கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

10 September, 2018

இது காதல் பேட்ட




என்னை காணாத 
நேரங்களில்
அழுதுவடிந்து....

திடிரென
என் வருகையை
அறிந்துக்கொண்டதும்....

ஓடிச்சென்று.. 
முகம் கழுவி..
என்னை ஆவலுடன் 
வரவேற்பாளே
என் அழகு தேவதை...

அந்த 
அழகைப்போல்
தெளிவாய் இருந்தது....

மழை ஓய்ந்த பின்
எங்கள் ஊர்சலை....

*********************************


நீளம் மறைந்த 
வானமொன்றை
ரசிக்க முடியாததைபோல்...

விண்மீன் அல்லாத 
இரவொன்றை
கடக்க முடியாததைபோல்...

மணம் இல்லாத 
மலர்களை
சூட முடியததைபோல்...

காதல் இல்லாத
வாழ்க்கையை
வாழ்ந்திட முடியாது...

*********************************



குளிர் காலமொன்றை
உன்னோடு கழிக்க
நினைத்து...

வாடைக்காற்று
உன்னை 
வாட்டும் முன்னே...

வயற்காட்டு தென்றலை
வழி அனுப்பி வைத்துவிட்டு
வருகிறேன்...

வேண்டாத 
ஊடல் கொண்டு
கண்களாலே எரிக்கிறாய்...

காயப்பட்டு 
திருப்புகிறது
என் வசந்த காலங்கள்...!

***********************************

வாசித்தமைக்கு நன்றி...!!

0 comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...