கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label ஜோக்ஸ். Show all posts
Showing posts with label ஜோக்ஸ். Show all posts

11 April, 2024

இணையத்தை கலக்கும் கோடை மீம்ஸ்

 இணையத்தில் அதிகமாக கோடை காலத்தை  மையப்படுத்தி சிரித்து சிரித்து ரசிக்கும் படியான மீம்ஸ்கள் வந்தவண்ணம் இருக்கிறது...


அவற்றில் ஒரு சில...























இந்தக் கோடை காலத்தில் பார்த்தாலே நினைச்சு நினைச்சு சிரிக்க தோணுது....

09 September, 2019

இப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....



வெளியே போய்விட்டு இரவு வீடு திரும்பினர்...
 கணவனும் மனைவியும்..

கதவில் போட்டிருந்த பூட்டு மக்கர் செய்தது....

 "இந்தாங்க, நீங்க டார்ச் அடிங்க நான் திறக்கறேன்"னுட்டு மனைவி ரொம்ப நேரமா சாவியப் போட்டு சுத்தி சுத்திப் பார்த்து சலிப்படைஞ்சு போய்" நான் டார்ச் பிடிக்கிறேன் நீங்க தெறங்க"ன்னா.

அதன்பிறகு அந்தக்கணவர் சாவியப் போட்டதுமே "க்ளிக்" பூட்டு திறந்து விட்டது.

அதப்பார்த்துட்டு அந்த மனைவி கணவனைப் பார்த்து  கோபமாகச் சொன்னா  "இப்பத் தெரிஞ்சுதா டார்ச் எப்புடி புடிக்கணும்னு" ன்னு. !

#இப்படியெல்லாம் யோசிச்சி... ரசிச்சி கணவரை திட்டிதீர்க்க இவர்களால் மட்டும்தான் முடியும்... நாம எது செய்தாலும் குறையாகத்தான் பார்க்குறாங்க.... இப்படித்தான் போயிகிட்டு இருக்கும் இங்குட்டும்...

**********************


தலைவர் செடி நடும்போது கூடவே ஒருத்தர் இருக்காரே... 
அவரு யாரு?

அவரா... கூடவே இருந்து குழி பறிப்பவர்..!

#செமையான சிந்தனை... அழகிய ரசிக்கும்படியான நகைச்சுவையும் கூட... இப்பெல்லாம் தலைவர்கூட மட்டுமல்ல எல்லார்கூடையும்....

**********************

நீங்க ஒண்டியா எல்லா வேலையும் பாக்குறீங்களே...
ஒரு நர்ஸ் வச்சுக்கிட்டா என்ன டாக்டர்?"

"அதுக்கு என் மனைவி ஒத்துக்கமாட்டாங்க."

"ஏன் டாக்டர்?"

"ஏற்கெனவே இங்கே நர்ஸா இருந்தவங்கதான் அவுங்க!"

#அடேய் இப்படித்தான் வலைச்சிபோட்டயா.... அப்ப எப்படி ஒத்துப்பாங்க...
*********************************



நகர சாலை ஒன்றில் விபத்து ஒன்று ஏற்பட்டுவிட்டது....

அதில் பலியானவரை சுற்றி ஒரு பெருங்கூட்டம்
கூடி இருந்தது....

அப்போது அங்கு வந்த ஒரு பத்திரிகை நிருபர்...

அந்த விபத்தை நெருக்கமாக பார்க்க முடியாததால் தவித்து கொண்டு இருந்தார்....

அவருக்கு சட்டென ஒரு யோசனை வந்தது....

இந்த விபத்தில் இறந்து போனவரின் தந்தை நான் என்று அவர் வருத்தமுடன் அங்கிருந்தவர்களிடம் கூறினார்.

நான் அருகில் செல்ல வேண்டும், தயவு செய்து வழிவிடுங்கள் என்று கதறும் தோனியில் நடித்தார்....

உடனே, அந்தக் கூட்டத்தினர் விலகி நின்று, அவருக்காக வழி விட்டனர்....

நிருபர் அருகில் சென்றவுடன், விபத்தில் பலியானவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்....

அது ஒரு கழுதை...!

#இப்படிதான் பலபேர் அவசரப்பட்டு முட்டாள்தனமா யோசிச்சி அவமானம்படுறோம்....

#இப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....

******************************
ரசித்தமைக்கு மிக்க நன்றி...!

இவைகள் சும்மா ஒரு ரீ-எண்ட்ரிக்காகத் தான்....!
மீண்டும் தொடர்வோம்...
கவிதைகளுடன்...

08 September, 2018

பாகற்காயும்... பகுத்தறிவும்...



ஞானியிடம் சிலர் சென்று, நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.! நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்கும் என அவரை அழைத்தார்கள்...!

ஞானியோ, இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறி விட்டு, அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து, 

''எனக்காக ஒரு உதவி செய்யமுடியுமா?'' என்று அவர்களை பார்த்துக் கேட்டார்.

அவர்கள் ''என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள் மகராஜ்' என்றனர்.

''ரொம்ப பெரிய வேலை எல்லாம் இல்லை.

நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம் , இந்த பாகற்காயையும் முழுக்கி என்னிடம் திரும்ப கொண்டு வந்து இதை சேர்த்து விடுங்கள்'' என்றார்.

அன்பர்கள் ஞானி சொன்ன மாதிரியே செய்தனர்..!

திரும்ப வந்து அவரிடம் அந்த பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தனர்.

அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி,

எல்லாருக்கும் ஒரு துண்டை கொடுத்தார்..!

புனித நதியில் முழுகி வந்த பாகற்காய்..! இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும் என்றார்...!

ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது..... !

*தித்திக்கும்னு சொன்னீங்க..ஆனா கசக்குதே...!*என்றார்கள் .ஞானியிடம் ஏமாற்றத்துடன்..!*

"பார்த்தீர்களா....?

பாகற்காய் எத்தனை தான் நதியில் முழுகினாலும்,

அதன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அதைப் போலவே , நாம் நமது தவறான செயல்களையும், தீய பழக்கங்களையும், துர்குணங்களை மாற்றிக் கொள்ளாமல், எந்த புண்ணிய தீர்த்தத்தில் ஆயிரம் முறை முழுகினாலும், எந்த கோயிலுக்கோ, சர்ச்சுக்கோ, மசூதிக்கோ, குளத்துக்கோ, புண்ணிய ஸ்தலங்களுக்கோ 1008 முறை வலம் வந்து விழுந்து, விழுந்து வணங்கினாலும்.... எந்த பயனும் வந்து விடப் போவதில்லை....??

மாற்றங்கள்....!!

மனங்களிலும், குணங்களிலும், வந்தால் தான் வாழ்க்கை இனிமையாகும்....!!
என்றார் அந்த ஞானி....!!!!!!


*************************



சுந்தர்  வாழ்க்கையிலே ஒருவருக்கு சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் வேண்டும்.

கண்ணன்  சகிப்புத் தன்மைக்கும் சாமர்த்தியத்துக்கும் என்ன சம்பந்தம்?


சுந்தர்: நான் புரிய வைக்கிறேன்.ஒரு தம்ளரிலே கொஞ்சம் சாக்கடைத் தண்ணீர் கொண்டு வாருங்களேன்.

கண்ணன் : இதோ இருக்கு சார், நீங்கள் கேட்ட சாக்கடைத்தண்ணீர்.

சுந்தர் : இப்படி வைங்க. நான் என்ன செய்றேன்னு கவனிங்க. இந்த சாக்கடைத் தண்ணீரை என் விரலால் தொட்டு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இதோ என் நாக்கில வச்சுக்கிறேன். இது தான் சகிப்புத் தன்மை. எங்கே, என்னை மாதிரி நீங்களும் செய்யுங்கள் பார்க்கலாம்!

கண்ணன் : அது ஒண்ணும் கஷ்டமில்லை. இதோ பாருங்கோ, நானும் அதைத் தொட்டு நாக்கிலே வைச்சுக்கிட்டேன்.

சுந்தர் : சரி,இப்போ உங்களுக்கு சகிப்புத் தன்மை இருப்பது உறுதி ஆகி விட்டது. இருந்தாலும் சாமர்த்தியம் போதாது.

கணணன்  : எப்படிச் சொல்றீங்க?

சுந்தர்: ஒரு விஷயம் நீங்க கவனிக்கலை.நான் அந்த சாக்கடைத் தண்ணீரை நடு விரலால் தொட்டேன்.ஆனால் வாயில வச்சது ஆள் காட்டி விரலை. நீங்க தொட்ட விரலாலே நாக்கிலே வச்சுட்டீங்க. இது தான் சாமர்த்தியம் போதாதுன்னு சொன்னது.

கண்ணன் : நான் மறுக்கலே. இருந்தாலும் ஒண்ணுசொல்றேன். தப்பா நினைக்காதீங்க. இந்த டம்ளரில இருக்கிறது சாக்கடைத் தண்ணீர் இல்லை.என் மனைவி போட்ட காபி.

சுந்தர் : பலே ஆள் சார் நீங்க!பார்க்கிறதுக்கு வித்தியாசமே தெரியலே!

கண்ணன் : குடிச்சுப் பாருங்க .அப்பவும் வித்தியாசம் தெரியாது.!

******************************



அனைத்துலக எழுத்தறிவு நாள் உலகெங்கும் செப்டம்பர் 8-ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 17, 1965 இல் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. இது 1966ம் ஆண்டு தொடக்கம் கொண்டாடப்படுக்கிறது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும்..

உலகில் சுமார் 781 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் ஆவர். அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறார்கள் பாடசாலை வசதிகள் அற்ற நிலையில் உள்ளார்கள். இதனால் இவர்கள் அடிப்படைக் கல்வியான எழுத,, வாசிக்க, எண்ணத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.



யுனெஸ்கோவின் "அனைவருக்கும் கல்வி பற்றிய உலக அறிக்கை (2006)" அறிக்கையின்படி, தெற்கு மற்றும் மேற்கு ஆசியாப்பகுதிகளிலேயே மிகக் குறைந்த வீதமானோர் (வயது வந்தோரில்) (58.6%) படிப்பறிவில்லாமல் உள்ளனர். 

அதற்கு அடுத்த படியாக உள்ள பகுதிகள் ஆபிரிக்கா (59.7%), அரபு நாடுகள் (62.7%). தனிப்பட்ட நாடுகளை எடுத்துக் கொண்டால் மிகக் குறைந்த எழுத்தறிவில்லாதோர் புர்கினா பாசோ (12.8%), நைஜர் (14.4%), மாலி (19%). அறிக்கையின் படி எழுத்தறிவின்மைக்கும் நாடுகளின் வறுமைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

எந்த மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மையாகும் என ஐநாவின் சாசனம் எழுத்தறிவின்மையை வரையறுக்கிறது.

****************************** 

18 August, 2018

எங்கையாவது கவரிங் ஸ்கூட்டர் கிடைக்குமா...


 சொல்லுங்க உங்களுக்கு என்ன பிரச்சனை

எனக்கு என் மனைவி கூட வாழ பிடிக்கலைங்க எனக்கு டைவர்ஸ் வாங்கி கொடுங்க...

சரி 5000 செலவாகுங்க பரவாயில்லையா..

இவ்வளவா...! எனக்கு கல்யான செலவே 500 தாங்க ஆச்சி...!

எப்பவுமே சுதந்திரம் சும்மா கிடைக்காது தம்பி...


********************************



மாமியார் : இந்தாங்க மாப்பிள்ளை நீங்க கேட்ட மோதிரம்!

மருமகன் : இதை வாங்கி தந்ததுக்கு நீங்க ஸ்கூட்டரே வாங்கி தந்திருக்கலாம்!

மாமியார் : வாங்கியிருக்கலாம்தான்! ஆனா கவரிங் ஸ்கூட்டர் எங்கே கிடைக்குது?

********************************



ராமு : சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிட வேண்டிய மருந்தை சாப்பாட்டுக்குப் பின்னாடி குடிச்சிட்டேன் !

சோமு : அடடா... அப்புறம் ?

ராமு : மறுபடியும் ஒரு தடவை சாப்பிட வேண்டியதாயிடுச்சு !

சோமு : அடப்பாவி...!!!!!!

********************************


கடைக்காரர் : டாக்ஸி டிரைவரா இருந்தவனை 
ஜவுளிக்கடையில் வைத்தது தப்பா போச்சு ?

மற்றவர் : ஏன்?

கடைக்காரர் : துணி எடுக்க வருபவர்களிடம் 
மீட்டருக்கு மேல் எவ்வளவு தருவீங்கன்னு கேட்கிறான்..

********************************


ஒருவர் : எனக்கு தூக்கத்தில் உளர்ற வியாதி 
இருக்குன்னு சர்ட்டிபிகேட் தர முடியுமா டாக்டர்?

டாக்டர் : ஏன்?

ஒருவர் : என் மனைவியை திட்ட 
வேற வழி தெரியலை டாக்டர்...

டாக்டர் : !!!!!!!!!!!!

********************************

பின்விளைவுகள் பயங்கரமா இருக்கும் என்பது இதுதானோ..!!!
பார்த்து சூதானா இரும்மா...!

10 August, 2018

உங்கள மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடைக்கிறது...



மனைவி தன் கணவனை வீட்டில் விட்டுவிட்டு வெளி ஊர் சென்றிருந்தாள். போகும்போது அவனிடம் தன செல்லப் பூனையை ஒப்படைத்து, நன்றாக கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டாள்...


இரண்டு நாட்கள் கழித்து போனில் பூனையை பற்றி விசாரித்தாள். "இன்னிக்கு காலையில உன் பூனை மாடியிலருந்து விழுந்து செத்துப் போச்சு" என்றான் கணவன். 

அழுது புலம்பிய மனைவி, எப்படி நீங்க இவ்ளோ பெரிய சோகத்தை சாதாரணமா சொல்லலாம்.


இன்னிக்கு "பூனை மொட்டை மாடியிலே விளையாடுதுன்னு சொல்லி இருக்கணும்".


நாளைக்கு நான் போன் பண்ணும்போது " கால் தவறி பூனை மாடியிலேருந்து விழுந்துடுச்சு"ன்னு சொல்லணும்.


அதுக்கு அடுத்த நாள் "அடி பலமா பட்டதாலே பூனை செத்து போச்சுன்னு சொல்லணும் ".


அப்போ தான் என்னாலே தாங்கிக்க முடியும் இப்படி போட்டு சாகடிச்சிட்டிங்களே?"


"சரி எங்க அம்மா எப்படி இருக்காங்க "?

"மொட்டை மாடியிலே விளையாடிகிட்டு இருக்காங்க...

**************************************



மனைவி : உங்கள மாதிரி ஒரு மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னு எங்கப்பா சொன்னாங்க... எனக்கு எவ்வளவு பெருமையா இருந்துச்சி தெரியுமா?..!


கணவன் : அதெல்லாம் சும்மாடி... நம்பாத.


மனைவி : ஏன் அப்படி சொல்றீங்க?


கணவன் : என்னை மாதிரி மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னா... அப்புறம் ஏன் உன் தங்கச்சிக்கு உங்கப்பா வேற மாப்ள பாக்குறாரு.


மனைவி : ..........

**************************************


கணவன் : கடவுள்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட?


மனைவி : ஏழு பிறவியிலும், நீங்கதான் கணவனா அமையணும்னு வேண்டிகிட்டேன். நீங்க?


கணவன் : இது ஏழாவது பிறவியா இருக்கணும்னு வேண்டிக்கிட்டேன்...!!


**************************************



டாக்டர் : என்னப்பா... நான்

ஆப்ரேஷன் பண்ணனுன்னு ஒத்த கால்ல நிக்கிறெ?


வந்தவர் : வாழ்க்கையே வெறுத்துப்போச்சு.....
சாகலான்னு இருக்கேன்.....


தற்கொலை பண்றது கோழைத்தனம்ன்னு தெரியும்...

அதனாலதான் உங்களை தேடிவந்தேன் .

**************************************

21 May, 2018

சாமிக்கு மொட்டை போட்டா தப்பா...?



மனைவி : வீட்ல பெயிண்ட் வேலை நடந்துட்டு இருக்கு...
எதுக்காக ரெண்டு கோட் போட்டுருக்கீங்க?

கணவன் : பெயிண்ட் பளிச்சுன்னு வரணும்னா
ரெண்டு கோட் போடணும்னு பெயிண்டர்தான் சொன்னார்.

மனைவி : ???????????????

இது மாதிரி கிறுக்குத்தனாமா இருந்தாதான் மனைவிக்கு ரொம்ப பிடிக்குது... மத்தவங்ககிட்ட பேசும்போது அவருக்கு ஒன்னும் தெரியாதுங்க.. அப்படின்னு சொல்றதுல அவங்களுக்கு அப்படி ஒரு பெருமை... 

ஆண்களும் எனக்கு எல்லாம் தெரியும்ன்னு நெஞ்ச நிமிர்த்திக்கிட்டு நிக்கிறத விட இது மாதிரி இன்னசென்டா நடந்துகிட்ட குடும்பம் குதுகளமா இருக்கும் என்பது என்னுடைய அபிப்ராயம்... 

இங்க பாருங்க நம்ம ராஜி அக்கா இருக்காங்க... மாமாவுக்கும் எல்லாம் தெரிஞ்சாலும் அவருக்கு எதுவும் தெரியாதுன்னு ஓட்டறது தான் அவங்களுக்கு வேலையே.... என்ன நான் சொல்றது...!

**************************************


மகன் : அப்பா படிப்புக்கு முதல் எதிரி டிவி தான்னு நீங்க
அடிக்கடி சொல்வீங்க இல்லையா?

அப்பா : அதுக்கென்ன இப்போ?

மகன் : அந்த எதிரியை கிரிக்கெட் பாலால ஓங்கி
ஒரு தட்டுத்தட்டினேன் டிவி உடைஞ்சுபோச்சு...

அப்பா : ?!!!!!!!!!

இது எல்லாம்  வீட்லையும் நடக்கிறதுதான்.... ஆன என்ன நாம செஞ்ச தப்ப ஒத்துக்கிட்டு தண்டனை வாக்கிறது ஒரு வகை... இது மாதிரி புத்திசாலிதனமா சமாளிக்கிறது ஒரு வகை... எப்படியிருந்தாலும் அடி கன்பார்ம்தான்...

**************************************



வருண் : மாட்டுக்கு பொங்கல் வைக்கும்போது
மாடு ஏன் உன்னை முட்டுச்சு...

மதன் : பொங்கலில் இருந்த முந்திரியை
எடுத்து திண்ணுட்டேன். அதான்..

வருண் :.........

பாருங்க பக்கி மாட்டுக்கு வச்ச பொங்கல்ல இருந்து எடுத்திருக்கு... பின்ன மாட்டுக்கு கோவம் வராது....

சிலப்பேர் இருக்காங்ப காக்கைக்கு வைக்கிறத எடுத்து சாப்பிடுவாங்க...

**************************************



மன்னர் : மகாராணி, எனக்குப் பதிலா நீதான் போருக்குப் போக வேண்டும்...

மகாராணி : இது மரபு இல்லையே?

மன்னர் : உனக்கு சமைச்சுப் போடுறேன்,
துவைச்சுப் போடுறேன், இது மட்டும் மரபா..?

மகாராணி :?????

நாட்டுக்கு வேண்டுமானால் மன்னனாக இருக்கலாம் வீட்டுக்குள் அவர் ஒரு பெண்ணின் கணவர் தானே... கணவர் என்ற ஸ்தானம் வந்தப்பிறகு எப்படியாவது வீட்டு வேலையை வாங்கி விடுவதுதான் பெண்களின் புத்திசாலிதனம்...

கொஞ்சம் ஏமாந்தால் மொத்த வேலைகளையும் ஆண்கள் தலையில் கட்டிவிடும் பெண்கள் ஏராளம்...

முடிந்தவரை வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தால் வேலையில் பங்கெடுத்துக்கொள்வதில் தப்பில்லைதானே..

**************************************



நீதிபதி : சாமி தலையிலிருந்து கிரீடத்தை திருடினாயா?

திருடன் : ஆமா எஜமான்.. சாமிக்கு மொட்டை போடுறதா
வேண்டிகிட்டேன். அதான்.

நீதிபதி : 😌😌

நாமதாம்பா சரியா செய்யறதில்லை... சாமிக்கு மொட்டை பொடுறதாகத்தானே வேண்டிக்கிறோம்... ஆனா நமக்கு மொட்டை போட்டுக்கிறோம்... இவர்தான் சரியா செஞ்சிருக்கார... அவரை குற்றவாளின்னு சொல்றீங்களே....

**************************************

02 May, 2018

மனைவியுடன் தனியாக செல்லும் ஆண்களே உஷார்...!


"சார், கல்வி பெரிசா? செல்வம் பெரிசா?"

"உன் பாக்கெட்ல ஒரு பத்து பைசாவாச்சும் இருக்கா???"

"நூறு ரூபாயே இருக்கு, கேட்டதுக்கு பதில் சொல்லுங்க சார்....!"

"ஏன்யா உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா??"

"சார் வார்த்தையை அளந்து பேசுங்க.. அப்புறம் நானும் திருப்பிக் கேப்பேன்.... தாங்க மாட்டீங்க..!"

"பாத்தியா காசு இருக்கான்னு கேட்டப்ப வராத கோபம், அறிவிருக்கான்னு கேட்டதும் எவ்வளவு வந்துச்சு...!!

இப்ப சொல்லு பணம் பெருசா?? அறிவு பெருசா???" :)

******************************


ஆண்கள் கவனத்திற்கு:
(மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும்போது உஷாராக இருக்கவும்)

ஒரு கணவனும் மனைவியும் லிப்ட் ல 10 வது மாடியிலிருந்து கீழே வந்து் கொண்டிருக்கிறார்கள்.

5வது மாடியில் அழகான இளம்பெண் ஒருத்தி லிப்ட் ல ஏறி அந்த கணவன் பக்கத்தில் நிற்க,

அவன் அவளின் அழகில் மயங்கி ஜொள் விடுகிறான்.

சிறிது நேரத்துக்குப்பின் அந்த இளம்பெண் இவனது கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு

\"இனி இப்படி செய்தால் செருப்பு பிஞ்சிரும்\" னு சொல்லிட்டு அவனிடமிருந்து விலகி நிற்கிறாள்.

இவனுக்கோ தன் மனைவி முன்னிலையில் அடிவாங்கிய அவமானம்.

லிப்ட் ல இருந்து இறங்கி வெகுநேரமாகியும் மனைவியிடம் பேச வெட்கி வாயடைத்தான்.

வீட்டிற்கு நடக்கிறார்கள்.

மனைவி : ஏங்க அதையே நினைச்சிகிட்டு.... விடுங்க.....
ஏதாவது பேசிட்டு வாங்க.......

கணவன் : இல்லடி, நான் லிப்ட் ல...

மனைவி : அட, அத தான் விடுங்க னு சொன்னேன்ல.

நீங்க ஜொள் விடுறத பொறுக்காம நான்தான் அவ இடுப்பைக் கிள்ளுனேன்.

கணவன் : (அடிப்பாவி.. சண்டாளி..) மகிழ்ச்சி 😂

இந்த கதையின் நீதி.
ஒரு கண்ணால் இளம்பெண்களை ரசித்தாலும், மறு கண்ணால் மனைவியை கண்காணிக்க வேண்டும்....... ஏன்னா வில்லி கூடவே இருக்கா......

உஷாரய்யா .... உஷாரய்யா....

******************************



( தொலைபேசியில் ஒரு பதற்றமான குரல்...)

"டேய் மச்சான்...
எங்கடா இருக்க?"

"வீட்லதான்டா இருக்கேன்..."

"அப்பாடா... இப்பதான்டா நிம்மதியா இருக்கு...!!"

"ஏன்டா? என்ன விஷயம்??"

"அதில்லடா..... காலையில பேப்பரை பார்த்தேன். அதுல, உங்க தெருவுல வெட்டியா சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் கார்பரேசன்-காரங்க புடிச்சுட்டு போனதா செய்தி போட்டிருந்துச்சு.

அதான்... எங்க நீ மாட்டிகிட்டீயோன்னு பயந்தே போயிட்டேன்.....

******************************


கூட்டம் திமிறிக்கொண்டிருந்த ஒரு கல்யாண வரவேற்பில் மிக அழகான பெண்ணைத் தேடிப் பிடித்துப் பேசினார் நடுத்தர வயது இளைஞர் ஒருவர்.

அவர் : மேடம் .. .. இந்த கல்யாண கலாட்டாவுல என் பொண்டாட்டியைத் தொலைச்சுட்டேன் கொஞ்ச நேரம் என்கூட பேசிட்டிருக்க முடியுமா ? என்று கேட்டார்.

அழகிக்கு கோபம் வந்துவிட்டது.

அழகி : ஏய் மிஸ்டர் என்னை என்னன்னு நெனைச்சுட்டீங்க ? நான் எதுக்கு உங்ககூட பேசணும் ? என்றாள் சீற்றத்தோடு.

அவர் : ஸாரி, மேடம் .. .. .. தப்பா நெனைச்சுக்காதீங்க. அழகான ஒரு பொண்ணோட நான் பேசிட்டு இருக்கறப்பல்லாம் எங்கிருந்தாலும் உடனே ஒடிவந்து என் முன்னால ஆஜராயிடுவா என் பொண்டாட்டி அதுக்காகச் சொன்னேன் - பணிவாகச் சொன்னார் இவர்.

******************************


Related Posts Plugin for WordPress, Blogger...