கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label கருத்து. Show all posts
Showing posts with label கருத்து. Show all posts

09 April, 2018

ரஜினியும் கமலும் கடைசியில் இப்படித்தான் ஆவார்களா...?


சமீபத்து விஷயங்கள் பழைய கதைகள், இதிகாச கால கதைகள் என பல முந்தைய நிகழ்வுகளோடு ஒத்துப்போவது ஆச்சரியமாக இருக்கும்

இன்றைய காலகட்டத்தில் அரசியலில் இறங்கும் அனைவருக்கும் மக்கள்சேவை, தொண்டு, சமுகப்பணி என்ரெல்லாம் தாண்டி முதல்வர் நாற்காலியே பிரதான இலக்காக இருக்கிறது....

தற்போதைய அரசியலில் அதிர்ஷ்டம் மூலம் ஆட்சிக்கு வந்தவர்களும், ஆண்டாண்டாய் ஆட்சிக்கட்டிலில் அமர காத்திருப்போரும், போராடி போராடி ஒதுங்கிவிட்டோரும் வீற்றிருக்கும் இந்த அரசியல் களத்தில் கட்சி ஆரம்பித்த உடனே ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்போடு ரஜினியும் கமலும் களம் இறங்கியுள்ளனர்.....  இவர்கள் ஆட்சிபிடிப்பார்களா அல்லது கீழ்கண்ட கதைபோல்தான் ஆகுமா என்று தெரியவில்லை...

ஒரு குருவும் அவருடைய சீடர்களுடம் ஆற்றங்கரையோரம் கலகலப்பாகப் பேசிக்கொண்டே சென்றனர்.


ஒரு சீடன் கேட்டான், ‘குருவே, பூர்வாசிரமத்தில் நீங்கள் ஒரு பெரிய போர் வீரராக இருந்ததாகவும், பல நாடுகளுக்குப் பயணம் செய்து வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்ததாகவும் மூத்த சீடர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்… நிஜம்தானா?’


‘நிஜம்தான்.. ஆனால் அதெல்லாம் அந்தக் காலம். இப்போது நான் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டேன்…!’ என்றார் குரு.


‘ஏன் குருவே? போர் தவறா… ஆயுதங்களே வேண்டாமா?’


‘சரி தவறு என்பதல்ல என் வாதம்… ஒரு கட்டத்துக்குமேல் புத்திக் கூர்மையும் அமைதியையும் விட சிறந்த ஆயுதம் எதுவும் இல்லை என்று புரிந்துவிட்டது எனக்கு!”


குருவின் வார்த்தைகளில் சீடர்களுக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. அவரை சோதித்துப் பார்த்துவிட முடிவு செய்து, ஒரு திட்டம் போட்டனர்.


‘நாளை குரு தியானத்தில் இருக்கும்போது, நாம் இருவரும் மறைந்திருந்து அவரைத் தாக்குவோம். அப்போது அவர் ஆயுதங்களை எடுக்காமல் நம்மை எப்படிச் சமாளிக்கிறார் என்று பார்ப்போம்,’ என்று முடிவு செய்தனர்.


மறுநாள் வகுப்புகள் முடிந்ததும், குரு வழக்கம்போல தியானத்தில் ஆழந்துவிட, இந்த இரு சீடர்கள் மட்டும் ஓலை தட்டிகளுக்கு அப்பால் மறைந்து கொண்டனர்.


சில நிமிடங்கள் கழித்து இருவரும் மெல்ல வெளியில் வந்தனர். பேசி வைத்தபடி இருவரும் குருவின் மீது ஏக காலத்தில் இரு பக்கமிருந்தும் பாய்ந்தனர்.


குரு முகத்தில் எந்த சலனமும் இல்லை. அவர்கள் பக்கத்தில் நெருங்கும்வரை கண்மூடி அமைதியாக இருந்த குரு, கடைசி விநாடியில் சற்று முன்னே வந்து குனிந்துகொண்டார். சீடர்கள் இருவரும் மடேர் என்று மோதிக் கொண்டு தரையில் விழுந்து உருண்டனர்.


எதுவும் நடக்காததுபோல் தியானத்தைத் தொடர்ந்தார் குரு....

இதுபோல இருபுறத்தில் இருந்தும் பயணித்துவரும் ரஜினியும் கமலும் களத்தில் இருப்பவர்களோடு மோதி வீழ்வார்களா அல்லது திறமையாக ஆட்சியை பிடிப்பார்களா பார்ப்போம்...

20 December, 2014

பிசாசு - சினிமா விமர்சனம் / mysskin pisasu movie review


மனிதன்... மிருக இனத்தின் முதன்மையானவன்... தெய்வ இனத்தின் கடைசியானவன்... தெய்வத்தின் இயல்புகள் நம்மிடம் இருந்தாலும் நமக்குள் இருக்கும் மிருகமே நம்மை ஆட்சிசெய்கிறது... ஒவ்வொறு மனிதனும் ஒரு மிருக குணாதிசயங்களை கொண்டிருக்கிறான் அந்த குணாதியசங்கள் மேலோங்கும்போது அவனால் இயல்பான நிலைக்கு வரமுடியாமல் போய்விடுகிறது... (உதாரணம் வேண்டுமா.. இன்றை செய்திதாளில் வந்த சில செய்திகளை படிங்கள்...) அப்படிப்பட்ட சில மனிதர்களின் குணங்களை வெளிகாட்டியப்படம்தான் மிஸ்கின் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும்  என்ற திரைப்படம்..

படம் போட்டப்பணத்தை எடுக்கவில்லை என்றாலும் அதன் காட்சியமைப்பு, ஓளி,ஒலி பதிவு, கதாபாத்திரங்களை கையாண்டவிதம், திரைக்கதை அமைப்பு போன்றவை என்றைக்கும் தமிழ்சினிமாவின் பெயரை சொல்லிக்கொண்டே இருக்கும்... (கதைப்பற்றிய விவாதம் வேண்டாம்) அந்தப்படம் பாலாவை கவரவே இந்த இருவரின் கூட்டணி பிசாசு படத்தின் மூலம் இணைந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

ஓ... ஆ... படத்தில் மனிதனை மிருத்துடன் சம்பந்தப்படுத்திய மிஸ்கின்.. இந்தப்படத்தில் மனிதனை ஆவிகளுடன் சம்பந்தப்படுத்தியிருக்கிறார்... மனிதர்களுக்குள் பேய் குணம் கொண்டவர்கள் இருக்கிறார்கள்... சில பேய்களுக்கும் மனிதகுணமும் இருக்கிறது... பேய்கள் நம்மோடும் நட்புறவுக்கொள்ளும் என்ற விஷயத்தை தன்னுடைய பாணியில் சொல்லியிருக்கிறார்.



பிசாசு படத்தில்... நெஞ்சை அதிரவைக்கும் பயங்கர காட்சிகள்... மிரளவைக்கும் முகங்கள், ராட்ஸச உருவங்கள், இப்படி ஏதும் அதிக அளவில் இடம்பெறாமல் எளிமையான கதையை எடுத்துக்கொண்டு தன்னுடைய திரைக்கதை மற்றும் கேமராவின் மூலம் உயிர்கொடுத்து கொஞ்சமாய் மி‌ரட்டியிருக்கிறார் மிஸ்கின்...


முதல் காட்சி... நாயகியின் (புதுமுகம் பிரயாகா) முகம் குளோசப்பில் காட்டப்படுகிறது... அழகிய மெல்லிய, புன்முருவல், காட்சி விரியும்போதுதான் தெரிகிறது .. ‌ஸ்கூட்டியில் வரும் இவரை ஒருகார் இடித்துவிட சாலையோரம் அடிப்பட்டு ரத்தம் வடிந்து படுத்திருக்கிறார்... அருகில் இருக்கும் சிலர் ஓடிவந்து அரை பார்க்கிறார்கள்.... அதில் ஒருவர்தான் நாயகன் (புதுமுகம் நாகா).

இறக்கும் தருவாயில் இருக்கும்  அவரை மருத்துவமனையில் சேர்க்க ஆட்டோவில் ஏற்றிக்கொண்டுச் செல்கிறார்கள்... மருத்துவமனையில் உள்ளே செல்லுகையில் நாயகனின் கையை பிடித்துக்கொள்கிறார் நாயகி... அதன்பிறகு நாயகனை பார்த்தவாரே உயிரை விட்டுவிடுகிறார்... (இந்த படத்தில் நாயகிக்கு கொடுக்கப்பட்டிருப்பது ஒரே ஒரு வசனம்தான் அது இறக்கும் தருவாயில் நாயகனை பார்த்துசொல்லும் “ப்பா..“ என்பதுதான்)



இனிதான் வில்லங்கம் ஆரம்பிக்கிறது.. படத்தில் நாயகன் இசையமைப்பாளரிடம் பணிபுரியும் ஒரு வயலின் வாசிப்பாளராக இருக்கிறார். இந்த சம்பவத்துக்குபிறகு அவரால் அதிக கவனம் சொலுத்தமுடியாமல்  மனஅழுத்தம் கொள்கிறார்... அப்பார்மெண்டில் தனியாக இருக்கும் இவர் தன்னுடைய வீட்டில் வித்தியாசமாக சிலவிஷங்களை பார்க்கிறார்...

தன்னுடைய வீட்டில் இறந்த அந்த பெண்ணின் ஆவி இருக்கிறது என்ற உண்மை இவருக்கு தெரியவருகிறது. அதன் பிறகு பயந்துநடுங்கி அதை விரட்ட பல்வேறு வழிகளை மேற்கொள்கிறார்.... அது தனக்கு மிகுந்த இன்னல்களை தருவதாக நினைத்துக்கொள்கிறார்... இப்படியே இடைவேளைவரை பயமும் கலகலப்புமாக நகர்கிறது.


இவரைப்பார்க்க வரும் அம்மாவுக்கு இந்த விஷயத்தை சொல்ல  அவர்பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பேயாவது பிசாசாவது என்று கூறி அங்கு தங்குகிறார்... தன்னுடைய அம்மாவை ஏதாவது செய்துவிடுமோ என்ற பயத்தில் நடுங்குகிறார்...

அவர் எதிர்பார்த்தபடி‌யே அம்மாவுக்கு குளியலரையில் வழுக்கிவிழுந்து அடிப்பட்டுவிடுகிறது.. அதற்கு காரணம் அந்த பெண்ணின் ஆவிதான் என தவறாக புரிந்துக்கொள்கிறார்... உன்னைகாப்பற்ற வந்ததற்கு எனக்கு இதுதண்டனையா.. முடிந்தால் கென்றவர்ளை தேடி போகவேண்டியதுதானே என குமுறுகிறார்...


அதன்பிறகு நாயகனின் அம்மா குணமடைந்து உண்மையை சொல்கிறார் அடிப்பட்ட விழுந்த என்னை காப்பாற்றியது அந்த ஆவிதான் என்று... அதன்பிறகே இவருக்கு தெரிகிறது இந்த பேய் நமக்கு உதவிச்செய்கிறது என்று...!



சம்மந்தமே இல்லாத நமக்கு இப்படி உதவியாய் இருக்கும் இந்த பெண்ணை விபத்திற்குள்ளாக்கியது யார் என்ற உண்மையை கண்டுபிடிக்க துப்பு துலக்குகிறார்... அதன்பிறகுதான் பரபரப்பான... யாரும் எதிர்பார்க்காத சில உண்மைகள் வெளிவருகிறது...

விபத்திற்குல்லாக்கிய அந்த நபர்யார்...  இவரை பின்தொடர காரணம் என்ன, அதன்பிறகு நடக்கும் விபரீதங்கள் என்ன... அந்த பெண்ணின் ஆவி இறுதியில் என்னாகிறது என்று விறுவிறுப்பான திரைக்கதைமூலம் புரியவைத்து தெளியவைத்து மிரட்டலுடன் படத்தை முடிக்கிறார்  இயக்குனர். (கண்டிப்பாக மீதிக்கதையை திரையில்தான் பார்க்க வேண்டும்)





நாயகன் நாகா நன்றாக தன்னுடைய நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.... அடந்த முடி... முகத்தை மறைக்கும் அளவுக்கு  வளர்திருக்கிறது.... வயலின் வாசிப்பாளர்.... இடைவேளைவரை  சோகத்தை, பயத்தை, மெல்லிய நகைச்சுவையுடன் வெளிப்படுத்தும் விதம் அழகு... இறுதிகாட்சிகளில் அசத்தியிருக்கிறார்.

நாயகியை ஒருஷாட்டில் மட்டுமே  தன்உருவத்தில் வருகிறார். அவருடைய வேலை அவ்வளவுதான்... இறுதிக்காட்சிகளில் ஆவியாக நன்றாக வேலைவாங்கியிருக்கிறார் இயக்குனர்.


நாயகியின் அப்பாவாக ராதாரவி நல்லதொரு நடிப்பு... வெகுநாளுக்குப்பிறகு இவருக்கு நல்லதொருபடம் அமைந்திருக்ககிறது...

நாயகனுடன் இரண்டு நண்பர்கள் கதைக்குபலம்.. ஒருஅப்பார்ட்மெண்ட் அதில் சில முகங்கள் என குறைந்த எண்ணிக்கையில் தான் கதாபாத்திரங்கள்...

இசை புதுமுகம்... நன்றாக கைகொடுத்திருக்கிறார்... சப்பேவில் நடக்கும் ஒரு சண்டைக்காட்சி, அங்கே ஒரு சோகப்பாடல், ஆவியை ஓட்ட வரும் பெண்படும்பாடு, ராதாரவி இரந்த தன்மகளுடன் காட்டும் உருக்கும் பாராட்டப்படவேண்டியவை....

மக்களுக்கு என்ன ‌தேவையோ அதை மசாலாவோடு தரும் இயக்குனர்கள் ஒருவகை... தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை அப்படியே கொடுப்பவர்கள் படமாக்குபவர்கள் இன்னொருவகை... இதில் மிஸ்கின் இரண்டாம் வகை...

ஒருவகையில் ஆனந்தபுரத்துவீடு படத்தை நினைவுபடுத்தினாலும் மிரட்டல் காட்சிகளில் நாம் அதை மறக்கடித்துவிடுகிறார்... மிகுந்த எதிர்பார்ப்புடன் போகாமல் ஒரு தமிழ் சினிமாவை ரசிக்க  வேண்டும் என்ற மனநிலையோடு இந்த படத்தை பார்க்கப்போனால் ரசித்துவிட்டுவரலாம்.  

பொருமையோடு பார்த்தால் இந்த பிசாசும் ரசிக்ககூடியதே.

24 February, 2014

மிரட்டும் போஸ்டர்கள்..!



தமிழகத்தில் சமீப காலமாய் எழுதப்படாத ஒரு வராலாறு எழுச்சிப்பெற்று வருகிறது. அது எந்த நிகழ்வானாலும் உடனடியாக சுவரொட்டி தயாரித்து ஊர் முழுக்க ஒட்டிவிடவேண்டும் என்பதுதான். (முதலில் ஒரேகலரில்தான் அச்சடித்தார்கள் இப்போது வண்ண போஸ்டர்கள்தான்) அப்படியில்லையென்றால் பெரிய அளவில் டிஜிட்டல் பேனர்கள் வைத்துவிடவேண்டும் என்ற பழக்கம்தான் அது.

ஒருகாலத்தில் சினிமாத்துறையை மட்டுமே ஆக்கிரமித்திருந்த இந்த சுவரொட்டிகள் ஒட்டும் பழக்கம்... பின்பு அரசியலை ஆக்கிரமித்து இன்று சாமானியன் வீட்டு விஷேசம் வரை பரவிக்கிடக்கிறது...

பிறந்தநாள், திருமணம், காதுகுத்தல், தொடங்கி இரங்கல் செய்திவரையும்... அரசியல் தலைவர்களின் அசைவுகளில் தொடங்கி, அரசியலில் பதவி வழங்கியற்கு நன்றி.. தலைவர் பிறந்தநாள்.. தலைவர் வருகை, மற்றும் கட்சி புகழ்... என தினம் தினம் புதுசுபுதுசாக கண்டிப்பாக போஸ்டர் அடித்து ஒட்டியாக வேண்டும் என்ற பழக்கம் அனைத்து மக்களையும் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது.

ஒரு இடத்தில் ஒரு போஸ்டர் ஒட்டினால் கூடபோதும் ஆனால் ஒரு சுவர் இருந்தால் அந்த சுவர்முழுக்க ‌எரே போஸ்டரை ஒட்டி திகைக்க வைக்கிறார்கள்... அடுத்த நாள் அதை கிழித்து எறிந்துவிட்டு அடுத்தவர் ஒட்டுகிறார்.. சில இடங்களில் போஸ்டர் ஒட்டுவதற்க்கு முன்பதிவும்கூட செய்துவிட்டுபோகிறார்கள்.. சிலசமயம் இது கைகலப்பாக மாறி வெட்டுக்குத்துவரை சென்றிருக்கிறது.
இதுபோதாதென்று சில ரியல் எஸ்டேட் விளம்ரங்கள், ஆண்களுக்கு பிரச்சனையா என்ற போஸ்டர்கள், கல்வி நிறுவன மற்றும் கணினி நிறுவன போஸ்டர்கள், கவர்ச்சி சினிமா போஸ்டர்கள் என ஒரு சில போஸ்டர்கள் பார்ப்பவர்களை முகம்சுழிக்க வைக்கிறது. இதை சாப்பிடுவதற்கு என்றே ஆடு மாடுகள் ரோட்டில் அலைகிறது இதனால் பல விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

இதுபோதென்று டிஜிட்டல் பேனர்கள் பழக்கத்துக்கும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருக்கிருக்கிறது... ஒருவர் இறந்துவிட்டால் அதை உடனடியாக 20க்கு 20 பிளக்ஸ் தயார்செய்து இறந்த அடுத்த 2 மணிநேரத்தில் வைத்துவிடுகிறார்கள்... இதுவே ஒரு அரசியல் மாநாடு.. அரசியல் கட்சி தலைவர்கள், பிறந்தநாள், வருகை, அறிவிப்பு, பிறவிழா இப்படி எதாவது ஒன்று இருந்தால் பேனர்களின் எண்ணிக்கை வழக்ககத்தைவிட எல்லை மீறி சென்று கொண்ருவிடுகிறது. இவைகள் சலைகளை மறைத்து இடத்தையும் ஊரையே குப்பை காடாக மாற்றி கொண்டிருக்கிறது.

சென்னை போன்ற பெருநகரங்களில் வைக்கப்படும் பெரியபெரிய விளம்பர பேனர்களால் வாகன ஓட்டிகள் சாலையில் போதிய கவனம் செலுத்தமுடியவில்லை. பெரிய பெரிய சினிமா போஸ்டர்களையும், அரசியல் போஸ்டர்களையும் பார்த்து கொண்டே முன்னே செல்லும் வாகனங்களில் இடித்து விபத்துக்குள்ளாகிறார்கள். இவைகளை கண்டிக்க வேண்டியது யார்...? இதை கட்டுபடுத்தும் அதிகாரம் யார்கையில் உள்ளது...? எதுவும் தெரியவில்லை. 

இதற்கு ஏதாவது கட்டுப்பாடுகள் உண்டா...? சில வருடங்களுக்கு முன்னர் தேர்தல் கமிஷன் விளம்பர பலகைகளை வைப்பதற்கு தடை விதித்தார்கள்... டிஜிட்டல் பேனர் ஒரு மக்காபொருள் அதற்கு தடை என்று சுற்றுச்சூழல் துறையும் தடையை அறிவித்தது.. ஆனால் அதையும் மீறி விளம்பர பலகைகள் வைப்பது நிற்கவில்லை.. அது ஏற்படுத்து இடைஞ்சல்களுக்கு சிறிதும் குறைவில்லாமல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

20x20 என்ற அளவில் ஒரு டிஜிட்டல் பேனர்அச்சடித்து ‌வைக்க... பிரிண்டிங் 8000 முதல் 10000 வரை செலவாகும்... சில பேனர்கள் 1 லட்சம் 2 லட்சம் வரைகூட செல்கிறது.. இப்படியென்றால் தமிழ்நாடு முழுவதும் கணக்கிட்டுப்பார்த்தால் தலையோ சுற்றுகிறது.. அரசியல் வாதிகள் இப்படி செலவிடும் பணம் கண்டிப்பாக நேர்மையாக சம்மாதித்ததுதானா என்ற சந்தேகம் வரத்தானே செய்கிறது...?

ஆட்சியில் இருப்பவர்களே இந்த போஸ்டர் வழக்கத்தை கடுமையாக பின்பற்றி ஊரையே அசிங்கபடுத்தி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இணையாக அடுத்த கட்சிகளும் களம் இறங்கிக்கொள்கிறார்கள்... நாம் ஆளும் மாநிலம் அழகாக சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் ஆள்பவர்களுக்கும்.. அதைச்சார்ந்த நகர, மாநகராட்சிக்கும் இருக்க வேண்டும். ஆனால் அவர்களே இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அவர்களும் போஸ்டர் ஒட்டி கொண்டு விளம்பரம் தேடி கொண்டிருந்தால் யார் தான் இதை கட்டுபடுத்துவது?


போருந்துகளில், பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டினால், சில தனியார் சுவர்களில் அனுமதியின்றி விளம்பரப்படுத்தினால் தண்டனை என்று சட்டம் இயற்றியிருக்கிறார்கள் ஆனால் இதுவரை எத்தனைபேர்மேல் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது என்று தெரியவில்லை... இந்த சட்டத்தை பயன்படுத்துகிறார்களா என்றும் தெரியவில்லை.




நாம் இருக்கும் பகுதி சுத்தமாக வைக்கப்பட்டு... சாலைகளில் உள்ள தடுப்புகளில் செடிகள் நடப்பட்டு பேணப்பட்டு... அழகாக வளர்ந்து நல்ல சுற்று சுழல் ஏற்படுத்தப்பட்டு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இதுபோன்று போஸ்டர் பேனர் வைக்கும் செலவுக்கு தானதர்மங்கள் செய்யலாம்... இயலாதவர்களுக்கு உதவலாம் ஆனால் அந்த எண்ணம் யார்மனதிலும் வருவதில்லை

சமீபத்தில் நகரின் ஒரு பிரபலத்தை சந்தித்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மாலை 7.00 மணிவரை வகுப்புகள் நடத்திக்கொண்டிருக்கிறோம். அந்த  மாணவர்களுக்கு ஏதாவது மாலை டி பிஸ்கெட் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று உதவிகோரியதில் சொற்ப்ப உதவியே செய்தார். ஆனால் அதே வாரத்தில் கட்சி தலைவரின் சாதனைகள் நகர்முழுக்க பெரிய டிஜிட்டல்பேனர்கள் வைத்து அசத்தல் போஸ் கொடுக்கிறார்... எதை என்னவென்று சொல்வது... வீணான விளம்பர பணத்தை உதவிகள் செய்ய வேண்டும் எண்ணம் ஏன் வரவில்லை என்று தெரியவில்லை.

மேம்பாலங்கள், அவற்றின் தூண்கள், பேருந்து நிலையங்கள்.. பள்ளி, கல்லூரி, அரசுஅலுவலக சுற்றுச்சுவர்கள், இன்னும் பிற இடங்களில் அழகான ஓவியங்களோ அல்லது அங்கும் செடிகளோ வைக்கப்பட்டு ஊரை பார்பதற்கு குளிர்ச்சியாக வைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நாம் அப்படியொரு சூழலில் வாழவே முடியாதா...?

28 September, 2013

பேஸ்புக் பதிவர் குறித்து தன் படத்தில் மிஸ்கின் கூற்று சரிதானா..?


‌நேற்றுமட்டும் இரண்டு மாறுப்பட்ட படங்கள் பார்க்க நேர்ந்தது... காலை 10.30 மணி காட்சி ராஜா ராணி படம்.. (விமர்சனம் படிக்க கிளிக் செய்யவும்) இருந்த வேலைகளை மதியம் முடித்துவிட்டு மாலை 6.00 மணி காட்சிக்கு அடுத்த திரையரங்கில் ஓடும் மிஸ்கின் படமான ஓநாயும் ஆட்டுக்குட்டியும் (விமர்சனம்) பார்க்க சென்றுவிட்டேன்.. 

ராஜா ராணி...! இரு காதல் ஜோடியின் வாழ்க்கையை மாறுப்பட்ட கோணத்தில் பொழுதுப்போக்காக சொல்லப்பட்ட நகைச்சுவைத் திரைப்படம்... ஆனால் மிஸ்கின் திரைப்படம் எல்லாவற்றிலும் மாறுப்பட்டது.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்கு 6.15 மணி காட்சிக்கு 6.00 மணிக்கு சென்றேன் திரையரங்க வளாகம் காலியாக இருந்‌தது ஒருவேளை படம் போட்டுவிட்டார்களா என்று பார்த்ததேன்... அப்படி‌யோதும் இல்லை... கூட்டம் இல்லை... இறுதியில் 15 நிமிடம் தாமதமாக ஆரம்பித்தும் 1000 பேர் அமரக்கூடிய இருக்கை வசதிகொண்ட  அரங்கில் வெறும் 15 பேர் மட்டுமே படம் பார்த்தோம். (ரைட்டு விடுங்க)


சரி விஷயத்துக்கு வருகிறேன். பொதுவாக பேஸ்புக் பயன்படுத்துவோர் மீது ஓர் குற்றச்சாட்டு இருந்து வருகிறது... (நாம் எந்த மாதிரியாக சமுகத்தில் வாழ்கிறோம்) இப்படி பல்வேறு சூழலில் பேஸ்புக் பதிவர்களை தன்னுடைய படத்தில் சமூக அக்கறையற்றவர்களாக காட்டியிருக்கிறார் மிஸ்கின்.

ஆரம்ப காட்சியில் குண்டடிப்பட்டு இரத்தவெள்ளத்தில் ஒருவர் வீழ்ந்துகிடக்கிறார்... அந்த உடலைப்பார்த்து ஆட்டோவில் செல்பவரும்.. நடந்து செல்பவரும் பரிதாபத்துடன் பார்த்துச் செல்வார்கள்... யாரும் அவருக்கு உதவிசெய்யவில்லை...

அடுத்து இருசக்கர வாகனத்தில் வரும் இருவர் அந்த காட்சியை பார்க்கிறார்கள்.. பின் பக்கம் அமர்ந்து இருப்பவர் “டேய் நமக்கு ஏன் வம்பு செல்லாம்” என்று சொல்கிறார்..

உடனே வண்டி ஓட்டிவந்த நபர்.. தன்னுடைய செல்போனை எடுத்து அந்த காட்சியை தன்னுடைய செல்போனில் படம்பிடிக்கிறார்... நண்பர் எதற்கு என்று கேட்க...

போஸ்புக்-ல போடலாம்டா என்று கிண்டலாக சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்கிறார்கள்....

இப்போது சொல்லுங்கள்.... அடிப்பட்டு விழுந்துகிடக்கும் ஒருவரைப் பார்த்து அவருக்கு முதலில் எதாவது உதவி செய்யாமல்... பேஸ் புக்கில் படத்தை போடுவதற்கு ஆர்வம் காட்டுவது மிகவும் கிழ்த்தனமான ஒரு செயல் அல்லவா...? பேஸ்புக்கில் இருப்பவர்கள் சமூக அக்கறையற்று பேஸ்புக்கில் இப்படியா செய்துக்கொண்டிருக்கிறோம்.


ஒருவேளை இதுதான் உண்மையா... பேஸ்புக் தற்போது சமூக சிந்தனையில் இருந்து விலகி வெட்டித்தனம், கிண்டல், நையாண்டி, வீண் வேலை, வதந்திகளை பரப்புதல், என இப்படித்தான் போய்கொண்டிருக்கிறதா...?

உண்மையில் இந்த காட்சியில் மிஸ்கின் சொல்லவருவது என்னதான் என்று எனக்கு தெரியவில்லை..
Related Posts Plugin for WordPress, Blogger...