விட்டனர்....

நிருபர் அருகில் சென்றவுடன், விபத்தில் பலியானவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்....

அது ஒரு கழுதை...!

#இப்படிதான் பலபேர் அவசரப்பட்டு முட்டாள்தனமா யோசிச்சி அவமானம்படுறோம்....

#இப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....

******************************
ரசித்தமைக்கு மிக்க நன்றி...!

இவைகள் சும்மா ஒரு ரீ-எண்ட்ரிக்காகத் தான்....!
மீண்டும் தொடர்வோம்...
கவிதைகளுடன்...

09 January, 2019

எந்த டாக்டராவது இப்படி செய்வாங்களா..?



வீட்டில் எலித்தொல்லை தாங்க முடியாத என் நண்பர் ஒருவர் தன் பக்கத்து வீட்டு  நண்பரிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டிருந்தார்.

அவர் ரொம்பவும் சீரியஸாய் எலியை ஒழிக்க என்ன பண்ணலாம் என்று ஐடியா கொடுத்துக் கொண்டிருந்தார்.

"வீட்ல எலி பொறி இருக்கா..?"

"இருக்கு..."

"அதுல ஒரு கருவாட்டுத் துண்ட மாட்டி வச்சிடு...!"

"நாங்க சைவம்பா... கருவாடெல்லாம் எங்க வீட்ல இருக்காது..."

"ஓகே... மசால் வடை ஒண்ண எடுத்து..."

"மசால் வடையெல்லாம் ஏதப்பா வீட்ல..."

"சரி விடு... தேங்காய் துண்டு ஒரு பீஸ் எடுத்து..."

"கொலஸ்ட்ரால் வந்ததுலருந்து எங்க வீட்ல நாங்க தேங்காயே யூஸ் பண்றதில்லையேப்பா..."

"அதுவும் இல்லியா... சரி, இந்த ரொட்டித் துண்ட தேங்காயெண்ணயில நனச்சு..."

அவர் முடிக்கவேயில்லை..."இல்லப்பா... என் மனைவிக்கு பிரட் பிடிக்காதுங்கறதால நான் வீட்டுக்கு பிரட்டே வாங்கமாட்டேம்பா...!"

மிகுந்த டயர்டாகிப் போன அவர் அந்த நண்பரிடம் கேட்டார்.

"கருவாடு இல்ல. மசால்வடை இல்ல. தேங்காய் இல்ல. ரொட்டித் துண்டுகூட இல்ல.... அப்புறம் அந்தப் பாழாப்போன எலி அப்படி என்னதான் பண்ணுது உன் வீட்ல...?".

★★★★★★★★★★★★★★★★



ஒரு டாக்டர் தன் பேஷண்ட் கிட்டே, 
உங்களுக்கு மறுபடி ஆபரேஷன் செய்யணும் அப்படின்னார்.


ஏன் டாக்டர்?


மறந்தாப்ல என் க்ளவுஸை உங்க வயித்தில வைத்து தைச்சிட்டேன், அதை எடுக்க தான் மறுபடி ஆபரேஷன், அப்படின்னாரு டாக்டர்.


போங்க டாக்டர், போய் 20 ரூபாய் கொடுத்து புது க்ளவுஸ்
வாங்கிக்கோங்க-ன்னாரு பேஷண்ட்....

டாக்டர், ஙே...ஙே!

இவ்வளவு திறமையான டாக்டர் எங்க இருக்காரு பாருங்க
நமக்கு வேண்டப்படங்களை கொஞ்சம் அனுப்பி வச்சி பார்ப்போம்...

★★★★★★★★★★★★★★★★


என்ன டாக்டர், 
இந்த நடு ராத்திரியில கிளினிக்கைத் திறந்து வச்சுகிட்டு இருக்கீங்க?

தூக்கத்துல நடக்கற வியாதிக்காரன் 
எவனாவது வருவான்னுதான்.

பகலில் யாராவது வருவார்களா என்று எதிர்பார்த்து வெறுத்துப்போன யரோ ஒரு டாக்டர்தான் இப்படி யோசிக்கிறாரு போல... 

★★★★★★★★★★★★★★★★


மனைவி : ஏங்க என் பிரசவ நேரத்தில உதவியா
இருக்க எங்கம்மாவை வர சொல்லட்டுமா?

கணவன் : வயசான காலத்தில அவங்களை ஏன் சிரமப்படுத்தற,
பேசாம உன் தங்கச்சியை வர சொல்லு!

மனைவி : ....

இதுக்கூட செம ஐடியாவா இருக்கே... ஆனா இப்படி கேட்டப்பிறகு அவரோ நிலைமையை நினைச்சாதான் பாவமா இருக்கு... அனேகா இப்ப அவர் மருத்துவமனையில இருந்தாலும் இருக்கலாம்... யாரு கண்டா... ஹா..ஹா....

★★★★★★★★★★★★★★★★

வாசித்தமைக்கு மிக்க நன்றி..!

04 January, 2019

இதுதாங்க ரஜினியின் பேட்ட படத்தின் கதை



தலைவர் ஒரு காலேஜ் ஹாஸ்டல்ல வார்டனா இருக்கார். ஸ்ட்ரிக்ட்னா ஸ்ட்ரிக்ட் அப்படி ஒரு ஸ்ட்ரிக்ட் வார்டன். பசங்க எப்படி பேஸ்புக் போஸ்ட் போடனும் எப்படி டிக்டோக் பாக்கனும்னு எல்லாத்துலயும் அவ்ளோ ஸ்ட்ரிக்டா இருப்பார். 

அவரை மீறி ஹாஸ்டல்ல ஒரு ஈ காக்கா நுழைஞ்சிட முடியாது. ஒரு நாள் ரொம்ப கம்பீரமா பெருமையா ஸ்டூடண்ட்ஸ் படை சூழ வராண்டாவுல நடந்துட்டு வந்துட்டு இருக்கார். அப்போ ஒருத்தன் தலை முழுக்க ஹெவியா பங்க் வெச்சிட்டு வராண்டாவுல நின்னு தம்மடிச்சிட்டு நிக்கிறான். 

தலைவர் பக்கத்துல வந்து கோவமா ஒரு லுக்கு விடுறார். அப்பவும் அவன் கண்டுக்காம தம்மடிச்சிட்டு நிக்கிறான். தலைவருக்கு செம கோவம் வந்து டேய் இங்க வாடானு கூப்ட்டு இந்த உன் பீசுனு கைல காச எடுத்து கொடுத்து இப்பவே நீ காலேஜ், ஹாஸ்டல் எல்லாத்துல இருந்தும் டிஸ்மிஸ் போடா வெளியனு அடிச்சு விரட்டுறார். 


அதைப் பாத்து மத்த ஸ்டூடண்ட்ஸ்லாம் திகைச்சு போய் நிக்கிறாங்க. எல்லாரையும் பாத்து தலைவர் பாருங்க டிசிப்லின் இல்லைனா இது தான் கதினு வார்னிங் குடுக்கிறார். 

அதைக்கேட்ட ஒரு ஸ்டூடண்ட் சார் அவன் நம்ம ஸ்டூடண்ட் இல்லை கூரியர் கொடுக்க வந்தவன் சார்னு சொல்றான். தலைவருக்கு உடனே கடுமையான கோவம் வருது. அந்த கூரியர் பாயை தேடிக்கண்டு பிடித்து அடிக்கிறார். 

அவன் பணத்தை கொடுக்க முடியாது என்று சவால் விட்டு 20 அடியாட்களை அனுப்பி வைக்கிறான். அனவைரையும் வெளுத்து அனுப்புகிறார். யார் இவன் என்று ரவுடிகள் அனைவரும் குழம்புகின்றனர். கடைசியில் அது ஒரு ஹாஸ்டல் வார்டன் என்று கண்டுபுடிக்கின்றனர். 

இதற்கிடையில் ஹாஸ்டல் பணத்தை யாருக்கோ கொடுத்து விட்டார் என்று ஹாஸ்டலில் இருந்து தலைவரை சஸ்பெண்ட் செய்கிறார்கள். அதை அறிந்த சிம்ரனுக்கு தலைவர் மேல் காதல் வருகிறது. 



தலைவருக்கும் சிம்ரனுடன் டூயட் பாட 20 வருடங்களுக்குப் பின்னர் வாய்ப்பு வந்திருப்பதை அறிந்து தவறவிடாமல் டூயட்டை முடிக்கிறார். வில்லன்கள் ஒருவழியாக பெரிய பவர்புல் வில்லனை மும்பையில் இருந்து தேடிக் கண்டுபிடித்து கூட்டி வருகிறார்கள். 

தலைவரும் அவர்களை கண்டுபிடிக்க ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு மாறுவேடத்தில் சுற்றுகிறார். சைடு வில்லனுக்கு ஸ்வீட் பிடிக்கும் என்று கண்டுபிடித்து ஸ்வீட் சாப்பிடலாம் என்று கூட்டிக்கொண்டு போய் வில்லன்கள் கூட்டத்தை மொத்தமாக பிடிக்கிறார். 

அனைவரையும் அடித்து உதைத்து அந்த கூரியர் பாயை கண்டுபிடித்து அவனிடம் கொடுத்த பணத்தை மீட்டு மீண்டும் வார்டன் பதவியை அடைவதே மீதிக்கதை.

இந்த பேட்ட கதையின் ஆசிரியர் #பன்னிக்குட்டி ராமசாமி தானுங்கே...

12 September, 2018

எல்லோர் மனைவியும் இப்படித்தான் இருப்பாங்களோ...!


ஒருவன் தான் வேலை செய்யும் கம்பெனியில் இருந்து வெளியே வந்தான்.

அவன் நண்பன் நேராக இவனிடம் வந்து,

"ஒரு கட்டிங் போட்டுட்டு போலாமா" என்றான்.

"சரி", என்று அவனுடன் நடந்தான்.

வழியில் அவனுடைய செருப்பு 'சரக்' என அறுந்தது.

அவன் கண்களில் நீர் அருவியாய் பெருக்கெடுத்தது.

"டேய், ஒரு செருப்பு பிஞ்சு போனதுக்கா இப்படி கண்ணீர் விடற?" என்று சிரித்தான் நண்பன்.

"அதுக்கு இல்ல, என் மனைவி ஒரு தீர்க்கதரிசி. அது எனக்கு இப்போ தான் தெரிஞ்சுது" என்றான்.

"ஓஹோ.. அது எப்படி தெரிஞ்சுது?" என்றான் நண்பன்.

"காலைல வரும்போதே என் பொண்டாட்டி சொன்னா, 'வேலை முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வராம சரக்கடிக்க போனேனா செருப்பு பிஞ்சுடும்'-னு. இப்போ பாரு அதே மாதிரி நடந்துருச்சு."

கண்ணா ஒரு செருப்பு பிஞ்சதுக்கே இப்படி பீல் பண்றீயே இன்றும் மிச்சம் இருக்கிற இன்னோரு செருப்பும் பிய்யப்கோகுதே அப்ப என்ன செய்யப்போற...!!!

*******************************


மனைவி: "என்னங்க! உங்க பொறந்த நாளைக்கு நான் ஒரு ட்ரெஸ் எடுத்திருக்கேங்க."

கணவன்: "வாவ்! சூப்பர். எங்கே எடுத்துட்டு வந்து காமி"

மனைவி: "கொஞ்சம் பொறுங்க! போட்டுட்டு வந்தே காமிக்கிறேன்."

கணவன்: ???!!!!

இது என்னங்க அநியாயம்... அவங்க பிறந்த நாளுக்கும் அவங்களே டிரஸ் எடுக்குக்குறாங்க... நமம்மோட பிறந்தநாளுன்னாலும் அவங்களே டிரஸ் எடுத்துக்கிறாங்க... இதுமட்டும் இல்லாமல் பண்டிகை, கல்யாண நாள், இப்படி எது வந்தாலும் அவங்களே டிரஸ் எடுத்துப்பாங்க... ஆனா ஆண்டு கடைசியிலே சொல்லுவாங்க பாருங்க... எனக்கு என்ன செஞ்சிங்க... ஒரு நகை இருக்கா... ஒரு டிரஸ் இருக்கா... இது எல்லா வீட்டிலும் நடக்கிற சகஜமான நிகழ்வாயிடிச்சி தானே...

*******************************


"ஆட்டோ வருமாப்பா?"

"வரும் சார். எங்க போகணும்?"

"அதோ! ரெண்டு நாய் சண்டை போட்டுகிட்டிருக்கில்ல. அதைத் தாண்டி விடணும்!"

இது மாதிரி என்வாழ்விலும் நடந்திருக்கு ஆனா நான் நாய்க்கெல்லாம் பயந்ததில்லை...

ஒரு மழைகாலத்தில நான் வேலை செய்யும்  தெருவில நிறைய தண்ணி அந்த வரியே ஒரு ஆட்டோ வந்தது.... நிறுத்தி ஏறினேன்.... ஆட்டோகார் எங்கன்னு கேட்டார்.... இந்த தண்ணிய தாண்டி விடுங்கன்னேன்... நிலைமையை புரிந்த அவர் தாண்டி விட்டுவிட்டு காசு கொடுத்தா வேண்டாம் என்று சொல்லிவிட்டார்....

*******************************


நண்பர் பதிவிலிருந்து.

கணவன் சோகமாக வீடு திரும்பினான்.

மனைவி: "ஏன், என்ன ஆச்சு?"

கணவன்: "மத்தியானம் லஞ்ச் முடிச்சுட்டு ஒரு தம் போடலாம்னு ஆபீசை விட்டு வெளியே வந்தேன். எதிரே இருந்த பொட்டிக்கடையில் சிகரெட் பத்தவைக்கக்கூட இல்லை, எங்க ஆபீஸ் கட்டிடம் இடிஞ்சு விழுந்து ஆபீஸ்ல எல்லாமே குளோஸ், என்னைத் தவிர"

மனைவி: "தப்பிச்சீங்க. ஆண்டவன் புண்ணியம்"

தொலைக்காட்சி: "இறந்தவர்கள் குடும்பத்திற்குத் தலா இருபது லட்ச ரூபாய் நஷ்ட ஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது"

மனைவி: "இந்த சிகரெட் சனியனை நிறுத்துன்னா கேட்கறியா?"

*******************************


"ஓய்வு பெற்ற நீதியரசர் இப்ப ஆத்ம திருப்திக்காக ஜோசியம் ஜாதகம் பார்க்கிறாரு!"

"சரி, அதுக்கு என்ன இப்ப?"

"முகூர்த்த நாள் குறிச்சி கொடுங்கன்னு அவருக்கிட்ட போனோம்"

"என்னாச்சு?"

"அடுத்த முகூர்த்த நாளான்னிக்கு வாங்க. உங்க வீட்டுக்கு கல்யாணத்துக்கு நாள் குறிச்சித் தரேன்னு வாய்தா சொல்லி அனுப்பிட்டாரு!"

தம்பி கொஞ்ச நாளைக்கு சந்தோசமா இருந்துக்கோ...

*******************************


கணவன் - மனைவிக்கு இடையே நடந்த சண்டையின் போது:-

#கணவன்: "உன்னைப் பார்த்து நான் பயப்படறேன்னு நெனச்சுடாதே!"

#மனைவி: "பொய் சொல்லாதே! என்னைப் பொண்ணுப் பாக்க வரும்போது 6 பேரோட வந்தே!

நிச்சயம் பண்ணும் போது 100 பேரோட வந்தே!!!

தாலி கட்டும் போது 500 பேரை கூட்டிட்டு வந்தே!!!"

#கணவன்: ??????

#மனைவி: "ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் நான் உன் வீட்டுக்குத் தனியாவே வந்திருக்கேன் பாத்தியா! இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு..."


கணவன்: 😳!!!!!!!!!???????

#மனைவிடா....
*******************************

அடி சண்டாலி....
Related Posts Plugin for WordPress, Blogger...