கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label மு.க.ஸ்டாலின். Show all posts
Showing posts with label மு.க.ஸ்டாலின். Show all posts

19 March, 2013

திமுக விலகல்... கலைஞரின் நாடகமா...? தேர்தல் கருதியே விலகல்..வாசகர்களின் குமுறல்...!

மத்தியில் அரசு அமைத்துள்ள, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, தி.மு.க., விலகிக் கொண்டதாக, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, அறிவித்தார்.

இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதலை போர்க் குற்றம், இனப் படுகொலை என அறிவிக்க வேண்டும் என்ற திருத்தத்துடன், ஐ.“நா., மனித உரிமை அமைப்பில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகிய இருவருக்கும், தி.மு.க., தலைவர் கருணாநிதி இரண்டு தினங்களுக்கு முன் கடிதம் எழுதினார். இதை நிறைவேற்றவில்லை எனில், கூட்டணியில் நீடிப்பதில் அர்த்தமில்லை என்றும கூறினார்.

என தினமலர் இணையதளத்தில் செய்தி வெளியானது அந்த செய்தியில் வாசககள் கூறிய கருத்துகளில் சில...


Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
19-மார்-201316:11:21 IST Report Abuse
Ramasami Venkatesan பிரதம மந்திரி அலுவலகம் 2ஜி தீர்மானங்களில் தங்களுக்கு சம்பந்தமில்லை என்றும் இது மந்திரியின் தனிப்பட்ட முடிவு என்றும் கூறிவிட்டது. இனி கேஸ் சூடு பிடிக்கும். இன்னொரு மந்திரி சபை மாற்றம் இருக்கும் தேர்தலுக்கு முன்பே. தி மு க மந்திரிகள் இருவரும் வெளியே. கனிமொழி கேசும் தீவிரமாகும். வரும் பாராளுமன்ற தேர்தலில் தி மு க அம்பேல் ஆனால் (ஆனால் என்ன - ஆகும்) மேலும் தொடரும் வழக்குகள்.
////////////
JOHN SELVARAJ - CHENNAI ,இந்தியா
19-மார்-201316:03:18 IST Report Abuse
JOHN SELVARAJ கருணாநிதி இந்த வயதிலும் இலங்கைப் பிரச்சினை குறித்து மத்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை, காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகல் என முக்கிய முடிவுகள் எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்த தி.மு.க தலைவர், அடுத்த முதல்வர் என வலம்வந்துகொண்டிருக்கும் மு.க.ஸ்டாலினோ, பிறந்தநாள் முடிந்து 20 நாளாகியும், இன்னும் தமிழகமெங்கும் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மூழ்கியிருக்கிறார். இலங்கைப் பிரச்சினை தகித்துக்கொண்டிருக்கும் இந்நிலையில், மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தவேண்டிய இவர் இப்படி பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதுதான் அழகா? 
///////////////
MOHAMED GANI - MADURAI,இந்தியா
19-மார்-201316:02:29 IST Report Abuse
MOHAMED GANI இவ்வளவு பிரச்சினைகள், இலங்கைத் தமிழருக்கான போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கும் வேளையில், தி.மு.கவின் அடுத்த தலைவர் என்று கருணாநிதியாலேயே முன்மொழியப்பட்ட ஸ்டாலின் எங்கே என்றே தெரியவில்லையே? மானவர்கள் போராட்டம் தமிழகத்தில் உக்கிரமாக இருந்துகொண்டிருக்கும் வேளையில் இன்னும் கருணாநிதிதான் பத்திரிகை அறிக்கை, தலைவர்கள் சந்திப்பு என்று பிசியாக இருக்கிறாரே தவிர ஸ்டாலின் எதிலும் கலந்துகொண்டதாகத் தெரியவில்லை. போராட்டம் நடத்தும் மாணவர்களையும் சந்தித்திக்கவில்லை இவர் எப்படி அடுத்த தலைவராக வரமுடியும்?
/////////////
LOTUS - CHENNAI,இந்தியா
19-மார்-201315:56:27 IST Report Abuse
LOTUS வழக்கம் போல ஊளை முட்டையை போட்டுவிட்டு நல்ல முட்டையை எடுத்துவா என்று குழந்தைகள் விளையாடுமே அதுதான் நடந்துள்ளது........ ராஜினாமா அறிவிப்புக்கு பின்னே மணியோசை வந்துவிட்டதே ............. பார்லிமெண்டில் தீர்மான வாசகம் மாற்றப்பட்டு ஒரு சேர தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் இந்த ராஜினாமாவும் வாபஸ் பெறப்படும் என்று .............எங்காவது பூனை கருவாட்டை விட்டு விட்டு சைவமாக மாறுமா ? ............ பதவியில்லாத கருணா என்பது அவரது சரித்திரத்தில் இல்லாதது..... எனவே, ஊரெல்லாம் போராடும் பொது தான் மட்டும் வீட்டில் இருப்பதாக யாரும் நினைக்க கூடாது என்று ஒரு நாடகம்............ நம்புவதற்கு முட்டாள் பொதுஜனம் நாமும்.............. மொத்தத்தில் பிரச்சினைக்குரிய ஈழ மக்களுக்கு 5 பைசா பிரயோஜனம் இல்லாத உண்ணாவிரதங்கள், போராட்டங்கள் , ஊர்வலங்கள், ராஜினாமா நாடகங்கள் .......... பாவம் அவர்கள்..............
/////////

Aravindh Raman - Auckland,நியூ சிலாந்து
19-மார்-201315:51:06 IST Report Abuse Aravindh Raman 2ஜீ அலை ஊழலில் தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்ற கலைஞர் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்தே ஆக வேண்டும். இல்லையேல் கனிமொழி, தயாளு அம்மாள் மீதும் ராசா மீதும் இறுக்கு பிடி விழும் என்று பலர் முன்னர் இங்கே கருத்து எழுதி இருந்தனர்.... இப்போ? ஒட்டி இருந்தால் பதவியையும் குடும்பத்தையும் பாதுகாக்க வெட்டி விட்டால் வெறும் நாடகம்.. நான் தி மு க அடிவருடியோ கருணாநிதி ஆதரவாளனோ அல்ல..
//////////////
anu - chennai,இந்தியா
19-மார்-201315:44:48 IST Report Abuse
anu இந்த மாணவர்கள் போராட்டத்தை கருணாநிதியின் நாடகத்தால் நீர்த்து போக செய்து இலங்கை தமிழருக்கு தன்னால் மட்டுமே விடிவு உண்டு என்ற பிம்பத்தை ஏற்படுத்தி நம்ப வைத்துவிடுவார். மாணவர்களின் போராட்டம் தி.மு.க, திருமா, சிமான் போன்றவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தது என்னவோ உண்மை. 9 வருடம் சுகத்தை அனுபவித்துவிட்டு இப்போது ஆதரவு வாபஸ். இலங்கை தமிழர்கள் இவர்களை நம்பும் வரை இவர்களின் அரசியல் வியாபாரம் களைகட்டும். அட ஏமாளிகளா 
///////////////
Saravana Kumar - Dallas,யூ.எஸ்.ஏ
19-மார்-201315:27:41 IST Report Abuse
Saravana Kumar பிரமாதம் தலைவரே இனி எப்பவும் இல்லன்னு சொன்னீக பாருங்க, அது தான் ராஜதந்திரம்... ப.ஜ.க கு மெசேஜ் சொல்லியாச்சு.. காங்கிரஸ் இனிமே வேண்டாம், நாங்க அடுத்த கூட்டணிக்கு தயார்... நீங்க நீங்க தான்... அணைத்து இராஜதந்திரங்களையும் கரைத்து குடித்து விட்டாய்ட நீ அ.தி.மு.க கு முன்னாடி வெளிய வந்து கூவிட்டீங்க இனிமே ஜே. ஜே ஏதாவது பண்ணியாகணும்.. என்னமோ போங்க.. 
///////////////
sethu - Chennai,இந்தியா
19-மார்-201315:19:40 IST Report Abuse
sethu நம்பாதீர்கள் தமிழா உலகத்தில் நீங்கள் யாரை வேணாலும் நம்புங்கள், கருணாவை நம்பிடாதீர்கள். குதிரைஏய் குப்புற தள்ளி குழியும் பார்த்தது வேறு யாரும் இல்லை. சட்சாத் இந்த கருணாதான். மன்மோகன் தான் பிரதமர். எப்படிவேனாலும் நீங்கள் நம்புங்கள். ஆனால் கர்ணா பின்னாடி போகணும்னு நம்பிடாதீர்கள். ஈழத்தில் நடந்ததை தமிழகத்திலும் நடத்தி அரசியல் செய்து விடுவார் இந்த நல்லவர்.
////////////////
Uthukkaattaan - Padmagiriswaram,இந்தியா
19-மார்-201315:12:16 IST Report Abuse
Uthukkaattaan ஐயா, தேர்தல் நெருங்கிவிட்டது. எல்லா பக்கமும் காங்கிரஸ் படுதோல்வியடையும் என பேசிக்கொள்கிறார்களாம். இதோ வெளியேறி விட்டார். பிஜேபி யும் பாராட்டி விட்டது. பலவகையில் மானத்தை விற்று எல்லா வழியிலும் முயன்று எங்கள் தன்மான தானை தலைவர் பிஜேபி யுடன் கூட்டணியமைத்து விடுவார். வாக்காளகள்தான் பேமானிகள். சொல்லமுடியாது. இந்துக்கள் பாபர் மசூதியை இடித்தது சரி அது காலத்தின் கட்டாயம் என்று தமிழ் தாத்தா ஹிந்தி அத்வானி தாத்தாவுடன் ஒரே மேடையில் கூடிய விரைவில் பேசுவார். காமெடியை ரசித்து தலையில் அடித்துக்கொள்ள தயாராகுங்கள்
//////////////////
Imran - Chennai,இந்தியா
19-மார்-201315:04:46 IST Report Abuse
Imran வெறும் அரசியல் நாடகம் மாணவர் போராட்டம் தான் இதுக்கு காரணம். வாபஸ் வாங்கினா மட்டும் என்ன நடக்க போகுது. என்னிக்கு தமிழ்நாடு பத்தி கவலை பட்டாங்க. இத்தாலி காரங்க 2 பேர சுட்டதுகு அவங்க தூதர அனுப்ப கூடாதுன்னு சொல்றாங்க. ஆனா 20000 மக்களை கொன்ன ராஜ்யபக்ஷ இவங்க சிவப்பு கம்பளம் விரிக்கிராங்க. இவனாக மட்டும் யோக்கியமா. ஞாயமா அவன் வரும் போதே இத பண்ணி இருக்கனும். இப்ப மாணவர் போராட்டம் ஆரம்பிச்ச பின்னாடி கூட இத பண்ணலேன்னா நாளைக்கு ஒரு ஓட்டு கூட விழாது. இது கூட ஒரு கேவலமான அரசியல் நாடகம் தான் - உண்மையான ஒரு தமிழ் நாடு பிரஜை மக்கள் உண்மையா நினைப்பது இப்படி தான்  

///////////////

Snake Babu - Salem,இந்தியா
19-மார்-201315:00:59 IST Report Abuse
Snake Babu "சிங்கம் களம் இறங்கிடுச்சி" சொல்லனும்னு ஆசைதான். ஆனா முடியாதே அவ்வளவுக்கு பாதிபடைஞ்சிருக்கோம், மறுபடியும் ஒரு பல்டி வந்தது. இனிமேல தி மு க வால எழுந்திருக்கவே முடியாது. தாத்தாவுக்கு அப்புறம்தான் மாற்றம் வரும்னு எதிர்பார்ப்பு இருக்குது. இப்பவும் ஒரு சந்தர்ப்பம். பார்ப்போம் பொறுத்திருந்து 
/////////////////
Srinivasan Dhakshnamoorthy - Malaysia,மலேஷியா
19-மார்-201314:53:50 IST Report Abuse
Srinivasan Dhakshnamoorthy தமிழக மக்களே ......உங்களை முட்டாள் ஆக்க இதோ கருணாநிதியின் மற்றும் ஒரு கபட நாடகம் ....ஜெயலிதா வரும் பொது தேர்தலில் எந்த கட்சிஉடனும் கூட்டனி கிடையாது என்று அறிவித்து விட்டார் ....கருணாநிதி கு தெரியும் தமிழகதில் இனி எந்த மடையனும் காங்கரஸ் கு ஒட்டு போட மாட்டன் என்று ....நாட்டில் மெல்ல மோடியின் அதரவு பெருகுவது தெரியும் ...அகவே தற்போது எந்த காரணமும் கிடைக்காததால்....ஈழ தமிழர்களின் பிரிச்சனையை எடுத்து மீண்டும் பதவிகளை பிடிக்க முயல்கிறார் ......கருணாநிதி அவர்களே உணர்ச்சிவசப்படும் சராசரி தமிழன் எப்போதும் போல ஏமாறுவான் என்று நினைகாதிர்கள் .....உங்கள் துரோக வரலாற்றை மறக்க மாட்டோம் .....நீங்கள் பதவி க்காக எதையும் செய்பவர் என்பதை எக்காலத்திலும் நினைவு கொள்வோம் .....நீங்கள் , உங்கள் குடும்பம் , உங்கள் மந்திரிகள் , உங்கள் கட்சி காரர்கள் செய்த அத்தனை யும் எங்கள் பிள்ளை களுக்கு சொல்லிவளர்ப்போம் .....உங்களை ஒருபோதும் எதிர்காலம் தவரிபோய் குட உங்களை நல்ல தலைவரை நினைக்க விடமாட்டோம்  
 ///////////
Arul - Chennai,இந்தியா
19-மார்-201314:44:06 IST Report Abuse
Arul கருணாவின் நாடகம் : கேள்வி: நாடாளுமன்றத்தில் நீங்கள் கேட்டபடி திருத்தங்களோடு தீர்மானம் கொண்டு வரப்பட்டால், உங்களுடைய தற்போதைய முடிவை மீண்டும் பரிசீலனை செய்வீர்களா? பதில்: அதற்கு நேரம் அதிகமாக இருக்கிறது. இன்று மாலை வரையிலே நேரம் இருக்கிறது, நாளைக்கும் இருக்கிறது, 21ம் தேதிக்கு முன்பும் இருக்கிறது. அதற்குள் நாடாளுமன்றத்தில் நாங்கள் எண்ணியவாறு இந்தத் தீர்மானம் திருத்தங்களோடு முன்மொழியப்பட்டு, விவாதத்திற்குக் கொண்டு வரட்டும்.
//////////////
Uma Shankar Umashankar - Tirupur,இந்தியா
19-மார்-201314:42:39 IST Report Abuse
Uma Shankar Umashankar மற்றும் ஒரு அரசியல் நாடகம். மத்திய அரசில் இருந்து வெளியேற இதுவே சரியான சந்தர்பம். மிகவும் சாதுர்யமான காய் நகர்த்தல். இது தான் கலைஞர் ஸ்டைல். அடுத்து கூடாரத்தை பி. ஜே.பி. இடம் நகர்த்த சரியான டைம் . அரசியல் ஒரு நாள் கிரிகெட்டை விட நல்லா தான் இருக்கு. பார்போம் அம்மாவா அய்யாவா. யார் பி.ஜே.பி. யுடன் கூட்டனி என்று. 
//////////////
இன்னும் இருக்குங்க... இதுவே பேர்தும்ன்னு நினைக்கிறேன்...

15 January, 2013

திமுக தலைவர் பதவியும்... பவர் ஸ்டாரை வாழ்த்தி கவிதையும்...!

இன்று இணையத்தில் அப்படியே உலவும் போது இரண்டு கார்டூன்கள் என்னை கவர்ந்தது... அந்தப்படங்களுடன் இன்றைய பதிவை முடித்துக்கொள்கிறேன்.
 *********************************
 
திமுக தலைவர் பதவிக்கான போட்டியும் அதை அடைவதற்காக சண்டைகளும் தொடர்ந்துக்கொண்டு இருக்கிறது... அதை மையப்படுத்திய அழகிய கார்டூன்...

***********************************
பவர்ஸ்டார் மதுரை ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்... அதில் உள்ள ‌கவிதையை படித்துப்பாருங்க... நல்லாத்தான் யோசிக்கிறாங்கப்பா...!

*****************************
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

16 December, 2012

கலைஞரின் அடையாளம் மஞ்சள் துண்டு மட்டும்தானா..?


“தங்களின் அடையாளமாக, சிலர் தாடி, தொப்பி, கையில் பிரம்பு வைத்திருப்பது போல, நான் மஞ்சள் துண்டு அணிந்துள்ளேன்' என்று, அண்மையில், கருணாநிதி கூறியிருப்பது, சிரிப்பை வரவழைக்கிறது. 


கலைஞர் அவர்களுக்கு அடுக்கடுக்கான அடையாளங்கள் பல இருந்தாலும், தமிழகத்தில், தற்போது அவருடைய அடையாளங்களில் முதன்மையானதாக திகழ்வது வரலாறு காணாத குடும்ப அரசியலை வளர்த்தெடுத்தவர் என்ற, ஒரே ஒரு அடையாளம் மட்டுமே. 

அதுவரை அவருடைய அரசியல் வாரிசுகளான வடதமிழகத்துக்கு மு.க.ஸ்டாலினும், தென்தமிழகத்துக்கு மு.க.அழகிரியும் நடத்திவந்த அனைத்துவிதமான அரசியலையும் தற்போது அவரது மகன்களும் துவங்கிவிட்டனர். கலைஞர் தன்னுடைய அரசியல் ராஜதந்திரத்தை மற்றும் அரசியலில் எப்படி சம்பாதிப்பது என்ற யுக்தியை தற்போது அவரது பேரர்களும் செம்மையாக கற்றுக்கொண்டு விட்டார்கள். கிரானைட் மோசடி வழக்கில் துரை தயாநிதி சிக்கியிருப்பது அனைவரும் அறிந்ததே.

இதுபோக கலைஞர் அவர்களுக்கு என்னற்ற அடையாளங்கள் இங்கு ஏகப்பட்டது இருக்கிறது. குறுகிய நேர உண்ணாவிரதமும், கறுப்புத் துண்டுக்கு மாறி, அதையும் குறுகிய நேரத்தில் தூக்கி எறிந்த காமெடியும் இவரை அடையாளப்படுத்தவில்லையா என்ன? 

"நெஞ்சுக்கு நீதி' சொன்னது ஒரு பக்கம் இருக்கட்டும். திருக்குறளுக்கு, "குறளோவியம்' எனும் தலைப்பில், உரை எழுதியது கூடவா, இவரை அடையாளப்படுத்தவில்லை? குறளுக்கு எத்தனையோ பேர் உரை எழுதினர். அவர்களெல்லாம் என்ன ஆகினர்? ஆனால் கருணாநிதியோ, உரை எழுதியதோடு ஓய்ந்து விடவில்லை; "கோடி' என்ற சொல்,  குறளில் ஏழு இடங்களில் மட்டுமே இடம் பெற்றிருப்பதைக் கண்டறிந்து, அதை, அப்படியே தன் வாழ்க்கையில் கடைப்பிடித்து, ஏழு தலைமுறைக்கும், கோடிகளைக் குவித்து விட்ட சாதனை என்ன சாதாரணமானதா?

ஏதோ ஒரு செயலை தொடர்ந்து செய்தால் அதுவே ஆத்திகம். மதங்களும் சடங்குகளும் அப்படி உருவானதுதான்.  தொடர்ச்சியாக மஞ்சள் துண்டை பயன்படுத்துவது எப்படி நாத்தீகம் ஆகும் என்று எனக்கு தெரியவில்லை.


கலைஞர் அவர்களே தங்களுக்கு உண்மையான அடையாளம் வேண்டுமா..? மஞ்சள் துண்டோடு தங்களுடைய நாடகத்த‌னம் அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு. மத்திய அரசிடம் சொல்லி மின் பற்றாக்குறையை போக்குங்கள்... காவிரி பிரச்சனையை தீர்த்து வையுங்கள்... அன்னிய முதலீட்டில் நடுநிலையாக இருங்கள்... குவித்த சொத்துக்களை நாட்டுக்கு அர்பணியுங்கள்.... ஈழத்தமிழ்களுக்கு ஒரு நாள் உண்மையாக போராடுங்கள்.... அப்போது கிடைக்கும் உங்களுக்கு அடையாளம்...

19 November, 2012

சத்தியமா இதெல்லாம் ஊர்ல பேசிகிட்டதுங்க...!


சுப்பன் :தமிழகத்துக்கு மத்திய அரசு மின்சாரம் கொடுக்காததற்கு காரணம் கலைஞர்தானாம். 

குப்பன் : ம்... அப்படியா..?


சுப்பன் : தற்போது ஆளும் அதிமுக ஆட்சியின் மீது தொடர் மின்தடையால் மக்கள் மிகவும் வெறுப்படைந்து இருக்கிறார்கள். தற்போது மத்திய அரசு தொகுப்பில் இருந்து மின்சாரத்தை தந்து நிலமை சரியானால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெருவது கடினமாகிவிடும்.

குப்பன் : அதனா‌ல...சுப்பன் : வரும் தேர்தல் வரை தமிழகத்துக்கு மின்சாரம் தராதீர்கள் அப்போதுதான் நம் கூட்டணி ஜெயிக்கும் என்று மத்திய அரசிடம் கலைஞர் கூறியிருக்கிறாராம்.

குப்பன் : ... இருக்கலாம்.. நம்ம தானைத்தலைவரை நம்பமுடியாது பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுவரே...!
*********************************


முனியன்: இ‌லங்கை சோகம் முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் திமுக பரபரப்பாக செயல் படுவதுபோல் காட்டிக்கொள்கிறது. டெசோ மாநாடு நடத்தி அதன் தீர்மானங்களை ஜ.நா-வுக்கும், மனித உரிமை தலைவர்களுக்கு அந்த  நகல்களை மு.க.ஸ்டாலின் கொண்டு சென்று கொடுத்து வந்தது ஈழத்தமிழர்கள் மீது உள்ள அக்கறை ஒன்றும் இல்லையாம்.


பக்கிரி : ம்.. அப்ப எதுக்காம்

முனியன்: ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை. அவர் தன்னுடை மருத்துவ சிகிச்சைக்காக சென்றார். அப்படியே இந்த நாடகம்.

பக்கிரி : சரிதாம்பா..! உண்மையான அக்கறை என்றால் அவர் ஆட்சி காலத்தில் துணை முதல்வராகவே இந்த வேலையை செய்திருக்கலாமே....?
**********************************

கந்தசாமி : அம்மாவிடம் அடங்காமல் இருந்த விஜயகாந்தை கொஞ்சம் அடக்கி வைக்கவே அந்த கட்சி எம்.எல்.ஏ-க்களை அம்மா இழுத்தார்களாம். 

முனுசாமி: ம்... அப்படியா..


கந்தசாமி : நிலைமை மோசமாவதை தொடர்ந்து தற்போது அம்மாவிடம் அடிபணிந்து போய் விட்டார். அதனால் தான் அந்த பிரச்சனை தற்போது அப்படியே மூடி மறைத்துவிட்டனர்.

இன்னும் மீதமிருக்கும் நாட்களில் தன்னுடைய எதிர்கட்சி தலைவர் என்ற பத‌வியை காப்பாற்றிக்கொள்ளவே இந்த அமைதியாம்.... அதான் படம் எடுத்த பாம்பு பணிய ஆரம்பிச்சிடிச்சி...

முனுசாமி: அப்பன்னா இவரை எம்ஜிஆர்-ன்னு கூப்பிடறாதா.. நம்பியார்ன்னு கூப்பிடறதா...

********************************

ராமு: தமிழகத்தில் மின் வெட்டுக்கு முக்கிய காரணம் அம்மா தான்
 

சோமு : அப்படியா... ஏன் இதுமாதிரி செய்யுராங்க..
 

ராமு : தமிழகத்தில் இதுமாதிரி மின்பற்றாக்குறை காட்டினாதான் கூடங்குள பிரச்சனை எழாது அப்புறம் இதையே காரணம் காட்டி மொத்த மின்சாரத்தையும் தமிழகத்துக்கே வாங்கிடனுன்னு அம்மா பிளானாம்...
 

சோமு : ஓ... அப்படியா சங்கதி... இந்த விளையாட்டு எப்ப முடியும்...
 

ராமு : அது... ‌ அம்மாவுக்கு மட்டுமே தெரியும்...!

********************************
மறுபடியும் சொல்றேங்க இதை நான் சொல்லல.. ஊர்ல பேசிகிட்டது...
Related Posts Plugin for WordPress, Blogger...