என் இனிய
தமிழினத்து இளம் பெண்களே..!
உங்களுக்கான என் வேண்டுகோள்கள்...
உங்களுக்கான என் வேண்டுகோள்கள்...
உள்ளங்கள் சோகத்தால் எரிந்தாலும்
வறுமை நதி உன்னை நோக்கி பாய்ந்தாலும்
உதடுகள் மட்டும் புன்னகை பூக்கட்டும்...
கரங்களில் நிற்காமல் ஆடும் வளையல்களுக்கு
உரசி உரசி சினுங்கச்சொல்லி
உத்திரவிடுங்கள்..
நெற்றியில் விழும் ஒற்றை முடியோடும்..
அருவியாய் கொட்டும் கூந்தலோடும்
உங்கள் விரல்கள் சினேகம் கொள்ளட்டும்...
தலையில் சூட்டிய வண்ண மலர்களை
நொடிக் கொருமுறை தொட்டுப்பார்த்து
இருவருக்குமான உறவுகளை புதுப்பித்துக் கொள்ளுங்கள்...
பொன் மாலைப் பொழுதில்
தென்றல் வரும்போதல்லாம்
பறக்க ஆசைப்படும் தாவணியின்
சிறகை முறித்து துன்புறுத்தாதீர்கள்...
பறக்க ஆசைப்படும் தாவணியின்
சிறகை முறித்து துன்புறுத்தாதீர்கள்...
இருக்கையில் அமர்ந்து கிளம்பும் போதல்லாம்
உதிர்ந்து கிடக்கும் மல்லிகைக்கு
இறுதியாய் ஒரு முறை
முகம்காட்டிவிட்டுச் செல்லுங்கள்..
நாணம் கொண்டு தலைதாழ்த்தி நடந்தாலும்
இருவிழிகளில் குடிக்கொண்டிருக்கும்
மீன்களை நீந்திக் களிக்கவிடுங்கள்...
நடமாடும் வசந்தங்களே...!
தனிமையில் இருக்கும்போது
சோர்ந்து இருக்காதீர்
அமைதி கலைத்து தென்றலோடு பேசுங்கள்..
தனிமையில் இருக்கும்போது
சோர்ந்து இருக்காதீர்
அமைதி கலைத்து தென்றலோடு பேசுங்கள்..
நிமிடத்திற்கொருமுறை
இமைகளை இமைத்து பரவசப்படுங்கள்...
நழுவும் ஆடைகளை சரி செய்யுங்கள்...
கன்னத்தில் குழிகள் காட்டி களிப்பூட்டுங்கள்...
அதுபோதும்...
இதில் எனக்கான நன்மைகள்..
இதயத்தில் இறந்துப்போன
இளமைத்திரும்புகிறது..
இரத்தத்தில் நனைந்த
நரம்புகளில் எல்லாம்
புத்துணர்வு பாய்கிறது..
புத்துணர்வு பாய்கிறது..
மூளைப் பழைய நினைவுகளை
கலைந்து விட்டு புதியவனாய் புதுப்பித்துக்கொள்கிறது..
ஆயுளின் தூரங்கள் நீட்டிக்கப்படுகிறது..
இந்த ஜென்மம் பூரணம் அடைகிறது..
மற்றும்
கொஞ்சம் கற்பனைகள்..
கொஞ்சம் கனவுகள்..
சில கவிதைகள்...
கொஞ்சம் கனவுகள்..
சில கவிதைகள்...
கொஞ்சம் பெரிய கவிதை பெறுமையா படிச்சதுக்கு நன்றி..
அன்பா ஒரு கருத்துசொல்லிட்டுப் போங்க..
அன்பா ஒரு கருத்துசொல்லிட்டுப் போங்க..







