கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

21 May, 2018

சாமிக்கு மொட்டை போட்டா தப்பா...?



மனைவி : வீட்ல பெயிண்ட் வேலை நடந்துட்டு இருக்கு...
எதுக்காக ரெண்டு கோட் போட்டுருக்கீங்க?

கணவன் : பெயிண்ட் பளிச்சுன்னு வரணும்னா
ரெண்டு கோட் போடணும்னு பெயிண்டர்தான் சொன்னார்.

மனைவி : ???????????????

இது மாதிரி கிறுக்குத்தனாமா இருந்தாதான் மனைவிக்கு ரொம்ப பிடிக்குது... மத்தவங்ககிட்ட பேசும்போது அவருக்கு ஒன்னும் தெரியாதுங்க.. அப்படின்னு சொல்றதுல அவங்களுக்கு அப்படி ஒரு பெருமை... 

ஆண்களும் எனக்கு எல்லாம் தெரியும்ன்னு நெஞ்ச நிமிர்த்திக்கிட்டு நிக்கிறத விட இது மாதிரி இன்னசென்டா நடந்துகிட்ட குடும்பம் குதுகளமா இருக்கும் என்பது என்னுடைய அபிப்ராயம்... 

இங்க பாருங்க நம்ம ராஜி அக்கா இருக்காங்க... மாமாவுக்கும் எல்லாம் தெரிஞ்சாலும் அவருக்கு எதுவும் தெரியாதுன்னு ஓட்டறது தான் அவங்களுக்கு வேலையே.... என்ன நான் சொல்றது...!

**************************************


மகன் : அப்பா படிப்புக்கு முதல் எதிரி டிவி தான்னு நீங்க
அடிக்கடி சொல்வீங்க இல்லையா?

அப்பா : அதுக்கென்ன இப்போ?

மகன் : அந்த எதிரியை கிரிக்கெட் பாலால ஓங்கி
ஒரு தட்டுத்தட்டினேன் டிவி உடைஞ்சுபோச்சு...

அப்பா : ?!!!!!!!!!

இது எல்லாம்  வீட்லையும் நடக்கிறதுதான்.... ஆன என்ன நாம செஞ்ச தப்ப ஒத்துக்கிட்டு தண்டனை வாக்கிறது ஒரு வகை... இது மாதிரி புத்திசாலிதனமா சமாளிக்கிறது ஒரு வகை... எப்படியிருந்தாலும் அடி கன்பார்ம்தான்...

**************************************



வருண் : மாட்டுக்கு பொங்கல் வைக்கும்போது
மாடு ஏன் உன்னை முட்டுச்சு...

மதன் : பொங்கலில் இருந்த முந்திரியை
எடுத்து திண்ணுட்டேன். அதான்..

வருண் :.........

பாருங்க பக்கி மாட்டுக்கு வச்ச பொங்கல்ல இருந்து எடுத்திருக்கு... பின்ன மாட்டுக்கு கோவம் வராது....

சிலப்பேர் இருக்காங்ப காக்கைக்கு வைக்கிறத எடுத்து சாப்பிடுவாங்க...

**************************************



மன்னர் : மகாராணி, எனக்குப் பதிலா நீதான் போருக்குப் போக வேண்டும்...

மகாராணி : இது மரபு இல்லையே?

மன்னர் : உனக்கு சமைச்சுப் போடுறேன்,
துவைச்சுப் போடுறேன், இது மட்டும் மரபா..?

மகாராணி :?????

நாட்டுக்கு வேண்டுமானால் மன்னனாக இருக்கலாம் வீட்டுக்குள் அவர் ஒரு பெண்ணின் கணவர் தானே... கணவர் என்ற ஸ்தானம் வந்தப்பிறகு எப்படியாவது வீட்டு வேலையை வாங்கி விடுவதுதான் பெண்களின் புத்திசாலிதனம்...

கொஞ்சம் ஏமாந்தால் மொத்த வேலைகளையும் ஆண்கள் தலையில் கட்டிவிடும் பெண்கள் ஏராளம்...

முடிந்தவரை வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தால் வேலையில் பங்கெடுத்துக்கொள்வதில் தப்பில்லைதானே..

**************************************



நீதிபதி : சாமி தலையிலிருந்து கிரீடத்தை திருடினாயா?

திருடன் : ஆமா எஜமான்.. சாமிக்கு மொட்டை போடுறதா
வேண்டிகிட்டேன். அதான்.

நீதிபதி : 😌😌

நாமதாம்பா சரியா செய்யறதில்லை... சாமிக்கு மொட்டை பொடுறதாகத்தானே வேண்டிக்கிறோம்... ஆனா நமக்கு மொட்டை போட்டுக்கிறோம்... இவர்தான் சரியா செஞ்சிருக்கார... அவரை குற்றவாளின்னு சொல்றீங்களே....

**************************************

1 comment:

  1. "மொட்டை" இரசித்தேன் சிரித்தேன்.. நன்றி

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...