கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label அதிமுக. Show all posts
Showing posts with label அதிமுக. Show all posts

12 June, 2013

விஜயகாந்த்துக்கு, ராமதாசுக்கும் கடைசிவரை இப்படித்தானா..?


அரசியல் கட்சி நடத்துபவர்களுக்கு, அவர்கள் சார்ந்த கட்சிகளுக்கென்று, தனித்தனி கொள்கைகள் இருக்கத் தான் செய்யும். அத்தகைய கொள்கைகளை முன் வைத்துதான், தேர்தல் காலங்களில், மக்களிடம் வாக்கு சேகரிப்பர். இது தான், குடியரசின், மக்களாட்சியின் அடிப்படை சித்தாந்தம். 

அதை விடுத்து, தேர்தல் காலங்களில், கூட்டணி அமைத்து போட்டியிடுவது எந்த விதத்தில் நியாயம்? அவ்வாறாயின், அவர்கள் சார்ந்த கட்சிக் கொள்கைகள் என்னவாவது? பதவி பெறுவதற்கு, எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைப்பாடு, ஏற்றுக் கொள்ளக் கூடியதா? 

தேர்தல் காலங்களில், ஒவ்வொரு கட்சியும், தனித்தே போட்டியிட வேண்டும். வெற்றி, தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல், மக்கள் எந்த அளவிற்கு தங்களை ஆதரிக்கின்றனர் என்பதைத் தெரிந்து, அதற்கேற்றவாறு, பதவி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், மக்கள் சேவையில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்தி, பணியாற்ற முயல வேண்டும். அதுதான், மனிதாபிமானம் படைத்த உண்மையான அரசியல் நாகரிகம். 

ஜூன், 27ல், ராஜ்யசபா எம்.பி.,க்கள் தேர்தல். ஆறு பேரை, தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு எம்.பி.,யை தேர்வு செய்ய, 34 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை. இந்த அடிப்படையில், அதிக எண்ணிக்கை எம்.எல்.ஏ.,க்கள் உள்ள கட்சி எதுவோ, அக்கட்சி தங்கள் வேட்பாளரை நிற்க வைத்து, வெற்றி வாய்ப்பை தட்டிச் செல்லட்டும். 

அதை விட்டு விட்டு, பதவி பெறுவதற்காக ஒரு தனிப்பட்ட கட்சி, வேறு கட்சியை சார்ந்த தலைவர்களை கெஞ்சுவதில், என்ன நியாயம் இருக்கிறது? அவ்வாறாயின் கொள்கைகள் என்னாவது? பதவி தான் பெரிதா... என்ன ஜனநாயகமோ!

இன்னும் தமிழகத்தில் பார்த்தால் அதிமுக திமுக போன்ற கட்சிகளை சாராமல் வேறு எந்த கட்சியும் தனித்து நின்று வெற்றிப்பெற்றுவிடமுடியும் என்ற நிலை தமிழகத்தில் இல்லை.

மக்களும் கடவுளிடம் மட்டும்தான் நான் கூட்டணி என்ற விஜயகாந்தும், உயிரே போனாலும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற ராமதாசும் திராடாவிட கட்சிகளோடுதான் கூட்டணியை வைத்துக்கொண்டு இதுவரை போட்டியிட்டுக்கொண்டுயிருக்கிறார்கள்.

ஒரு கட்சி ஆதரவோடு ஜெயித்து பின்பு அதிலிருந்து விலகுவது என்பது மிகவும் பாவமான காரியம் என்பதை அரசியல் கட்சியினர் எப்போது புரிந்துக்கொள்ளப்போகிறார்களோ... 

இனிவரும் காலங்களிலாவது கூட்டணி என்ற பெயரில் கோடிகள் விளையாடி மக்களை மண்ணாக்குவதை விட்டு தனித்து நின்று மக்களோடு மக்களாக இருக்கும் தைரியம் தமிழக கட்சிகளுக்கு இருக்கிறதா...?

பொருத்திருந்து பார்ப்போம்.

04 December, 2012

அதிமுக-வில் இணைந்தார் பிரச்சார பீரங்கி நாஞ்சில் சம்பத்...!



மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரான நாஞ்சில் சம்பத் இன்று அதிமுகவில் இணைந்தார்.

மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் பிரபல பேச்சாளராகவும் இருந்தவர் நாஞ்சில் சம்பத். கடந்த சில மாதங்களாக அவருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

வைகோவும் நாஞ்சில் சம்பத்தை தமது கட்சி ஏடான சங்கொலியில் மறைமுகமாக விமர்சித்தார். வைகோவை நாஞ்சில் சம்பத்தும் கடுமையாக விமர்சித்து வந்தார். இதையடுத்து நாஞ்சில் சம்பத் ஒப்புக் கொண்ட அனைத்துக் கூட்டங்களும் சட்டென ரத்து செய்யப்பட்டன.

ஆனால் அவரை கட்சியை விட்டு வைகோ நீக்கவில்லை. நாஞ்சில் சம்பத்தும் கட்சியை விட்டு நீக்கிப் பாருங்கள் என்றெல்லாம் கொந்தளித்துக் கொண்டிருந்தார். போட்டி மதிமுகவை உருவாக்கப் போவதாகவும் கூட செய்திகள் வலம் வந்தன. திமுகவில் சேருவார் என்றும் பேச்சு அடிபட்டது. இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் இன்று திடீரென அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டார்.

சென்னையில் இன்று ஜெயலலிதாவை நேரில் சந்தித்த நாஞ்சில் சம்பத், அதிமுக உறுப்பினராக தம்மை இணைத்துக் கொண்டார்.

இனி நாஞ்சில் சம்பத் அதிமுகவின் பிரச்சார பீரங்கி!

17 October, 2012

பிரதமர் பதவிக்கு ஜெயலலிதா, வேடிக்கை பார்க்கும் திமுக ,!

தமிழகத்தில் நாளுக்கு நாள் பல்வோறு பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. மின்வெட்டு என்ற பூதத்தை அடக்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று தெரிய வில்லை அறிவிப்புகளைத்தவிர. திமுக-வாக இருக்கட்டும் அல்லது அதிமுக-வாக இருக்கட்டும் தான் இருக்கும்போது எந்த வேலையும் செய்யாமல் ஆட்சி மாறியப்பிறகே இது கிழிக்கலாம் அதைக்கிழிக்கலாம் என்று வாய்சவிடால் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். கடந்த 25 ஆண்டுகளாக இதுதான் நடந்துக்கொண்டிருக்கிறது.
 
கோவை லோக்சபா தொகுதி அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய தமிழக நிதியமைச்சர், தங்களது கட்சித் தலைவி (அதாங்க அம்மா) பிரதமரானால் தான், இந்த இந்திய நாட்டை காப்பாற்ற முடியும் என, பேசியிருக்காராம்.
 
 
என்ன ஒரு வேடிக்கைப்பாருங்க அண்ணாவளைவு எடுத்தது எனக்கு தெரியாது என்று கூறிய ஜெயலலிதா அவர்கள், மின் வெட்டு குறி்த்து துரிதமான எந்த முடிவைவையும் எடுக்காத இவர் இங்கு தமிழகத்தையே காப்பாற்ற முடியாதவர், இந்தியாவை காப்பாற்ற போகிறாராம்; நல்ல வேடிக்கை. 
 
தினமும், 10 முதல் 14 மணி நேரத்திற்கும் மேல் மின் தட்டுப்பாடு உள்ளது. இங்கு சீரான மின்சாரத்தை கொடுத்து, தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லாமல், பிரதமர் பதவி மேல் ஆசைப்படுகின்றனர். தேர்தலில் சொன்ன வாக்குறுதியை மறந்து விட்டனர். மின்தடையால் போராட்டம், உண்ணாவிரதம், மறியல், மனிதச் சங்கிலி, பந்த் என, பொது மக்களும், தொழில் துறையினரும் அல்லாடிக் கொண்டிருக்க, ஆளும் கட்சியோ, பதவி பற்றி ஊர் ஊராக செயல் வீரர்கள் கூட்டம் நடத்துகிறது. 
 
கர்நாடகாவில் உற்பத்தியாகும் காவிரி நீர், கர்நாடகாவுக்கே சொந்தம் என்று, காங்கிரஸ் கட்சி மத்திய அமைச்சர் ஒருவர், தமிழகத்துக்கு தண்ணீர் தரும்படியான உத்தரவை நிறுத்தி வைக்கும்படி, பிரதமருக்கு கோரிக்கை விடுக்கிறார். ஆனால் தமிழகத்தை சார்ந்த காங்கிரஸ் அமைச்சர்களோ, 13 ஆண்டுகளாக, மத்திய அரசில் அமைச்சர் பதவி சுகம் அனுபவித்து வரும் தி.மு.க., அமைச்சர்களோ, வாயே திறக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 
 
 
மத்திய அரசில் பதவி சுகம் காணும், தி.மு.க., தன் ஆட்சிக் காலத்திலேயே, மின்சார பற்றாக்குறையை போக்க, எந்த விதமான முயற்சிகளையும் எடுக்காமல், தொழிற்சாலைகளுக்கு வார விடுமுறை, வீடுகளுக்கு மின்வெட்டு என்ற நிலை இருந்ததோடு, மின்வாரியத்திற்கும் கோடிக்கணக்கில் கடன் வைத்து விட்டனர். 
 
ஆனால் இன்று, மின்வெட்டு தொடர்பாக போராட்டம், மறியல், துண்டு பிரசுரம் கொடுத்து, நல்லவர்கள் போல வேஷம் போடுகின்றனர்.போர்க்கால அடிப்படையில் கவனம் செலுத்தி, சீரான மின்சாரத்தை வழங்க, தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்து, தமிழக மக்களை காப்பாற்ற, ஆளுங்கட்சி முன்வர வேண்டும்.

எதிர்கால கொள்கைகள், தெலைநோக்கு பார்வை என்ற அனுகுமுறையில்லாமல் வெறும் ஆட்சி அதிகாரத்தை மட்டுமே கொள்கையாக வைத்துக்கொண்டு செயல்படும் இந்த திராவிட கட்சிகளை நாம் என்னவென்று சொல்வதோ...?
Related Posts Plugin for WordPress, Blogger...