கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

23 September, 2013

என்னை ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்..?



நீ அதிகாலையில் போட்ட கோலத்தில்
பூக்களாய் பூக்கிறேன் நான்...

குடம் சுமக்கும் இடையில் சிக்கி
உன் பாரங்களை சுமக்கிறேன் நான்...

புத்தகங்கள் சுமந்து நீ கல்லூரி செல்கையில்
படிக்கும்ஆசையோடு பயணிக்கிறது மனசு...

நீ வேண்டுதலுக்காய் ஆலயம் செல்கையில்
திருநீர் பூசி பக்தனாய் பின்தொடர்கிறேன் நான்...

உன் மாலைநேர வருகைக்காக பூங்காவில் காத்திருப்பது
புல்வெளியும் பூக்களோடும் சேர்ந்து நானும்...

நீ விரும்பி வாங்கிய வண்ணங்களைதான்
கொண்டாடிக்கொண்டிருக்கிறேன் நான்..

உனக்கு பிடித்த உணவுகளைத்தான்
என் விருப்ப பட்டியலில் பதிவேற்றியிருக்கிறேன்...

தூங்கநினைத்து  இமைகளை மூடும் நிமிடங்களில் இருந்து
என் கனவுகளை ஆக்கிரமிப்பது நீதான்

இப்படியாய்...!
காலை முதல் இரவு வரை 
உன்னோடே பயணிக்கிறேன் நான்
இதை எப்போது உணரப்போகிறாயோ நீ...!


Related Posts Plugin for WordPress, Blogger...