கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label சந்திப்பு. Show all posts
Showing posts with label சந்திப்பு. Show all posts

29 April, 2013

விஜய்-க்கு அதிர்ச்சி கொடுத்த அஜீத்... பரபரப்பில் தலைவா படக்குழு...

விஜய்யின் தலைவா படப்பிடிப்பு அஜீத் குமார் திடீர் என்று வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தாராம். விஜய், அமலா பால் நடித்துள்ள தலைவா படத்தின் படிப்பிடிப்பு மும்பையில் நடந்தது. 
 
அதன் பிறகு ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டது. தற்போது தலைவா படப்பிடிப்பு முடிந்துள்ளது. 
 
மும்பையில் தலைவா படப்பிடிப்பு நடந்தபோது அஜீத்தின் வலை படப்பிடிப்பும் நடந்தது. அப்போது நடந்த சுவாரஸ்யமான நிகழச்சி குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.
 

விஜய்யின் தலைவா படப்பிடிப்பு தன் படப்பிடிப்புக்கு அருகில் நடப்பதை அறிந்த அஜீத் குமார் அங்கு திடீர் விசிட் அடித்துள்ளார். திடீர் என்று அஜீத் வந்தது விஜய் உள்பட மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்துள்ளது.

அஜீத் விஜய்யுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தாராம்.

தலைவா படத்தில் விஜய் பாடியுள்ள பாடலை கேட்டுள்ளார் அஜீத். பாட்டை கேட்டு முடித்ததும் இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்களில் உங்கள் பாடலும் ஒன்று என்று தளபதியிடம் தெரிவித்துவிட்டு கிளம்பியுள்ளார்.

23 August, 2012

சென்னை பதிவர் சந்திப்பில் பவர் ஸ்டார்...! புதிய தகவல்...!


பதிவுலக பெருமக்கள் கலந்துக்கொள்ளும் சென்னை பதிவர்கள் மாநாட்டில் உலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களை யாராவது அழைக்கலாம் நான் முடிவு செய்துக்கொண்டிருந்தேன். உலகின் சிலபல ஸ்டார்கள் எல்லாம் அழைத்தால் நன்றாக இராது. அழைத்தால் உலகின் அனைத்துக்கும் 
ஒரே ஸ்டார் பவர் ஸ்டார் அழைப்பது என்ற உறுதியுடன் அ‌வரை தொடர்புக்கொண்டேன்....

ஆனால்... பல்வேறு படங்களில் படுபிஸியாக இருப்பதாகவும் இன்னும் ஒர் ஆண்டுக்குள் ஆஸ்கார் நிச்சயம் என்பதால் நடிப்பில் மட்டுமே கணவம் செலுத்தப்போவதாகவும், இதுபோன்ற பொது மாநாட்டுக்கும் வரமுடியாத சூழலில் இருப்பதாக தெரிவித்தார். (மிகவும் வருத்தத்துடன்)

அன்னார் அவர்கள் ஆஸ்கார் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்று தமிழ் திரைஉலகிற்கு பலசாதனைகளை செய்யட்டும் என்று வாழ்த்தி அவருடைய பாதையில் நாம் நடப்போம்...
 
வாழ்க பவர் ஸ்டார்... !    ஓங்குக பவர் ஸ்டாரின் புகழ்...!!

சரி...! இவங்களை வச்சி நடத்துவோம்....

வரும் ஞாயிறு 26.08.2012,அன்று சென்னையில் நடைபெறும் 
தமிழ் வலப்பதிவர்கள் சந்திப்பு விழாவுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் அலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு பதிவர் சந்திப்பிற்கு வருவதாக உறுதி அளித்த பதிவர்கள்,மூத்த பதிவர்கள் மற்றும் கவியரங்கில் கலந்து கொள்ள இசைந்தவர்கள் பட்டியல் கீழே ..



பதிவர் பெயர் விபரங்கள் :

சி.பி.செந்தில்குமார்(அட்ரா சக்க)ஈரோடு
சங்கவி,ஈரோடு
நண்டு@நொரண்டு,ஈரோடு
சுரேஷ் (வீடு)ஈரோடு
பரமேஷ் ஓட்டுனர்(ஈரோடு)
 
ரிஷ்வன்,சென்னை
டி.என்.முரளிதரன்,சென்னை
வே.நடன சபாபதி(நினைத்துப் பார்க்கிறேன்)சென்னை
சீனு(திடம் கொண்டு போராடு)சென்னை
இக்பால் செல்வன்,சென்னை

ஆரூர் முனா செந்தில் சென்னை

சிராஜுதீன்(டீக்கடை) சென்னை
செல்வின் (அஞ்சா சிங்கம்) சென்னை
சென்னைப்பித்தன்(நான் பேச நினைப்பதெல்லாம்)சென்னை
புலவர் சா.இராமாநுசம்(புலவர் கவிதைகள்)சென்னை
மாடசாமி(வானவில்)சென்னை
இர.அருள்(பசுமைப்பக்கங்கள்) சென்னை
அண்ணல் (அண்ணல் பக்கங்கள்)சென்னை
சௌந்திரராஜன்(சென்னை வானொலியில்)கல்பாக்கம்
நிலவு நண்பன்,திருநெல்வேலி

மாலதி(மாலதியின் சிந்தனைகள்)வேலூர்
ராஜா(என் ராஜபாட்டை) பூம்புகார்
நாய் நக்ஸ் நக்கீரன் ,சிதம்பரம்
ராஜி(காணாமல் போன கனவுகள்)ஆரணி
தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி
ராஜபாண்டி(தமிழன் வலை)அருப்புக் கோட்டை
 
சைத அஜீஸ்,துபாய்
மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்
சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்

மூத்த பதிவர்கள்

லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
ரஞ்சனி நாராயணன்,பெங்களூர்
ரேகாராகவன்,சென்னை
வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை

வே.நடன சபாபதி(நினைத்துப் பார்க்கிறேன்)சென்னை
ரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)மதுரை
சென்னைப்பித்தன்(நான் பேச நினைப்பதெல்லாம்)சென்னை
புலவர் சா.இராமாநுசம்(புலவர் கவிதைகள்)சென்னை
கணக்காயர்,சென்னை

கவியரங்கில் பங்குபெறுவோர்
 
 ராஜபாண்டி(தமிழன் வலை)அருப்புக் கோட்டை
மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்

சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்
தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன்

ரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)மதுரை
ஷீ-நிசி கவிதைகள் சென்னை
கணக்காயர்,சென்னை


நண்பர்களே உங்களின் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது வர விருப்பம் இருந்து பேயர் குடக்காமல் இருந்தாலோ உடனடியா கீழ் கண்ட பதிவர்களை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது அலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளவும்.... நன்றி


 கொலை வெறியொடு வராதீர்கள்...!

27 July, 2011

அவள் வராத நாட்களில் இப்படித்தான் நடக்கும்...


முதல் நண்பனாய்
கால்களில் ஒட்டி இம்சிக்கும்
மெல்லிய மணல்...

பாசம் கொண்டு
பணிந்து என் பாதம் தொட
வந்துப்போகும் அலைகள்....

சிவந்த கீழ்வானில் 
வரைந்து வைத்த ஓவியமாய்
பாய்மரக்கப்பல்....

காற்றில் மிதந்து காதில் விழுகிறது 
இளம்காதல் ஜோடிகளின்
 முத்த சப்தம்....

ழுத்தம் திருத்தமாய் 
பதித்துவிட்டுப்போயிருக்கும்
காதலர்களின் பாதச்சுவடுகள்....

யிர் தேடி
உள்ளிருந்து வெளியில் வந்து
எனைப்பார்த்து ஓடிஒளியும் நண்டு...

டிக்கடி ராகத்தால்
மௌனத்தை கலைத்துவிட்டு போகும்
சுண்டல் விற்கும் பையன்...

வைகளை மட்டுமே 
ரசித்து விட்டுச் செல்கிறேன்...

ருகிறேன் என்று சொல்லி
அவள் வராத நாட்களில்...


கருத்திடுங்கள்... வாக்களியுங்கள்...
கவிதையால் இணைந்திருப்போம்....

16 June, 2011

வலுப்படுத்தும் உறவோடு விவாதியுங்கள்.. (நெல்லை பதிவர் சந்திப்பு வாழ்த்து செய்தி)

அன்புள்ளம் கொண்ட பதிவுலகின் பதிவர்களே... மற்றும் வாசகர்களே....
நாளை (17-06-2011) நெல்லையில் கூடும் பதிவர்சந்திப்பில் கலந்துக் கொள்ள வரும் பதிவர்களையும் மற்றும் வாசகர்களையும் அன்புள்ளத்தோடு வாழ்த்தி மகிழ்கிறேன்...


ஜாதி, மதம், இனம், கட்சி என் அத்தனைக்கும் அப்பாற்பட்டு மொழி என்ற ஒரே ஒரு உணர்வோடு உலகத்தின் மூலைகளில் எங்கோ இருந்துக்கொண்டு நம்முடைய கற்பனைகள், படைப்புகள், தகவல்கள் மூலம் நட்புகளை பறிமாறிக்கொண்டு, நம்முடைய நட்புப்பாலம் உலகம் முழுவதும் விரிந்துக்கிடக்கிறது.

அந்த நட்பை உறுதிப்படுத்த, முகம் காட்டாது இருக்கும் நம் “முக”வரிகளை அறியச்செய்யயும் இந்த சந்திப்பில் கலந்துக் கொள்ளுபவர்களுக்கும், கலந்துக் கொள்ளாதவர்களுக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இதற்கு ஏற்பாடு செய்து அறிய பணியாற்றி வரும் அருமை நண்பர் உணவு உலகம் திரு  அ.ரா.சங்கரலிங்கம்  அவர்களுக்கு மிக்க நன்றியை தெரிவிப்பதில் கவிதைவீதி பெருமைப்படுகிறது.

நாளைய சமூதாயத்தை, நாளைய உல‌கை வடிவமைப்பதில் கண்டிப்பாக பதிவுலகம் ஒரு சிறப்பாக பங்கு வகிக்கும். புதியப்புதிய பதிவர்கள் பதிவுலகிற்கு வந்த வண்ணம் உள்ளனர். இளைஞர்களின் வருகை கண்டிப்பாக எதிர்காலத்தில் பதிவுலகின் குரல் ஒரு சமூக மாற்றத்திற்கு வித்திடும் என்பதில் யாரும் சந்தேகம் படவேண்டாம்.
சச்சரவுகள் ஏதுமின்றி அடுத்த பதிவர்சந்திப்பிற்குக்கு வித்திடுங்கள்.

 பதிவர்கள் கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் பதிவர்களுக்கும், இணையம் மூலமாக கலந்துரையாடும் பதிவர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். அன்பை பறிமாறிக்கொள்ளுங்கள் அதோடு எதிர்கால கொள்கை, எதிர்கால நோக்கம், பதிவர்களின் கடமைகள் ஆகியவற்றையும் விவாதியுங்கள். இந்த விவாதம் நாளைய உலக மாற்ற வழிவகுக்கலாம்.

மொக்கை பதிவு போட்டு, நகைச்சுவைகள் செய்து, தம்முடைய படைப்புகளை பகிர்ந்து, காபி டூ பேஸ்ட் பதிவுகள் இட்டு என முடிந்துவிடுவதில்லை நம் பயணம் என்று நம்பிக்கையையுங்கள். இந்த பதிவர்கள் சந்திப்பை நாளை வரலாற்றுப்பக்கங்கள் குறித்து வைத்துக் கொள்ளட்டும்.

நெல்லை பதிவர் சந்திப்பு வெற்றியடைய வாழ்த்துகிறேன். 
(என்னால் கலந்துக் கொள்ள முடியவில்லை என்பதற்க்கான வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்)

முக்கிய அறிவிப்புகள்
இந்த நிகழ்வை  உறவுகள் அனைவரும் கண்டு களிக்கலாம்.
அனைத்துலகெங்கும் பரந்து வாழும் உள்ளங்களிற்கு விருந்தளிக்கும் நோக்கிலும்,  பதிவர் சந்திப்பிற்கு வருகை தர முடியாத உறவுகளிற்கு நேரடித் தரிசனம் கிடைக்கும் வண்ணமும், இந்த ஏற்பாட்டினைச் செய்துள்ளார்கள். நேரஞ்சலானது இந்திய நேரம் காலை 6.00 AM இல் இருந்து ஆரம்பமாகும்.

இந்த சுட்டி கிளிக் செய்து கண்டு ரசியுங்கள்


(இதற்க்கான ஏற்பாடுகள் செய்துவருபவர் நண்பர் நிருபன்...)

மிக்க நன்றிகள்..!‌
வெல்லட்டும் பதிவுலக நட்பு....
Related Posts Plugin for WordPress, Blogger...