கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label தேசியம். Show all posts
Showing posts with label தேசியம். Show all posts

18 July, 2013

தேசபக்தி வளர்த்த இந்திய சினிமாக்கள்... ஒரு பார்வை


விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் சுதந்திர உணர்வை வளர்த்ததிலும் சரி, விடுதலைக்குப் பிந்தைய காலகட்டத்தில் தேசபக்தியை மக்கள் மனதில் அழுத்தமாக விதைத்ததிலும் சரி... சினிமாவின் பங்களிப்பு மறுக்கமுடியாதது.

தெற்கு வடக்கு என்ற பேதங்களைத் தாண்டி இந்த விஷயத்தில் படைப்பாளிகள் மிகச் சிறந்த பணியைச் செய்தனர். பொழுதுபோக்கு என்ற பெயரில் தேசத்தின் உணர்வு மழுங்கிக் கொண்டிருக்கும் போதெல்லாம், ஏதாவது ஒரு தேசபக்திப் படம் வெளியாகி, நாம் இந்தியர் என்ற நினைப்பை நிலைநிறுத்திவிடும். ஷாஹீத் முதல் சக்தே வரை இந்த போக்கைக் காணலாம்.

சுதந்திர இந்தியா தனது 64வது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த தருணத்தில், அந்த தேசபக்திப் படங்களைப் பற்றிய ஒரு பின்னோக்குப் பார்வை...

ஷாஹீத் (1948)

நாடு விடுதலையடைந்த பிறகு வந்த படங்களில் மிக முக்கியமானது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சுருக்கமான வரலாற்றுப்பதிவு இந்தப் படம். திலீப் குமார், காமினி கௌஷல் நடித்திருந்தனர். பல தேசபக்திப் படங்கள் உருவாக ஒரு அடித்தளமாக இந்தப் படம் திகழ்ந்தது என்றால் மிகையல்ல.

மதர் இந்தியா (1957)

நாடுதான் முக்கியம்... மகனா தாய் நாடா என்று வந்தால் மகனைக் கொல்லக் கூட தயங்காத ஒரு உதாரணத் தாயின் கதைதான் மதர் இந்தியா. கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்பு மட்டுமல்ல, கிராம வாழ்க்கைதான் இந்த தேசத்தின் கலாச்சார அடையாளம் என்பதை அத்தனை அழகாக படம்பிடித்திருந்தார்கள் இந்தப் படத்தில். மெஹபூப்கான் தயாரித்து இயக்கிய இந்தப் படத்தில் நர்கீஸ், சுனில் தத், ராஜேந்திரகுமார், ராஜ் குமார் என பல ஜாம்பவான்கள் நடித்திருந்தனர். இசைமேதை நௌஷத் இசையமைத்திருந்தார்.

அன்றைய காலகட்டத்தில் வசூலில் பெரும் புரட்சி செய்த படம் இது. ஒரு வருடத்துக்குமேல் ஓடியது.

வீரபாண்டிய கட்டபொம்மன் (1959)

 இந்திய சினிமா என்பது இந்தி சினிமா மட்டுமல்ல என்ற உண்மையை உரத்துச் சொன்ன படம் வீரபாண்டிய கட்டபொம்மன். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிரான முதல் கலகக் குரல் கொடுத்த தமிழ் மன்னன் வீரபாண்டிய கட்டமொம்மனின் சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் கட்டபொம்மனாக வாழ்ந்திருந்தார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சொல்லப் போனால் கட்டபொம்மன் எப்படியிருந்திருப்பார் என்றே தெரியாத இந்த தேசத்துக்கு, அந்த வரலாற்றுப் பாத்திரத்தை தன் முகம் மூலம் பதிய வைத்தவர் நடிகர் திலகம்.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்த ஆசிய ஆப்ரோ உலகப் பட விழாவில் பங்கேற்று விருது பெற்ற திரைப்படம். நிகரற்ற கலைஞரான சிவாஜி கணேசனுக்கு முதல் சர்வதேச அங்கீகாரத்தை இந்தப் படம் பெற்றுத்தந்தது.

தமிழர் நெஞ்சங்களை விட்டு நீங்காத இந்தப் படம், இன்றைக்குப் பார்த்தாலும் உணர்ச்சி ததும்ப வைக்கும். இந்த காவியத்தைப் படைத்தவர் பிஆர் பந்துலு. இசை ஜி ராமநாதன். இந்தப் படத்தின் சிறப்பு அற்புதமான வசனங்கள். அவற்றைப் படைத்தவர் சக்தி கிருஷ்ணசாமி.

கப்பலோட்டிய தமிழன் (1961)

பிஆர் பந்துலு - நடிகர் திலகம் கூட்டணியில் வந்த இன்னுமொரு காவியம் கப்பலோட்டிய தமிழன். தென் தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சிதம்பரம் பிள்ளையின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம்.


ஒரு நிஜ ஹீரோவின் உணர்ச்சிமயமான வாழ்க்கையை அப்படியே கண்முன் நிறுத்தியிருந்தார் நடிகர் திலகம். இந்திய சினிமாவின் ஒப்பற்ற படங்களின் வரிசையில் இடம்பெறத் தேவையான அனைத்து தகுதிகளும் நிறைந்த இந்தப் படத்தில், மகாகவி பாரதியின் பாடல்களை அத்தனை அழகாக இடம்பெறச் செய்திருந்தார் இயக்குநர் பந்துலு.

ஹகீகத் (1964)

தர்மேந்திரா - ப்ரியா ராஜ்வன்ஷ், சஞ்சய் கான் நடித்த இந்தப் படம் இந்திய - சீனப் போரை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. அன்றைய இந்திய அரசு இந்தப் படத்துக்கு ஆதரவளித்தது. இந்தப் படத்தில் மதன் மோகனின் இசை பெரிதும் பேசப்பட்டது. வணிக ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்ற படம்.

கிராந்தி (1981)

திலீப் குமார், மனோஜ்குமார், சசி கபூர், சத்ருகன் சின்ஹா, ஹேமமாலினி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்த இந்தப் படத்தை மனோஜ்குமார் தயாரித்து இயக்கினார். பிரிட்டிஷ் இந்தியாவில் 1825 முதல் 1875 காலகட்டம் வரை நடந்த சுதந்திர போராட்ட நிகழ்வுகள்தான் இந்தப் படம். மிகப் பிரமாதமாக எடுக்கப்பட்டிருந்தது. வசூல் ரீதியிலும் பெரிய வெற்றிப் படம் இது.

பார்டர் (1997)

இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு பெரிதும் பரிச்சயமான ப்ளாக்பஸ்டர் படங்களுள் ஒன்று பார்டர். 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் ஏற்பட்ட போரை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. சன்னி தியோல், ஜாக்கி ஷெராப், பூஜா பட் நடித்திருந்தனர். ஜேபி தத்தா இயக்கி பார்டர், தேசபக்திப் பட வரிசையில் மிக உன்னதமான இடத்தைப் பெற்றது.

லகான் (2001)

மிகச் சிறந்த தேச பக்திப் படம் என்று போற்றப்படும் படம் அமீர்கான் நடித்து தயாரித்த லகான். பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு கிராமத்து மக்கள் தங்கள் மீது விதிக்கப்பட்ட அநியாய வரியை கிரிக்கெட் மூலம் தகர்த்த கதை இது. ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. ரூ 25 கோடியில் தயாரிக்கப்பட்டு ரூ 57 கோடியை வசூலித்துக் கொடுத்தது. தேச பக்திப் படங்களுக்கு மீண்டும் உயிர் தந்த படம் இது. அசுதோஷ் கோவாரிகர் இயக்கியிருந்தார்.

ஸ்வதேஸ் (2004)

ஷாரூக்கானை வைத்து அசுதோஷ் கோவாரிகர் தந்த இன்னொரு தேசபக்திப் படம் இது. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்... ஆனால் ஏன் இந்தியாவால் ஒளிர முடியவில்லை? என்ற ஒற்றை வரி கேள்விதான் படத்தின் மையக்கரு. ரூ 20 கோடியில் உருவாக்கப்பட்டது. ரூ 70 கோடி வரை வசூலித்தது.

மிக அற்புதமான படங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது ஸ்வதேஸ். ஏஆர் ரஹ்மானின் இசை இன்னுமொரு ப்ளஸ் இந்தப் படத்துக்கு.

ரங் தே பசந்தி (2006)

ஷாரூ ரங் தே பசந்தி படம் ஜனவரி 26,2006 ஆம் ஆண்டு வெளிவந்த பாலிவுட் திரைப்படமாகும்.கோல்டன் குலோப் விருதிற்காக ஜூலை 6,2006 ஆம் ஆண்டும் மற்றும் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கார் விருதுகளுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டது
பிரித்தானியாவைச் சேர்ந்த பெண்மணியொருவர் தனது பாட்டனார் டைரியில் குறிப்பிட்டிருந்தது போன்று இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி விபரணப்படம் எடுப்பதற்காக இந்தியாவிற்கு வருகை தருகின்றார். அங்கு இவரின் தோழியாகப் பழகும் சோனியா (சோகா அலி கான்) மூலம் இவரின் திரைப்படத்தில் நடிப்பதற்குத் தேவையான கதாபாத்திரங்களாக டல்ஜீத் (அமீர் கான்) கரன் சிங்கனியா (சித்தார்த்),அஸ்லாம் (குனால் கபூர்),மற்றும் சுகி (ஷர்மான் ஜோஷி) போன்றவர்களை அறிந்துகொள்கின்றார்.ஆரம்பத்தில் இதனை மறுக்கும் அவர்கள் பின்னர் நடிப்பதற்கு ஒப்பும் கொள்கின்றனர்.இவர்களைத் தொடர்ந்து அரசியல்வாதியாக விளங்கும் லக்ஸ்மன் பாண்டே (அதுல் குல்கர்னி)யும் சேர்ந்து கொள்கின்றார்.இவ்விபரணப் படத்தின் மூலம் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்று உண்மைகளை அறியும் இவர்கள் இந்தியாவிற்கு உதவி புரிவதில் தீவிரம் அடைகின்றனர். இதனைத் தொடர்ந்து சோனியாவின் கணவரான விமான ஓட்டுநரான அஜெய் (மாதவன்) விபத்தில் இறந்து விட்டதாகச் செய்திகள் வந்தன. இச்செய்தி பின்னர் அரசியல்வாதிகளின் பொய்யான கூற்றென்பதனை அறியும் இவரின் நண்பர்கள் அமைதி முறையில் போராடுகின்றனர். இதனைப் பொருட்படுத்தாது  இருக்கும் இந்திய அரசியல்வாதிகளை வன்முறை மூலம் அணுக ஆரம்பிக்கின்றனர். வன்முறையில் ஈடுபட்டனரா  என்று அழகாக சொல்லியிருக்கிறது இப்படம். (நன்றி விக்கிபீடியா)

சக்தே இந்தியா (2007)

யாஷ் சோப்ரா தயாரிப்பில் ஷிமித் அமின் இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான சக்தே இந்தியா, தேசிய ஒற்றுமையின் அவசியத்தை ஹாக்கி என்ற விளையாட்டு மூலம் உணர வைத்த அருமையான படம். மிகப் பெரிய விஷயத்தை மிக அழகாக எளிமையாகச் சொல்லி உணர்ச்சி வசப்பட வைத்தார்கள்.


இந்தப் படத்தின் ஒரு காட்சியில், ஹாக்கி அணிக்கு தேர்வு பெறும் வீராங்கனைகள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வார்கள். ஒவ்வொருவரும் நான் டெல்லி, நான் ஹரியானா, நான் ஆந்திரா என்று தன்னை பிரகடனப்படுத்தும்போது, அத்தனை பேரையும் தகுதியற்றவர்களாக அறிவிக்கும் ஷாரூக்கான், அணியின் ஒரு பெண் மட்டும் தன்னை இந்தியா என்று பிரதிநிதித்துவப்படுத்த, அத்தனை பேரும் தங்கள் தவறைப் புரிந்து கொண்டு தங்களையும் இந்தியா சார்பில் விளையாட வந்திருப்பதாக கூறுவார்கள். அந்தக் காட்சியில் படம் பார்த்த அத்தனை பேருமே கண்ணீருடன் எழுந்து நின்று கைதட்டிய காட்சியை... டெல்லியிலோ, மும்பையிலோ அல்ல... திருப்பத்தூர் என்ற இரண்டாம் கட்ட நகர திரையரங்கில் பார்க்க முடிந்தது!

இந்தப் படங்கள் என்றில்லை. இன்னும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், மராத்தி போன்ற மொழிகளிலும் எண்ணற்ற தேசபக்திப் படங்கள் வந்தன, வந்து கொண்டுள்ளன. மலையாளத்தில் வெளியான கீர்த்திசக்ரா மறக்கமுடியாதது.  (நன்றி தட்ஸ் தமிழ் மற்றும் கூகுள் இ‌மேஜ்)

ஐவி சசியின் 1921, தெலுங்கில் வெளியான அல்லூரி சீதாராமராஜூ, தமிழில் கிட்டூர் ராணி சின்னம்மா, பாரத விலாஸ், ரோஜா, பம்பாய், ஜெய்ஹிந்த், இந்தியில் கிஸ்மத், காந்தி (1948), கத்தர், 1942 எ லவ் ஸ்டோரி, சர்தார், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - தி பர்கெட்டன் ஹீரோ, சர்பரோஷ், லெஜன்ட் ஆப் பகத் சிங் போன்றவை ஏற்படுத்திய தாக்கம் சாதாரணமானதல்ல.

மொழி, மாநில எல்லை, இன வேறுபாடு போன்றவற்றால், ஆயிரம் பேதங்கள் இருந்தாலும், இந்தியன் என்ற உணர்வு எல்லோருக்குள்ளும் நீரு பூத்த நெருப்பாக அப்படியேதான் உள்ளது. அதை அவ்வப்போது விசிறிவிடும் அரிய பணியை இதுபோன்ற படங்கள் செய்து வருவது பாராட்டத்தக்கது. அதற்காகத்தான் வேறு எந்த தேசத்திலும் காணாத முக்கியத்துவத்தை சினிமாவுக்கு வழங்கி மகிழ்கிறார்கள் இந்தியர்கள்!

தொடரும்

(மீள் பதிவு...)
தங்கள் கருத்துக்காகவும் காத்திருக்கிறேன்...

18 March, 2013

பரதேசி, விஸ்வரூபம், வழக்கு எண் 18/ 9-க்கு, தேசிய விருதுகள் ... ஓரம் கட்டப்பட்ட தமிழ் சினிமா..!


2012-ம் ஆண்டு சிறந்த படங்கள், சிறந்த திரைக் கலைஞர்களுக்கான 60 வது தேசிய விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. வழக்கு எண் 18/9 மற்றும் விஸ்வரூபம் ஆகிய படங்களுக்கு தலா இரு விருதுகள் கிடைத்துள்ளன. 

பாசு சட்டர்ஜி தலைமையிலான நடுவர் குழு அறிவித்துள்ள இந்த விருதுகளில் அகில இந்திய அளவில் சிறந்த படமாக பான் சிங் தோமரும், சிறந்த பொழுதுபோக்குப் படமாக விக்கி டோனர் படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

சிறந்த நடிகர் பான் சிங் தோமரில் நடித்ததற்காக இர்பான் கான் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மராத்தி படம் தாக்-ல் நடித்த உஷா ஜாதவ் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த துணை நடிகர் விருது விக்கி டோனரில் நடித்த அனுகபூருக்கு வழங்கப்பட்டுள்ளது. 


இஷாக்காதே படத்தில் நடித்த பரிநிதி சோப்ராவுக்கு நடுவர் குழுவின் சிறப்பு விருது வழங்கப்படுகிறது. வித்யாபாலன் நடித்த கஹானிக்கு சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்கான விருதும், அக்ஷய் குமார் நடித்த ஓ மை காட் படத்துக்கு சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதும் தரப்படுகிறது. 

விஸ்வரூபம் பிராந்திய மொழிப் படங்களில் கமல்ஹாஸன் இயக்கி தயாரித்து நடித்த விஸ்வரூபம் படத்துக்கு சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த நடனத்துக்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 


பாலாஜி சக்திவேல் இயக்கி வெளிவந்த வழக்கு எண் 18/9 படத்துக்கு சிறந்த ஒப்பனைக்கான விருது கிடைத்துள்ளன. சங்கர் மகாதேவன் சிறந்த பாடகருக்கான விருது சிட்டகாங் படத்தில் இடம்பெற்ற போலோ நா பாடலைப் பாடிய சங்கர் மகாதேவனுக்கு கிடைத்துள்ளது. 

சிறந்த பாடகிக்கான விருது, மராத்தியில் வெளியான ஆர்த்தி அங்க்லேகர்ட்கேகர் படத்தில் இடம்பெற்ற நா மூன் டான் பாடலைப் பாடிய சம்ஹிதாவுக்குக் கிடைத்துள்ளது. சிறந்த இசை சிறந்த இசையமைப்பாளருக்கான விருது மராத்தி இசையமைப்பாளர் ஷைலேந்திர பார்வேவுக்கு கிடைத்துள்ளது. படம்: சம்ஹிதா. சிறந்த பின்னணி இசைக்கான விருது மலையாளப் படம் கலியாச்சனுக்கு இசையமைத்த பிஜி பாலுக்கு கிடைத்துள்ளது. 

சிறந்த பாடலுக்கான விருது சிட்டகாங்கில் இடம்பெற்ற போலோ நா பாடலுக்குக் கிடைத்துள்ளது. மலையாளம் மலையாளத்தில் வெளியான உஸ்தாத் ஓட்டல் படத்தின் வசனத்தை எழுதிய அஞ்சலி மேனனுக்கு சிறந்த வசனகர்த்தா விருது கிடைத்துள்ளது. தெலுங்கில் சிறந்த படமாக ராஜமௌலி இயக்கிய ஈகா தேர்வு செய்யப்பட்டுள்ளது சிறந்த இயக்குநர் மராத்தியில் வெளியான தாக் (Dhag) படத்தை இயக்கிய ஸ்ரீ சிவாஜி லோட்டன் பட்டேலுக்கு சிறந்த இயக்குநருக்கான விருது கிடைத்துள்ளது. 

இந்திரா காந்தி விருது புதுமுக இயக்குநரின் சிறந்த படத்துக்கான இந்திராகாந்தி தேசிய விருது சிட்டகாங் (இந்தி) மற்றும் 101 சூடியங்கள் (மலையாளம்) படங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ரிதுபர்னோ கோஷ் பிரபல வங்காள இயக்குநர் ரிதுபர்னோ கோஷ் (சித்ராங்கதா) மற்றும் இயக்குநர் நவாசுதீன் சித்திக் ஆகியோருக்கு நடுவர் குழுவின் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தமிழுக்கு அவ்வளவு சிறப்பானதாக இல்லை. பல்வேறு சிறந்த தமிழ்ப்படங்கள் வந்தும் இந்த ஆண்டிற்காக விருகள் பட்டியலில் அதிகம் இட்ம் பெற வில்லை. இது தமிழ் திரைஉலகினருக்கும் தமிழ் ரசிகர்களுக்கும் பெருத்த ஏமாற்றமே..

23 November, 2011

விஜயகாந்த் உண்ணாவிரதத்தின் உண்மையான பின்னணி...


விஜயகாந்தின் தேமுதிக கட்சி அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த வெற்றிவாகை சூடி, பின் உள்ளாட்சி தேர்தலில் அந்தக் கூட்டணியிலிருந்து பிரிந்து முதல்முறையாக பெரும் போராட்டம் ஒன்றை நாளை நடத்துகிறது. 

பால் கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை தேமுதிகவினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர். அந்த செய்தியை மைப்படுத்திய ஒரு நகைச்சுவை உரையாடல்.

பிரேமலதா : ஏங்க எழுந்திருங்க...

விஜயகாந்த் : என்னம்மா..! விடும்மா இப்பத்தானே மணி 10 ஆகுது.


பிரேமலதா :  நைட்டுல டைட்டா சாரி லேட்டா படுத்தா இப்படிதாங்க... எந்திரிங்க சட்டசபைக்கு போகனும்...

விஜயகாந்த் : விடும்மா அது பெரிய மேட்ரே இல்லை..  நாளைக்கு பாத்துக்கலாம்

பிரேமலதா :  ஏங்க பிரஸ்-காரங்க கேட்டா என்ன சொல்லுவீங்க...
 

விஜயகாந்த் : அதுக்கும் ஐடியா இருக்கும்மா.. ”ஐயாம் சப்பரீங் பிரம் பீவர்” ...ம்... அப்படின்னு சொல்லிடலாம்.

பிரேமலதா :  ஏங்க நீங்க ஒரு மாநிலத்தின் எதிர்கட்சித்தலைவர். அதை மறந்துட்டு இப்படியிருக்கீங்க...

பாருங்க நைட்டோட நைட்டா பஸ் கட்டணம், பால் விலை, மின் கட்டணம், அத்த‌னையும் ஏத்திபுட்டாங்க நீங்க அதுக்கு ஏதாவது அறிக்கை விடுங்க..


விஜயகாந்த் : பொரும்மா.. ஏன் அவசறபடுற... மத்த தலைவரெல்லாம் அறிக்கை விடுவாங்கல்ல அதை எல்லாத்தையும் சேர்த்து பெரிய அறிக்கையா நம்ம கேப்டன் டீவில வாசிச்சிட சொல்லிடலாம். அப்பத்தான் நான் கரைட்டா பேசுரேனா என்ற டவுட்டு எனக்கு வராது.

பிரேமலதா :  எக்கேடாவது கெட்டுப்போகட்டும். அதுசரி இந்த விலை உயர்வை கண்டித்து வர்ற 1-ந் தேதி திமுக பார்ட்டி போரட்டங்க அறிவிச்சிருக்கு. நீங்க ஏதாவது போராட்டம் செஞ்சி மக்கள் மத்தியில நல்ல பேரு எடுங்க.

விஜயகாந்த் : அப்படியா சங்கதி.. பரவாயில்லயே எல்லா விஷயமும் தெரிஞ்சி வச்சியிருக்கே. அப்படின்னா நாம உண்ணாவிரதம் ஆரம்பிச்சிடுவோம்.

சரி... நான் எப்போதும் வியாழக்கிழமை ஒருபொழுது இருக்கேன் இல்ல. அந்தநாள்ளே உண்ணாவிரதத்தை வச்சிக்கலாம்.


அப்ப காலையில் நல்ல ஒரு கட்டுகட்டிட்டு கொஞ்சம் நேரம் அப்படியே இருந்துபுட்டு சாயங்காலம் 4 மணிக்கெல்லாம் வந்திடுறேன். எப்படி என்னுடைய அரசியல் ராஜதந்திரம்.


பிரேமலதா :  இப்ப தெரியாதுங்க.. அடுத்த முறை ஓட்டுகேட்க போகும்போதுதான் தெரியும் உங்க ராஜதந்திரம்.
 

விஜயகாந்த் : விடுமா.. நாம என்ன சொன்னாலும் நம்ம புரட்சிதலைவி கேட்டுக்கமாட்டாங்க. இந்த 5 ஆண்டுக்கு அவங்க வச்சதுதான் சட்டம், நமக்கு வந்து சேர வேண்டியது எல்லாம் வந்தாச்சியில்ல. அப்புறம் நமக்கு என்ன கவலை. மக்களை நம்பவைக்கிறதுக்கு இப்படி ஏதாவது செய்யணும்மில்ல.

சரி.. சரி.. நாளைக்கு உண்ணாவிரதத்துக்கு போறேன். இன்னிக்கு நல்ல ஆட்டுக்கால் பாயாவேட டிபன் ரெடிப்பண்ணு... நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிட்டு வறேன்.



அம்புட்டுதாங்க....

18 August, 2011

தடம்மாறி போகிறது... நம் தேசத்தின் அறப்போர்...

இந்தியாவில் பிரபலமடைய அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களால்  கண்டறியப்பட்ட தற்போதை புதிய வழிதான் உண்ணாவிரதம்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் முழு பலத்தை அரங்கேற்றியப்பிறகு, எதிர்த்து கேட்க இனி இந்தியாவில் யாரும் இருக்ககூடாது என்று எண்ணிய காலத்தில்,  புதிய  ஆயுதங்கள் கண்டுப்பிடிப்புகள் காரணமாக ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய போர் முறைகள் நம்முடையதை விட படுபயங்கரமானதாக இருந்தது. அதற்க்கெல்லாம் மேலானதாக ஒரு போர்முறை இருக்க வேண்டும் என்று இந்திய தரப்பில் கண்டுப்பிடிக்கப்பட்ட நவீன ஆயுதம்தான் “அஹிம்சை” என்கிற “அறப்போர்“

காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்து தன்னை சுதந்திர போராட்டத்தில் இணைத்துக்கொண்டப்பிறகு தன்னுடைய புதிய அறவழிப்போராட்டமான உண்ணாவிரதத்தை 1917-ல் பீகாரில் சம்ப்ரான் என்ற இடத்தில், ஜரோப்பிய அவுரிச்செடி பண்ணையர்களுக்கெதிராக ஒரு போராட்டத்தை அறிவித்து அங்குதான் “சத்தியாகிரகம்” வழியில் முதன்முதலாக உண்ணாவிரதம் என்ற மிகப்பெரிய போர் முறையை அறங்கேற்றினார்.

நாம் துப்பாக்கி தூக்கியிருந்தால் ‌ஆங்கிலேயன் பீரங்கி தூக்கியிருப்பான், நாம் பீரங்கி பயன்படுத்தியிருந்தால் அவர்கள் அதை விட பயங்கரமான ஆயுதத்தை எடுத்திருப்பார்கள்.  நாம் பயன்படுத்தியதோ அஹிம்சை அஹிம்சைக்கு எதிராக எந்த ஆயுதத்தை பயன்படுத்துவது என்று தெரியாமல் விழிப்பிதுங்கிய ஆங்கிலேயன் நம் நாட்டைவிட்டே ஓடிவிட்டான்.

நல்ல நோக்கத்திற்க்காகவும், கண்டிப்பாக பலன் அளிப்பதாகவும், போர்முறையின் உச்சக்கட்ட ஆயுதமாகவும் இருந்த அஹிம்சைப்போரான உண்ணாவிரதம் இன்று தடம்மாறிப் சென்றுக் கொண்டிருக்கிறது.
நாட்டில் எதற்க்கெடுத்தாலும் உண்ணாவிரதம் என்ற நிலைக்கு இன்று நாடு வந்துவிட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை உண்ணாவிரதம் மேற்க்கொண்ட ‌விதம் அந்த பிரச்சனைகளை முடித்து வைப்பதாக இருந்தது. இறுதிக்கட்ட ‌ஆயுதமாக இருந்த இப்போராட்டம் தற்போது முதற்கட்ட ஆயுதமாக உறுமாறிவிட்டது. ‌ எதற்கெடுத்தாலும் உண்ணாவிரதம் என்ற போக்கால் அந்த உண்ணாவிரதம் என்ற வார்த்தை கலையிழந்துப்போயிருக்கிறது.

 20 நாட்கள் 30 நாட்கள் கூட உண்ணா‌நோம்பிருந்து தலைவர்கள் நாட்டின் பிரச்சனைக்காக போராடினார்கள். ஆனால் தற்போது 2 மணிநேரம்  3 மணிநேரம் கூட  இப்போராட்டம் அரங்கேருகிறது. தற்போதைய அரசியல் வாதிகளுக்கு இது தன்னை பிரபலப்படுத்தி கொள்வதற்க்காக இப்போராட்‌டத்தை தற்போது பயன்படுத்திக் கொண்டுவருகிறார்கள்.

டெல்லியில் சமீப காலத்தில் கருப்பு பணம், லோக்பால் போன்ற பிரச்சனையை மையப்படுத்தி ராம்தேவ், அன்னா ஹசாரே, போன்றோரும், ஆந்திராவில் தெலுங்கான பிரச்சனையை மையப்படுத்தியும், தமி‌ழகத்தில் இலங்கைப்பிரச்சனை, காவிரிப்பிரச்சனைகளை முன்வைத்தும் அதிரடியாய் உண்ணாவிரதம் ஆரம்பித்து தன்னுடைய பிரபலத்தை அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் இன்னும் அப்படியேத்தான் இருக்கிறது.
லோக்பால் சரியில்லை என இந்திய பாராளுமன்றத்தையே அவமதிப்பதுபோன்று அன்னா ஹசாரே அவர்கள் நேற்று (17-08-2011) தன்னுடைய உண்ணாவிரத போராட்டத்தை  ஆரம்பித்து கைதும் செய்யப்பட்டார். இது வெற்றிப்பெறுமா அல்லது தோல்வியுறுமா என்று எனக்கு தெரியவில்லை. அவருடைய எண்ணம் சரியானதாகவும், கொண்ட போராட்டத்தில் இருந்து விலகாதவரை இப்போர் நன்மையிலே முடியும்.

உலகமே பார்த்து வியந்த ஒரு அறப்போரை கௌவரப்படுத்தி  காப்பது நாம் ஒவ்வோருவருடைய கடமையாகும். அப்போது தான் உலக அளவில் தன்னை தனித்துவம் கொண்ட நாடாக அடையாளப்படுத்திக் கொண்டுருக்கும், உலகின் சுருக்கமான இந்தியா  தன் கிரீடத்தை கழட்டாமல் இருக்கும்.

15 August, 2011

பதிவுலக வரலாற்றில் முதல்முறையாக....

...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.













.
.
.
.
.
.
..
.
.
.
.

13 August, 2011

இந்தியா 64: தேசபக்தி வளர்த்த இந்திய சினிமாக்கள்... ஒரு பார்வை


விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் சுதந்திர உணர்வை வளர்த்ததிலும் சரி, விடுதலைக்குப் பிந்தைய காலகட்டத்தில் தேசபக்தியை மக்கள் மனதில் அழுத்தமாக விதைத்ததிலும் சரி... சினிமாவின் பங்களிப்பு மறுக்கமுடியாதது.

தெற்கு வடக்கு என்ற பேதங்களைத் தாண்டி இந்த விஷயத்தில் படைப்பாளிகள் மிகச் சிறந்த பணியைச் செய்தனர். பொழுதுபோக்கு என்ற பெயரில் தேசத்தின் உணர்வு மழுங்கிக் கொண்டிருக்கும் போதெல்லாம், ஏதாவது ஒரு தேசபக்திப் படம் வெளியாகி, நாம் இந்தியர் என்ற நினைப்பை நிலைநிறுத்திவிடும். ஷாஹீத் முதல் சக்தே வரை இந்த போக்கைக் காணலாம்.

சுதந்திர இந்தியா தனது 64வது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த தருணத்தில், அந்த தேசபக்திப் படங்களைப் பற்றிய ஒரு பின்னோக்குப் பார்வை...

ஷாஹீத் (1948)

நாடு விடுதலையடைந்த பிறகு வந்த படங்களில் மிக முக்கியமானது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சுருக்கமான வரலாற்றுப்பதிவு இந்தப் படம். திலீப் குமார், காமினி கௌஷல் நடித்திருந்தனர். பல தேசபக்திப் படங்கள் உருவாக ஒரு அடித்தளமாக இந்தப் படம் திகழ்ந்தது என்றால் மிகையல்ல.

மதர் இந்தியா (1957)

நாடுதான் முக்கியம்... மகனா தாய் நாடா என்று வந்தால் மகனைக் கொல்லக் கூட தயங்காத ஒரு உதாரணத் தாயின் கதைதான் மதர் இந்தியா. கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்பு மட்டுமல்ல, கிராம வாழ்க்கைதான் இந்த தேசத்தின் கலாச்சார அடையாளம் என்பதை அத்தனை அழகாக படம்பிடித்திருந்தார்கள் இந்தப் படத்தில். மெஹபூப்கான் தயாரித்து இயக்கிய இந்தப் படத்தில் நர்கீஸ், சுனில் தத், ராஜேந்திரகுமார், ராஜ் குமார் என பல ஜாம்பவான்கள் நடித்திருந்தனர். இசைமேதை நௌஷத் இசையமைத்திருந்தார்.

அன்றைய காலகட்டத்தில் வசூலில் பெரும் புரட்சி செய்த படம் இது. ஒரு வருடத்துக்குமேல் ஓடியது.

வீரபாண்டிய கட்டபொம்மன் (1959)

 இந்திய சினிமா என்பது இந்தி சினிமா மட்டுமல்ல என்ற உண்மையை உரத்துச் சொன்ன படம் வீரபாண்டிய கட்டபொம்மன். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிரான முதல் கலகக் குரல் கொடுத்த தமிழ் மன்னன் வீரபாண்டிய கட்டமொம்மனின் சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் கட்டபொம்மனாக வாழ்ந்திருந்தார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சொல்லப் போனால் கட்டபொம்மன் எப்படியிருந்திருப்பார் என்றே தெரியாத இந்த தேசத்துக்கு, அந்த வரலாற்றுப் பாத்திரத்தை தன் முகம் மூலம் பதிய வைத்தவர் நடிகர் திலகம்.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்த ஆசிய ஆப்ரோ உலகப் பட விழாவில் பங்கேற்று விருது பெற்ற திரைப்படம். நிகரற்ற கலைஞரான சிவாஜி கணேசனுக்கு முதல் சர்வதேச அங்கீகாரத்தை இந்தப் படம் பெற்றுத்தந்தது.

தமிழர் நெஞ்சங்களை விட்டு நீங்காத இந்தப் படம், இன்றைக்குப் பார்த்தாலும் உணர்ச்சி ததும்ப வைக்கும். இந்த காவியத்தைப் படைத்தவர் பிஆர் பந்துலு. இசை ஜி ராமநாதன். இந்தப் படத்தின் சிறப்பு அற்புதமான வசனங்கள். அவற்றைப் படைத்தவர் சக்தி கிருஷ்ணசாமி.

கப்பலோட்டிய தமிழன் (1961)

பிஆர் பந்துலு - நடிகர் திலகம் கூட்டணியில் வந்த இன்னுமொரு காவியம் கப்பலோட்டிய தமிழன். தென் தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சிதம்பரம் பிள்ளையின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம்.


ஒரு நிஜ ஹீரோவின் உணர்ச்சிமயமான வாழ்க்கையை அப்படியே கண்முன் நிறுத்தியிருந்தார் நடிகர் திலகம். இந்திய சினிமாவின் ஒப்பற்ற படங்களின் வரிசையில் இடம்பெறத் தேவையான அனைத்து தகுதிகளும் நிறைந்த இந்தப் படத்தில், மகாகவி பாரதியின் பாடல்களை அத்தனை அழகாக இடம்பெறச் செய்திருந்தார் இயக்குநர் பந்துலு.

ஹகீகத் (1964)

தர்மேந்திரா - ப்ரியா ராஜ்வன்ஷ், சஞ்சய் கான் நடித்த இந்தப் படம் இந்திய - சீனப் போரை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. அன்றைய இந்திய அரசு இந்தப் படத்துக்கு ஆதரவளித்தது. இந்தப் படத்தில் மதன் மோகனின் இசை பெரிதும் பேசப்பட்டது. வணிக ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்ற படம்.

கிராந்தி (1981)

திலீப் குமார், மனோஜ்குமார், சசி கபூர், சத்ருகன் சின்ஹா, ஹேமமாலினி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்த இந்தப் படத்தை மனோஜ்குமார் தயாரித்து இயக்கினார். பிரிட்டிஷ் இந்தியாவில் 1825 முதல் 1875 காலகட்டம் வரை நடந்த சுதந்திர போராட்ட நிகழ்வுகள்தான் இந்தப் படம். மிகப் பிரமாதமாக எடுக்கப்பட்டிருந்தது. வசூல் ரீதியிலும் பெரிய வெற்றிப் படம் இது.

பார்டர் (1997)

இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு பெரிதும் பரிச்சயமான ப்ளாக்பஸ்டர் படங்களுள் ஒன்று பார்டர். 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் ஏற்பட்ட போரை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. சன்னி தியோல், ஜாக்கி ஷெராப், பூஜா பட் நடித்திருந்தனர். ஜேபி தத்தா இயக்கி பார்டர், தேசபக்திப் பட வரிசையில் மிக உன்னதமான இடத்தைப் பெற்றது.

லகான் (2001)

மிகச் சிறந்த தேச பக்திப் படம் என்று போற்றப்படும் படம் அமீர்கான் நடித்து தயாரித்த லகான். பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு கிராமத்து மக்கள் தங்கள் மீது விதிக்கப்பட்ட அநியாய வரியை கிரிக்கெட் மூலம் தகர்த்த கதை இது. ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. ரூ 25 கோடியில் தயாரிக்கப்பட்டு ரூ 57 கோடியை வசூலித்துக் கொடுத்தது. தேச பக்திப் படங்களுக்கு மீண்டும் உயிர் தந்த படம் இது. அசுதோஷ் கோவாரிகர் இயக்கியிருந்தார்.

ஸ்வதேஸ் (2004)

ஷாரூக்கானை வைத்து அசுதோஷ் கோவாரிகர் தந்த இன்னொரு தேசபக்திப் படம் இது. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்... ஆனால் ஏன் இந்தியாவால் ஒளிர முடியவில்லை? என்ற ஒற்றை வரி கேள்விதான் படத்தின் மையக்கரு. ரூ 20 கோடியில் உருவாக்கப்பட்டது. ரூ 70 கோடி வரை வசூலித்தது.

மிக அற்புதமான படங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது ஸ்வதேஸ். ஏஆர் ரஹ்மானின் இசை இன்னுமொரு ப்ளஸ் இந்தப் படத்துக்கு.

ரங் தே பசந்தி (2006)

ஷாரூ ரங் தே பசந்தி படம் ஜனவரி 26,2006 ஆம் ஆண்டு வெளிவந்த பாலிவுட் திரைப்படமாகும்.கோல்டன் குலோப் விருதிற்காக ஜூலை 6,2006 ஆம் ஆண்டும் மற்றும் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கார் விருதுகளுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டது
பிரித்தானியாவைச் சேர்ந்த பெண்மணியொருவர் தனது பாட்டனார் டைரியில் குறிப்பிட்டிருந்தது போன்று இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி விபரணப்படம் எடுப்பதற்காக இந்தியாவிற்கு வருகை தருகின்றார். அங்கு இவரின் தோழியாகப் பழகும் சோனியா (சோகா அலி கான்) மூலம் இவரின் திரைப்படத்தில் நடிப்பதற்குத் தேவையான கதாபாத்திரங்களாக டல்ஜீத் (அமீர் கான்) கரன் சிங்கனியா (சித்தார்த்),அஸ்லாம் (குனால் கபூர்),மற்றும் சுகி (ஷர்மான் ஜோஷி) போன்றவர்களை அறிந்துகொள்கின்றார்.ஆரம்பத்தில் இதனை மறுக்கும் அவர்கள் பின்னர் நடிப்பதற்கு ஒப்பும் கொள்கின்றனர்.இவர்களைத் தொடர்ந்து அரசியல்வாதியாக விளங்கும் லக்ஸ்மன் பாண்டே (அதுல் குல்கர்னி)யும் சேர்ந்து கொள்கின்றார்.இவ்விபரணப் படத்தின் மூலம் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்று உண்மைகளை அறியும் இவர்கள் இந்தியாவிற்கு உதவி புரிவதில் தீவிரம் அடைகின்றனர். இதனைத் தொடர்ந்து சோனியாவின் கணவரான விமான ஓட்டுநரான அஜெய் (மாதவன்) விபத்தில் இறந்து விட்டதாகச் செய்திகள் வந்தன. இச்செய்தி பின்னர் அரசியல்வாதிகளின் பொய்யான கூற்றென்பதனை அறியும் இவரின் நண்பர்கள் அமைதி முறையில் போராடுகின்றனர். இதனைப் பொருட்படுத்தாது  இருக்கும் இந்திய அரசியல்வாதிகளை வன்முறை மூலம் அணுக ஆரம்பிக்கின்றனர். வன்முறையில் ஈடுபட்டனரா  என்று அழகாக சொல்லியிருக்கிறது இப்படம். (நன்றி விக்கிபீடியா)

சக்தே இந்தியா (2007)

யாஷ் சோப்ரா தயாரிப்பில் ஷிமித் அமின் இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான சக்தே இந்தியா, தேசிய ஒற்றுமையின் அவசியத்தை ஹாக்கி என்ற விளையாட்டு மூலம் உணர வைத்த அருமையான படம். மிகப் பெரிய விஷயத்தை மிக அழகாக எளிமையாகச் சொல்லி உணர்ச்சி வசப்பட வைத்தார்கள்.


இந்தப் படத்தின் ஒரு காட்சியில், ஹாக்கி அணிக்கு தேர்வு பெறும் வீராங்கனைகள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வார்கள். ஒவ்வொருவரும் நான் டெல்லி, நான் ஹரியானா, நான் ஆந்திரா என்று தன்னை பிரகடனப்படுத்தும்போது, அத்தனை பேரையும் தகுதியற்றவர்களாக அறிவிக்கும் ஷாரூக்கான், அணியின் ஒரு பெண் மட்டும் தன்னை இந்தியா என்று பிரதிநிதித்துவப்படுத்த, அத்தனை பேரும் தங்கள் தவறைப் புரிந்து கொண்டு தங்களையும் இந்தியா சார்பில் விளையாட வந்திருப்பதாக கூறுவார்கள். அந்தக் காட்சியில் படம் பார்த்த அத்தனை பேருமே கண்ணீருடன் எழுந்து நின்று கைதட்டிய காட்சியை... டெல்லியிலோ, மும்பையிலோ அல்ல... திருப்பத்தூர் என்ற இரண்டாம் கட்ட நகர திரையரங்கில் பார்க்க முடிந்தது!

இந்தப் படங்கள் என்றில்லை. இன்னும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், மராத்தி போன்ற மொழிகளிலும் எண்ணற்ற தேசபக்திப் படங்கள் வந்தன, வந்து கொண்டுள்ளன. மலையாளத்தில் வெளியான கீர்த்திசக்ரா மறக்கமுடியாதது.  (நன்றி தட்ஸ் தமிழ் மற்றும் கூகுள் இ‌மேஜ்)

ஐவி சசியின் 1921, தெலுங்கில் வெளியான அல்லூரி சீதாராமராஜூ, தமிழில் கிட்டூர் ராணி சின்னம்மா, பாரத விலாஸ், ரோஜா, பம்பாய், ஜெய்ஹிந்த், இந்தியில் கிஸ்மத், காந்தி (1948), கத்தர், 1942 எ லவ் ஸ்டோரி, சர்தார், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - தி பர்கெட்டன் ஹீரோ, சர்பரோஷ், லெஜன்ட் ஆப் பகத் சிங் போன்றவை ஏற்படுத்திய தாக்கம் சாதாரணமானதல்ல.

மொழி, மாநில எல்லை, இன வேறுபாடு போன்றவற்றால், ஆயிரம் பேதங்கள் இருந்தாலும், இந்தியன் என்ற உணர்வு எல்லோருக்குள்ளும் நீரு பூத்த நெருப்பாக அப்படியேதான் உள்ளது. அதை அவ்வப்போது விசிறிவிடும் அரிய பணியை இதுபோன்ற படங்கள் செய்து வருவது பாராட்டத்தக்கது. அதற்காகத்தான் வேறு எந்த தேசத்திலும் காணாத முக்கியத்துவத்தை சினிமாவுக்கு வழங்கி மகிழ்கிறார்கள் இந்தியர்கள்!

சுதந்திரத்தை போற்றுபோம்....



தங்கள் கருத்துக்காகவும் காத்திருக்கிறேன்...

11 August, 2011

அவமானம்.... சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவை உலுக்கிய டாப் 10 ஊழல்கள்...!



எலிக்குப் பயந்து ஓடி புலியிடம் சிக்கிய கதையாகி விட்டது இந்தியர்களின் நிலைமை. வெள்ளையர்களிடமிருந்து கஷ்டப்பட்டு சுதந்திரம் அடைந்துவிட்டது நமது நாடு. ஆனால் இன்னும் ஊழல் கொள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் கிடைக்கவில்லை.

1947க்குப் பிறகு சுதந்திர இந்தியாவை அதிகம் ஆட்டிப் படைத்த 10 பயங்கரமான ஊழல்கள் குறித்த ஒரு பார்வை...

1. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்

ஊழல்களுக்கெல்லாம் தாய் என்று போற்றுதலைப் பெற்றுள்ளது இந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்.

இந்த ஊழல் இதுவரை 2 மத்திய அமைச்சர்களின் பதவிகளைப் பறித்துள்ளது. நாட்டின் விவிஐபிக்களை சிறையில் தள்ளியுள்ளது.

 முன்னாள் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா தனது பதவிக் காலத்தில் 2ஜி உரிமத்தை விதிமுறைகளை மீறி அடிமாட்டு விலைக்கு வழங்கினார், இதனால் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியது சிஏஜி எனப்படும் மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அலுவலகம். அதன் பிறகு நடந்தேறிய சம்பங்கள் உலகம் அறிந்தது.

நாட்டையே உலுக்கிய இந்த ஊழல் வழக்கு விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தால் பதவி விலகிய ஆ.ராசா, அவரது உதவியாளர் சண்டோலியா, தொலைதொடர்புத் துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ஸ்வான் டெலிகாம் நிறுவனர் பால்வா, கனிமொழி எம்.பி. உள்ளிட்ட பலர் தற்போது திஹார் சிறையில் உள்ளனர்.

லேட்டஸ்டாக தயாநிதி மாறனின் பதவியையும் இந்த 2ஜி ஊழல் பறித்ததது.

2. போலி முத்திரைத்தாள் மோசடி
அப்துல் கரீம் தெல்கி என்பவர் நாசிக்கில் பணம் மற்றும் முத்திரைத்தாள் அடிக்கும் இடத்தில் உள்ள ஊழியர்களை கையில் வைத்துக் கொண்டு போலியாக முத்திரைத்தாள் தயாரித்து அதை அரசு நிறுவனங்களுக்கே விற்பனையும் செய்து நாட்டையே அதிர வைத்தார்.

சுமார் 12 மாநிலங்களில் ரூ. 43,000 கோடிக்கு முத்திரைத்தாள் விற்கப்பட்ட தகவல் வெளியாகி அனைவரையும் அயர வைத்தார் தெல்கி.

இந்த வழக்கில் தெல்கிக்கு ரூ. 100 கோடி அபராதமும், 10 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

3. டெல்லி காமன்வெல்த் போட்டி ஊழல்

2010ம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்பு நிலவிய மெகா மற்றும் மகா குழப்பங்களை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. உலக அளவில் நம்மைப் பார்த்து பலரும் நக்கலடிக்கும் அளவுக்கு போட்டிக்கான ஏற்பாடுகளை முடிப்பதில் பெரும் காலதாமதம் செய்தனர்.

புத்தம் புதிதாக கட்டிய பாலம் உடைந்தது. சர்வேதச வீரர்களுக்காக கட்டிய குடியிருப்புகள் தங்கும் நிலையில் இல்லாமல் போனது. அறைகளுக்குள் பாம்பு வந்தது. உணவு சரியில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து இந்தியர்களை தலை குனிய வைத்து விட்டது.

பின்னர் நடந்த காமன்வெல்த் போட்டிகள் சிறப்பாக நடந்தேறின என்றாலும், சுரேஷ் கல்மாடியும், அவரது குழுவினரும் செய்த மிகப் பெரிய ஊழல்கள் குறித்த தகவல்கள் வெளியாகி அனைவரையும் அதிர வைத்தது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் டெல்லியில் கடந்த அக்டோபர் மாதம் 3-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடந்தது.

காமன்வெல்த் ஜோதி ஓட்டம், விளையாட்டு சாதனங்கள் வாங்கியது, கட்டுமானப் பணி என பல்வேறு பணிகளில் பெருமளவில் பல நூறு கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்தது தெரிய வந்து நாடே அதிர்ந்தது. இதில் ரூ. 6,000 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஊழலால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு இதைவிட 10 பத்து மடங்கு அதிகம் என்கிறார்கள்.

இந்த போட்டிகளை நடத்தியதால் உலக அரங்கில் இந்தியாவிற்கு அவப்பெயர் கிடைத்தது தான் மிச்சம்.

4. சத்யம் மோசடி

சத்யம் நிறுவன மோசடி தான் கார்ப்பரேட் உலகில் நடந்துள்ள மிகப் பெரிய மோசடியாகும். சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜு ரூ. 14,000 கோடியை சுருட்டி விட்டு, அதை ஹாயாக ஒப்புக் கொள்ளவும் செய்தார்.

தனது நிறுவனத்தில் 40 ஆயிரம் ஊழியர்களை வைத்துக் கொண்டு 53 ஆயிரம் பேர் பணி புரிவதாக பொய்க் கணக்கு காண்பித்தார். நிறுவனத்தின் வருவாயையும் பொய்யாகவே காண்பித்து வந்தார்.

சத்யம் நிறுவனமும் இப்போது மகிந்திரா நிறுவனத்திடம் போய் விட்டது. டெக் மகிந்திராவாக புது அவதாரத்துடன் அது நடை போட்டு வருகிறது.

5. பெல்லாரி சுரங்க மோசடி

கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டம் சுரங்கப் பணிகளுக்கு பெயர் போனது. தற்போது அது சட்டவிரோத சுரங்கத் தொழிலுக்கு முன் உதாரணமாக மாறியுள்ளது.

பெல்லாரியில் ரெட்டி சகோதரர்களால் நடத்தப்பட்ட சட்ட விரோதா சுரங்கத் தொழிலால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 16,000 கோடி அளவுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கர்நாடக லோக் ஆயுக்தா அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த ஊழலில் கர்நாடக முதல்வர் எதியூரப்பாவும் சிக்கினார். அவரது குடும்பமே சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வருவதாக லோக் ஆயுக்தா குற்றம் சாட்டியது. அவர் தவிர குமாரசாமி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோருக்கு இந்த சட்டவிரோத தொழிலில் உள்ள தொடர்புகளை லோக் ஆயுக்தா புட்டுப் புட்டு
வைத்துள்ளது.

கர்நாடக அரசியலில் பெரும் புயலையும், பாஜகவில் பெரும் ஓட்டையையும் போட்டு விட்ட இந்த ஊழல் புகாரில் சிக்கிய எதியூரப்பா பெரும் போராட்டத்திற்குப் பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

6. மாட்டுத்தீவன ஊழல்

ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் பீகார் மாநில முதல்வராக இருந்த போது மாட்டுத்தீவனம் வாங்கியதில் ரூ. 900 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. இதையடுத்து அவர் பதவி விலகி தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கினார்.

7. ஆதர்ஷ் ஊழல்

மும்பையில் கார்கில் போரில் நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களின் குடும்பத்திற்காக கட்டப்பட்ட குடியிருப்பு ஆதர்ஷ். 6 அடுக்கு மாடியாக கட்டத் திட்டமிட்டு இறுதியில் 31 மாடி கட்டிடமானது. இதில் விந்தை என்னவென்றால் இந்த குடியிருப்பில் 40 சதவீத வீடுகள் ராணுவ வீரர் அல்லாதவர்களுக்கு ஒதுக்கப்பட்டது தான்.

ஏற்கனவே விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதுமில்லாமல், பாதுகாப்பு அமைச்சகத்தின் நிலத்தை ஆக்கிரமித்து அதில் கட்டிடத்தை எழுப்பியுள்ளனர். இந்த ஊழல் விவகாரத்தில் சிக்கி அப்போதைய மகாராஷ்டிரா முதல்வர் அஷோக் சவான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த ஊழலால் அரசுக்கு ரூ. 95 கோடி நஷ்டம் ஏற்பட்டது.

8. போபர்ஸ் ஊழல்

இந்திய ராணுவத்துக்கு போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பீரங்கி வாங்கப்பட்டதில் ரூ.1,500 கோடி அளவில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 1989-ம் ஆண்டில் வெளிச்சத்துக்கு வந்த இந்த ஊழல் விவகாரத்தால் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி பதவி இழந்து, புதிய பிரதமராக வி.பி.சிங் பதவி ஏற்றார்.

இந்த விவகாரத்தில் இடைத் தரகராக செயல்பட்ட வின்சத்தாவும், இத்தாலிய தொழில் அதிபர் ஒட்டாவா குவாத்ரோச்சியும் ஏறத்தாழ ரூ.64 கோடி ரூபாய் கமிஷன் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. தொழில் அதிபர் குவாத்ரோச்சி ராஜீவ் காந்தி குடும்பத்திற்கு நெருக்கமானவர். இநத நிமிடம் வரை குவாத்ரோச்சியின் நிழலைக் கூட தொட முடியவில்லை சிபிஐயால். கடைசியில் குவாத்ரோச்சியை வழக்கிலிருந்தே விடுவிக்கும் நிலைக்கு சிபிஐ தள்ளப்பட்டு விட்டது.

9. யூடிஐ மோசடி

யூடிஐ மோசடியில் முன்னாள் யூடிஐ சேர்மன் பி.எஸ். சுப்பிரமணியம் மற்றும் 2 செயற்குழு தலைவர்கள் எம்.எம். கபூர், எஸ்.கே. பாசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

யூடிஐ கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ம் தேதியில் இருந்து சிறிது காலத்திற்கு சைபர்ஸ்பேஸின் 40 ஆயிரம் பங்குகளை ரூ. 3.33 கோடி கொடுத்து ராகேஷ் மேத்தாவிடம் இருந்து வாங்கியது. அந்த பங்குகளுக்கு கிராக்கி இல்லாத பொழுது வேண்டும் என்றே அதிக விலை கொடுத்து வாங்கியது. இதனால் பங்குகளின் விலை உயர்ந்தது.

அந்த 4 பேரின் சதியால் ரூ. 32 கோடி நஷ்டம் ஏற்பட்டது என்று சிபிஐ தெரிவித்தது. சைபர்ஸ்பேஸ் பங்குள் விற்பனையை ஊக்குவிக்க அதிகாரிகளுக்கு ரூ. 50 லட்சம் லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சைபர்ஸ்பேஸ் இன்போசிஸ் விளம்பரதாரரான அரவிந்த் ஜோஹாரி கைது செய்யப்பட்டார். இந்த மோசடி செய்ததற்காக அவருக்கு நிறுவனத்திடம் இருந்து ரூ. 1.18 கோடி கிடைத்துள்ளது.

10. ஹர்ஷத் மேத்தா


இந்திய பங்குச்சந்தை தரகர் ஹர்ஷத் மேத்தா. அவர் கடந்த 1992-ம் ஆண்டு மும்பை பங்குச் சந்தையில் பங்குகளின் விலை திடீர் என்று உயரக் காரணமானவர். அவர் வங்கித் திட்டங்களில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி பல வங்கிகளில் கடன் வாங்கி பல்வேறு பிரிவுகளின் பங்குகளை வாங்கிக் குவித்து அவற்றின் விலையேற்றத்தி்ற்கு காரணமானார்.

அடிப்படையே இல்லாதப் பங்குகளை அதிக அளவில் வாங்கி, விலையேற்றி, முதலீட்டாளர்களைக் கவர்ந்தார். அவரது சதித் தி்ட்டம் கண்டுபிடிக்கப்பட்டபோது வங்கிகள் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டன. இதனால் பங்குச் சந்தை நிலைகுலைந்தது. அவர் மீது 72 குற்றங்கள் சுமத்தப்பட்டு, 600-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டது. (நன்றி தட்ஸ்தமிழ்)

இந்நிலையில் மேத்தா கடந்த 2002-ம் ஆண்டு மாரடைப்பால் இறந்தார். அவருக்கு எதிரான பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

"முத்திரை ஊழல்"

இந்த பத்து ஊழல்களெல்லாம் நாட்டின் பல்வேறு சமுதாயத்தினர் செய்த ஊழல்கள். ஆனால் இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் ஒரு சம்பவம் நடந்ததை நாட்டு மக்கள் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. அது நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்குச் சாதகமாக வாக்களிக்க எம்.பிக்களுக்கு கோடி கோடியாக கொடுக்கப்பட்ட பணம்தான்.

2008ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு லோக்சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. அப்போது திடீரென பாஜக எம்.பி அசோக் அர்கால் உள்ளிட்ட மூன்று எம்.பிக்கள் பெரிய பெரிய பைகளில் பணத்தைக் கொண்டு வந்து சபாநாயகர் இருக்கை முன்பு கொட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.

அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க தங்களுக்கு பெருமளவில் பணம் கொடுக்கப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியதைப் பார்த்து நாடே அதிர்ந்தது. பெருமை மிகுந்த லோக்சபாவில் கோடி கோடியாக பணத்தைக் கொட்டிய எம்.பிக்களால் நாடே அன்று வெட்கித் தலை குணிந்தது.

மற்ற ஊழல்களுக்கு சற்றும் குறையாதது இந்த எம்.பிக்களுக்குப் பணம் கொடுத்த விவகாரம் என்பதில் சந்தேகமில்லை. 

படிப்பதற்க்கே தலைசுற்றுகிறதே இவ்வளவும் தெரிந்துக்கொண்டு நாம் சும்மாதான் இருக்கிறோம். ஒரு சில தரம் கெட்ட அரசியல்வாதிகலால் நம் இந்திய மானம் கப்பலேறுகிறது. இந்த ஊழல் ஒழிந்து நாடு என்று நல்ல நிலைக்கு நிறும்பும் என்ற ஏக்கத்தோடே கொண்டாட வேண்டியிருக்கிறது ஒல்வோறு சுதந்தரத்தையும்.....

ஜெய்ஹிந்த்...

28 July, 2011

ஒரு தமிழனின் உணர்வை இங்கு பாருங்கள்....


தமிழ் மொழி இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, உள்ளிட்ட உலகநாடுகளில்  63+ மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.  முதல் 20 உலக மொழிகள் பட்டியலில் 18 வது இடம் பிடித்திருக்கிறது.  அப்படி சிறப்பு வாழ்ந்த மொழியைப்பற்றி வைரமுத்து அவர்களால்....

Related Posts Plugin for WordPress, Blogger...