கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label thalaiva movie review. Show all posts
Showing posts with label thalaiva movie review. Show all posts

10 August, 2013

இப்படியும் படம்பார்த்தோம்...! தலைவா படம் பார்த்த என் அனுபவங்கள்


தலைவா படத்தை பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆவலாக இருந்தேன். அதற்கு காரணம் வெகுநாளாக கவிதைவீதியில் திரை விமர்சனம் எழுதாமல் இருந்தேன். ‌‌ கடந்த சில மாதங்களாக வெள்ளி சனி கி‌‌ழமைகளில் விடுமுறை இல்லை என்பதால் அந்த வாய்ப்பு இல்லாமல் போனது. ஆனால் இந்த வாரம் ரம்ஸான் புண்ணியத்தில் வரிசையாக மூன்று நாட்கள் விடுறை என்பதால் கண்டிப்பாக தலைவா படம் பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்து டிக்கெட்கூட வாங்கியாகிவிட்டது.


திருவள்ளூர் நகரில் கிருஷ்ணா மற்றும் லட்சுமி என இருதிரையரங்குகளில் படம் வெளியிடப்படும் என்பதால் படமட் பார்ப்பதில் எந்தபிரச்சனையும் இருக்காது என நினைத்தேன்.


ஆனால் கதை திருட்டு, வெடிகுண்டு மிரட்டல், அரசு தரப்பில் ‌மௌனம் என தலைவாவுக்கு வந்த தொடர் தொந்தரவுகளால் கடைசியில் தமிழில் படம் இல்லை என்றாகிவிட்டது.


(திரையரங்கில் வேடந்தாங்கல் கரண்
 

படம் பார்க்க போகிறோம் என்ற ஆவலில் தலைவா திரை விமர்சனத்திற்கு முன்... முழு விவரம்...  என்ற பதிவிட்டேன் ஆனால் வெள்ளிக்கிழமை படம் இல்லை என்ற பிறகு... தலைவா திரைவிமர்சம் மற்றும் சில நகைச்சுவைகள் என்று என் தலைவா ஆசையை பூர்த்தியாக்கிகொன்டேன்.


வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருவள்ளூர் சென்றேன். ஆனால் படம் எதுவும்போக மனமில்லை. மதிய உணவுக்கு ரம்ஸான் பிரியாணி வரும் என்ற ஆவலில் கொஞ்சம் இணையத்தில் உலவிக்ககொண்டிருந்தேன்.

1.00 மணிக்கு ‌திருவள்ளூர் ஆயிஷா டெக்ஸ்டைல்ஸ் ஓனர் இல்லத்தில் இருந்து இரண்டு பார்சல் பிரியாணி வந்தது. நண்பர் வேடந்தாங்கல் கருணை அழைத்து ஆளுக்கொரு பிரியாணி சாப்பிட்டோம். ஆந்திர மாநிலம் சத்திவேட்டில் தலைவா படம் வந்திருக்கிறது என்று தெரியவரை மொத்த பிளானும் மாறியது. அடுத்த 30 நிமிடங்களில் கரண் பைக்கில் இன்னோரு நண்பருடன் மூன்று பெரும் பயணமானோம்.



(விஜய் போஸ்டருக்கு பீர் அபிஷேகம்... பால் அபிஷேகம்)


சரியாக 2.00 மணிக்கு ஊத்துக்கோட்டை அடைந்தோம். அங்கு வந்த சில விஜய் ரசிகர்களை (தலைவா டி-சர்ட் அணிந்திருந்தார்கள்) விசாரித்ததில் தலைவா படம் இரு தியாட்டர்களில் போட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழில் படம் வரவில்லை தெலுங்கில் தான் ஓடுகிறது என்று கூறிவிட்டார்கள். (அடபாவிகளே விஜய் படத்தை முதல் நாள் பார்க்கும்போது சத்தத்தில் தமிழில் பார்த்தாலே ஒன்றும் புரியாது அது தெலுங்கில் வேறையா...?)

சரி மொழியில் என்ன இருக்கிறது என்று முன்னேறி சரியாக 3.30 மணிக்கு சத்தியவேடு அடைந்தோம்.  சத்தியவேடு முருகன் திரையங்கில் தலைவா தெலுங்கு பதிப்பு படம் போடப்பட்டிருந்தது. சாமூண்டீஸ்வரியில் தமி‌‌ழ் ஆனால் படம் வெளியாகவில்லை. அங்கு நாங்கள் கண்டகாட்சி எங்களாலே நம்ப முடியவில்லை. ஆம்  அந்த திரையரங்கமே பார்க்கதிருக்காத வகையில் சென்னை கூட்டம் நிரம்பி வழிந்தது. வழியெங்கும் சென்னை பதிவு வண்டிகள் நூற்றுக்கணக்கில் நின்றுக்கொண்டிருந்தது. 

 கற்பூரம் காட்டும் விஜய் ரசிகர்கள்


அடுத்த காட்சி மாலை 6.00 மணிக்கு என்று சொல்லிவிட்டார்கள். டிக்கெட் அப்போ‌தே வாங்கியாகிவிட்டது. 2 மணிநேரத்தை என்ன செய்வது என்று தெரியாமல் அங்கு பொழுதை போக்கவேண்டியதாகிவி்ட்டது. ஆனால் இதுவரை டாஸ்மார்ககை பார்த்த கூட்டம் ஆந்திரா ஒயின்ஷாப்பை பார்த்தவுடன் அனைத்து கூட்டமும் அங்குதான் நிறைந்து வழிந்தது.


பிறகு 5.30 மணிக்கு காட்சிக்கு சென்றால் கூட்டம் கட்டகடாங்கமால் இருந்தது. விஜய் போஸ்டருக்கு பீர் அபிஷேகம் பால் அபிஷேகம் நடந்தது... (எப்படி டெவலப் ஆயிருக்காங்க பாருங்க) பிறகு அடிச்சி பிடிச்சி உள்ளே சென்றால் வெறும் 500 இருக்கைகள் கொண்ட திரையரங்கில் 1500 பேர் பாதிபேர் நின்றே பார்க்கவேண்டிய நிலை எங்களுக்கு பெஞ்சி ஒரு ஓரம் இடம் இடைத்தது. இவ்வளவு கஷ்டப்பட்டு எந்தப்படத்தை பார்த்ததில்லை. கூட வந்த நண்பர் அவசர அழைப்பின் பேரில் படம் ஆரம்பித்த அரை மணிநேரத்தில் கிளம்பிவிட்டார் (பஸ் வழியாக).


நானும் கரணும் மட்டும் கடைசிவரை வேர்க்க விருவிருக்க பார்த்துவிட்டு இரவு 10.00 மணிக்கு கிளம்பினேன். வரும் வழிமுழுவதும் அடர்ந்த காட்டுப்பகுதி ‌என்பதால் பயந்துகொண்டே வந்தோம். இரவு 11.15 மணிக்கு வீட்டுக்குவந்தோம்.

எப்படியோ படம் பார்த்தாகிவிட்டது ஆனால் பார்த்தோம் என்றாகிவிட்டது. திரையரங்கில் கூட்டம் அதிகம் என்பதால் காற்றே இல்லை. படம் பார்த்த அனைவரும் வேர்த்துகொட்டித்தான் பார்த்தார்கள். படம் முழுக்க ஒரே சத்தம் ரசிகர்களின் ஆரவாரம் அடக்க முடியாமல் இருந்ததது.
 (சத்தியவேடு திரையரங்க வாசலில் அமர்களப்படுத்தும் சென்னை ரசிகர்கள்)

இவ்வளவு ரசிகர்களை விஜய் வைத்திருப்பது பெருமைக்குறிய விஷயம்தான் ஆனால் அத்தனை ரசிகர்களும் குடித்துவிட்டு ஆட்டம் பாட்டம் என அனைவரையும் முகம் சுளிக்க வைத்துவிடுவாதுதான் வேதனைக்கூறிய விஷயமாக இருக்கிறது.


தமிழகத்தில் இந்த படத்தை எதற்காக ‌வெளியிட தடைசெய்தார்கள் என்று புரியவில்லை ஒரு வேளை இந்த படத்தை பிரபலப்படுத்தும் முயற்சியா இது.
 
பார்ப்போம் படம் ஓடுகிறதா இல்லையா என்று...

தலைவா சினிமா விமர்சனம் / thalaiva movie review


மக்களே முதல் முதலாக ஒரு தமிழ்படத்தை தெலுங்கில் பார்த்துவிட்டு திரைவிமர்சனம் எழுதுகிறேன்.  அதற்காக எல்லாவார்த்தையிலும் “லு” சேர்க்க வேண்டியதுதானேன்னு சொல்லக்கூடாது.  படம் புரிந்து விட்டது ஆனால் சில வசனங்களைத்தான்  சரியாக ரசிக்கமுடியவில்லை.

(படம் பார்க்க சென்ற திகிலுட்டும் அனுபவங்கள் அடுத்த பதிவில்.. ஏன் ஆரூர் முனா செந்தில் மட்டும்தான் எழுதுவாரா?...)

முதலில் இந்த படத்துக்கு எதற்கு தலைவா என்று பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை. “அண்ணா” இதுதான் சத்தியராஜ் அவர்களின் திரைக்கதை பெயர். ஆந்திராவில் ஓடும் தலைவாவுக்கு “அண்ணா” என்றுதான் பெயர்... (அங்கிட்டு ஒருத்தர் சொன்னாருங்க). தமிழகத்தில் ஏன் இந்த பெயரை வைக்கவில்லை என்று நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.



கதையா...? சரி சொல்றேன்... சிவா நடித்த தமி‌ழ்படம் மாதிரி தமிழில் வந்த டான் கதைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சம் காட்சிகளை எடுத்து ஒரு படத்தை கொடுத்துவிட்டார் இயக்குனர் விஜய்.


விஜய் ஒரு மும்மபைக்காரர். மும்மபையில் ஏற்படும் ஒரு கலவரத்துக்குபிறகு  சத்தியராஜ் விஜய்யை சிறு வயதிலே ஆஸ்திரேலியா அனுப்பிவைத்துவிடுகிறார். (இவங்க கம்முன்னு சென்னை செலைட் பண்ணியிருக்கலாம்.. அப்படி ஒண்ணும் ஆஸ்திரேலியாவை சுவாரஸ்யமாக காட்டியமாதிரி தெரியவில்லை)

விஜய் ஆஸ்திரேலியாவில் மினரல் வாட்டர் கம்பெனி நடத்திவருகிறார். இவருக்கு உதவியாக கொஞ்சம் நகைச்சுவைக்காக சந்தானம். (இப்பெல்லாம் சந்தானத்தின் தேதியை வாங்கிக்கொண்டுதான் ஹீரோவின் தேதியை வாங்குகிறார்கள்போல).
மினரல் வாட்டர் தொழில் மட்டுமில்லாமல் “தமிழ் பாய்ஸ்” (அங்க தெலுங்கு பாய்ஸ்) என்ற ஒரு டான்ஸ் குழுவை வைத்துக்கொண்டு ஆஸ்திரேலியாவில் கொஞ்சம் கொஞ்சமாய் பிரபலமாகிறார். இங்கு தான் ஹீரோயின் அமலாபாய் அறிமுகம் அப்படி இப்படின்னு விஜய்யுடன் சேர்ந்து நடனக்குழுவில் இணைந்து  அங்கு நடக்கும் நடனப்போட்டியிலும் வெற்றிப்பெறுகிறார்கள்.


அதுவரை கொஞ்சம் கலகலப்பாக சென்ற படம். திருமணம் செய்துக்கொள்ள அமலாபாலுடன் விஜய் மும்பை வந்தபிறகு கதை அப்படியே மாறிவிடுகிறது.


தன் அப்பா சாதாரன தொழிலதிபர் என்று  நினைத்த விஜய்க்கு தன்அப்பா மும்மையில் மிகப்பெரிய டான் என்று தெரியும் போது திகை்ததுப்போகிறார், மேலும் அப்போதே கைது செய்து.. ஒரு பாம் பிளாஸ்டில் கொள்ளப்படுகிறார்.


அமலாபால் ஒரு சிபிஐ ஆபிஸராம் சத்தியராஜை பிடிக்கத்தான் விஜய்யுடன் பழகுகிறார் என்பது அங்குதான் அம்பலத்துக்கு வருகிறது.

அதன் பிறகு தன் தந்தை விட்டஇடத்தை தானே நிரப்‌பவேண்டும் என்பதற்காக தானே டானாக மாறுகிறார். கொஞ்ச நேரம் பில்லா அஜித் போல டிப்டாப்பாக நடக்கவிட்டிருக்கிறார்கள். அதன்பிறகு மும்பையில் வாழும் மாஹி மக்களுக்கு உதவிகள் புரிந்து அங்கு நடக்கும் பிரச்சனைகளை, கலவரங்களை தடுத்துநிறுத்தி, தன் தந்தையை கொலை செய்தவர்களை கண்டுபிடித்து பழிவாங்கி... என இப்படி இழுத்து முடிக்கிறார்கள் படத்தை...

இடைவேளைக்கு பிறகு படம் நாயகன், பில்லா, பாட்ஷா, தேவர்மகன் எனபலபடங்களை நியாபகப்படுத்துகிறது அதானல் நீங்க அங்கேயே பார்த்துக்கங்க..


ஏன்னென்று தெரியவில்லை தற்போது கதையை எடுத்துக்கொண்டு மும்பை ஓடிவிடுகிறார்கள்.... மும்பை வீதிகளை அழகிய தமிழ்மகன், துப்பாக்கி, படத்திலேயே முழுசாக காட்டிவிட்டார்கள். எல்லோரும் தாராவியை காட்டுவதால், இவர்கள் கொஞ்சம் வித்தியாசமான வடமும்பையிலுள்ள மாஹிம் பகுதியைச் சுற்றி கதையமைத்துள்ளார்கள். (ஒருவேளை பாலிவுட்டை பிடிக்க விஜய் திட்டமிட்டுருக்கிறாறா?)
 
வழக்கமான விஜய் படத்தில் வரும் காட்சிகள்தான் இந்தப்படத்திலும் புதியதாக ஒன்றும் செய்யவில்லை. வித்தியாசமான காட்சி அமைப்பு‌களோ.. பரபரப்பான திரைக்கதையோ இல்லை... (ஒரு சில இடங்களில் மட்டும் கைதட்டலாம்)


படத்துக்கு படம் விஜய்யின் இளமை கூடிக்கொண்டே இருப்பதை மறுக்க முடியாது. மனிதர் ரொம்பவும் அழகாக காணப்படுகிறார். ஆனால் இயக்குனர்களோடு ஒட்டமறுத்து அப்பாவின் பேச்சைக்கேட்டுக்கொண்டு இருந்தால் விஜய்யின் எதிர்காலம் என்னவாகும் என்று தெரியவில்லை. (அனைத்தையும் விட்டுவிட்டு அரசியல் நடத்த வந்துவிடலாம்)

அமலா பால் முதல் பாதியில் ஹோட்டல் அதிபரின் மகளாக வந்து பின் விஜய்யுடன் இணைந்து “டான்ஸ்“ குழுவில் இணைத்து நடனத்தால் அசத்தியிருக்கரார்.. இரண்டாம் பாதியில் நான்கு காட்சியில் காக்கிச்சட்டையில் வந்து போகிறார் அவ்வளவுதான்.

இன்னும் சில காதாப்பாத்திரங்கள் தங்கள் பணியை செவ்வனவே செய்கிறார்கள். நிறைய முகங்கள் தமிழ் முகங்கள் அல்ல....

எது எப்படியோ இயக்குனர் விஜய்க்கும்.. ஹீரோ விஜய்க்கும் சரியான கதைகளம் அமையவில்லை என்றே சொல்லவேண்டும்

A மற்றும் B சென்டரில் படம் டல்லடிக்கும் ஆகால் C சென்டர் மக்கள் இதை கண்டிப்பாக கொண்டாடுவார்கள்...

விமர்சகர்கள் கண்டிப்பாக இந்த படத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது என்னுடைய அபிப்ராயம்.
Related Posts Plugin for WordPress, Blogger...