கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

10 August, 2018

உங்கள மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடைக்கிறது...



மனைவி தன் கணவனை வீட்டில் விட்டுவிட்டு வெளி ஊர் சென்றிருந்தாள். போகும்போது அவனிடம் தன செல்லப் பூனையை ஒப்படைத்து, நன்றாக கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டாள்...


இரண்டு நாட்கள் கழித்து போனில் பூனையை பற்றி விசாரித்தாள். "இன்னிக்கு காலையில உன் பூனை மாடியிலருந்து விழுந்து செத்துப் போச்சு" என்றான் கணவன். 

அழுது புலம்பிய மனைவி, எப்படி நீங்க இவ்ளோ பெரிய சோகத்தை சாதாரணமா சொல்லலாம்.


இன்னிக்கு "பூனை மொட்டை மாடியிலே விளையாடுதுன்னு சொல்லி இருக்கணும்".


நாளைக்கு நான் போன் பண்ணும்போது " கால் தவறி பூனை மாடியிலேருந்து விழுந்துடுச்சு"ன்னு சொல்லணும்.


அதுக்கு அடுத்த நாள் "அடி பலமா பட்டதாலே பூனை செத்து போச்சுன்னு சொல்லணும் ".


அப்போ தான் என்னாலே தாங்கிக்க முடியும் இப்படி போட்டு சாகடிச்சிட்டிங்களே?"


"சரி எங்க அம்மா எப்படி இருக்காங்க "?

"மொட்டை மாடியிலே விளையாடிகிட்டு இருக்காங்க...

**************************************



மனைவி : உங்கள மாதிரி ஒரு மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னு எங்கப்பா சொன்னாங்க... எனக்கு எவ்வளவு பெருமையா இருந்துச்சி தெரியுமா?..!


கணவன் : அதெல்லாம் சும்மாடி... நம்பாத.


மனைவி : ஏன் அப்படி சொல்றீங்க?


கணவன் : என்னை மாதிரி மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னா... அப்புறம் ஏன் உன் தங்கச்சிக்கு உங்கப்பா வேற மாப்ள பாக்குறாரு.


மனைவி : ..........

**************************************


கணவன் : கடவுள்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட?


மனைவி : ஏழு பிறவியிலும், நீங்கதான் கணவனா அமையணும்னு வேண்டிகிட்டேன். நீங்க?


கணவன் : இது ஏழாவது பிறவியா இருக்கணும்னு வேண்டிக்கிட்டேன்...!!


**************************************



டாக்டர் : என்னப்பா... நான்

ஆப்ரேஷன் பண்ணனுன்னு ஒத்த கால்ல நிக்கிறெ?


வந்தவர் : வாழ்க்கையே வெறுத்துப்போச்சு.....
சாகலான்னு இருக்கேன்.....


தற்கொலை பண்றது கோழைத்தனம்ன்னு தெரியும்...

அதனாலதான் உங்களை தேடிவந்தேன் .

**************************************

2 comments:

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...