கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

15 January, 2015

ஆம்பள சினிமா விமர்சனம் - Aambala Cinema Review-2015


தமிழ் சினிமாவில் இயக்குனர்களாக நுழைந்தவர்கள் தங்களுக்கென்று தனிப்பாதையை அமைத்துக்கொண்டால் தான் நிலைத்து நிற்கமுடியும் என்ற உண்மையை புரிந்துக்கொண்டு தன்னுடைய படங்கள் என்றாலே இப்படித்தான் இருக்கும் என்று ரசிகர்கள் மனதில் அமர்ந்துவிடுகிறார்கள்.. 

அது குடும்பப் பாங்கான படமாக இருந்தாலும் சரி, ஆக்ஷ்ன் படமாக இருந்தாலும் சரி, திகில் படமாக இருந்தாலும் சரி அதில் தனது முத்திரை பதித்துவிடுவார்கள் அந்த வரிசையில் அரண்மனை படத்தில் நகைச்சுவையான திகில் படத்தை தந்த சுந்தர்.சி... தற்போது கொஞ்சம் ஆக்ஷ்ன் கலந்த குடும்பாங்கான ஒரு நகைச்சுவை கதையை எடுத்து “ஆம்பள”-யாக உலவவிட்டிருக்கிறார்.

தற்போதைய தமிழ் சினிமாவில் அதிகமான கதாபாத்திரங்களை கொண்டு சிரித்துவிட்டு வரும்படியான கதையை தன்னால் மட்டுமே தரமுடியும் என்று மறுபடியும் நிருபித்திருக்கிறார் சுந்தர்.சி. பாதுகாப்பான கதையை தேர்ந்தெடுத்து அதை நாமே நடித்து தயாரித்தால் போட்டபணத்துக்கு உத்திரவாதம் என்ற உண்மையை தெரிந்துக்கொண்டு அதுமாதிரியான கதையை தேர்ந்தெடுக்கிறார் விஷால்...!

படத்துக்குள் வருகிறேன்....!  முதல் சீனில் அரசியல் மற்றும் அனைத்துவிதமான கூட்டங்களுக்கு ஆட்களை சப்ளே செய்யும் அதிரடி நாயகனாக அறிமுகமாகிறார் விஷால்.  அடுத்த சீனி‌லேயே அறிமுகமாகும் ஹன்சிகாவை பார்த்த மாத்திரத்திலே காதலிக்க ஆரம்பிக்கிறார்... ‌‌‌‌



அவருக்கு போட்டியாக போலீஸ் இன்ஸ்பெக்டாராக வரும் சந்தானமும் காதலை சொல்ல வருகையில் அது ஹை-ஸ்டெயில் பெண்ணு உனக்கு சரிப்பட்டு வராது என்று ஓரம்கட்டிவிடுகிறார். விஷால்-ஹன்சிகா  காதலிப்பதும், சந்தானத்திற்கு போலீஸ் வேலையை பறிக்கொடுப்பதும் முதல் அரைமணி நேரப்படத்தை காமெடியில் அரளிபுரளியாக்குகிறது...!

என்னடா சுந்தர்.சி படம்-னா ஏராளமான நடிகர்கள் வருவார்களே இன்னும் காணலையேன்னு பார்த்தா...! விஷால் அம்மாவிடம் இருந்து கதைநீள்கிறது... விஷால் பிறக்கும் முன்னே அவருடைய அப்பாவான பிரபுக்கு வேறொரு பெண்ணிடம் தொடர்பு இருந்தது என்ற உண்மையை அறிந்து வீட்டைவிட்டு வெளியேறிய உண்மையை விஷாலிடும் கூறுகிறார். தற்போது மனம்திருந்தி பிரபுவையும் அவரது இன்னொரு குடும்பத்தில் பிறந்த குழந்தைகளையும் கண்டுபிடிக்கும்படியான வேண்டுகோளை ஏற்று கிளம்புகிறார் விஷால்.

செல்வந்தரான அப்பா பிரபுவை தில்லாங்கடி அப்பாவாக சந்திக்கிறார் விஷால் கூடவே அவர்களது சகோதரர்களாக வைபவ்வும், எதிர்நீச்சல் சதீஷ்-ம் கூட்டுச்சேர்கிறார்கள். மூன்று பேரும்சேர்ந்து செய்யும் அலப்பறைகள் அம்புட்டு மோசம்இல்லை....

பிளாஸ்பேக்கில்... ஊரில் நிரந்தர எம்.எல்.வாக இருக்கும் விஜயகுமார் தற்போது பிரபுவை நிற்கவைக்க முடிவெடுக்கிறார். ஆனால் தான் காதலித்த பெண்ணை விரட்டிவிட்ட அப்பாவை வெறுத்து ஒதுக்கிவிடுகிறார் பிரபு...  இதற்கிடையில் எம்.எல்.ஏ. பதவிக்கு ஆசைப்பட்டு அவருடைய கூலிக்காரனே
பிரபு அப்பாவை கொலை செய்து வில்லனாக உறுவெடுக்க.... அந்தபழி  பிரபு மீது வந்துவிடுகிறது... 


ஜெயிலில் இருந்து திரும்பிய பிரபு தன்னுடைய சொத்து எங்கும் போய்விடக்கூடாது என்பதற்காக தன்னுடைய மூன்று தங்கைகளுக்கு (ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா) வீட்டோட மாப்பிள்ளைகளாக பார்த்து திருமணம் செய்துவைத்துவிடுகிறார். மொத்த சொத்தையும் எழுதியும் வைத்துவிடுகிறார்.... ஆனால் தன் அப்பாவை கொன்றவர், தங்கள் வா‌ழ்க்கையை கெடுத்தவர்... என்று பிரபுவை வீட்டைவிட்டே விரட்டிவிடுகிறார்கள் அவரது தங்கைகள்......


இந்நிலையில்... மீண்டும் ஒன்றுசேரவேண்டும் என்றால் உங்கள் மூன்று அத்தைகளுக்கும் மூன்று பெண்கள் உள்ளனர்... அவர்களை எப்படியாவது நீங்கள் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று விஷால்& கோ-க்கு கட்டளையிடுகிறார் பிரபு..... இந்த சவாலை ஏற்றுக்கொண்டது அங்கு சென்று பார்க்கும்போதுதான் தெரிகிறது. ஹன்சிகாதான் அத்தைபெண் என்று... கூடவே மற்ற இருவருக்கும் இரு நாயகிகள்...


போலீஸ் போல் வேடமிட்டு அந்த குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிப்பதுபோல் அந்த குடும்பத்துடன் சேர்கிறார்கள். அதே வேளையில் எம்.எல்.ஏ., தேர்தலும் வருகிறது. இந்த முறை அந்த தேர்தலில் வில்லனை எதிர்த்து ரம்யாகிருஷ்ணன் போட்டியில் குதிக்கிறார். பக்கபலமாக விஷால் இருக்கிறார்.




ஒரு கட்டத்தில் விஷாலும் கூட இருப்பவர்களும் தன்னுடைய அண்ணனுடைய பையன்கள்தான்  என்று தெரியவர இவர்களையும் வீட்டைவிட்டு விரட்டுகிறார் ரம்யாகிருஷ்ணன்....? இப்படிப்பட்ட சூழ்நிலையில் தேர்தலில் வெற்றிபெற வில்லன் செய்யும் சோதனைகளை விஷால் எப்படிமுறியடிக்கிறார் என்றும்...? போட்டியில் யார் வெற்றி பெற்றது என்றும்? பிரபுவை மன்னித்து ஏற்றுக்கொண்டாரா? விஷால் உள்ளபட மூவருக்கும் திருமணம் நடந்ததா என்பதை இரண்டரை மணிநேரம் ஓடாய் ஓடவிட்டு கொஞ்சம் சிரிக்கவைத்து சுபம் போட்டிருக்கிறார் இயக்குனர். (இது கலகலப்பு பார்ட்-2 எனவும் கொள்ளலாம்)


படத்தில் மிஞ்சி நிற்பது நகைச்சுவைதான் விஷால், சந்தானம், சதீஷ், மனோபாலா, கனல்கண்ணன், பிரபு, ஸ்ரீமான், ராஜ்கபூர் என அத்தனைப்போரும் நகைச்சுவையில் வெலுத்து வாங்கியிருக்கிறார்கள்... சந்தானம் வரும் முதல் அரைமணிநேரப் படமும், கடைசி அரைமணிநேர படமும் சிரிப்பலையில் அரங்கம் அதிர்கிறது....



விஷால்-ஹன்சிகா காதல் காமினேஷன் நன்றாகவே வந்திருக்கிறது. மாடர்ன் கேளாக வந்து அனைவரின் மனதை கொள்ளையடிக்கிறார் ஹன்சிகா.. பாடல்கள் சுமார் ரகம்தான்  இரண்டுப்பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது...!


திரையரங்குக்கு வரும் ரசிகர்களை முகம் சுளிக்கவைக்காமல் கொஞ்சம் சிரிக்கவைத்து அனுப்பும்படியான கதையை கொடுத்தால் அந்தப்படம் வெற்றிதான் என்பதை மீண்டும் ஒருமுறை நிறுபித்திருக்கிறார சுந்தர்.சி. லாஜிக் பார்க்காமல் ரசித்து பொழுதைப்போக்க தகுந்தமாதிரியான படம்தான் இது...!


விரைத்துக்கொண்டு காமெடி செய்யும் அமர்களமான அட்டகாசம் தான் இந்த ஆம்பள

2 comments:

  1. வணக்கம்
    விமர்சனம் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...