கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label உணர்வு. Show all posts
Showing posts with label உணர்வு. Show all posts

07 January, 2019

அவிழ்த்து விட்டு விடுங்கள்...!



வாழ்க்கை என்ற நெடுந்தூர பயணத்தில் நாம் கற்றுக்கெள்ளும் பாடம் தான்... வாழ்க்கையை நகர்த்துவதற்கு ஒரு உத்வேகத்தை தருகிறது. நமக்கு ஏற்படும் மனகசப்பு, துயரங்கள் கேள்விகள் போன்றவற்றுக்கு விடை தருவது காலமும்.. அதனோடு இனைந்து வரும் இந்த உலகமும்தான்

நாம் சில சம்பவங்கள், கதைகள், கட்டுரைகள், துணுக்குகள், கவிதைகள் படிக்கும்போது அல்லது கேட்கும் போதோ நம்மனதில் சில உறுத்தலையோ அல்லது சிறு தாக்கத்தையோ விடடுச்செல்லும்... இதுசரிதானே என்று நம்மிலே நம்மை கேட்டு நச்சரிக்கும். அவற்றில் ஒளிந்திருக்கும் உண்மையை நாம் உணர்வோம்..

அப்படி சமீபத்தில் படித்த ஒரு கட்டுரையில் இருந்து ஒரு கதையைத்தான் தற்போது தங்களோடு பகிர்ந்துக்கொள்ளப்போகிறேன்... படித்த நேரம் முதல் என் மூளையில் அமர்ந்துக்கொண்டு என்னை ஏதோ செய்துக்கொண்டு இருக்கிறது... அவற்றை தங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்..


துறவி ஒருவர் ஒரு ஊருக்கு சென்றார்.  பலர் வந்து அவரை தரிசித்து ஆசி பெற்று சென்றனர். I

இளைஞன் ஒருவன் வந்தான்

"சாமி எனக்கு ஒரு சந்தேகம் ” உங்களைப் போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர்.  ஆனால் இன்றும் மனிதன் தீய வழியில் தான் செல்கிறான் , உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன பயன்......??? என்று கேட்டான்.

துறவி அவனிடம் சொன்னார்....

தம்பி நான் இன்னும் சில நாட்கள் இங்கே தான் தங்கி இருப்பேன், நான் இந்த ஊரை விட்டு செல்லும் பொழுது நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன் , அதற்கு முன் ஒரு வேலை செய்.

"ஒரு குதிரையை கொண்டு வந்து இந்த கோயில் மண்டபத்தில் கட்டி வை. நான் ஊரைவிட்டு செல்லும் வரை குதிரை அங்கே கட்டி இருக்கட்டும்.

தினமும் இரவு அதற்கு உணவு வைத்து விடு" என்று சொல்லி விட்டு அருகில் உள்ள சத்திரத்துக்கு சென்றார்.

மறுநாள் காலை துறவி அந்த கோயில் மண்டபத்திற்கு வந்தார்.

அப்பொழுது அந்த இளைஞன் அந்த குதிரையை சுத்தி இருந்த சாணத்தையும், அது மிச்சம் வைத்த உணவு குப்பைகளையும் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தான்.

இவ்வாறு நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்தன.

அடுத்த நாள் காலை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த இளைஞர் கிட்டே வந்தார் துறவி.

இன்று சுத்தப்படுத்தினாலும் இந்த இடத்தை குதிரை மீண்டும் மீண்டும் அசுத்தம் செய்து விடுகின்றதே பிறகு ஏன் தேவை இல்லாமல் சுத்தம் செய்கிறாய்.......??? என்று கேட்டார்.

அதற்கு அவன், என்ன சாமி எல்லாம் தெரிஞ்ச நீங்க இப்படி கேட்கரீங்க.....???

திரும்ப திரும்ப அசுத்தம் ஆவுதுனு சுத்தப்படுத்தாம இருக்க முடியுமா....???

இதை கேட்ட துறவி அப்போது சொன்னார் "தம்பி அன்று நீ என்னிடம் கேட்ட கேள்விக்கு இதுதான் பதில்.

நீ இப்போது செய்யும் வேலையைத் தான் நானும் செய்கிறேன் , அசுத்தமான இடத்தை நீ மீண்டும் மீண்டும் சுத்தம் செய்வது போல் , மனிதர்களை நல்வழி படுத்தும் செயலை பெரியோர்கள் இடைவிடாமல் செய்வார்கள்.

இளைஞன் கேட்டான்” சாமி இதற்கு நிறந்தர தீர்வு என்ன....???

அவர் உடனே அங்கு கட்டி இருந்த குதிரையை அவிழ்த்து விட்டு விரட்டினார், பின்பு அந்த இளைஞனைப் பார்த்துக் கேட்டார்

“இனி இந்த இடம் அசுத்தம் ஆகுமா......???

ஆகாது சாமி. என்றான்

துறவி கூறினார் ” உன் கேள்விக்கு இதான் பதில்.

நீ செய்த வேலையைப் போல் நாங்கள் மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

இப்பொழுது நான் செய்த வேலையைப் போல் என்று மனிதன் தன்னிடம் இருக்கும் தீய எண்ணம் என்ற குதிரையை வாழ்வில் இருந்து விரட்டி விடுகிறானோ, அப்பொழுதே எங்களின் சுத்தப் படுத்தும் கடமை முடிந்து விடும், அன்று வரை மனிதனை நன்னெறி படுத்துவது ஆன்மிகத்தின் கடமை என்றார்........!!

உண்மைதானே... நாம் இன்னும் பலகோடி ஆண்டுகளாய் பல்வேறு அழுக்குகளை மனதிலே தேக்கி வைத்துக்கொண்டிருக்கிறோம்... அதை விடமறுத்துவிட்டு கலாச்சாரம், பாரம்பரியம், என்று வியாக்ஞானம் பேசிக்கொண்டு இருக்கிறோம்..

சிலர் அதை தனித்தன்மை, பிடித்தவை, கொள்கை, என் தனிவழி என்றும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் வாழ்க்கையில் முன்னேற எது நமக்கு தடையாக இருக்கிறதோ அதை அப்படியே காலில் போட்டு மிதித்து முன்னேற பழகிக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் அதுவே நம் காலில் கட்டப்பட்டுள்ள சங்கிலிப்போல் நம்மை நகரவே விடாது.


05 April, 2018

ரயிலில்.... இப்படியாய் நடந்த நிகழ்வு....



வீடு வந்து
ஓய்வெடுக்கிறேன்
மனம் மட்டும்
இன்னும் பயணிக்கிறது...

 என்னையே நான்
சமாதானம் 
படுத்திக்கொள்கிறேன்
முடியவில்லை...

இனி
ஒவ்வொறு முறையும்
ரயில் ஏறும் போது
தண்டவாளத்தில் 
அடிப்பட்ட உணர்வோடே 
பயணிக்க வேண்டியிருக்கும்....

நேற்றைய 
ரயில் பயணத்தில்
என்னை காயப்படுத்திய
நிகழ்வு....

நிலைய 
படிக்கட்டுகளில்
வரிசைக்கட்டிய 
விளம்பரங்கள்...

முன்பதிவை
உறுதிப்படுத்திய
பயணிகளின்
பட்டியல்...

பயணிகளின் 
கவணத்திற்கு...
என்ற அழகு குரலின்
அறிவிப்பு...

செய்திகள்
தாங்கி நின்ற
மாலை இதழின்
தலைப்பிதழ்...

வழியனுப்பி
கலங்கிநின்ற 
ஒரு அம்மாவின்
கண்ணீர்....

ஆய்வுக்காக
கால்கடுக்க
காத்திருக்கும்
பரிசோதகர்....

ஓசைப் படாமல்
உரசிவிட்டுப் போன
பயணப் பெண்ணின்
பார்வை...

ஜன்னலில் புகுந்து
மறு ஜன்னலில் 
வெளியேறிய
பட்டாம்பூச்சி...

இன்னுமாய்...
பயணத்தின் போது
குறுக்கிட்ட
ஆறு... மலை, காடு...
வயல்வெளி கூட்டங்கள்...

இவைகளை எல்லாம் மீறி
என்னைத் துன்புறுத்தி 
கொண்டுதான் இருக்கிறது...

பசிக்குகென்று 
காசு கேட்டு
நான் அமைதி காத்த
 வேளையில்
ஜன்னல் தாண்டி போன
அந்த ஏழைக் குழந்தையின் 
பிஞ்சு முகம்....


(என் டைரியில் இருந்து... ஆகஸ்ட்-2004)



தங்கள் வருகைக்கும்.. கருத்துக்கும் மிக்க நன்றி...!

Related Posts Plugin for WordPress, Blogger...