கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label பார்க்க ரசிக்க. Show all posts
Showing posts with label பார்க்க ரசிக்க. Show all posts

12 September, 2018

எல்லோர் மனைவியும் இப்படித்தான் இருப்பாங்களோ...!


ஒருவன் தான் வேலை செய்யும் கம்பெனியில் இருந்து வெளியே வந்தான்.

அவன் நண்பன் நேராக இவனிடம் வந்து,

"ஒரு கட்டிங் போட்டுட்டு போலாமா" என்றான்.

"சரி", என்று அவனுடன் நடந்தான்.

வழியில் அவனுடைய செருப்பு 'சரக்' என அறுந்தது.

அவன் கண்களில் நீர் அருவியாய் பெருக்கெடுத்தது.

"டேய், ஒரு செருப்பு பிஞ்சு போனதுக்கா இப்படி கண்ணீர் விடற?" என்று சிரித்தான் நண்பன்.

"அதுக்கு இல்ல, என் மனைவி ஒரு தீர்க்கதரிசி. அது எனக்கு இப்போ தான் தெரிஞ்சுது" என்றான்.

"ஓஹோ.. அது எப்படி தெரிஞ்சுது?" என்றான் நண்பன்.

"காலைல வரும்போதே என் பொண்டாட்டி சொன்னா, 'வேலை முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வராம சரக்கடிக்க போனேனா செருப்பு பிஞ்சுடும்'-னு. இப்போ பாரு அதே மாதிரி நடந்துருச்சு."

கண்ணா ஒரு செருப்பு பிஞ்சதுக்கே இப்படி பீல் பண்றீயே இன்றும் மிச்சம் இருக்கிற இன்னோரு செருப்பும் பிய்யப்கோகுதே அப்ப என்ன செய்யப்போற...!!!

*******************************


மனைவி: "என்னங்க! உங்க பொறந்த நாளைக்கு நான் ஒரு ட்ரெஸ் எடுத்திருக்கேங்க."

கணவன்: "வாவ்! சூப்பர். எங்கே எடுத்துட்டு வந்து காமி"

மனைவி: "கொஞ்சம் பொறுங்க! போட்டுட்டு வந்தே காமிக்கிறேன்."

கணவன்: ???!!!!

இது என்னங்க அநியாயம்... அவங்க பிறந்த நாளுக்கும் அவங்களே டிரஸ் எடுக்குக்குறாங்க... நமம்மோட பிறந்தநாளுன்னாலும் அவங்களே டிரஸ் எடுத்துக்கிறாங்க... இதுமட்டும் இல்லாமல் பண்டிகை, கல்யாண நாள், இப்படி எது வந்தாலும் அவங்களே டிரஸ் எடுத்துப்பாங்க... ஆனா ஆண்டு கடைசியிலே சொல்லுவாங்க பாருங்க... எனக்கு என்ன செஞ்சிங்க... ஒரு நகை இருக்கா... ஒரு டிரஸ் இருக்கா... இது எல்லா வீட்டிலும் நடக்கிற சகஜமான நிகழ்வாயிடிச்சி தானே...

*******************************


"ஆட்டோ வருமாப்பா?"

"வரும் சார். எங்க போகணும்?"

"அதோ! ரெண்டு நாய் சண்டை போட்டுகிட்டிருக்கில்ல. அதைத் தாண்டி விடணும்!"

இது மாதிரி என்வாழ்விலும் நடந்திருக்கு ஆனா நான் நாய்க்கெல்லாம் பயந்ததில்லை...

ஒரு மழைகாலத்தில நான் வேலை செய்யும்  தெருவில நிறைய தண்ணி அந்த வரியே ஒரு ஆட்டோ வந்தது.... நிறுத்தி ஏறினேன்.... ஆட்டோகார் எங்கன்னு கேட்டார்.... இந்த தண்ணிய தாண்டி விடுங்கன்னேன்... நிலைமையை புரிந்த அவர் தாண்டி விட்டுவிட்டு காசு கொடுத்தா வேண்டாம் என்று சொல்லிவிட்டார்....

*******************************


நண்பர் பதிவிலிருந்து.

கணவன் சோகமாக வீடு திரும்பினான்.

மனைவி: "ஏன், என்ன ஆச்சு?"

கணவன்: "மத்தியானம் லஞ்ச் முடிச்சுட்டு ஒரு தம் போடலாம்னு ஆபீசை விட்டு வெளியே வந்தேன். எதிரே இருந்த பொட்டிக்கடையில் சிகரெட் பத்தவைக்கக்கூட இல்லை, எங்க ஆபீஸ் கட்டிடம் இடிஞ்சு விழுந்து ஆபீஸ்ல எல்லாமே குளோஸ், என்னைத் தவிர"

மனைவி: "தப்பிச்சீங்க. ஆண்டவன் புண்ணியம்"

தொலைக்காட்சி: "இறந்தவர்கள் குடும்பத்திற்குத் தலா இருபது லட்ச ரூபாய் நஷ்ட ஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது"

மனைவி: "இந்த சிகரெட் சனியனை நிறுத்துன்னா கேட்கறியா?"

*******************************


"ஓய்வு பெற்ற நீதியரசர் இப்ப ஆத்ம திருப்திக்காக ஜோசியம் ஜாதகம் பார்க்கிறாரு!"

"சரி, அதுக்கு என்ன இப்ப?"

"முகூர்த்த நாள் குறிச்சி கொடுங்கன்னு அவருக்கிட்ட போனோம்"

"என்னாச்சு?"

"அடுத்த முகூர்த்த நாளான்னிக்கு வாங்க. உங்க வீட்டுக்கு கல்யாணத்துக்கு நாள் குறிச்சித் தரேன்னு வாய்தா சொல்லி அனுப்பிட்டாரு!"

தம்பி கொஞ்ச நாளைக்கு சந்தோசமா இருந்துக்கோ...

*******************************


கணவன் - மனைவிக்கு இடையே நடந்த சண்டையின் போது:-

#கணவன்: "உன்னைப் பார்த்து நான் பயப்படறேன்னு நெனச்சுடாதே!"

#மனைவி: "பொய் சொல்லாதே! என்னைப் பொண்ணுப் பாக்க வரும்போது 6 பேரோட வந்தே!

நிச்சயம் பண்ணும் போது 100 பேரோட வந்தே!!!

தாலி கட்டும் போது 500 பேரை கூட்டிட்டு வந்தே!!!"

#கணவன்: ??????

#மனைவி: "ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் நான் உன் வீட்டுக்குத் தனியாவே வந்திருக்கேன் பாத்தியா! இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு..."


கணவன்: 😳!!!!!!!!!???????

#மனைவிடா....
*******************************

அடி சண்டாலி....

21 August, 2018

ராத்திரில தூங்குனா சிக்ஸ்பேக் வருமா..?





ஏம்மா!! காலையிலே வீட்டுச் செலவுக்கு பணம் கொடுத்தப்போ பத்தாதுன்னு சொன்னே ?? இப்போ பியூட்டி பார்லருக்கு போய்ட்டு வந்திருக்க.??


ஏன்யா ?? லூஸாய்யா நீ ?? 
இதை வச்சு மேக்கப் பண்ணிக்கன்னு நீ தானே சொன்னே ??

********************************



சிரித்தபின் சிந்திக்க வைக்கிற கேள்வி...


பெருசு கேட்டாரே, ஒரு கேள்வி!


விஞ்ஞானிகள் ரொம்ப நாளா ஆய்வு பண்ணிகிட்டு இருந்த ஒரு ஆய்வு கூடத்தில் வயசான வாட்ச்மேன் ஒருவர் இருந்துருக்காரு. அவுங்க இவரை கண்டுக்க கூட மாட்டாங்க. ஒரு நாள் விஞ்ஞானிகள் ரொம்ப ஜாலியா ஆடி பாடிக்கிட்டு இருக்கவும் "என்ன விசயம்"ன்னு கேட்டிருக்கார்.


அவங்களும் "எங்க ஆய்வு முடிய போகுது அதான்"னு சொல்ல இவரு "அப்படி என்ன ஆய்வு பண்ணுனீங்க"ன்னு கேட்டிருக்கார். "எந்த பொருளையும் கரைக்கிற திரவத்தை கண்டுபுடிக்கிற ஆய்வு" ன்னு சொல்லவும். உடனே இவரு ஒரே கேள்விதான் கேட்டாராம். அந்த விஞ்ஞானிகள் அந்த ஆய்வையே கைவிட்டுடாங்களாம்.


அது என்னான்னா?"


அத கண்டுபுடிச்சி எதுல சார் ஊத்தி வைப்பிங்க"ன்னு கேட்டாராம்.


********************************



நண்பர் 1 : பகல்ல தூங்குனா தொப்பை வருமாம்..


நண்பர் 2 : அப்போ ராத்திரியில தூங்குனா சிக்ஸ் பேக் வருமா?


நண்பர் 1 : .....


********************************


நோயாளி : வேகமா ஓடினா மூச்சு பிடிச்சிக்குதே டாக்டர்.


டாக்டர் : அப்ப மெதுவா ஓடுங்க...


நோயாளி : மெதுவா ஓடினா போலீஸ் பிடிக்குதே...


டாக்டர் : ..........

********************************



நபர் 1 : பொண்ணு அழுதுக்கிட்டே இருக்கே.. ஏன் மாப்பிள்ளையைப் பிடிக்கலையா?


நபர் 2 : அதெல்லாம் இல்ல... சீரியல் பார்க்கும் நேரத்துல பொண்ணு பார்க்க வந்துருக்கீங்கல்ல... அதான்..


நபர் 1 : ........

********************************


யாருகிட்ட...

சமிபத்தில் ரசித்த நகைச்சுவை துணுக்குகள்....

13 August, 2018

இது சாப்பிடவா... இல்ல பார்க்கவா...



ஒரு விஐபி வீட்டில் பரிமாறப்பட்டதாக வந்த உணவு படையல் புகைப்படங்களும்...
சில ஆச்சரிய தகவல்களும்...


 
ஆரல் கடல், சாக்கடல், காஸ்பியன் கடல் இவை மூன்றும் கடல் என்ற பெயரைக் கொண்ட ஏரிகள் ஆகும்.


 
காண்டா மிருகத்தின் கொம்பு மற்ற மிருகங்களின் கொம்புகளிலிருந்து வேறுபடுகிறது. இதன் கொம்பு எலும்பால் ஆனது அல்ல. தோலிலிருந்தே உருவானது.


 
உலகில் கிடைக்கும் தங்கத்தில் பாதி அளவை தரும் நாடு தென்னாப்பிரிக்கா (ஒரு ஆண்டுக்கு 700 டன்).


 
நாகபாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டுப் பாம்பு, கட்டுவிரியான் ஆகியவை மிகவும் கொடிய நச்சுள்ள பாம்புகள்.


 
அக்குரன், அந்திமான், கண்ணன், சந்தன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன் ஆகியோர் இடை ஏழு வள்ளல்கள்.


 
சூரியன் அஸ்தமனத்துக்கு முன் சிவப்பாக தோன்றும். ஆனால், அது பச்சையாகத் தோன்றுவது அண்டார்டிக்காவில் மட்டும் தான்


 
காரில் செல்லும் போது மழை, இடி வந்தால் காரை விட்டு இறங்காமலிருப்பதே நல்லது. காரணம், பூமிக்கும், காருக்கும் பாசிடிவ் சார்ஜ் கவராமலிருப்பது தான்.


 
பாரி, ஆய், எழினி, நள்ளி, மலயன், பேகன், ஓரி ஆகியோர் கடை ஏழு வள்ளல்கள்.


 
அக்டோபர் 8-ம் தேதி விமானப்படை தினம்.


 
முத்துத் தீவு என அழைக்கப்படும் நாடு பஹ்ரெய்ன்.


 
அரசாங்கமே வட்டிக் கடை நடத்தும் நாடு மலேசியா.


 
தென்னாப்பிரிக்காவில் ஒரு ஆண், ஒரு பெண்ணை பார்க்க வந்தால் அந்த பெண் மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது வழக்கமாக இருந்தது. அந்த ஆண் தன் மனத்திற்கு பிடித்தவனாக இருந்தால் நீளமான மெழுகுவர்த்தியும், பிடிக்காதவனாக இருந்தால் சிறிய மெழுகுவர்த்தியையும் ஏற்றி வைப்பாள்.


 
பச்சைத் தங்கம் என அழைக்கப்படும் மரம் யூகாலிப்டஸ் மரம்.



* பாம்புகளில் 3,000 வகையான பாம்புகள் உலகம் முழுவதும் உள்ளன. இந்தியாவில் மட்டும் 350 வகைகள் உள்ளன.


 
நீரை உறிஞ்சி குடிக்கும் ஒரே பறவை புறா தான்.


 
நச்சுள்ள பாம்பு இன்னொரு பாம்பைக் கடித்தால் கடிப்பட்ட பாம்பு இறந்து விடும்.


 
கரையான்களால் அரிக்க முடியாத மரம் தேக்கு மரம்.



 ஆப்பிரிக்காவில் ரத்த வேர்வை சிந்தும் நீர்யானை உள்ளது.



நன்றி...!
Related Posts Plugin for WordPress, Blogger...