கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label புதுமை. Show all posts
Showing posts with label புதுமை. Show all posts

23 April, 2016

இதுதாங்க கோடைக்கேற்ற உணவு..!



காலநிலை மாற்றத்துக்கு ஏற்ற வகையில் ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியும் நாம், கால நிலைக்கு ஏற்ற வகையில் உணவு முறைகளை மாற்றிக் கொள்வதில்லை. அதனால்தான் அந்தந்த சீசன்களில் வரும் நோய்களுக்கு பலரும் ஆளாக நேரிடுகிறது. அதாவது, மழைக் காலத்தில் காய்ச்சல், சளி, குளிர் காலத்தில் சரும பாதிப்பு, வெயில் காலத்தில் உடல் உஷ்ணம், கட்டி போன்றவை ஏற்படுகிறது. எனவே, அந்தந்த சீசனுக்கு ஏற்ற வகையில் நாம் உணவு முறைகளையும் மாற்றிக் கொள்வது அவசியமாகிறது. அந்த வகையில் தற்போது கோடைக் காலத்துக்கு ஏற்ற உணவுகளைப் பார்க்கலாம்.

மதிய உணவில், வெள்ளரி, தக்காளி, வெங்காயம், கேரட் போன்ற காய்கறிகள் சேர்ந்த அல்லது ஒரு காய்கறி சேர்க்கப்பட்ட ரைத்தா சாப்பிடுவது நல்லது. இதில் கொத்துமல்லியும் அவசியம். இதனை சாப்பிடுவதால், வெயிலால் ஏற்படும் சரும பாதிப்புகள் குறையும். 
 

நமது உணவில் பெரிய வெங்காயத்துக்குப் பதில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். சின்ன வெங்காயம் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும்.


கார உணவு வகைகளைத் தவிர்த்தல் நலம். காரக் குழம்பு வைத்தே ஆக வேண்டும் என்றால், வெந்தயக் கீரை அல்லது வெந்தயக் குழம்பு வைக்கலாம். வெண்டைக்காய் போன்ற குளிர்ச்சியாக காய்கறிகளை சேர்த்து காரக்குழம்பு வைக்கலாம். இதனால் காரக் குழம்பின் உஷ்ண பாதிப்பு குறையும்.


அதிக நேரம் வெயிலில் அலைபவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில், ஊறவைத்த வெந்தயம் அல்லது வெந்தயப் பொடியை எடுத்துக் கொள்ளலாம். 


நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு, கோடைக் காலம் நோயை அதிகரிக்கும் காலமாக அமையும். எனவே, இவர்கள் தண்ணீரில் சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் சுகம் பெறலாம்.


நீர் சத்து மிக்க சௌசௌ, பூசணி, வெள்ளரி, பீர்க்கங்காய், கோஸ், தக்காளி போன்றவற்றில் ஒன்றை மதிய உணவில் சேர்த்துக் கொள்ள மறக்க வேண்டாம்.


மாம்பழ சீசனில் மாம்பழம் சாப்பிடாமல் இருக்க முடியுமா? அப்படியே விரும்பி சாப்பிட்டுவிட்டால் ஏற்படும் உஷ்ணத்தைத் தவிர்க்க, இரவில் ஒரு டம்ளர் பால் குடித்து வரலாம். 

மதியம் 11 மணியளவில் தேநீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இந்த ஒரு மாத காலத்துக்கு அதனை மாற்றி எலுமிச்சை சாறு அல்லது மோர் குடித்து வரலாம்.


கோடைக் காலத்தில் அதிக வியர்வை மூலம் உப்பு வெளியேறுவதால் உப்பு கலந்த பண்டங்கள் அன்றாட உணவில் இடம்பெறுவது நல்லது.


உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் தன்மை கொத்துமல்லிக்கு உள்ளது. எனவே, வீட்டில் சட்னி அல்லது துவையல் அரைக்கும் போது, ஒரு கைப்பிடி கொத்துமல்லி மற்றும் கருவேப்பிலையை சேர்த்து அரைத்தால் சுவையும் நன்றாக இருக்கும், உடலுக்கும் நல்லது. இந்த முறையை எந்த பருவ காலத்துக்கும் பயன்படுத்தலாம். 

எண்ணெய் சேர்த்து செய்யும் பண்டங்களை வெயில் காலங்களில் குறைத்துக் கொள்ளலாம். பூரி, வடை போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால் வெயிலில் மயக்கம் ஏற்பட வாய்ப்புண்டு.
பாட்டி வைத்தியம்

வெயில் கால வியர்வையின் காரணமாக தலையில் சேரும் அழுக்கு, பேன் பொடுகு ஆகியவை போக வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ளவும். அத்துடன் வேப்ப இலைகளை சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் இந்த மூன்று பிரச்னையும் தீரும்.

வெயிலால் ஏற்படும் உடல் சூடு குறைய வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் போதும்.

விளா மரத்தின் இலையை குளியல் மஞ்சளுடன் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளிப்பதன் மூலம் சொரி, சிரங்கு மற்றும் வியர்க்குரு போன்றவை நீங்கும்.

முருங்கை கீரையை அரைத்துத் தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு தணியும், பொடுகுத் தொல்லையும் இருக்காது.

மஞ்சள், ஆவாரம்பூ  இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து தினமும் உடலில் பூசிக் குளித்தால் கற்றாழை நாற்றம் ஏற்படாது. உடலும் அழகாகும்.

மகிழ மர இலையை பன்னீர் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் தேய்த்து குளித்தால் உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம் விலகும்.

புளியங் கொழுந்தையும், மஞ்சளையும் சேர்த்து அரைத்து குளிர்ந்த நீரில் கலந்து குளித்து வந்தால் அம்மை நோயைத் தடுக்கலாம்.

நன்னாரி வேர், வெட்டி வேர் இரண்டையும் சம அளவில் எடுத்து கஷாயம் வைத்துக் குடித்தால் உடல் சூடு தணியும்.

கருந்துளசியுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசிக் குளித்தால் உடல் நாற்றம் போவதுடன் தோல் நோய்களும் குறையும்.

திருநீற்றுப் பச்சிலையின் விதையை தண்ணீரில் ஊற வைத்துக் குடித்து வந்தால் உஷ்ண நோய்கள் விலகும். - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=3392#sthash.ksZ1d4PN.dpuf

பாட்டி வைத்தியம்

வெயில் கால வியர்வையின் காரணமாக தலையில் சேரும் அழுக்கு, பேன் பொடுகு ஆகியவை போக வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ளவும். அத்துடன் வேப்ப இலைகளை சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் இந்த மூன்று பிரச்னையும் தீரும்.

வெயிலால் ஏற்படும் உடல் சூடு குறைய வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் போதும்.

விளா மரத்தின் இலையை குளியல் மஞ்சளுடன் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளிப்பதன் மூலம் சொரி, சிரங்கு மற்றும் வியர்க்குரு போன்றவை நீங்கும்.

முருங்கை கீரையை அரைத்துத் தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு தணியும், பொடுகுத் தொல்லையும் இருக்காது.

மஞ்சள், ஆவாரம்பூ  இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து தினமும் உடலில் பூசிக் குளித்தால் கற்றாழை நாற்றம் ஏற்படாது. உடலும் அழகாகும்.

மகிழ மர இலையை பன்னீர் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் தேய்த்து குளித்தால் உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம் விலகும்.

புளியங் கொழுந்தையும், மஞ்சளையும் சேர்த்து அரைத்து குளிர்ந்த நீரில் கலந்து குளித்து வந்தால் அம்மை நோயைத் தடுக்கலாம்.

நன்னாரி வேர், வெட்டி வேர் இரண்டையும் சம அளவில் எடுத்து கஷாயம் வைத்துக் குடித்தால் உடல் சூடு தணியும்.

கருந்துளசியுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசிக் குளித்தால் உடல் நாற்றம் போவதுடன் தோல் நோய்களும் குறையும்.

திருநீற்றுப் பச்சிலையின் விதையை தண்ணீரில் ஊற வைத்துக் குடித்து வந்தால் உஷ்ண நோய்கள் விலகும். - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=3392#sthash.ksZ1d4PN.dpuf
பாட்டி வைத்தியம்

வெயில் கால வியர்வையின் காரணமாக தலையில் சேரும் அழுக்கு, பேன் பொடுகு ஆகியவை போக வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ளவும். அத்துடன் வேப்ப இலைகளை சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் இந்த மூன்று பிரச்னையும் தீரும்.

வெயிலால் ஏற்படும் உடல் சூடு குறைய வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் போதும்.

விளா மரத்தின் இலையை குளியல் மஞ்சளுடன் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளிப்பதன் மூலம் சொரி, சிரங்கு மற்றும் வியர்க்குரு போன்றவை நீங்கும்.

முருங்கை கீரையை அரைத்துத் தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு தணியும், பொடுகுத் தொல்லையும் இருக்காது.

மஞ்சள், ஆவாரம்பூ  இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து தினமும் உடலில் பூசிக் குளித்தால் கற்றாழை நாற்றம் ஏற்படாது. உடலும் அழகாகும்.

மகிழ மர இலையை பன்னீர் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் தேய்த்து குளித்தால் உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம் விலகும்.

புளியங் கொழுந்தையும், மஞ்சளையும் சேர்த்து அரைத்து குளிர்ந்த நீரில் கலந்து குளித்து வந்தால் அம்மை நோயைத் தடுக்கலாம்.

நன்னாரி வேர், வெட்டி வேர் இரண்டையும் சம அளவில் எடுத்து கஷாயம் வைத்துக் குடித்தால் உடல் சூடு தணியும்.

கருந்துளசியுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசிக் குளித்தால் உடல் நாற்றம் போவதுடன் தோல் நோய்களும் குறையும்.

திருநீற்றுப் பச்சிலையின் விதையை தண்ணீரில் ஊற வைத்துக் குடித்து வந்தால் உஷ்ண நோய்கள் விலகும். - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=3392#sthash.ksZ1d4PN.dpuf

25 February, 2016

காட்சி ஒன்று...! பார்வை பல...!



எல்லா மழைக் காலத்திலும்
குடை பிடித்தே வருகிறாய்...

தழுவ முடியாமல்
மண்ணில் வீழ்ந்து மடிகிறது
மழைத்துளிகள்...!

கார் மேகம்
வாழ்த்தைகளை பொழிகிறது...

அதை 
குடைக்கம்பிகள் வழியே
வரிகளாக்கி வாசிக்கிறாய்...

மின்னலாய்
கண் சிமிட்டி ரசிக்கிறது
காலம்...!

நீ  குடையோடு 
வருவதால் என்னவோ
சில பருவங்களில் 
தள்ளிப்போகிறது 
மழைக்காலம்..!

மழையை 
விரும்புபவள் தானே நீ
பிறகு ஏன்
கருப்பு குடைப்பிடித்து
எதிர்ப்பை காட்டுகிறாய்...

இப்போது பார்...
உன்னோடு இணைந்து
போராட்டத்தில் குதித்து விட்டன
பூக்கள்...!

மழை நின்று விட்டதா என்று
குடை தாழ்த்தி ஆகாயம் பார்க்கிறாய்...

உற்சாகத்தோடு புறப்பட்டன
அதுவரை அமைதிகாத்த 
மழையின் விழுதுகள்

அவசரஅவசரமாய் 
குடைபிடித்துக்கொள்கிறாய்...
இப்படியாய் 
வஞ்சித்ததை எண்ணி 
வீதியில் வீழ்ந்து
அழுது புலம்புகின்றன 
விண்ணீர்கள்...!

உன்னை கட்டியணைத்து
தழுவ வந்த என்னை
வேகமாய் தள்ளிவிட்டு 
தலைக்குணிந்தாய்...!

சுடேற்றுகிறது என்று 
மழையை தவிர்த்துவிடுகிறாய்
என்னையுமா...?
வாசித்தமைக்கு மிக்க நன்றி...!

20 July, 2013

பெட்ரமாஸ் லைட்டேதான் வேணுமா..! இந்த மரம்செடியெல்லாம் வேண்டாம...!



உலகெங்கும் மக்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பலருக்கும் சில நேரங்களில் யோசிக்கத் தோன்றும். ஆனால் மக்கள் யாரும் சும்மா இல்லை. எதையாவது யோசித்துக் கொண்டுதான் உள்ளனர். அப்படித்தான் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒரு குரூப் வித்தியாசமான தெரு விளக்கை பரிந்துரைத்துள்ளது. 

வழக்கமாக கரண்ட் கம்பம் நட்டு அதில் லைட்டைப் பொருத்தி, கரண்ட் கொடுத்து பளீரென லைட்டை எரிய விடுவோம். ஆனால் இவர்கள் சற்று மாற்றி யோசித்துள்ளனர். அதாவது எரியும் மரத்தை இவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அது எப்படி மரம் எரியும் என்று கேட்கலாம். தொடர்ந்து ஒவ்வொரு ஸ்லைடாக பாருங்கள், விஷயம் புரியும்.


 

நூதனத் திட்டம்...
 

இந்த நூதனத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளவரின் பெயர் அந்தோணி இவான்ஸ். இவர்தான் மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலான இந்த திட்டத்தை அறிவித்துள்ளார்.
 
மரமே வெளிச்சம் தந்தால்...
வழக்கமாக விளக்குகள் மூலமாகத்தான் நாம் வெளிச்சம் பெறுவோம். ஆனால் ஒரு மரமே நமக்கு வெளிச்சம் தந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் இவரது கேள்வி.


மூன்று நண்பர்களின் முயற்சி...
இவான்ஸும், அவரது தோழர்களான உயிரியல் பிரிவு நிபுணர்கள் ஆம்ரி அமிரேவ் டிரோரி, கைல் டெய்லர் ஆகியோர் இணைந்து இந்த திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளனர். அதாவது மரபணு மாற்றம் மூலம் இதை உருவாக்கியுள்ளனர் இவான்ஸும் அவரது தோழர்களும்.


தாவரத்தை ஒளிர வைக்கும் திட்டம்...
 

பயோலுமினிசென்ட் எனப்படும் ஒளி கொடுக்கும் பாக்டீரியாக்களிலிருந்து ஜீன்களை எடுத்து தாவரத்தில் செலுத்தி அதன் மூலம் அந்த தாவரத்தையே அதாவது மரத்தையே ஒளிர வைப்பதுதான் இவர்களது திட்டம்.

ஒளிரும் மரம்...
இதன் மூலம் அந்த மரமானது சிறு செடியிலிருந்தே ஒளிரக் கூடிய வகையில் வளரும். வளர்ந்து பெரிய மரமாகும் போது அது வெளிச்சத்தை வாரியிறைக்கும் ஒளிரும் மரமாக உயர்ந்து நிற்கும்.



 அவதார் உதாரணம்...
இதுதொடர்பான வீடியோ காட்சி ஒன்றையும் இந்தக் குழு வெளியிட்டு டெமோவும் காட்டியுள்ளது. அவதார் படத்திலிருந்தும் ஒரு காட்சியை இதில் இணைத்துள்ளனர்.


நிதி சேகரிப்பு...
இந்த முயற்சி பலிக்க, ஆய்வை முடிக்க நிதி சேகரிப்பிலும் இந்தக் குழு ஈடுபட்டு இதுவரை 5 லட்சம் டாலர் பணத்தையும் சேகரித்துள்ளது.



 1980 கான்செப்ட்...
1980ம் ஆண்டுகளிலேயே இந்த ஒளிரும் மரம் குறித்த கான்செப்ட் வந்து விட்டது. இந்த நிலையில் இவான்ஸின் முயற்சியின் விவரம் என்ன.. அவரிடமே கேட்டபோது அவர் சொன்னது இது. முதலில் இதை ஆராய்ச்சியாகத்தான் அணுகினேன். ஆனால் இது மிகவும் சீரியஸான ஒன்றாக இப்போது மாறியுள்ளது.


சிறிய ஜீனோம் செடி...
நான் அரபிடோப்சிஸ் தலியானா என்ற செடியை எனது ஆராய்ச்சிக்கு எடுத்துள்ளேன். இந்த செடிதான் எனது ஆய்வுக்குப் பொருத்தமானது. இந்த செடிதான் ஒளிரும் தாவரமாக இருக்க பொருத்தமானதும் கூட. இதன் ஜீனோம் மற்ற செடிகளை விட சிறியது என்பதும் இன்னொரு காரணம்.


செடியோடு, சாப்ட்வேரை செலுத்தி...
கடல் பாக்டீரியாவான விப்ரியோ பிஷ்ஷெரி-யிலிருந்து நாங்கள் ஜீன்களை எடுத்து இந்த செடியில் செலுத்துகிறோம். இதற்காக ஜீனோ் கம்பைலர் என்ற சாப்ட்வேரையும் பயன்படுத்தியு்ளோம். எங்களது திட்டத்திற்கு ஆரம்பத்தில் பெரிய வரவேற்பு இல்லை. ஆனால் தற்போது கிடைத்துள்ளது மகிழ்ச்சி தருகிறது என்றார் இவான்ஸ்.

Related Posts Plugin for WordPress, Blogger...