கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

26 September, 2013

இப்படியெல்லாம் SMS வந்தா இரவில் உங்களுக்கு தூக்கம் வருமா....?


பிசாசு விசிறி வீச...
பேய்கள் தாலாட்டு பாட...
பூதங்கள் இசை அமைக்க...
காட்டேரி கால் அமுக்க...

மோகினி கதைச்சொல்ல...

அவைகளின் மத்தியில்
நீங்கள் நிம்மதியாய்
தூங்குக...!


(அடப்பாவிகளே இதுமாதிரி SMS  வந்தபிறகு அப்புறம் எங்க நிம்மதியா தூங்குறது...)

********************************************************** 
நீங்க வீட்டில் தூங்கிக்கிட்டு இருக்கீங்க... 
அப்போ இடி.. மின்னல்... மழை... வருது... 
அப்போ உங்க பெஸ்ட் பிரண்டு ஒருத்தர் பயங்கரமா அடிப்பட்டு வராரு.... அவங்களை அழைச்சிக்கிட்டு 2-வது மாடிக்கு போறீங்க... 
அங்க காயங்களுக்கு மருந்து போடுறீங்க...

அப்போ உங்க வீட்டில் இருக்கிற போன் அடிக்குது...

உங்க நண்பர்கிட்டே... இருங்க வரேன்னு சொல்லிட்டு வறீங்க... 
உங்களை சீக்கீறம் வரச்சொல்ல உங்ககிட்ட உங்க பிரண்டு சத்தியம் வாங்கிட்டார்...

கீழே வந்து போனை எடுத்து பேசினா.. 

அந்த நண்பரோட அம்மா பேசுராங்க...
தற்போது தான் வந்த அந்த நண்பர் அடிப்பட்டு இறந்துவிட்டாக தகவல் சொல்கிறார்கள்...

அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்...
மேலே செல்வீர்களா இல்லையா...!


**********************************************************

யாராவது உன்னை “லூசு“-ன்னு சொன்னா
அமைதியா இருங்க...


“குரங்கு“ன்னு சொன்னாகூட
கோவப்படாம அமைதியா இருங்க...


ஆனால் யாராவது உன்னை “அழகு“-ன்னு
சொன்ன அவனை அப்படியே தூக்கிப்போட்டு மிதி...

********************************************************* 
இவைகள் எனக்கு குறுந்தகவல்களாக வந்தவைகள்...

**************
மீள் பதிவு


Related Posts Plugin for WordPress, Blogger...