கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label பப்பரமிட்டாய். Show all posts
Showing posts with label பப்பரமிட்டாய். Show all posts

31 December, 2011

பப்பரமிட்டாய் - அறுசுவைகளை அனுபவியுங்கள்... 31-12-2011

1. அறிஞர்கள் வாழ்வில் நகைச்சுவை :

ஓர் ஆன்மிக சொற்பொழிவின் போது, அனுமன் பிரம்மச்சாரி, கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து சாதனைகள் பல புரிந்தார். முக்கியமாக கிங் மேக்கராக இருந்தார். சுக்ரீவனுக்கு ஆட்சி கிடைத்தது அனுமனுடைய அறிவாற்றலால்தான்.

இராவணனைக் கொன்று இராமர் ஆட்சியை ஏற்கவும் அனுமன் பெரிதும் உதவினார். ஆக பெரிய நோக்கோடு பிரம்மச்சரிய விரதம் இருப்பவர்கள் எல்லோருமே கிங் மேக்கராக இருப்பார்கள் என்று திருமுருக கிருபானந்த வாரியார் குறிப்பிட்டார்.

உடனே கூட்டத்தில் பலத்த ஆரவாரமும், கைதட்டலும் எழுந்தன. அதற்குக் காரணம் அந்த மேடையில் காமராஜரும் இருந்தார். அவர் பிரம்ச்சாரி. அதோடு அப்போது நேருஜிக்குப்பிறகு இரண்டு பிரதமர்களைப் பதவியில் அமர்த்தி கிங் மேக்கர் என்ற பெயரை அவர் பெற்றிருந்தார்.

இது போல் கிருபானந்த வாரியார் அவர்கள், இடம் சூழல் காலத்திற்கு ஏற்றவாறு நகைச்சுவையுடன் நயத்துடன் பேச வல்லளர்.


2. கவிதை :



அவளோடு...
அன்றொறுநாள்...
சிரித்து சிரித்துப் பேசிய
 மழைச் சந்திப்புக்குப் பிறகு... 

ஒவ்வொரு ‌மழைத்துளியும் 
அழவைத்து விடுகிறது என்னை... 

அவளை நினைவுறுத்தி..!

3. நகைச்சுவை துணுக்கு :

நண்பன் 1 : ஈரான் அதிபர் எனக்குக் கிடைக்க இருந்த வேலையைக் கெடுத்திட்டான், பாவி...!
 

நண்பன் 2 : அவர் வந்து ஏதும் சொன்னாரா..?
 

நண்பன் 1 : அதில்லை..! ஈரான் அதிபர் யாருன்னு இன்டர்வியூல்லே கேள்வி கேட்டாங்க. எனக்கு பதில் சொல்ல தெரியல..!
 

4. விடைகொடுப்போம்..!
பல்வேறு மாற்றங்கள், ஏற்றங்கள் தந்த இந்த ஆண்டின்கடைசி நளை அன்போடு வழிஅனுப்புவோம்.

5. நகைச்சுவைப்படம் :
போட்டி வச்சிக்கலாமா..!


6. புத்தாண்டு வாழ்த்து: 
 
இன்று போல் என்றும் இணைந்திருப்போம் நட்பால்...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் 
என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

அன்புடன்
கவிதைவீதி செளந்தர்...
Related Posts Plugin for WordPress, Blogger...