கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

03 June, 2020

உன்னோடு சேர்ந்து சுற்ற...


ஒவ்வொரு ஆண்டும்  ஜூன் முதல் வாரம் என்றால் அவ்வளவு பரபரப்பான நாட்களாக இருக்கும்....

நான் படித்த காலத்திலோ அல்லது பணிபுரியும் காலத்திலோ பள்ளிக்கு செல்ல தயாராகும் பரபரப்பு இருக்கிறதே... அது ஒரு தனி அனுபவம்....

நோட்டு புத்தகங்கள் வாங்குவது... சீருடைகள்.. என பல எதிர்பார்ப்புகள் இருந்தாலும் 50 நாட்கள் பிரிந்து இருக்கும் நண்பர்களை பார்க்கும் அனுபவம் இருக்கிறதே அப்பப்பா... அது அப்படி இருக்கும்....

தற்போது ஆசிரியராக இருந்தாலும் தன்னிடம் பயின்று திரும்ப பள்ளிக்கு வரும் மாணவ செல்வங்களை பார்க்க மனசு பதபதைக்கும்....

இந்த ஆண்டு எந்த பரபரப்பையும், ஏற்படும் அனுபவத்தையும் தனக்குள்ளே வைத்து புதைத்துக்கொண்டது இந்த ஜூன் முதல் வாரம்...

ஜூன் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற இலக்கணத்தை மாற்றி எப்போது பள்ளிக்கு செல்வோம் என்பதே தெரியாமல் மனதுக்குள் சிறகடித்துக்கொண்டிருக்கிறது கற்கும் கற்பிக்கும் பறவைகள்...

சொன்ன காலத்திலும் சரி... கேட்கும் காலத்திலும் சரி கோடை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் சுகம் இருக்கிறதே அது எந்த பாடபுத்தகத்திலும் அச்சேற்றிவிட முடியாத தனி படிப்பு....

உலக வரலாற்றில் கற்றல் கற்பிக்கும் பணியில் இப்படி ஒரு நீண்ட இடைவெளியை நான், அறிந்ததும் இல்லை... கேள்வி பட்டதும் இல்லை....

உலகம் நலம்பெற்று திரும்பவும் சகஜநிலையை அடையவும்... ஒன்பது மணிக்கு கேட்கும் பள்ளி மணிஓசையை கேட்கவும் நம்மால் வேறென்ன செய்து விடமுடியும் ஏக்கத்தோடு காத்துக்கிடப்பதைவிட...

உலகே மீண்டு வா...
நீயும் நானும் ஒன்றாய் சுழல....

காத்திருப்புகளோடு....
#கவிதைவீதி சௌந்தர்
03-06-2020

1 comment:

  1. ஆஹா...ஆசிரியர்களின் மகோன்னத மனநிலையை அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்..

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...