கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label பவர்ஸ்டார். Show all posts
Showing posts with label பவர்ஸ்டார். Show all posts

15 April, 2013

பவர் ஸ்டார், ராமராஜன் மற்றும் பார்த்திபனை விஞ்சிய சோலார் ஸ்டார்

 

எப்படிப்பா இப்படி... என்று அத்தனை பேரும் வியக்கும் வகையில், திருமதி தமிழ் படத்துக்கான விளம்பரங்களில் பட்டையைக் கலக்கி வருகின்றனர் தேவயானியும், அவரது ஹீரோ கணவர் ராஜகுமாரனும். தேவயானியும், ராஜகுமாரனும் இணைந்து நடித்துக் கலக்கியுள்ள முதல் படம்தான் இந்த திருமதி தமிழ். 

ராஜகுமாரன்தான் இதில் அதிரடி ஹீரோ. கெளபாய் தொப்பி, இறுக்கக் கட்டிய பேன்ட், முகத்தோடு ஒட்டிய கருப்புக் கண்ணாடி, பெயிண்ட் செய்யப்பட்ட அழகு முகம் என அசத்தலாக காட்சி தருகிறார் ராஜகுமாரன்.

அதிரடி ஸ்டில்கள் வெளியீடு சமீபத்தில்தான் இந்தப் படத்தின் அதிரடி ஸ்டில்களை வெளியிட்டனர். அதில் ராஜகுமாரன் கொடுத்த போஸ்களைப் பார்த்து அத்தனை பேரும் அசந்து போய் விட்டனர்.
ராமராஜனையும் தாண்டி ராமராஜனுக்குப் பிறகு அவர் போல ஒரு ஹீரோவும் வந்ததில்லை. அந்தக் குறையைப் போக்க வராது வந்த மாமணி போல காட்சி தருகிறார் ராஜகுமாரன் என்பதுதான் அனைவரின் டாக்காக உள்ளது.



இப்ப இப்படி ஒரு விளம்பரம் தற்போது புத்தம் புதிதாக ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளனர் ராஜகுமாரன்-தேவயானி தம்பதியினர். அதாவது ராஜகுமாரனுக்கு யாராச்சும் பட்டம் தாங்களேன் என்ற வேண்டுகோளுடன் இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார், பவர் ஸ்டார், உலக நாயகன் மாதிரி... அதுகுறித்த விளம்பரத்தில் கூறப்பட்டிருப்பதாவது... யாராவது ஏதாவது பட்டம் கொடுத்தா நல்லா இருக்கும் போட்டுக்கலாம். பின் குறிப்பு - சூப்பர் ஸ்டார், பவர் ஸ்டார், உலக நாயகன் .. இது மாதிரி. 







 











இப்படி பார்த்திபனையும் விஞ்சிய நிலையில் ஒவ்வொறு நாலும் ஒவ்வொறு டயலாக் போட்டு தன்னுடைய படத்தின் போஸ்டர்களை வெளியிட்டவண்ணம் உள்ளனர்.

மொக்கையாக இருந்தாலும் ரசிக்கும் படிதான் இருக்கிறது.

07 April, 2013

பவர்ஸ்டாரும் இதுவும் ‌ ஒண்ணுங்க...! எப்படியும் சிரிப்புதான்...!



என்ன முனியா, நான் ஊர்லே இல்லாதப்போ ஏதும் விசேஷம் உண்டா?”

“பெருசா ஒண்ணுமில்லைங்க. நம்ம நாய் செத்துப் போச்சு”

“அடக் கடவுளே… த்சோ..த்சோ.. நல்லாத்தானேடா இருந்திச்சு. எப்படி திடீர்னு செத்துச்சு?”

“கெட்டுப்போன மாட்டுக்கறியை தின்னுடிச்சுங்க”

“மாட்டுக் கறி எங்கேடா கிடைச்சுது அதுக்கு?”

“நம்ம வீட்லதாங்க”

“நாமதான் மாட்டுக் கறி திங்கிறதில்லையேடா”

“நாம திங்கிறதில்லைங்க. நெருப்புல அவிஞ்சிபோன மாடு மூணு நாளா கெடந்து கெட்டுப் போச்சுங்க. அதத்தான் நாய் தின்னிடிச்சு”

“நம்ம மாடா?”

“ஆமாங்க”

“ஐயய்யோ எப்பிடிடா எரிஞ்சி போச்சு?”

“மாட்டுக் கொட்டாய் தீப்பிடிச்சிடிச்சுங்க”

“ஐயய்யோ… எப்பிடிடா?”

“வீடு எரியும் போது நெருப்பு பறந்து வந்து கொட்டாயில விழுந்திடுச்சு”

“வீடு எப்படிடா எரிஞ்சது?”
“குத்து விளக்கு விழுந்து தீ பரவிடிச்ச்சுங்க”

“குத்து விளக்கு ஏத்தற பழக்கமே நம்ம வீட்ல கிடையாதேடா?”

“அதுக்காக செத்தவங்க தலை மாட்டிலே விளக்கு வெக்காம இருக்க முடியுமா?”

“யார்ரா செத்தது?”

“உங்க அம்மா”

“எப்படி செத்தாங்க”

“தூக்கு போட்டுக்கிட்டு”

“ஏன்?”

“அவமானத்திலதான்”

“என்னடா அவமானம்?”

“வீட்ல இருக்கிற பொண்ணு ஒருத்தன் கூட ஓடிப்போனா ஊரு காறித் துப்பாதா?”

“ஓடிப் போனது யாரு?”

“உங்க பொண்டாட்டிதான்” (ரைட்டு)
 படிச்சி முடிச்சவுடன் அடப்பாவிகளே.... என்று சொல்லத்தோணுதில்லங்க....
(படித்ததில் ரசித்தது... சிரித்தது...)

26 January, 2013

சிங்கம் -2 வில் பவர்ஸ்டார்... மற்றும் அஜித்தின் புதுப்பட தலைப்பு...!

ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் சிங்கம் 2 திரைப்படத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூர்யா, அனுஷ்கா நடித்து ஹிட்டான சிங்கம் படத்தின் இரண்டாம் பாகம் ‘சிங்கம்-2′ என்ற பெயரில் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்திலும் சூர்யா-அனுஷ்கா ஜோடி சேருகின்றனர். 
 
நகைச்சுவைக்கு முதல் படத்தில் நடித்த விவேக், அதே கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் சந்தானம் ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் பவர்ஸ்டார் சீனிவாசன் புதிதாக இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. 
 
இது குறித்து இயக்குனர் ஹரி கூறும் போது, விவேக்கும், சந்தானமும் முன்னணி காமெடியர்களாக உள்ளனர். இருவரும் சிங்கம்-2 படத்தில் நடிக்கிறார்கள். இப்போது லட்டு புகழ் ஸ்ரீனிவாசனையும் சேர்க்க முடிவு செய்துள்ளோம் என்றார். ஏற்கனவே இதன் முதல் பாகத்தில் விவேக் ஏட்டு ஏழுமலை என்ற கேரக்டரில் நடித்து இருந்தார். ‘சிங்கம்-2′ விலும் அதே வேடத்தில் நடிக்கிறார். 
 
சந்தானம் மற்றும் பவர் ஸ்டார் காமெடிகளுக்காக ஸ்பெஷல் டிஸ்கஷன் நடப்பதால் படத்தில் இன்னொரு சிறப்பான அம்சமாக இருக்கும் என்றார். சிங்கம் 2ல் மூன்று காமெடியர்கள் நடிப்பதால் காமெடி காட்சிகள் களை கட்டும் என எதிர் பார்க்கப்படுகிறது. 
 
மூவருக்கும் தனித் தனியாக காமெடி சீன்கள் உருவாக்கப்பட்டு உள்ளதாக இயக்குநர் ஹரி கூறினார். லட்டு தின்ன ஆசையா? பட ரிலீசுக்குப் பின்னர் பவர் ஸ்டாருக்கு ரசிகர்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது என்பதால் ஏராளமான இயக்குநர்கள் அவரை புக் செய்ய போட்டி போட்டு வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
**********************
அஜீத் 'பில்லா-2'க்கு பிறகு விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் பிசியாகி உள்ளார். இப்படத்துக்கு வலை என பெயரிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பகுதி படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது.

சமீபத்தில் இப்படத்துக்காக சண்டை காட்சியொன்றில் நடித்தபோது விபத்து ஏற்பட்டு அஜீத் படுகாயம் அடைந்தார். இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அஜீத் தீவிர சிகிச்சை பெற்றார். தற்போது அவர் பூரண குணமாகியுள்ளார்.

இதையடுத்து மீண்டும் படத்தில் நடிக்க தயாராகிறார். இதற்காக சில தினங்களாக கடும் உடற்பயிற்சி செய்து உடம்பை மெருகேற்றி வருகிறார். இளம் பயிற்சியாளர் சிவா பயிற்சி அளித்து வருகிறார். பெரும் பகுதி நேரத்தை அஜீத் உடற்பயிற்சி கூடத்திலேயே கழிக்கிறார். தற்போது உருண்டு திரண்ட உடல்வாகுடன் கம்பீரமான தோற்றத்துக்கு மாறியுள்ளார். அடுத்த படத்தில் ஆக்சன் காட்சிகளில் நடிக்க தயாராகிறார்.

15 January, 2013

திமுக தலைவர் பதவியும்... பவர் ஸ்டாரை வாழ்த்தி கவிதையும்...!

இன்று இணையத்தில் அப்படியே உலவும் போது இரண்டு கார்டூன்கள் என்னை கவர்ந்தது... அந்தப்படங்களுடன் இன்றைய பதிவை முடித்துக்கொள்கிறேன்.
 *********************************
 
திமுக தலைவர் பதவிக்கான போட்டியும் அதை அடைவதற்காக சண்டைகளும் தொடர்ந்துக்கொண்டு இருக்கிறது... அதை மையப்படுத்திய அழகிய கார்டூன்...

***********************************
பவர்ஸ்டார் மதுரை ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்... அதில் உள்ள ‌கவிதையை படித்துப்பாருங்க... நல்லாத்தான் யோசிக்கிறாங்கப்பா...!

*****************************
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

14 January, 2013

பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளை ஆக்கரமித்துள்ள பவர்ஸ்டார்...

இன்றைக்கு அனைத்து ஊடகங்களும் பவர்ஸ்டார் சீனிவாசனின் பேட்டியை ஒளிபரப்பவும், வெளியிடவும் ஆர்வம் காட்டிவருகின்றனர். ஆனந்த விகடன், டைம்பாஸ் தொடங்கி சன்டிவி, கலைஞர், ராஜ், உள்ளிட்ட பல சேனல்களிலும் பேட்டி கொடுப்பதில் பரபரப்பாக இருக்கிறார் பவர் ஸ்டார் சீனிவாசன். காமெடியாகவோ, சீரியசாவோ எந்த கேள்வி கேட்டாலும் புன்னகை மாறாமல் தனது பதிலை கூறி அனைவரையும் சிரிக்க வைத்துவிடுகிறார் சீனிவாசன். 

சூப்பர் ஸ்டார் கூட இன்றைக்கு எந்த சேனலுக்கும் பேட்டி கொடுப்பதில்லை. ஆனால் பண்டிகை தினங்களில் பவர்ஸ்டாரின் பேட்டி கண்டிப்பாக ஒளிபரப்பாகிறது. தவிர ரியாலிட்டி ஷோக்களில் சிறப்பு விருந்தினராகவும் அசத்துகிறார் பவர்ஸ்டார் சீனிவாசன். 
சூப்பர் குடும்பத்தில் கலக்கிய பவர்ஸ்டார் 

சன் டிவியின் சூப்பர் குடும்பம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பவர்ஸ்டார் சீனிவாசன், போட்டியாளர்களுடன் கலக்கலாக நடனமாடினார். அதை பார்த்த நடுவர் கங்கை அமரன், தனக்கு இதுதான் வரும் தான் இப்படித்தான் நடனமாடுவேன் என்று கூச்சப்படாமல் நடனமாடுகிறார் சீனிவாசன் என்று பாராட்டினார். 
கமலுக்கு ஹாய் சொன்னேன் 

கமலுடன் பேசியிருக்கிறீர்களா? என்று பவர்ஸ்டாரைப் பார்த்து தொகுப்பாளினி காயத்ரி ஜெயராம் கேள்வி கேட்டார் அதற்கு பதிலளித்த சீனிவாசன், கமலும் நானும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தோம். அவருக்கு நான் ஹாய் சொன்னேன் என்றார். 
ரோஜாவின் லக்கா கிக்கா

ஜீ டிவியின் லக்கா கிக்கா நிகழ்ச்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பங்கேற்ற சீனிவாசன் அந்த நிகழ்ச்சியில் நடிகை ரோஜா கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து வெற்றி பெற்றார். தான் ஜெயித்த பணத்தை நிகழ்ச்சியில் தோல்வியடைந்த நபர்களுக்கு பரிசாகக் கொடுத்தார் சீனிவாசன். 
தமிழ் பேசும் கதாநாயகிகள் 

ராஜ் டிவியின் ‘தமிழ்பேசும் கதாநாயகிகள்' இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் பவர்ஸ்டார் சீனிவாசன். இதில் முக்கிய அம்சமே இறுதிச்சுற்றில் பங்கேற்ற 15 கதாநாயகிகளும் பவர்ஸ்டாருடன் குத்தாட்டம் போட்டனர். 
சங்கர் படத்தில நடிக்கிறேன் 

சினிமாவிலும் சரி சின்னத்திரையிலும் சரி இப்போது பவர்ஸ்டார் ரொம்ப பிஸி. கண்ணா லட்டு தின்ன ஆசையா இதே பொங்கலுக்கு ரிலீசாகிவிட்டது. அடுத்து சங்கரின் ‘ஐ' படத்தில் நடிக்கிறார். இந்த பிஸியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் பிரபல சேனல்களில் எல்லாம் பவர்ஸ்டாரின் பேட்டி ஒளிபரப்பாகிறது என்பதுதான் ஹைலைட்.

இது மட்டும் இல்லாமல் பல்வேறு சேனல்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளிலும் கலந்துக்கொண்டு பவர்ஸ்டார் கலக்கிக்கொண்டிருக்கிறார்....

வளர்க பவர் ஸ்டார்.... வளர்க அவரது புகழ்....

04 January, 2013

ரஜினி கதாபாத்திரத்தில் பவர் ஸ்டார் ! ரிலீஸ் தேதி அறிவித்து பரபரப்பு பேட்டி...!


சூப்பர் ஸ்டாரு்ககு போட்டினா அது இந்த பவர் ஸ்டார் தான் என்று தனக்குத் தானே பட்டம் வைத்துக் கொண்ட நடிகர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். 


பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் சந்தானத்துடன் சேர்ந்து நடித்துள்ள கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். 


படத்தின் ட்ரெய்லரே இவ்வளவு காமெடியாக உள்ளது என்றால் படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இது தவிர பவர்ஸ்டார் ஷங்கரின் ஐ படத்தில் நடிக்கிறார். 


அதில் அவர் எந்திரன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சிட்டி ரோபோ கதாபாத்திரம் போன்று நடிக்கிறார். இந்நிலையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 


சூப்பர் ஸ்டாருக்கு போட்டினா அது பவர் ஸ்டார் தான். சந்தானம் எனது தம்பி மாதிரி. அடுத்த ஜென்மத்தில் அவர் எனக்கு தம்பியாக பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். 


ஆனந்த தொல்லையின் ரிலீஸை வரும் ஏப்ரல் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளேன் என்றார்.

26 December, 2012

கண்ணா லட்டு தின்ன ஆசையா / MP3 free songs / Trailer


Kanna Laddu Thinna Aasaiya Songs 
Free Download Collection

01 - Aasaiye Alaipolay - VhAra.com

02 - Love Letter - VhAra.com

03 - Ye Unnathan - VhAra.com

04 - Birthday - VhAra.com

05 - Duet Song - VhAra.com

06 - Potti - VhAra.com

Kanna Laddu Thinna Aasaiya Songs Single Zip File Dowload --

******************************

Kanna Laddu Thinna Aasaiya Official Trailer

14 December, 2012

லுட்டி அடிக்க முடியவில்லை.. நம்ம பவர் ஸ்டார் வேதனை...!

 
சந்தானம், பவர் ஸ்டார் நடிப்பில் வெளிவர இருக்கும் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தை நகைச்சுவை ரசிகர்கள் ஆசையோடு எதிர்பார்த்திருக்கிறார்கள்.

இப்படத்தின் கதை 'இன்று போய் நாளை வா' படத்தின் கதை தான் என்று பேச்சுகள் நிலவி வருகிறது. இதனை 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் இயக்குனர் மணிகண்டன் மறுத்து இருக்கிறார்.

இன்று போய் நாளை வா' படத்தினைப் போலவே இதிலும் ஒரே பெண்ணை காதலிக்கும் மூன்று ஆண்கள் என்பது தான் கதை. ஆனாலும், படத்தின் திரைக்கதை வேறு மாதிரி இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 9ம் தேதி நடைபெற இருக்கிறது. ஷங்கர் வெளியிட சிம்பு பெற்றுக் கொள்கிறார்.

இப்படத்தின் முதல் பாதி வரை பார்த்த உதயநிதி ஸ்டாலின் " கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் முதல் பாதியை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சந்தானம், சேது மற்றும் பவர் ஸ்டார் அடிக்கிற லூட்டி... தாங்க முடியல " என்று தெரிவித்து இருக்கிறார்.

அதுமட்டுமன்றி படத்தினை தனது ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் வெளியிடலாம் என்று தீர்மானித்து பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார். விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரலாம்.

11 December, 2012

ஷங்கர் மற்றும் சிம்பு என் தம்பிகளே.. திரைவுலகை கலக்கும் பவர் ஸ்டார்...!


நடிகர் சந்தானம் முதன்முறையாக ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்ற படத்தை இயக்குனர் ராமநாராயணனுடன் இணைந்து தயாரித்திருக்கிறார்.

இப்படத்தில் சந்தானத்துடன் பவர் ஸ்டார் சீனிவாசனும், புதுமுகம் சேதுவும் இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று தேவி திரையரங்கில் நடைபெற்றது.

சாதாரண நிகழ்ச்சியாக ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி பவர் ஸ்டார் மற்றும் அவரது ரசிகர்களின் கைதட்டல், விசில் சத்தத்தால் களைகட்டியது. பவர் ஸ்டாரின் பேரை யார் உச்சரித்தாலும் திரையரங்கில் ஒரே விசில் சத்தமும், கைதட்டலுமாக இருந்தது. அந்தளவுக்கு கூட்டம் அலைமோதியது.

இவ்விழாவில் பவர் ஸ்டார் பேசும்போது, ’’அனைவருக்கும் இந்த லட்டு ஒரு திகட்டாத லட்டாக இருக்கும் என்றுதான் சொல்லவேண்டும். அந்தளவுக்கு எல்லோரும் சந்தோஷமாக நடித்திருக்கிறோம்.

திரையுலகில் நான் மீண்டும் முத்திரை குத்த வாய்ப்பளித்த அருமை தம்பி சந்தானத்துக்கு ரொம்ப நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். நான்தான் நடிக்க வேண்டும் என்று தம்பி அன்புக் கட்டளையின் பேரில் நான் இந்த படத்தில் நடித்திருக்கிறேன்.

தயாரிப்பாளர் ராமநாரயாணன் என்னை அழைத்து என்னிடம் ஒப்பந்தம் போட அவ்வளவு தயக்கம் காட்டினார். ஒரு அரைமணி பேச்சுவார்த்தைக்கு பின் நீங்கள் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னார். அப்படி நடிக்க வாய்ப்பளித்த அவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.


அதன்பிறகு என் அன்பு, ஆசை, அருமைத் தம்பி சங்கர் சாரை நான் ரொம்ப பாராட்ட வேண்டும். அவருடைய ‘ஐ’ படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார். நான் சற்று யோசித்தேன், இது கனவா? நனவா? என்று. அழைப்பு வந்ததின் பேரில் நான் அங்கு சென்றபோது எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

நான் அவரிடம் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தேன். ஆனால் என் தம்பி ஷங்கர் அவர்கள், “அண்ணே நான் உங்களுடன் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும். நான் உங்களுடைய ரசிகன்“ என்று சொன்னவுடன், உண்மையிலேயே நான் பிறந்த பலனை அடைந்துவிட்டேன் என்றுதான் நினைக்கிறேன்.

அதேபோல், இன்னொரு தம்பி சிம்பு அவர்கள் என்னுடன் இப்படத்தில் நடிக்கிறார். எனக்கு இந்த படத்தின் மூலம் நிறைய தம்பிமார்கள் கிடைத்துள்ளார்கள். அதற்குமேல் எனக்கு உயிரினும் மேலான ரசிகர்களும் கிடைத்திருக்கிறார்கள்’’என்று கூறினார்.

07 December, 2012

பவர் ஸ்டார் மற்றும் புவனேஷ்வரி குண்டர் சட்டத்தில் கைதா..! அதிர்ச்சியில் திரையுலகம்..!



பிரபல நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மேலும் இரண்டு மோசடிப்புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து விரைவில் அவர் குண்டர் சட்டத்தில் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவாவைச் சேர்ந்த ரத்தோர், கேரளாவைச் சேர்ந்த அருண்குமார் ஆகியோர் சொத்து விற்பனை மற்றும் கொள்முதலில் முதலீடு செய்யலாம் என்று கூறி சீனிவாசன் மோசடி செய்ததாக போலீசில் புகார் மனு அளித்துள்ளனர்.


சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவருக்கு 10 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.65 லட்சம் கமிஷன் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக சீனிவாசன் மீது புகார் எழுந்தது. இதேபோல் கோவாவை சேர்ந்த வில்சனிடம் ரூ.3 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.15 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்த வழக்குகளில் கைது செய்யப்பட்டார் சீனிவாசன்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அடையாறு பகுதியில் வசித்து வரும் ஜெகநாதன் என்பவர் 5 கோடி ரூபாய் கடன் வாங்கித்தருவதாக கூறி 50 லட்சம் ரூபாய் கமிஷனாக பெற்றுக்கொண்டு சீனிவாசன் ஏமாற்றிவிட்டதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து புகார் கொடுத்திருந்தார். இது பற்றி அண்ணா நகர் போலீஸ் துணை கமிஷனரை விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவிட்டு விசாரணை நடந்து வருகிறது.

மேலும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த தீபக் என்பவரிடம் ரூ.5 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் பண மோசடி செய்ததாகவும் நடிகர் சீனிவாசன் மீது புகார் தெரிவிக்கப்பட்டன.

இப்போது கோவாவைச் சேர்ந்த ரத்தோர், கேரளாவைச் சேர்ந்த அருண்குமார் ஆகியோர் சொத்து விற்பனை மற்றும் கொள்முதலில் முதலீடு செய்யலாம் என்று கூறி சீனிவாசன் மோசடி செய்ததாக போலீசில் புகார் மனு அளித்துள்ளனர்.

ஏற்கனவே 2 மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வந்து 'லட்டு தின்று கொண்டிருக்கும்' நடிகர் சீனிவாசன் மீது மேலும் மோசடி புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. எனவே விரைவில் இந்த வழக்குகளிலும் அவர் கைது செய்யப்படுவார் என்றும் இம்முறை அவர் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் கூறப்படுகிறது.

சந்தானத்துடன் லண்டு தின்ன ஆசையா படத்தில் நடித்து வரும் பவர் ஸ்டார், சிறையில் அடைபட்டு களி திண்பாரா என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு கோலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கிறதாம்.
சமீக காலமாக நடிகை புவனேஷ்வரியின் மீது பல்வேறு வழக்குகள் பதிவாதி வருகிறது. அதைத்தொடர்ந்து அவரும் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.


தொடர்ந்து இரண்டு திரையுலகினர் குண்டர்சட்டத்தின் கீழ் அடைக்கப்படலாம் என்ற செய்தி திரையுலகினரை அதிர்ச்சியுள்ளாக்கியிருக்கிறது.

18 November, 2012

பவர் ஸ்டார் உருவான விதம் எப்படி..! பரபரப்பு பிண்ணனி தகவல்கள்... ஆதாரங்களுடன்..


தமிழ் திரைவு‌லகை கலக்கிகொண்டிருக்கும் பவர்ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அக்குபஞ்சர் டாக்டர் சீனிவாசன் எப்படி தன்னை பிரபலபடுத்திக்கொண்டார் என்பதை ராஜ் டிவி கோப்பியம் நிகழ்ச்சியில் தெள்ளத்தெளிவாக எடுத்துகாட்டியுள்ளனர். அந்த பரபரப்பு பிண்ணனியும் உண்மை தகவல்களும்  காட்சியாக காணுங்கள்....


04 August, 2012

மக்களே...! இந்த படங்கள் எல்லாம் பார்த்து சிரிக்க மட்டும்தான்

நாங்ககெல்லாம் அப்பவே அப்படி...
இப்ப சொல்லனுமா...!

 
எவன்டா அவன் போட்டோ எடுக்குறது..?

பட்ஜெட் கல்யாணமாம்...

இந்த பேனுக்கு ஒரு பேரைச் சொல்லுங்க...

 ‌நோ.. கமாண்ட்ஸ்...

ஓட்டுபவருக்கு புகை சத்தமும் புகையும் ஒத்துக்காதுங்க..
அதான் கொஞ்சம் தள்ளி வச்சிருக்கோம்...


 ‌இன்னும் கொஞ்சநேரம் இரு..
அவரசப்படாதே...
இப்பத்தானே ஆரம்பிச்சிருக்கோம்...

நம்மள யாரு கேட்குறது...
-விதியை மீறுவோர் சங்கம்-

பாதுகாப்பு முக்கியம் அமைச்சரே...!

‌உங்களுக்கு எப்படிதோணுதோ அப்படியே செய்யுங்க...

இந்த மாடல் எப்படியிருக்கு...


 இந்த வருடத்தில் தமிழ் திரையுலகையே புரட்டிப்போட்டு விட்டு
பல ஆஸ்கார் அவார்டுகளை அள்ளப்போகும்
நம்ம பவர் ஸ்டாரின் அடுத்த படங்கள்...

*******************************************

இந்தப்படங்கள் அப்பப்போ சேகரிச்சி வச்சதுங்க...
பார்த்து ரசித்ததற்கு நன்றி...


Related Posts Plugin for WordPress, Blogger...