கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

26 July, 2018

உயிர் பயம் பொதுதானே...!





காலை நேர
பயிற்சிக்காக
நடந்துக்கொண்டிருந்தேன்
சாலையேரம்...


மரச்செடி நட
தோண்டப்பட்டிருந்த
குழிவொன்றை
எட்டிப்பார்த்தேன்
ஏதேச்சையாக...


முன்தினம் பேய்ந்த
கோடைமழை
தேங்கிக்கிடந்தது
கொஞ்சம் குழியினுள்...


அந்த மூன்றடி
குழியினுள்
தவறிவிழுந்து
வட்டத்துக்குள்ளே
வட்டமடித்துக்கொண்டிருந்தது...

ஓரடி 
நீளமுள்ள
குட்டி பாம்பு ஒன்று...


எப்படி 
வெளியேறுவது
என்ற தவிப்பில் 
பாம்பும்...

எப்படி 
விழுந்திருக்கும்
என்ற தர்க்கத்தில் 
நானும்...


பயத்தோடு
அமைதியாய் 
சந்தித்துக்கொண்டது
இருவரது பார்வைகளும்...


அருகில் கிடந்த 
கொம்பெடுத்து 
பாம்பு வெளியேற
சாத்தி வைக்கிறேன்...

தாக்கவரும் 
ஆயுதமென
தலைதெறிக்க 
ஓடுகிறது
வட்டத்திற்குள்ளே..


மேலே வரும்போது
தீண்டிவிடுமோ என்ற பயத்தில்

நகர்கிறேன்
என் வழியை நோக்கி...

 
வெளியில் சென்றால்
என்னாகுமோ
என்று எண்ணி
தொட மறுக்கிறது 
கொம்பின் நுனியை...!


இருவருக்குமான
உயிர்வாழ்தலின்
நீளத்தை

நீட்டிக்க வைக்கிறது
பயம்...!




எல்லா 
உயிர்களுக்கும்
பொதுதானே
உயிர் பயம்....!



( நன்றி...
வருகைக்கும்... வாசித்தமைக்கும்...)

2 comments:

  1. உண்மை தான்...

    இருந்தாலும் உங்கள் நல்ல மனம் வாழ்க...

    ReplyDelete
  2. அருமை நண்பரே உயிர்பயம் பொதுதான்...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...