கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label அழகு. Show all posts
Showing posts with label அழகு. Show all posts

14 August, 2018

இந்த ஆசை யாருக்கெல்லாம் இருக்கிறது..!






கோடி 
பட்டாம்பூச்சிகள்
பறந்து வருவதை போல்
இருக்கும்..

என் 
மூன்று வயது
குட்டி தேவதை 
நடந்துவருவது...!


தத்திவந்து
என்னை 
தவழுகையில்...

குற்றால
சாரலின் சுகம்
அத்தனையும்
என்னை சுற்றி கிடக்கும்...!


சுண்டு விரல்
என் தேகம்
தொடுகையில்...

அமைதிக்கடலை
தாலாட்டும்
தென்றல் போல்
இருக்கும்...!


என்னை 
கட்டியணைத்து
முத்தமிட்டால்...

எனை ஒட்டிக்கொள்ளும்
துருவப்பகுதியின்
அத்தனை 
குளிரும்...!


எங்கள்
இருவருக்கான
புரிதல் என்பது....

இரண்டு
அன்னப்பறவைகள்
மௌனத்தால்
பேசிகொள்வதுபோல்...


இறுதியாய்....

மெல்லிய 
தென்றல் வந்து
படர்கையில்...

காம்பிடம் 
சொல்லாமலே
விடைப்பெற்றுப் 
கொள்ளுமே
பூக்கள்...


அப்படியாகத்தான்
நிகழவேண்டும்
என் 
மரணமும்..!


இது...
யாராவது என்னிடம்
“உன் மரணம் எப்படி நிகழவேண்டும்“ 
என  கேட்டால் 
அதற்கான பதில்...



நன்றிகள்...
வருகைக்கும்... வாசித்தமைக்கு


25 June, 2013

உணவில் கூடவா இப்படி செய்வார்கள்..! இதை நீங்க சாப்பிடுவீங்களா...!

அட.. இங்க பாருங்க மதிய உணவை எவ்வளவு அழகா வடிவமைச்சியிருக்காங்க...

இப்படி கொடுத்தனுப்பினா கண்டிப்பாக பிள்ளைகள் மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க... ஆர்வமும் வரும்... நீங்களும் கொஞ்சம் முயற்றி செய்யுங்கள்...






















































 

பார்க்கும் போதே அப்படியே ரசித்து சாப்பிடனும்போல இருக்கிறது...
உணவு சுவையாகவும் அதேசமயம் அழகாவும் பரிமாரப்பட்டால்
ரசித்து உண்ணலாம்...

Related Posts Plugin for WordPress, Blogger...