கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

11 July, 2016

பகல் கனவு பலிக்காதா..?




உற்சாகமாய்
உன்னை வரைந்து 
முடித்தப்பின்பு...

உயிரோட்டமாய் சிரித்த
உன் அழகைப்பார்த்து...

வெட்கப்பட்டு 
சிரித்துக்கொண்டன
அத்தனை தூரிகைகளும்...!

************************************


என்னவளை கட்டியணைத்து
முத்தமிடுவதுபோல்
கனவு வந்ததென கூறினேன்
நண்பர்களிடம்...

பகல் கனவெல்லாம்
பலிக்காது என்று 
கேலிப்பேசினார்கள்...!

உன்மைதான் 
பகலில் எப்படி
நிலவை 
முத்தமிடமுடியும்...!

************************************

வார்த்தைகளை கொண்டு
நான் எழுதி வைத்த
அத்தனை கவிதைகளையும்...

எனக்கு பிடிக்கவில்லை என்று
நிராகரித்து விட்டுப் போகிறாய்...

தற்போது
குழம்பிக்கொண்டிருக்கிறேன்....

சொற்களை தவிர்த்து
பூக்களை வைத்து
எப்படி கவிதை எழுதுவது
என்று...
******************************


இளையராஜா ஓவியங்களும்...
எனது முகநூல் பதிவுகளும்....!

2 comments:

  1. சொற்களை தவிர்த்து பூக்களை வைத்து வரிகள் நன்றி

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...