கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

10 April, 2014

நாம் யாவரும் வாய் சொல்லில் மட்டும்தான் வீரரா..?

 
ஒரு சில விஷயங்களை மட்டுமே தெரிந்துவைத்துக்கொண்டு எனக்கு எல்லாம் தெரியும் என்று மார்த்தட்டும் தைரியம் நம் மனித குலத்துக்குமட்டுமே உள்ளது... மற்றவர்களின் கவனத்தை கவர... ஒரு இடத்தில் தன்னை முன்னிலைப்படுத்த... தன்னுடைய மதிப்பை கூட்ட இப்படி செய்யவேண்டியதாகிவிடுகிறது... சண்டையிட தைரியம் இல்லையென்றாலும் ஒரு வீரன்போல் பேசும் வீரர்கள் நாம்...

பார்க்காததை பார்த்ததாகவும்... செய்யாததை செய்ததாகவும்... தெரியாததை தெரிந்ததாகவும் பாவிக்கிற மனசு நமக்கு எப்படித்தான் வந்துவிடுகிறதோ என்று தெரியவில்லை... இந்த விஷயத்தில் எந்த ஒரு தனிநபரும் யாருக்கும் சலைத்தவர் இல்லை. ஆனால் உண்மை என்ன என்பது நமக்கு மட்டும்தான் தெரியும்.

சிலரின் பிரச்சனையை கேட்கும்போது நானாக இருந்தால் இந்நேரம் அப்படி செய்திருப்பேன், இப்படி செய்திருப்பேன் என்று விளக்கம்கொ‌டுக்கும் நாம், அதே பிரச்சனை நமக்கு வரும்போது கால்கள் உதர நின்றுக்கொண்டிருப்போம் என்பதுதான் உண்மை....

இந்த உலகம் தகவல்களின் கலஞ்சியம்... ஒவ்வொறு நெடியும் எதையாவது கற்றுக்கொடுக்கூடிய பாடசாலை.. இதில் நாம் கற்பதற்குதான் அதிக கவனம் செலுத்துவதில்லை மாறாக கற்றுக்கொடுக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறோம்... எல்‌லோரும் கற்றுக்கெர்டுப்பவர்களாக இருந்தால் கற்பதுயார்?
 
நாம் எதையும் முழுமையாக கற்கவில்லை.... நாமக்கு எதுவும் முழுமையாக தெரியாது.... என்று நமக்கு தெரியும் ஆனால் அதை தெரிந்துக்கொள்ள முயற்சிக்காமல் அதை தெரியும் என்போதுபோல் பாவனை செய்தால் என்னாகும் என்று விளக்கும் அழகிய ஜென்கதை ஒன்று...!

ஒரு ஊரில் வில் வித்தையில் சிறந்து விளங்கிய இளம் வீரன் ஒருவன் இருந்தான். அவன் புகழ் பெற்ற வில் வித்தையில் சிறந்த ஒரு ஜென் துறவியைப் பற்றி தெரிந்ததும், தன்னை விட இந்த உலகில் யாரும் வில் வித்தையில் சிறந்தவராக இருக்க முடியாது என்று அந்த துறவியிடம் சென்று தன்னுடன் போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா என்று சவால் விட்டான்.

அதற்கு அந்த துறவியும் ஒப்புக் கொண்டார். அப்போது அவர்களுக்கிடையே பல போட்டிகள் நடந்தன. இருவருமே வெற்றி பெற்று முன்னேறி வந்தனர்.

அந்த போட்டியில், தூரத்தில் இருக்கும் ஒரு பொம்மையின் கண்ணை ஒரு அம்பால் அடித்து, பின் மற்றொரு அம்பால் அந்த அம்பையே இரண்டாய் பிளந்து, சாதனை செய்து காட்டினான் இளம் வீரன்.
 

அதைப் பார்த்த அந்த துறவி 'அருமை' என்று சொன்னார். பின் அவர் அந்த இளம் வீரரை அழைத்து, "என்னுடன் ஒரு இடத்திற்கு வா, அங்கு வெற்றி பெற முடிகிறதா என்று பார்ப்போம்" என்று கூறினார். அந்த வீரனும் அவருடன் ஆவலோடு சென்றான்.

துறவியோ அவனை, பெரிய மலைச்சிகரத்திற்கு அழைத்துச் சென்றார். பின்பு அவனிடம், இரண்டு மலைகளுக்கிடையே போடப்பட்டிருக்கும் சிறிய மரப்பாலத்தின் நடுவில் நின்று, துரத்தில் ஒரு மரத்தில் இருக்கும் கனியை அடிக்க வேண்டும் என்று சொன்னார்.

ஆனால் அந்த பாலமோ ஒருவர் மட்டும் செல்லக் கூடியதாய், பாலத்தின் கீழே பார்த்தால் பாதாளம். விழுந்தால் மரணம் என்பது போல் இருந்தது. பின் அந்த துறவி பாலத்தின் நடுவே சென்று, தன் அம்பை எடுத்து, அந்த பழத்தை சரியாக அடித்தார்.

பின்பு இளம் வீரனிடம் "இப்போது உன் முறை" என்று சொல்லி மலைப்பகுதிக்கு சென்று விட்டார். அவனுக்கோ கை, கால்களெல்லாம் உதறியது. அதனால் அவனால் அந்த பழத்தை சரியாக அடிக்க முடியவில்லை.

அதைக்கண்ட துறவி வீரனை தடவிக் கொடுத்து, "உன் வில்லின் மேல் இருந்த உறுதி, உன் மனதில் இல்லை" என்று சொல்லிச் சென்றார்.

இதிலிருந்து "மற்றவற்றின் மீது வைக்கும் நம்பிக்கையை விட உன் மீது நம்பிக்கை வைத்தால், வெற்றியானது நிச்சயம் கிடைக்கும்" என்பது புரிகிறது...

ஒரு விஷயத்தை முழுமையாக கற்றுக்கொண்டு, அடக்கத்துடனும் தன்னம்பிக்கையுடனும் செய்யும் காரியம்தான் வெற்றியையும் புகழையும் தரும்... வாய்ச்சொல்லில் எதுவும் நடந்துவிடாது.

4 comments:

  1. தலைப்பில் இப்படி என்னை போட்டு தாக்கலாமா ?நான் எவ்வளவு தன்னம்பிக்கை உள்ளவன்னு எனக்குதானே தெரியும் ?
    த ம 2

    ReplyDelete
  2. நல்ல கதை அருமையான கருத்து...

    ReplyDelete
  3. உன் மீது நம்பிக்கை வை
    அருமையான கருத்து நண்பரே

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...