ஒரு முறை அன்னை தெரசா அவர்கள் பசியோடு வந்த ஒரு ஏழைத் தாய்க்கு சாப்பிட மூன்று ரொட்டித் துண்டுகளை வழங்கினார்.
நன்கு பசித்தவருக்கு உணவு வழங்கினால் அதை உடனே உண்ணவே ஆசைப்படுவார்கள். ஆனால் அந்த ரொட்டித்துண்டுகளைப் பெற்ற தாயோ மிகவேகம் வேகமாக அந்த இடத்தைவிட்டு ஓட எத்தனித்தார்.
அவரை ஓடவிடாமல் தடுத்த அன்னை தெரசா, "சாப்பிடாமல் எங்கே போறீங்க...?" என்று வினவினார்,
அதற்கு அந்த தாய்... "அம்மா..! நானாச்சும் பரவாயில்லீங்க.. ரெண்டு வேளைதான் பட்டினி. ஆனா என்னுடைய பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்மணி தன்னோட இளம் குழந்தைகளோட சேர்ந்து இரண்டு நாளா பட்டினியா கிடக்குறாங்க. எனவே இதனை சீக்கிரம் கொண்டு சென்று அவர்களுக்கு கொடுக்கனும். அதற்காகத்தான் ஓட முயன்றேன்!" என்றார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தெரசா, "மிகவும் நெகிழ்ந்து... அம்மா! கருணையிலும் சேவையிலும் என்னையே மிஞ்சிட்டீங்களே!" என்று கண்ணீர் மல்க பாராட்டினார்...!
பசியிலும் தானம் செய்வது என்பது... சொல்ல வார்த்தைகள் இல்லை...
********************************
உலக சகிப்புத் தன்மை நாள் (International Day for Tolerance) என்பது மக்களிடையே சகிப்புணர்வின்மையின் பயங்கரமான விளைவுகளையும் சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையின் தேவையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுவதற்காகவும் உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் நவம்பர் 16 அன்று கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். இந்நிகழ்வு பற்றிய அறிவித்தல் 1995 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் வெளியிடப்பட்டது.

