கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

27 September, 2021

சினிமாவின் பாசிச விமர்சகர்கள்...


திரைப்படத்தை விமர்சிக்கத் தகுதி தேவையா தேவையில்லையா... என்ற தலைப்பில் ஒரு விவாதம் நடந்தது...

பொதுவாக அனைவரும் சொன்ன கருத்து என்னவென்றால்... 

ஒரு திரைப்படத்தைக் காசு கொடுத்துப் பார்க்கும் எனக்கு அது நன்றாக உள்ளதா, நன்றாக இல்லையா, என்று சொல்லும் உரிமை இருக்கிறது என்பதுதான்.

தனிமனித சுதந்திரத்தின் அடிப்படையில் என்னுடைய கருத்தைச் சொல்வதற்கான முழு உரிமையும் சினிமா பார்க்கும் அனைவருக்கும் இருக்கிறது என்று விவாதித்தார்கள்.

பொதுவாகச் சொல்லப் போனால் சினிமா விமர்சனம் செய்யத் தனிப்பட்ட தகுதிகள் எதுவும் தேவையில்லை என்பதே அது...

ஆனால் சமீபகாலத்தில் சில தயாரிப்பாளர்கள் சில இயக்குநர்கள் இன்றைய விமர்சகர்கள் அனைவரும் சினிமாவை அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்,  

நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் படங்களைக் குறை சொல்லியே விமர்சனம் செய்கின்றனர், என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

ஆனால் சினிமா விமர்சகர்களோ.... நீங்கள் சரியான முறையில் தரமான படம் எடுத்து இருந்தால்... காசு கொடுத்து படம் பார்க்கும் நாங்கள் ஏன் அதைக் குறை சொல்லப் போகிறோம். 

சரியாக இருந்தால் சரியாக இருக்கிறது என்றும், சரி இல்லை என்றால் சரி இல்லை என்று சொல்வது மட்டுமே எங்களுடைய வேலை என்று அவர்கள் வாதிட்டனர்...

என்னுடைய கருத்தையும் பதிவு செய்வதே இந்த பதிவு....

90களில் நான் பார்த்த விமர்சனம் சன் தொலைக்காட்சியில் மட்டும் தான்... வாரத்திற்கு ஒரு படம் என விமர்சனம் செய்வார்கள். அந்த விமர்சனத்தைப் பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

அதன் பிறகு சில வார இதழ்களில் வாரத்திற்கு ஒரு படத்தை விமர்சனம் செய்து அதற்கு மதிப்பெண்ணும் கொடுத்து, ஒரு திரைப்படத்தின் தரத்தை   மதிப்பிட்டுக் காட்டினார்கள்.

உதாரணத்திற்கு ஒரு பண்டிகைக்கு 5 படங்கள் வருகிறதென்றால் ஐந்து படத்தையும் விமர்சனம் செய்து முடிக்க ஒரு மாதம் கடந்து விடும்.

தினமும் படத்தைப் பார்த்துவிட்டு வருபவர்கள் சொல்லுகிறதை வைத்தே அந்தப் படத்தை எத்தனை நாள் ஓட வைக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

அதற்குள் திரைப்படம் 25 நாள் 50 நாட்களைக் கடந்து விட்டிருக்கும்...

பணம் போட்ட தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், அதில் எந்தவித பாதிப்பும் இருக்காது...

ஆனால் இன்றைய நவீன சூழலில் இணைய விமர்சகர்கள் 10 மணிக்குப் படத்தைப் பார்த்துவிட்டு ஒரு மணிக்கே இப்படம் எதற்கும் லாயக்கில்லை என்று சொல்லிவிடுகிறார்கள்...

இதனால் பொழுதுபோக்கிற்காக சினிமா பார்க்க வரும் சிலரும் கூட இந்தப்படம் சரியில்லையாம் என்று சொல்லித் தவிர்த்து விடுகிறார்கள்.

இப்படி விமர்சனம் செய்வதால் யாருக்குப் பாதிப்பு என்றால், அந்த படத்திற்குப் பணம் போட்ட தயாரிப்பாளர்களுக்கும், மற்றும் அதை இயக்கிய  இயக்குநருக்கு  மட்டுமே. 

நடிகர்கள் அவர்களுக்கு உண்டான பணத்தைப் பெற்றுக் கொண்டுதான் படத்தை நடித்தே முடிக்கிறார்கள். அதனால் ஒரு படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் எப்படி இருந்தாலும் அந்த நடிகர்களைப் பாதிப்பதில்லை.

உண்மையான பாதிப்பு என்பது தயாரிப்பாளருக்கும்,  சினிமா திரையரங்க உரிமையாளர்களுக்கும் மட்டுமே.

நான் சொல்ல வருகிற கருத்து என்னவென்றால்...

ஒரு சினிமாவை விமர்சனம் செய்ய.... ஏன் குறைந்தது ஒரு வாரக் கால அவகாசம் ஆவது எடுத்துக்கொள்ளக்கூடாது.

அன்றே விமர்சனம் செய்து முடித்துவிட வேண்டும் என்ற கட்டாயம் என்ன... ஊடகங்கள் வழியே இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் ஒரு படத்தை அலசி ஆராய்ந்து விட வேண்டும் என்ற அவசியம் எதற்கு வருகிறது...

தன்னுடைய சேனலை அதிகமானோர் பார்த்த வேண்டும் என்பதற்காகவும்... தனது தனிப்பட்ட லாபத்திற்காக மட்டுமே இப்படிப்பட்ட விமர்சனங்கள் தோன்றுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது....

ஒரு திரைப்படத்தை ஒரு வாரம் கழித்து விமர்சனம் செய்தால்... பொருளாதார ரீதியாக யாருக்கும் நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை... அந்த ஒரு வார காலத்தில்  தயாரிப்பாளரும் திரையரங்குகளும் தாங்கள் போட்ட பணத்தைப் பெற்றிருக்கும்....

படத்தைப் பார்ப்பவர்களுக்கு நட்டம் வந்தால் பரியில்லையா என்று நீங்கள் கேட்கலாம்... 

நாம் சினிமா பார்க்கச் செல்வதே பொழுதுபோக்கிற்காகத் தான் பொழுதுபோக்கிற்காகச் செய்யும் செலவு என்பது அவ்வளவு பெரிய நட்டமாகக் கருத முடியாது. இன்னும் இன்றைய சூழ்நிலையில் திரையரங்குகளுக்கு சினிமா பார்ப்பவர்கள் வரும் கூட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது... இப்படியே சென்றால் பொழுது போக்கிற்கான ஒரு சரியான இடம் திரையரங்கம் என்ற சூழலே மாறிவிடும்.... 

புதுமுகமாக வரும் இயக்குநர்கள் தங்களுடைய வாழ்க்கையில் மொத்த கனவையும் அந்த சினிமாவில் கொட்டித் தீர்க்கிறார்கள். அப்படிப்பட்ட கனவைத் பொசுக்குவது என்பது    அவ்வளவு நியாயமாக இருக்காது....

நாம் செய்யும் விமர்சனம் மெதுவாக மக்களிடையே சென்றடைந்தால் பிரச்சினையில்லை.... ஆனால் இன்றைய 5G கால கணினி யுகத்தில் நாம் சொல்லுகிற விஷயம் ஒரே நேரத்தில் அனைவருக்கும் ஒரே சமயத்தில்  சென்றடைகிறது.  இதனால்தான் சினிமாக்கள் மிகப் பெரிய நட்டத்தைச் சந்தித்து வருகிறது.

சரி இல்லாத படத்தைப் பார்க்க வரும் நூறு பார்வையாளர்களைக் காப்பாற்றுவதாக நீங்கள் எண்ணிவிடலாம்.... அப்படிக் காப்பாற்றும் நீங்கள் தான் சினிமாவை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் நூறு தொழிலாளர்களைப் பழிக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்...

நூறாண்டுக் கால சினிமாவும் அழிந்து விடக்கூடாது...

நூறாண்டுக் கால ரசிகனும் அழிந்து விடக்கூடாது... 

என்பதை மனதில் வைத்து சினிமாக்களை விமர்சனம் செய்தால்... விமர்சகர்கள் அனைவராலும் சிறப்பாகவே ரசிக்கப் படுபவர்களாக ஆவார்கள்..


ஒரு ரசிகனாய்...

நான் சௌந்தர்...

27-09-2021

20 August, 2021

10 வாரலாறு பாடம் 1. முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

ஒரு மதிப்பெண் வினா 
\


https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdQDz_VoR0RA51ximkxfv3CulfVqiFTm1HuvUQcaaQjms_jrA/viewform

17 April, 2021

ஜனங்களின் கலைஞன் விவேக்... விவேக் வரலாறு

 

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் சென்னை சாலிகிராமம் பத்மாவதி நகரில் உள்ள வீட்டில் நேற்று காலை குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. மயக்க நிலைக்கு சென்றார்.

உடனடியாக அவரை வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விவேக்கை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதய செயல்பாடு குறைந்ததால், இதயத்தை முழுமையாக செயல்பட வைக்க எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.  இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 4.35 மணியளவில் நடிகர் விவேக் காலமானார். 

59 வயதாகும் விவேக் நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் படங்களிலும் நடித்து இருக்கிறார்.

திரைப்படங்களில் சீர்திருத்த கருத்துகளையும் பரப்பினார். இதனால் அவரை சின்ன கலைவாணர் என்று ரசிகர்கள் அழைத்தனர். பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். சுற்று சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு போன்ற சமூக சேவை பணிகளில் ஆர்வம் காட்டினார்.

மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் கிரீன் கலாம் அமைப்பு மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை இலக்காக வைத்து செயல்பட்டு வந்தார். இதுவரை பள்ளிகள், கல்லூரிகள், கிராமங்கள். சாலையோரங்களில் 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு இருக்கிறார்.



தமிழ் திரைப்படத்துறையில் ‘சின்னக்கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக் அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஆவார். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர். ‘பாளையத்து அம்மன்’, ‘லவ்லி’, ‘அள்ளித்தந்த வானம்’, ‘யூத்’, ‘காதல் சடுகுடு’, ‘விசில்’, ‘காதல் கிசு கிசு’, ‘பேரழகன்’, ‘சாமி’, ‘திருமலை’ போன்ற திரைப்படங்கள் நகைச்சுவைக் கலந்த சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் திரைப்படத்துறை வரலாற்றிலேயே, நகைச்சுவை வாயிலாக சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்லுவதில் வல்லவர், ‘கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன்’ அவர்கள். அவரைப் பின்பற்றி, தான் நடித்த பெரும்பாலானப் படங்களில் லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு, சமூக சிந்தனைக் கருத்துக்களைப் பெருமளவில் கடைபிடித்து, தமிழ் சினிமாவில் ‘சின்னக்கலைவாணர்’ எனப் போற்றப்பட்டார். திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கி கௌரவித்தது. ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு தமிழ் சினிமாவில் நகைச்சுவையோடு கலந்த பல சமூகக் கருத்துக்களை விதைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறந்த நகைச்சுவை கலைஞனாக தன்னுடைய ஆளுமையை கோலோச்சி வரும் விவேக்கின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.


பிறப்பு 

“சின்னக் கலைவாணர்” என அழைக்கப்படும் விவேக் அவர்கள், 1961  ஆம் ஆண்டு நவம்பர் 19  ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மதுரையில் பிறந்தார். இவருடைய முழு பெயர் விவேகானந்தன் ஆகும்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தன்னுடைய பள்ளிப்படிப்பை மதுரையில் முடித்த சின்னக்கலைவாணர் அவர்கள், பிறகு அதே ஊரிலுள்ள அமெரிக்கன் கல்லூரியில் வர்த்தக இளங்கலைத் துறையில் பி.காம் பட்டம் பெற்றார். அதே துறையில், எம்.காம் முதுகலைப் பட்டமும் பெற்ற அவர், சிறிது காலம், தொலைப்பேசி ஆபரேட்டராக மதுரையில் வேலைப்பார்த்து வந்தார். அதன் பிறகு, சென்னைக்கு வந்து சேர்ந்த அவர், டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் வெற்றிப்பெற்று, சென்னைத் தலைமை செயலகத்தில் ஜூனியர் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார்.



திரைப்படத்துறையில் அவரின் பயணம்

1987 ஆம் ஆண்டு, ‘மனதில் உறுதிவேண்டும்’ என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமா துறையில் கால்பதித்த சின்னக்கலைவாணர் அவர்கள், அத்திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அதன் பிறகு, 1989 ஆம் ஆண்டு வெளிவந்த ‘புது புது அர்த்தங்கள்’ திரைப்படத்தில், இவர் பேசிய ‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’ என்ற வசனம் இவரைப் பிரபலப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, ‘ஒரு வீடு இரு வாசல்’, ‘புது மாப்பிள்ளை’, ‘கேளடி கண்மணி’, ‘இதய வாசல்’, ‘புத்தம் புது பயணம்’ எனப் பல படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, வெறும் நகைச்சுவையை மட்டும் வெளிபடுத்தும் காட்சிகளில் நடிக்காமல், நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தார். ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘உன்னருகே நானிருந்தால்’, ‘ஆசையில் ஓர் கடிதம்’, ‘சந்தித்த வேளை’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘பெண்ணின் மனதைத்தொட்டு’, ‘பாளையத்து அம்மன்’, ‘சீனு’, ‘லூட்டி’, ‘டும் டும் டும்’, ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘அள்ளித்தந்த வானம்’, ‘ஷாஜகான்’, ‘மனதைத் திருடிவிட்டாய்’, ‘தென்காசிப் பட்டணம்’, ‘யூத்’, ‘ரன்’, ‘காதல் சடுகுடு’, ‘சாமி’, ‘விசில்’, ‘தென்னவன்’, ‘தூள்’, ‘பாய்ஸ்’, ‘திருமலை’, ‘பேரழகன்’, ‘அந்நியன்’, ‘சிவாஜி’, ‘பசுபதி மே/பா ராசக்காபாளையம்’, ‘சண்டை’, ‘படிக்காதவன்’, ‘பெருமாள்’, ‘குரு என் ஆளு’, ‘ஐந்தாம் படை’, ‘தம்பிக்கு இந்த ஊரு’, ‘சிங்கம்’, ‘பலே பாண்டியா’, ‘உத்தம புத்திரன்’, ‘சீடன்’, ‘மாப்பிள்ளை’, ‘வெடி’ போன்ற திரைப்படங்கள் இவருடைய நகைச்சுவை நடிப்பில் வெளிவந்த குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்.

சின்ன கலைவாணர் விவேக்

இவருடைய நகைச்சுவை பெரும்பாலும் லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு இருப்பதால், இவரை சினிமா ரசிகர்கள் ‘சின்னக்கலைவாணர்’ என்றும், ‘மக்களின் கலைஞன்’ என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர். ‘பாளையத்து அம்மன்’, ‘லவ்லி’, ‘அள்ளித்தந்த வானம்’, ‘யூத்’, ‘காதல் சடுகுடு’, ‘விசில்’, ‘காதல் கிசு கிசு’, ‘பேரழகன்’, ‘சாமி’, ‘திருமலை’ போன்ற திரைப்படங்கள் இதற்கு சான்றுகளாகும். அதுமட்டுமல்லாமல், தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வரும் விவேக் அவர்கள், ‘நாட்டில் வறட்சி ஏற்பட்டதற்கு நாம்தான் காரணம், வறட்சியைப் போக்கும் வகையில் சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவேன்’ எனக்கூறி அவ்வப்போது இத்திட்டத்தினை செயல்படுத்தி மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறார்.

அவரின் புகழ்பெற்ற நகைச்சுவை வசனங்கள்

  • இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு,
  • எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்
  • கோபால்!!! கோபால்!!!
  • எனக்கு எஸ்.பி-யைத் தெரியும்!…. ஆனா அவருக்கு என்ன தெரியாது.
  • நான் எஸ்.ஐ-யா இருக்கேன்

அவர் நடித்த சில திரைப்படங்கள்

‘மனதில் உறுதி வேண்டும்’, ‘புது புது அர்த்தங்கள்’, ‘கேளடி கண்மணி’, ‘இதய வாசல்’, ‘ஜென்ம நட்சத்திரம்’, ‘உழைப்பாளி’, ‘பாஸ் மார்க்’, ‘வீரா’, ‘புதிய மன்னர்கள்’, ‘வனஜா கிரிஜா’, ‘பொங்கலோ பொங்கல்’, ‘எங்க முதலாளி’, ‘நந்தவன தேரு’, ‘மாயாபஜார் 1995’, ‘இளைய ராகம்’, ‘பெரிய இடத்து மாப்பிள்ளை’, ‘மைனர் மாப்பிள்ளை’, ‘தினமும் என்னை கவனி’, ‘காதல் மன்னன்’, ‘மறுமலர்ச்சி’, ‘உன்னுடன்’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘நினைவிருக்கும் வரை’, ‘பூமகள் ஊர்வலம்’, ‘வாலி’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘அதாண்டா இதாண்டா’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘உன்னருகே நானிருந்தால்’, ‘ஆசையில் ஓர் கடிதம்’, ‘ஏழையின் சிரிப்பில்’, ‘சுதந்திரம்’, ‘தை பொறந்தாச்சு’, ‘முகவரி’, ‘அலைபாயுதே’, ‘சந்தித்த வேளை’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘குஷி’, ‘பெண்ணின் மனதைத்தொட்டு’, ‘பட்ஜெட் பத்மநாபன்’, ‘பாளையத்து அம்மன்’, ‘சீனு’, ‘லூட்டி’, ‘மின்னலே’, ‘எங்களுக்கும் காலம் வரும்’, ‘டும் டும் டும்’, ‘சூப்பர் குடும்பம்’, ‘மிடில் கிளாஸ் மாதவன்’, ‘லவ்லி’, ‘தில்’, ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘அள்ளித்தந்த வானம்’, ‘ஷாஜகான்’, ‘மனதைத் திருடிவிட்டாய்’, ‘விவரமான ஆளு’, ‘அழகி’, ‘தென்காசிப் பட்டணம்’, ‘யூத்’, ‘ரன்’, ‘காதல் சடுகுடு’, ‘சாமி’, ‘பார்த்திபன் கனவு’, ‘விசில்’, ‘தித்திக்குதே’, ‘தென்னவன்’, ‘தூள்’, ‘பாய்ஸ்’, ‘திருமலை’, ‘பேரழகன்’, ‘அந்நியன்’, ‘வணக்கம் தலைவா’, ‘பரமசிவன்’, நீ வேணும்டா செல்லம், ‘சிவாஜி’, ‘பசுபதி மே/பா ராசக்காபாளையம்’, ‘சண்டை’, ‘படிக்காதவன்’, ‘பெருமாள்’, ‘குரு என் ஆளு’, ‘ஐந்தாம் படை’, ‘தம்பிக்கு இந்த ஊரு’, ‘சிங்கம்’, ‘பலே பாண்டியா’, ‘உத்தம புத்திரன்’, ‘சீடன்’, ‘மாப்பிள்ளை’, ‘வெடி’, 'வெள்ளை பூக்கள்', 'விஸ்வாசம்', கடைசி படம் 'தாராளபிரபு'.


விருதுகளும், மரியாதைகளும்

  • இந்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ’ விருது.
  • அனைத்து நேர விருப்பமான நகைச்சுவை நடிகருக்கான ‘விஜய் விருது’.
  • 2002-ல் ‘ரன்’, 2003ல் ‘சாமி’, 2004-ல் ‘பேரழகன், 2007-ல் ‘சிவாஜி’ போன்ற திரைப்டங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருது’.
  • ‘உன்னருகே நானிருந்தால்’, 2002-ல் ‘ரன்’, 2003ல் ‘பார்த்திபன் கனவு’, 2007-ல் ‘சிவாஜி’ போன்ற திரைப்டங்களுக்காக தமிழ் நாடு அரசின் மாநில விருது வழங்கப்பட்டது.
  • சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தேசிய தமிழ் திரைப்பட விருதுகள்’ பெற்றார்.
  • சிறந்த ஆண் நகைச்சுவை நடிகருக்கான ‘எடிசன் விருது’.
  • சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘கொடைக்கானல் பண்பலை வானொலி விருது’.
  • சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘ஐ.டி.எஃப்.ஏ விருது.

1990-களின் தொடக்கத்தில் துணை நடிகராகத் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கி, இப்பொழுது பிரபல நகைச்சுவை நடிகராக விளங்குகிறார். இவருடைய நகைச்சுவைக் காட்சிகள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், வாழ்வியலை ஒரு சில நொடிகளிலேயே புரிய வைக்கும் ஆற்றலை உண்டாக்கியவையாகும். நகைச்சுவையில் கருத்துக்களை மட்டும் வழங்குவதில் இவர் வள்ளலாக இருந்துவிட வில்லை, தமது வாழ்க்கையிலும் ஒரு சில சமூக நலக் குறிக்கோள்களை கடைபிடித்து, அதனை செயல்படுத்தியும் வருகிறார். குறிப்பாகச் சொல்லப்போனால், தமிழ் சினிமாவில் பல கலைஞர்கள் உருவாகி, சாதித்து, மறைந்திருக்கலாம், ஆனால், என். எஸ். கிருஷ்ணன் அவர்களுக்குப் பிறகு, நகைச்சுவையில் பல சீர்த்திருத்த கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர் விவேக் என்று சொன்னால் அது மிகையாகாது.pமாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் காலமானார்.

இன்று 17-04-2021 சனிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு இந்த உலகைவிட்டு பிரிந்தார்.


Related Posts Plugin for WordPress, Blogger...