கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

19 April, 2018

பயப்பட வச்சிட்டோம்ல...



பாலுக்காகவே
காலம் காலமாய்
கட்டிவைத்து
வஞ்சிக்கிறோம்
மாடுகளை...

அழகெனவே
சூடிக்கொள்ள...
கண்ணீர்  சிந்த
வைத்துவிடுகிறோம்
மலர் செடிகளை...

சாமரம்வீச
சிறகு வேண்டின்
சட்டென
உயிரறுத்து விடுகிறோம்
மயில்களை...

 கருணையின்றி
கல்லெறிந்து
காயப்படுத்துகிறோம்
காய்த்து கொடுக்கும்
கனிமரங்களை....

மகிழ்வென
உடுத்திகொள்வதற்காக
மொத்தமாய்
மாய்ந்துபோகிறது
பட்டுபுழு....

உயிர்கொண்டு
உயிர் கொள்கிறோம்...
மீனெனும் சுவைக்காக
கழுவேற்றுகிறோம்
புழுக்களை....

உள்ளிருக்கும்
ஆதிமனிதனை
இன்றளவும்
அமைதி படுத்துவது
ஆடும்  கோழியும்...

வாழ்வென
விரிவுபடுத்திக்கொள்ள
உயிர் அகற்றி
காயப்படுத்தி விடுகிறோம்
காடுகளை....

பல்லுயிர்
வேற்றுமை பாராது
காரணமின்றியே
அறுக்கிறோம்
உணவு சங்கிலியை

உண்மையில்
இன்றளவும்

நம்மை
சுற்றி வாழவே
பயந்துக் கொண்டுதான்
இருக்கிறது
சுற்றமும்.... சூழலும்....


தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..!

0 comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...