கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

05 August, 2016

மனைவிதான் துன்பத்திற்கு காரணமா...! எப்படி...?


டாக்டர் : ஏன் சார்.. எதுக்கு நர்ஸ் கையை தடவிப் பார்த்தீங்களாம்..?

நோயாளி : நீங்கதானே சொன்னீங்க.. 
ஊசி போட்ட கையை தடவிக் கொடுங்கன்னு..!

********************************

 

நான் என்ன சொன்னாலும், என் மருமகள் ’உங்க வாய்க்கு
சர்க்கரைதான் போடணும் அத்தை’னு சொல்றா !

இதிலே என்ன இருக்கு ?
எனக்கு சர்க்கரை வியாதி இருக்கு ! 


********************************

 

பல்லு எப்படி விழுந்திச்சு ?

அத வேற யாருகிட்டயாவது சொன்னா 
மீதி பல்லும் கொட்டிரும்னு என் மனைவி 
சொல்லியிருக்கா டாக்டர்! 

********************************
 
 

ஏன் தினமும் கோவில்ல உங்க மனைவிக்கு 
அர்ச்சனை பண்றீங்க?.... 

வீட்டல எனக்கு மனைவி தினமும் அர்ச்சனை பண்றா, 
அதான் திருப்பி நான் பண்ணுறேன்! 

********************************


 
நிருபர்: நீங்க இருபது வருசமா கட்சியிலே இருக்கீங்க. 
எம்.பி.க்கு ஏன் நிக்கல்லே...

நடிகை: இருபத்தி ஐந்து வயது ஆனவங்கதான் 
தேர்தல்லே நிற்கணுமாமே? 

********************************

 
தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. 
இப்படி செய்யலாமா..?

ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?

பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. 
மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..?

 ********************************


என்ன இவ்வளவு சோகமா இருக்கீங்க...

என்னோட மனைவி ஒரு மாசம் என்கூட 
பேசமாட்டேன்னு சொல்லிட்டா.

அதுக்கு நீங்க சந்தோஷம் தானே படணும்...

எப்படிங்க...
இன்னையோட அந்த ஒரு மாசம் முடியுதே... 

********************************


கோபு- : எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருப்பது 
என் மனைவிக்கு இன்னும் தெரியாது..

நண்பன்-: தெரிஞ்சா கவலைப் படுவாங்களா..?

கோபு-: இல்லே.. தினம் ஒரு ஸ்வீட் செஞ்சு வெறுப்பேத்துவா...!

********************************


 
ஆசையே துன்பத்துக்குக்காரணம்னு 
இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்

எப்படி?

என் மனைவியை நான் “ஆசை”ப்பட்டுத்தான் 
கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

 ********************************


நேத்து உன் மனைவிக்கும், 
உன் அம்மாவுக்கும் நடந்த சண்டைல, 
 யாருக்கு பின்னாடி நீ நின்ன?" 

"போடா நான் பத்திரமா பீரோ பின்னாடி 
போய் நின்னுக்கிட்டேன்.  

 ********************************

3 comments:

  1. ஆன்லைன் DATA ENTRY செய்து சம்பாதிக்க வேண்டுமா ?
    ஆன்லைன் வேலை தேடி தேடி சலித்து ஏமாந்து போனவர்களுக்கு இந்த பதிவு ஒரு ஊக்கமாக இருக்கும்.அதிகப்படியான ஆசையே உங்கள் துன்பத்திற்கு காரணம் இங்கு நாங்கள் சொல்வதும் பார்த்ததும் அனுபவித்தும் இருக்கிறோம் .இப்பொழுது நாங்கள் ஏமாற்றம் என்ற நிலை இல்லாமல் அனைவர்க்கும் வாய்ப்பு அளித்து ஆன்லைன் மூலமாக சம்பாதிக்க வைக்க முடியும் என்று உறுதி கூறுகிறோம். போதும் என்ற மனம் உள்ளவர்கள் இருந்தால் கண்டிப்பாக ஆன்லைன் மூலமாக தினமும் ரூபாய் 200 முதல் 500 வரை சம்பாதிக்க முடியும். கண்டிப்பாக உங்கள் உழைப்பு முக்கியம் மேற்குறித்த தகுதிகள் உள்ள நபர்கள் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் .நன்றி .
    ஆன்லைன் வேலை மூலம் சம்பாதிக்க வேண்டுமா ?
    தேவையான தகுதிகள் :
    1.கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்.
    2.டைப்பிங் ஓரளவுக்கு தெரிந்து இருக்க வேண்டும்.
    3.பொறுமையாக கற்று கொள்ளும் குணம் .

    வாழ்க வளர்க மகிழ்ச்சியுடன்

    மேலும் விவரங்களுக்கு
    Our Office Address
    Data In
    No.28,Ullavan Complex,
    Kulakarai Street,
    Namakkal.
    M.PraveenKumar MCA,Managing Director.
    Mobile : +91 9942673938
    Email : mpraveenkumarjobsforall@gmail.com
    Our Websites:
    Datain
    Mktyping

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...