கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label பாடல் வரிகள். Show all posts
Showing posts with label பாடல் வரிகள். Show all posts

25 September, 2018

விஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...


இரண்டு நாட்களாக டிரெண்டிங்கில் இருப்பது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து ஏ. ஆர் முருகதாஸ் இயக்கிவரும் சர்கார் படத்தின் சிங்கள் டிராக் பாடல் தான்...

பாடல் என்ன மொழி என்று புரியாத அளவுக்கு இருப்பதாக சமூக வலைதளங்களில் கிண்டலடிக்க துவங்கிவிட்டார்கள்... மீம்ஸ்ம் டப்ஸ்மேசும் அலரிக்கொண்டு இருக்கிறது...

அந்த பாடலுக்கு எழுதப்பட்ட விளக்கம் தற்போது டிவிட்டரில் டிரெண்டிங்காக இருக்கிறது....

சர்கார் படத்தின் பாடல் வரிகள்
------------—------------------+++

சிம்டான்காரன் – பாடல் பொழிப்புரை

பாடகர்கள் :
பம்பா பாக்கியா,
விபின் அனேஜா மற்றும்
அபர்ணா நாராயணன்
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
படம்: சர்கார்

ஆண் : பல்டி பாக்குற
டர்ல வுடனும் பல்து...

#வோர்ல்டு மொத்தமும்
அரள வுடனும் பிஸ்து
பல்டி அடிக்கறதைப் பார்த்து

மத்தவங்க பயத்துல டர் ஆகிடணும்
உலகம் மொத்தத்தையும் மிரள உடனும் பிஸ்தா மாதிரி
பிசுறு கெளப்பி
பெர்ள வுடனும் பல்து

#பிச்சுப் பிச்சுப் போட்டு எல்லாரையும் பயத்துல பெரளவிடனும்

ஆண் : ஏய்ய் நிக்கலு பிக்கலுமா
ஓ…. தொட்டனா தூக்கலுமா
மக்கரு குக்கருமா
போய் தரைல உக்கருமா

ஏய் ஒழுங்கா ஓரிடத்தில நில்லு அப்பத்தான் தொட்டு தூக்க முடியும்.
உடஞ்ச குக்கர் மாதிரி மக்கர் பண்ணினா உன்னை தூக்க மாட்டேன்
போய் தரைல உட்காருன்னு சொல்லிடுவேன்.

ஆண் : ஏய்ய் நிக்கலு பிக்கலுமா
ஓ…. தொட்டனா தூக்கலுமா
மக்கரு குக்கருமா
போய் தரைல உக்கருமா

#முன்னாடி சொன்னதே தான்.

ஆண் : சிம்டான்காரன்
எங்கனா நீ சீரன்
நிண்டேன் பாரேன் முஷ்டு
அப்டிகா போறேன்

ஓ..ஓ..ஓ..ஓ (4)


#கண்ணை சிமிட்டி சீறினேனா நின்னுக்கிட்டே பாரேன்
என் முஷ்டி மட்டும் அந்தப் பக்கமா போய் ஆளை அடிச்சிட்டு வரும்.

ஆண் : சிம்டான்காரன்
சில்பினுக்கா போறேன்
பக்கில போடேன்
விருந்து வைக்கபோறேன்

ஓ..ஓ..ஓ..ஓ (4)

#கண்ணை சிமிட்டி முடிக்கறதுக்குள்ள சிலுப்பிக்கிட்டு வந்துடுவேன்.
அப்புறம் பெல்டுக்குப் பக்கிளை போடவும்.
இல்லேனா நான் வைக்கிற இசை நடன விருந்தில் எங்கியோ காணாம போயிடுவீங்க!!

ஆண் : அந்தரு பண்ணிகினா தா…..
இந்தா நா… தா ….
ஓ..ஓ..ஓ..ஓ (4)

#அடியில போய் ஒளிஞ்சிக்கிட்டா நான் இதோ ஓடிவந்து கண்டுபிடிச்சிடுவேன்

பெண் வேறு தேசம் போலிருக்கு.

தமிழ் மொழியில் பாடுகிறார்.
அதற்கு விசேஷ மொழிப்பெயர்ப்புத் தேவையில்லை.

பெண் : மன்னவா நீ வா வா வா
முத்தங்களை நீ தா தா தா
பொழிந்தது நிலவோ
மலர்ந்தது கனவோ…ஓ…ஓ….

பெண் : ஹா ஹா ஹா ஹா ஹா..(4)


ஆண் : குபீலு பிஸ்து பல்து
குபீர்னு பிஸ்தாவா பல்டியடிப்பேன் ஜாக்கிரதை!


குழு : விக்கலு விக்கலு
ஹே தொட்டனா தொட்டனா
விக்கலு விக்கலு

ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ….
விக்கல் வந்தா கூட தொடர்ந்து பாடுவோம் ஆடுவோம்.

ஆண் : கொக்கலங்க கொக்கலங்க
கொக்கலங்க குபீலு
ஹைட்டுலிருந்து டைவு அடிச்சா
டம்மாலு
ஹம்ப்டி டம்படி சேட் ஆன் அ வால்.
ஹம்ப்டி டம்படி ஹேட் அ கிரேட் பால்.

ஆண் : நம்ம புஷ்டிருக்க கோட்டையில்ல
அல்லா ஜோரும் பேட்டைல
சிரிசினுகுறோம் சேட்டையிலகுபீலு

#நாம பிடிச்சிருக்கிற கோட்டையில எல்லாரும் சிரிச்சிக்கிட்டு இருக்கோம் ஜாலியா.

ஆண் : பிசுறு கெளப்பு
பிசுறு கெளப்பு
கொக்கலங்க கொக்கலங்க
கொக்கலங்க குத்த போடு
சுணுங்காம குத்தாட்டம் போடு!
சுணுங்காம குத்தாட்டம் போடு!

நீங்க நினைக்கிறா மாதிரி ஒன்னும் புரியாத பாடல் இலை இது. கொஞ்சம் மெனக்கெட்ட புரிஞ்சிடும்!!

07 October, 2013

கோச்சடையான் படத்தின் பாடல்... வரிகளுடன்...!



  “எங்கே போகுதோ வானம்… அங்கே போகிறோம்..நாமும்
வாழ்வில் மீண்டாய்  வையம் வென்றாய்
எல்லை உனக்கில்லை தலைவா…

காற்றின் பாடல்கள் என்றுமே தீராது..
வெற்றிச் சங்கொலி என்றுமே
ஓயாது…ஓயாது…

ஹே….உனது வாளால் ஒரு சூரியனை உண்டாக்கு..
ஹே…எனது தோழா  நம் தாய்நாட்டை பொன்னாக்கு
ஆகாயம் தடுத்தால் பாயும் பறவை ஆவோம்
மாமலைகள் தடுத்தால்  தாவும் மேகம் ஆவோம்
காடு தடுத்தால்  காற்றாய் போவோம்
கடலே தடுத்தால் மீன்கள் ஆவோம்
வீரா…வைரம் உன்  நெஞ்சம் நெஞ்சம் நெஞ்சம்
வெற்றி உன்னை வந்து  கெஞ்சும்  கெஞ்சும் கெஞ்சும்
லட்சியம் என்பதெல்லாம் வலி கண்டு பிறப்பதடா
வெற்றிகள் என்பதெல்லாம் வாள் கண்டு பிறப்பதடா

எங்கே போகுதோ வானம்…

அங்கே போகிறோம்..நாமும்

வாழ்வில் மீண்டாய்  வையம் வென்றாய்
எல்லை உனக்கில்லை தலைவா…

எந்தன் வில்லும் சொல்லிய சொல்லும்
எந்த நாளும் பொய்த்ததில்லை
இளைய சிங்கமே எழுந்து போராடு  போராடு
வீரா…வைரம் உன் நெஞ்சம் நெஞ்சம் நெஞ்சம்
வெற்றி உன்னை வந்து கெஞ்சும்  கெஞ்சும் கெஞ்சும்

உங்களின் வாழ்த்துக்களால் உயிர் கொண்டு
எழுந்து விட்டேன்
வாழ்த்திய மனங்களுக்கு என் வாழ்க்கையை வழங்கி விட்டேன்.
ஹே….உனது வாளால்  ஒரு சூரியனை உண்டாக்கு..
ஹே…எனது தோழா  நம் தாய்நாட்டை பொன்னாக்கு

எங்கே போகுதோ வானம்…
அங்கே போகிறோம்..நாமும்

வாழ்வில் மீண்டாய் வையம் வென்றாய்
எல்லை உனக்கில்லை தலைவா…

காற்றின் பாடல்கள் என்றுமே தீராது..
வெற்றிச் சங்கொலி என்றுமே ஓயாது…ஓயாது…



பாடல் – வைரமுத்து பாடியது – எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசை – ஏ.ஆர். ரகுமான்  இயக்கம் – சௌந்தர்யா அஸ்வின்

28 July, 2011

ஒரு தமிழனின் உணர்வை இங்கு பாருங்கள்....


தமிழ் மொழி இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, உள்ளிட்ட உலகநாடுகளில்  63+ மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.  முதல் 20 உலக மொழிகள் பட்டியலில் 18 வது இடம் பிடித்திருக்கிறது.  அப்படி சிறப்பு வாழ்ந்த மொழியைப்பற்றி வைரமுத்து அவர்களால்....

Related Posts Plugin for WordPress, Blogger...