கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label அன்பு. Show all posts
Showing posts with label அன்பு. Show all posts

12 October, 2013

இப்படியும் மாணவிகளா..! மனதை கிழிக்கும் ஒரு உண்மைக் கதை


அது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப்பந்தயத்திற்காக தயாராகி கொண்டிருந்தனர்.

ரெடி, ஸ்டார்ட் , கோ

விளையாட்டு துப்பாக்கியின் சத்தம் கேட்டு குழந்தைகள் ஓட தொடங்கினர்.

ஒரு 15 அடி சென்று இருப்பார்கள். அவர்களில் ஒரு குழந்தை திடிரென்று கீழே விழுந்தது.

அடிபட்ட காரணத்தால் அந்த குழந்தை அழ ஆரம்பித்தது.

ஏதோ சத்தம் வரவே ஓடி கொண்டிருந்த அணைத்து குழந்தைகளும் திரும்பி பார்த்தனர். பின்னர் அந்த குழந்தையை நோக்கி ஓடி வந்தனர்.

அதில் ஒரு குழந்தை கீழே குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு கேட்டது.

“இப்போ வலி போயிடிச்சா”

அதை பார்த்த மற்ற குழந்தைகளும் அவளை முத்தமிட்டனர்.

பின்னர் எல்லோரும் அந்த குழந்தையை தூக்கினார்கள்.

பின்னர் அந்த குழந்தையை தூக்கியவாறே வெற்றி இலக்கை நோக்கி ஓடிணார்கள்.

அதை பார்த்த விழா குழுவினரும், பார்வையளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். எல்லோர் கண்களிலும் கண்ணீர். அந்த பரவசத்தால் எழுந்து நின்று கை தட்டி பாரட்டினார்கள். கண்டிப்பாக அந்த ஒலி கடவுளுக்கும் கேட்டு இருக்கும்.

ஆமாம். இது உண்மை. இது நடந்தது வேறு எங்குமில்லை. நம் இந்தியாவில், அதுவும் ஹைதராபாத்தில் நடந்த உண்மை.

அந்த விழாவை நடத்தியது மனநலம் குன்றியவர்களுகான தேசிய நிறுவனம்.

அதில் கலந்து கொண்ட குழந்தைகள் மனநலம் குன்றியவர்கள்.

ஆம். அவர்கள் மனத்தால் குன்றியவர்கள்.

ஆனால்... குணத்தால்?

இதிலிருந்து அவர்கள் உலகத்திற்க்கு சொல்வது என்ன?

மனித ஒற்றுமை

மனித நேயம்

மனித சமத்துவம்
(படித்து நெகிழ்ந்த சம்பவம் உ
ங்களோடு)

வெற்றி பெற்ற மக்கள், தன்னை விட தாழ்ந்தவர்களுக்கு உதவிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் தாழ்வு மனபான்மைக்கு ஆளாக மட்டார்கள்.


அன்பு மட்டுமே இந்த உலகை நிற்காமல் ஓட வைக்கும்.

தூய்மை, பொறுமை, விடா முயற்சி இவை மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும் . அத்துடன் இவை அனைத்துக்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும் . –சுவாமி விவேகானந்தா …

11 August, 2013

மகனை பெற்ற சில அப்பாக்கள் இப்படித்தான்


ஒரு ஊரில் ஒரு பணக்கார தந்தைக்கும் தன் ஒரே மகனுக்கும் ஓவியங்களை தங்கள் வீட்டில் சேர்த்து வைப்பதே வழக்கமாக இருந்தது.அவர்களிடம் பிகாசோ ஓவியங்களில் இருந்து ரப்ஹேல் ஓவியங்கள் வரை இருந்தது.


அவர்கள் வீட்டிற்கு யார் வந்தாலும் தாங்கள் சேர்த்து வைத்து இருக்கும் ஓவியங்களை அவர்களுக்கு காட்டி மகிழ்வர்.

வியட்னாம் போர் அப்போது ஆரம்பமானது, தன் ஒரே மகனை போருக்கு அனுப்பி வைத்தார்.போரில் தன் நண்பன் உயிரை காப்பாற்றுவதற்காக தன் உயிரை விட்டான் அவருடைய மகன்.

தன் மகன் இறந்த துயரத்தில் அவர் நோய்வாய் பட்டு கிடந்தார். ஒரு மாதம் கழித்து ஒரு இளைஞன் வந்தார். ஐயா என்னை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் உங்கள் மகனுக்கு நான் நண்பன். போரில் என் உயிரை காப்பாற்றுவதற்காக தன் உயிரை கொடுத்தான் உங்கள் மகன்.

அவன் எப்போதும் உங்களை பற்றியே பேசி கொண்டு இருப்பான். நீங்கள் ஓவியத்தின் மேல் தீராத ஆசை கொண்டவர் என்று சொல்லி கொண்டே இருப்பான். அவன் நினைவாக நான் உங்கள் மகனின் படத்தை உங்களுக்காக வரைந்து எடுத்து வந்துள்ளேன், தயவு செய்து வாங்கிகொள்ளுங்கள் என்றான்.

நான் பெரிய ஓவியன் கிடையாது எதோ எனக்கு தெரிந்தவரை வரைந்து உள்ளேன் பிரித்து பாருங்கள் என்றான். அவர் பிரித்து பார்த்தார், தன் மகனின் படத்தை நெஞ்சோடு இறுக அணைத்து கொண்டு கண்ணீர் விட்டார்.
 

தம்பி இந்த படத்துக்கு நான் எவ்வளவு பணம் தர வேண்டும் என்று கேட்டார். ஐயா போரில் என் உயிரையே காப்பாற்றினான் உங்கள் மகன் அவனுக்காக நான் வரைந்த படம் இதை உங்களுக்கு பரிசாக தரவே எடுத்து வந்தேன் என்றார்.

தன் மகனின் ஓவியத்தையும் மற்ற ஓவியங்களோடு சுவற்றில் மாட்டி வைத்தார். வருவோர் போவோரிடம் எல்லாம் தன் மகனின் ஓவியத்தை காட்டி மகிழ்ந்தார்.

சிறிது வருடத்தில் அவரும் இறந்து போனார். அவரது உறவினர் அவர் சேமித்து வைத்த ஓவியங்களை ஏலத்தில் விற்க முடிவெடுத்து விளம்பரம் செய்தார். ஏலம் விடும் அன்று பிரபலங்களின் ஓவியங்களை வாங்க ஏகப்பட்ட கூட்டம் கூடியது.

முதலில் அவரது மகனின் ஓவியத்தை விற்பதற்காக ஆரம்ப விலை 5000 ரூபாய் சொன்னார். யாரும் ஏலம் கேட்கவில்லை. எல்லோரும் பிரபலங்கள் வரைந்த ஓவியத்தை முதலில் ஏலம் விடுங்கள் என்று கூச்சலிட்டனர்.

ஏலம் விடுபவர் அதை காதில் வாங்காமல் இந்த ஓவியத்தின் விலை 5000 ரூபாய் என்று மீண்டும் சொன்னார். யாரும் ஏலம் கேட்கவில்லை. சரி உங்களால் எவ்வளவு பணம் இதற்கு தர முடியும் என்று நீங்களே சொல்லுங்கள் என்றார். மீண்டும் கூட்டத்தில் இருந்து நாங்கள் இந்த படத்தை வாங்க வரவில்லை மற்ற பிரபலங்களின் ஓவியத்தை முதலில் ஏலம் விடுங்கள் என்றார்கள்.

ஒரு பெரியவர் மட்டும் எழுந்து நின்று ஆயிரம் ரூபாய் என்றார். அவர் வேறு யாரும் இல்லை அதே வீட்டில் சமையல் வேலை பார்த்தவர் தான், இந்த இளைஞன் சிறுவனாக இருந்தபோது இவர் அவணை தூக்கி வளர்த்தவர், அவனோடு விளையாடியவர், அவன் விரும்பும் சமையலை சமைத்து போட்டவர். அவன் அப்பாவுக்கு இனையாணவர்.

ஏலம் விடும் நபர் 1000 ஒரு தரம் என்றார், யாரும் அதிகப்படுத்தி ஏலம் கேட்கவில்லை., இரண்டு தரம், மூன்று தரம் என்று சொல்லி ஏலத்தை முடித்தார்.

ஏலம் முடிந்து விட்டது எல்லாரும் செல்லலாம் என்றார். ஏலத்திற்கு வந்தவர்களுக்கு கோபம் வந்துவிட்டது. ஒரு ஓவியம் மட்டும் தான் ஏலம் விட்டீர்கள் மற்ற ஓவியங்களையும் ஏலத்தில் விடுங்கள் என்றனர்.

ஏலம் விட்டவர் சொன்னார் இறந்து போனவரின் உயில்படி, தன் மகனின் ஓவியத்தை யார் வாங்குகிறார்களோ அவர்களுக்கே மற்ற ஓவியங்களும் இந்த பங்களாவும் மற்றும் அவருடைய சொத்துக்கள் அனைத்தும் போய் சேரும் என்று எழுதியுள்ளார் என்றார்.

அவரது மகனை வாங்கிய அவர் தோட்டக்காரனுக்கே இந்த சொத்துக்கள் எல்லாம் போய் சேரும் என்றார்.

நண்பர்களே நீங்கள் ஒரு சிலவற்றை ஒரு பொருளாக பார்ப்பீர்கள் ஆனால் அது வேறு சிலருக்கு அது உயிராக தெரியும்.அடுத்தவர்கள் மனநிலையில் இருந்து பாருங்கள், யாரையும் எதையும் உதாசினப்படுத்தாதீர்கள்.

நன்றி போஸ்புக்கில் : Ilayaraja Dentist.
Related Posts Plugin for WordPress, Blogger...