கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label சன் பிக்சர்ஸ். Show all posts
Showing posts with label சன் பிக்சர்ஸ். Show all posts

25 July, 2013

விஜய்-க்கு விலை நிர்ணயித்த சன் டிவி... ஜில்லா கேடி டா..!


வேந்தர் மூவீஸ் வெளியிடும் தலைவா படத்தை சன் டிவி 15 கோடிகள் கொடுத்து டெலிவிஷன் காப்பிரைட்ஸை வாங்கி உள்ளது. இதற்கு முன்பாக விஜயின் பல படங்கள் சன் டிவியில் பல கோடிகளுக்கு விலைபோயிருக்கிறது. (வேலாயுதம் தவிர - வேலாயுதம் படம் ஜெயா டிவிக்கு வழங்கப்பட்டது).

விஜய் நடித்த தலைவா படம் நிர்ணயித்த பட்ஜெட்டைவிட அதிகமாக போனது என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை மாநகரில் தொடங்கிய படத்தை ஆஸ்திரேலியாவில் முடித்திருக்கிறார் இயக்குனர் விஜய்.


விஜய் - மோகன்லால் இணைந்து நடிக்கும் ஜில்லா படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் என்று திட்டமிடப்பட்டுள்ளது. ஜில்லா படத்தின் ஷூட்டிங் கூட முடிவடையாத நிலையில் 18 கோடிகள் கொடுத்து அதன் டெலிவிஷன் காப்பிரைட்ஸை வாங்கி உள்ளது சன் டிவி.

ஜில்லா படத்தை அறிமுக இயக்குனர் நேசன் இயக்குகிறார். டி.இமான் இசையமைக்கிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும், பூர்ணிமா பாக்யராஜும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள் என்பது படத்தின் ஹைலைட்.

ஆல்ரெடி வசூல் மன்னனாக இருக்கிறார் விஜய். அடுத்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸோடு கைகோர்க்கிறார். விஜய்யின் உயரம் வானம் போல விரிந்துகொண்டே போகிறது.

05 July, 2011

சன் பிக்சர்ஸ் நிர்வாகி கைது... திரை உலகினர் கொண்டாட்டம்...




சன் பிக்சர்ஸ், ஹன்ஸ் ராஜ் சக்சேனா, கலாநிதி மாறன் இவர்களை வானளாவப் புகழாத வாய்களே இல்லை எனும் அளவுக்கு இருந்தது நிலைமை, கடந்த 5 ஆண்டுகளில்.

எந்த சின்ன / பெரிய பட பூஜை அல்லது இசை வெளியீடாக இருந்தாலும் 'சாக்ஸ்' வந்தா நல்லாருக்கும் என்று கேட்பது வாடிக்கையாக இருந்தது.

ஆனால் இன்று அதே சினிமா உலகில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. மோசடி வழக்கில் சக்சேனா கைது செய்யப்பட்டதை அறிந்ததும், பிலிம்சேம்பர் எனப்படும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நேற்று பட்டாசு வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் கொண்டாடியுள்ளனர் சினிமாக்காரர்கள்.

மாருதி பிலிம்ஸ் ராதாகிருஷ்ணன், ஆர்.வி. கிரியேஷன்ஸ் வடிவேலு தலைமையில் சென்னை பிலிம்சேம்பர் வளாகத்தில் கூடிய திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர் இந்தக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும் பிலிம்சேம்பர் சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில், "கடந்த 5 ஆண்டுகளாக சங்க பதவியை முறைகேடாக பிடித்தவர்கள், தயாரிப்பாளர்கள் நலனை காக்கத் தவறி குறிப்பிட்ட சேனல்களின் நலனில் அக்கறை செலுத்தி தமிழ் திரைப்பட துறையினரின் பலகோடி ரூபாய் நஷ்டத்திற்கு காரணமானவரும், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களையும் வஞ்சித்தவருமான சன் டி.வி. தலைமை நிர்வாகி சக்சேனாவை கைதுசெய்ததன் மூலம் தமிழ்த்திரையுலகம் சுதந்திர காற்றை சுவாசிக்க செய்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோடானுகோடி நன்றி," என்று கூறியுள்ளனர்.

08 April, 2011

மாப்பிள்ளை - திரைவிமர்சனம்


சன் பிக்சர் கலாநிதி மாறன் சார்பாக தனுஷ் நடிக்க சுராஜ் இயக்கியிருக்கும் படம் தான் மாப்பிள்ளை. கதை பற்றி சொல்லத் தேவையில்லை பழைய ரஜினி நடித்த  மாப்பிள்ளையின் கதைதான் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றார்போல் கொஞ்சம் மாற்றி  படம் பார்க்க வந்தவர்களை சிரிக்கவைத்து அனுப்பியிருக்கிறார் சுராஜ்.

சென்னையில் அக்கா வீட்டில் ஒரு நல்ல பக்திமானாக இருக்கும் தனுஷ் (சரவணன்), அந்த பகுதியில் நமீதா ரசிகர் மன்ற தலைவராக இருக்கும் விவேக் (சின்னா) -கிற்கு காதலில் உதவ நாயகி ஹன்சிகாவை சந்திக்க,  ஹன்சிகா தனுஷின் நல்ல குணத்தைப் பார்த்து காதலில் விழ இவர் வெறுக்க அவர்  காதலிக்க இறுதியாய் நாயகியின் அம்மாவான கோடீஸ்வரி ராஜேஸ்வரியம்மாவிடம் (மனீஷா கொய்ராலா)  பெண் கேட்க செல்கிறார் தனுஷ். மாப்பிள்ளை நல்ல குணமுடையவர் என தெரிந்து திருமணத்திற்கு சம்மதிக்கிறார். திருமண ஏற்பாடுகள் நடைபெறும் வேளையில் மாப்பிள்ளை தனுஷ் கும்பக்கோணத்தில் மிகபெரிய முரட்டிபயல் என தெரியவர மாப்பிள்ளையை மாற்றி திருமண ஏற்பாடு நடக்கிறது. அதை முறியடித்து தனுஷ் திருமணம் செய்துக் கொள்கிறார் பின் வீட்டோட மாப்பிள்ளையாக வலம் வருகிறார்.

இருவருக்கும் முதல் இரவு நடக்க விடாமல் தடை செய்யும் மனீஷா அவர்களை பிரிக்க திட்ட மிடுகிறார்.  இதற்கிடையில் தனுஸை சொந்த கிராமத்திற்கு அழைக்க வரும் அப்பா அம்மாவை அவமானம் படுத்திவிட, மேலும் தனுஷின் தங்கை மனீஷாவின் ம‌கனை காதலிக்க அந்த திருமணத்தையும் நடத்த திட்டம் தீட்டி அனைவரையும் கிராத்திற்கு வரவழைக்கும் தனுஷ் பின்பு வில்லன்களின் சூழ்ச்சியில் சிக்கி அவமானம் படுகிறார் தனுஷ். 
இறுதியில் தன் தங்கைக்கு திருமணத்தை நடத்தினாரா? ராஜேஸ்வரி தனுசை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொண்டாரா என் இறுதிகாட்சிகளில் நகைச்சுவையுடன் சொல்லிருக்கும் படமே மாப்பிள்ளை.

இனி விஷயத்துக்கு வர்றேன்...

தனுஷ் ஆரம்பத்தில் பக்திமான் போன்று மிக அமைதியான கேரக்டரில் வந்து விவேக்குடன் கலந்து எல்லாரையும் சிரிக்க வைக்கிறார். அதன் பின்பு கும்பகோணத்தில் கலக்கல் இளைஞனாக வந்து ஊர் முழுக்க கலாட்டா தகராறு செய்யும் போது தனுஷ் அமர்களப்படுத்துகிறார். அதிகமான சண்டைக்காட்சிகள் இணைக்க அதிக அளவு கதை இல்லாததால் யாதர்த்தமான இவரின் காட்சி அமைப்புகள் நகர்கிறது.


கோடீஸ்வரி ராஜேஸ்வரியாக வரும் மனீஷா கொய்ராலா ஆரம்பத்தில் வில்லத்தனம் காட்டி தன் பெண்ணுக்கு அன்பு அம்மாவாக நடித்திருக்கிறார்.  மாப்பிள்ளை தனுசுடன் போட்டி ‌போடும் போதும் தன்னுடைய பணக்காரத்திமிரை காட்டும் போதும் ஏதோ ஓரளவுக்கு ஸ்கோர் பண்ணியிருக்கிறார். ஆனால் இவரின் நடிப்பு அந்த பாத்திரத்திற்கு பொருத்தமாக இல்லை.

படம் துவக்கம் காமெடி எக்ஸ்பிரசாக ‌ஜெட் வேகத்தில் புறப்படுகிறது. நமீதா ரசிகர் மன்றம் நடத்தும் விவேக், சத்யன், பாலாஜி கூட்டணி கா‌மெடியில் பிச்சியெடுக்கிறார்கள். நாயகியை காதலிக்க தனுஷிடம் ஐடியா கேட்டு பின்பு அதில் மாட்டிக் கொண்டு அவர்கள் படும் அவஸ்தை மற்றும் இந்த நால்வரின் வசனங்கள் ஹேர் ஸ்டைல் ஒரு கலக்கு கலக்குகிறது. அதன்பிறகு தனுசுக்கு உதவ பணக்காரர் வேஷம் கட்டும் போதும் விவேக்கின் காமெடி படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.
 
நாயகி  ஹன்சிகா அதிக வேலை இல்லை. இவர் பதிவுலகில் டாப்ஸி இடத்தை பிடிக்க முயற்சிப்பார் என்று தெரிகிறது.

வில்லன் ஆஷீஸ் வித்யார்த் அதிக வேலையில்லை தனுசின் அப்பாவாக பட்டிமன்ற ராஜா இவர் சினிமா அப்பாவாக வந்துப் போகிறார். மணிசர்மாவின் இசையில் பாடல்கள் செல்லும்படி இருக்கிறது. என்னோட ராசி நல்ல ராசி என்ற பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறார். சிட்டிபாபு, மதன்பாப், மனோபாலா மனீஷா கொய்ராலாவை உடன் வந்து தன் பங்கிக்கு காமெடி செய்திருக்கிறார்கள்

இறுதிக்கட்ட காட்சிகள் பரபரப்பாக ஆரம்பித்து நகைச்சுவையுடன் முடிகிறது. படம் முழுக்க வசனங்கள் பஞ்ச் டயலாக் போன்றே வளம் வருகிறது.. விவேக்கின் டயலாக் மிக  மிக சூப்பர். கோடை வெயிலுக்கு இதமான ஒரு நகைச்சுவை கதை‌யை எடுத்துக்கொண்டு தன் பாணியில் சொல்லி ஜெயித்திருக்கிறார். சுராஜ்.

சன் பிக்சரின் மற்றும்மொறு மாசாலா படம் இந்த மாப்பிள்ளை.

04 February, 2011

தூங்கா நகரம் - திரை விமர்சனம் (First in Net)

 

அம்மா பச்சகிளி பாண்டியம்மா..சீக்கிறம்வா

யோவ் ஏன்யாய் இப்படி கத்தறே...

வா.. இன்னிக்கு நம்ம ரெண்டுபேரும் தான் தூங்காநகரம் பட விமர்சனம் சொல்ல போறோம்...

படம் எப்படி இருக்குன்னு ஜனங்களுக்கு சொல்லுவோம்..

என்னை ‌எங்கையா படம் பார்க்கவுட்ட அதை வாங்கிட்டு வா.. இதை வாங்கிட்டு வான்னு அனுப்பிகி‌னே இருந்தே..  நீயோ சொல்லு 

அது என்னய்யா ஊறுக்குள்‌ளே எவ்வளலு பேரு இருக்கு அதவுட்டுட்டு பேரு வச்சிருக்கிற பாரு பாண்டியம்மா-ன்னு அனுஷ்கா.. திரிஷ்... நயன்தாரா-ன்..

ஏய் உட்டா நீ பேசிக்கிட்டே போவ.. நான் படத்தோட கதையை சொல்றேன்... இரு...

படத்தேட கதை :
 
படத்திலே நாலு பேர சுத்திதான் கதை நகருது... மதுரைக்கு பிழைப்பை தேடி வேற வேற ஊர்லேந்து வர்ற நாலு பேர் பிரண்ட்ஸ் ஆகராங்க.. அந்த பிரண்ட்ஸ் ஒன்னாயிருக்காங்க... ஒரு சமூக விரோதிக்கு எதிரா ஒரு முறை மோதுர இவங்க அவனை அடிச்சிடராங்க.. அவன் தன்னுடைய கண்ணை இழந்துடரான்... இந்த நாலு பேரையும் தீர்த்து கட்ட வில்லன் குருப் முடிவு செய்து.. முதல் ஆளை கொல்ல மிச்சம் இருக்கிற மூணு பேற அனுப்புராங்க அங்க அவனுக்கு கல்யாணம் ஏற்பாடு நடக்குது... கல்யாணத்துக்குள் அ‌வனை கொல்ல வில்லன் குருப் அவங்க குடும்பத்த கொல்லுவதா மிரட்டராங்க... அந்த மூணு பேரும் தன்னுடைய நண்பனை ‌‌கொல்ல முயற்சி எடுக்குராங்க... இறுதியில் இவங்க அ‌வனை கொன்னானுங்கலா இல்லையா.. வில்லன் என்ன ஆகுராங்கன்னு மிக சஸ்பென்ஸ் கூட்டி கௌரவ் கொடுத்திருக்கிற படம் தான் தூங்கா நகரம்...
 
யோவ் கதை சொல்லுன்னா என்னய்யா இது... படிக்கிறவங்க காண்டாக போராங்க.. இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லு...

சரி.. சரி.. சொல்றேன்...
படத்திலே நாலு பேரு...
  
1. அய்யாவு.. (பரணி) இவரு விருதுநகரிலிருந்து மதுரைக்கு வந்து எலக்ரிஷன் வேலை செய்யுறாறு.. இவருடைய ‌மனைவி மீனாட்சிக்கு வளைகாப்பு செஞ்சி..  நல்லா வச்சிக்கனுன்னு இவரு விருப்பம்...

2. இரண்டாவது ஆளு மாரியப்பன்... (நிஷாந்த்) இவரு சிவகங்கையிலிருந்து மதுரைக்கு வந்து ஏதோ வேலை செஞ்சி பிழைக்கிறான்.. இவன் ஊமை இவக்கு யாரையாவது லவ் பண்ணி கல்யாணம் பன்னிக்குனு ஆசை..

3. ராஜா மணி... (இயக்குனர் கௌரவ்) இவரு.. உசிலம்பட்டியிலிருந்து மதுரைக்கு வந்து வேலை பார்க்கறாறு .. இவருக்கு பிணம் எரிக்கிற வேலை ஈவு இறக்கமற்ற கேரக்டர்...

4. கண்ணன் (அதாங்க களவாணி விமல்) இவரு திண்டுக்கல்லிருந்து கல்யாணத்தில் வீடியோ படம் எடுக்கிற வேலை...
 

இந்த நாலு பேரும் ஒரு புனிதமான இடத்தில் சந்திச்சி பிரண்ட்ஸ் ஆகராங்க...
 
ஏய் இரு.. இரு.. இடத்தை நான் சொல்றேன்... புனிதமான இடம்ன்னா.. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தானே..
 
ஏய்.. வாயை மூடு... இளைஞர்களுக்கு புனிதமான இடம் அதாங்க ”வைகை பார்” குடிக்கும் போது ஏற்படுகிற சண்டையிலே நாலு பேரும் பிரண்ட்ஸ் ஆகுராங்க...

மதுரையில் துணிக்கடை ஒன்றில் பெண்கள் துணி மாற்றும் போது ‌அதை படம் எடுத்து பிளாக் மெயில் பண்ற ஒரு கூட்டம் இருக்குது... அதுல ஒரு ஐய்யர் பெண்ணு மாட்டிக்குது.. இதை நம்ம களவாணிக்கிட்ட சொல்லி அய்யர் அழராரு... போதையில் இருந்த இவன் வில்லன் டீமை அடித்து அவனுடைய கண்ணை குருடு ஆக்கிறாங்க... அவங்க மோசமானவன்னு தெரிஞ்சிக்கிட்டு அவங்கவங்க ஊருக்கு போயிராங்க...
 
இதை கண்டுப்புடிச்சி வில்லன் டீம் அவங்க அட்ரஸை கண்டுபிடிச்சி விமலை‌ கொள்ள மற்ற மூணு  பேரையும் அனுப்புது... விமலுக்கும்.. நாயகி அஞ்சலிக்கும் திருமண ஏற்பாடு நடக்குது அங்க வந்து முதலில் மூணு பேரும் தனித்தனியா கொள்ள முயற்சி செய்து பின்னர் மூன்று பேரும் சேர்ந்து....

ஏய்.. இரு..இரு.. உட்டா மொத்த கதையும் சொல்லி ஜனங்களை தியாட்டர் பக்கம் வரவுடாத பண்ணிடிவியே...

இதாங்க கதை இந்த கதையை எங்கேயும் தோய்வு இல்லாமல் மிகவும் விருவிருப்பாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் கௌரவ்...
 
இந்த நான்கு போரும் தன்னுடை கதாபாத்திரத்தில் நன்றாக பொருந்தி அளவான முறையில் நடிச்சிருக்காங்க..
 
அஞ்சலிக்கு அதிக வேலையில்லை மதுரை உள்ளுர் தொலைக்காட்சியில் வேலை.. பிளாஸ்போக்கில் விமலும் அஞ்சலியும் எதிரெதிர் வீடு சின்ன வயசிலே காதல்.. அதனாலே ரொம்ப இழுக்காது... காதல்.. திருமணம்ன்னு முடித்து இரண்டு பாட்டுக்கு மட்டும் வந்து தன்னுடைய நடிப்பாற்றலை வெளிப்படுத்திறிருக்கிறார்...
 
வில்லன் டீம் அத்தனையும் புதுமுகங்கள் (படத்தில் கிட்டதட்ட 75 புது முகங்கள் டைட்ல்லே போட்டாறங்கப்பா...)
 
காமெடிக்கு சிங்கம்புலி.. ஒரு சில காட்சிகளில் வந்து காமெடி பண்ணியிருக்கிறார் அதைவிட படத்தில் இரண்டு பாட்டிங்க பண்ற அட்டகாசம் கலகட்டுது..

படத்துல சரியான இடத்தில் சரியான பாடல்களுடன் படம் நகருது...
மதுரையில் நடக்கிற அந்தனை விஷயங்களையும மற்றும் மதுரை மொத்தத்தையும் சசுத்தி காட்டி இயக்குனர் ஜெயித்திருக்கிறார்.
 
நீ.. சிரிச்சா கொண்டாட்டம்... மற்றும்  ஞானகரவேல் அவர்கள் எழுதிய  எட்டு கண்களுக்குள் ஒற்றை பார்வை என்ற பாடல் அருமை படம் முழுக்க இசையால் ஆட்சி செய்திருக்கிறார் சுந்தர் சி. பாபு..

படம் நாலு பேர்ல ஒருத்தரை கொன்னு கொளுத்துர சீன்ல ஆரம்பிக்குது படம்.. அது யார்ன்னு சஸ்பென்ஸ் வச்சி இறு காட்சியில் நடப்பது என்னன்னு அனைவரையும் சீட்டின் நுனிக்கே வரவச்சிருக்கு..
 
ஆரம்ப காட்சியியும் இறுதி காட்சியும் ரசிகர்களை இது ஒரு திரில்லர் படம்ன்னு சொல்ல வைக்கும்...
 
சரி.. சரி.. ஜனங்க பார்த்துட்டு அவங்க சொல்லுவாங்க நீ உன் கடையை மூடு...
 
இரு..இரு.. நான் ஒரு விஷயம் சொல்லிடுறேன்.. என்ன..
 
அதான் வடிவேலு மதுரை சிரிச்ச தூங்காநகரம் பாட்டுக்கு வந்து ஆடராறே..அந்த விஷயம்
 
ஆமாங்க.. வடிவேலு.. படத்தின் ஆரம்பத்திலே தன்னோட குரல்ல கதையை விளக்குறாரு...
 
பச்சக்கிளி பாண்டியம்மா வ... இவங்க இதை படிச்சிட்டு திட்றாங்களா.. இல்ல புகழ்றாங்களான்னு பாக்கலாம்

படம் அருமை இயக்குனர் கௌரவ்க்கு நல்ல எதிர்காலம் இருக்குது...

Hollo Boss என்ன கிளம்பிட்டிங்க... ஒரு கமெண்ட் போட்டுட்டு போரது...
Related Posts Plugin for WordPress, Blogger...