கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label விகடன். Show all posts
Showing posts with label விகடன். Show all posts

01 October, 2012

ஜெயலலிதாவும், விகடனின் வில்லங்கமும்...


வெள்ளிக்கிழமை மாலை அண்ணன் ரஹீம் கசாலி அவர்கள் போன் செய்து தெரியுமா தகவல்..? என்றார்... ஆஹா பதிவுலகில் யாரோ மறுபடியும் சண்டையை ஆரம்பிச்சிட்டங்கைய்யா என்று... என்ன தலைவரே பிரச்சனை என்றேன்... ஏன்னென்றால் பதிவர்கள்கிட்ட இருந்து போன் வந்தாலே  எங்கையோ வில்லங்கமான பதிவு ஒன்று வந்திருக்குன்னு அர்த்தம்.

அதன் பிறகு சொல்லுங்கன்னே.. இங்க 14 மணிநேரம் மின்தடையிருக்கு அதனால ‌நெட்பக்கம் போகலண்ணே என்றேன். அது ஒன்னுமில்லிங்க என்விகடனில் சென்னை  பகுதிக்கான 
வலையோசை-யில் உங்க போட்டோபோட்டு உங்களோட கவிதைவீதியை அறிமுகம் செய்திருக்காங்க என்றார்.. அதைச்சொல்லத்தான் போன் செய்தேன் என்றார்..  அப்படியா..! சரிண்ணே நான் பார்க்கிறேன் என்றேன்.

பிறகு இரவு எட்டுமணிக்கு பார்த்தேன். 
அதில் என்னைப்பற்றிய தகவல்களுடன், கவிதைவீதியில் இருந்து மூன்று பதிவுகளை பகிர்ந்திருந்தனர்.
 

அதில் ஒன்று சமீபத்தில் வீட்டின் சூ‌‌ழலை, ஒரு அண்ணனனின் இயலாமையை, வறுமையை, அவருடைய தவிப்பை மைப்படுத்தி எழுதிய
  என்ற கவிதையை முதலில் போட்டிருந்தார்கள்...!
 

அதன் பிறகு வெற்றி என்பது இறைவனிடம் மட்டுமே இல்லை அது ஒவ்வொருவருடைய நம்பிக்கையில் இருக்கிறது. சில சமயம் அந்த நம்பிக்கை கடவுளாகவும் இருக்கலாம் என்ற அடிப்படையில் ஜென் கதையை மையப்படுத்தி நான் வெளியிட்ட 
என்ற பதிவையும்,

 

இறுதியாக... கடந்த கோடைக்காலத்தில் ஏற்பட்ட தொடர் மின்தடையை மையப்படுத்தி நம்வாழ்க்கை மீண்டும் பின்நோக்கிச் செல்கிறது என்ற 
பாணியில் எழுதிய
 ஒரு கவிதையை பகிர்ந்திருந்தார்கள்..
 
அரசுக்கும்.. முதல்வருக்கும்... மின்சார வாரியத்துக்கும் நக்கல்செய்யும் கடிதம்போல் அமைந்த அந்தபதிவை தற்போது நிலவும் மின்தடையை ஞாபகப்படுத்துவது போல் பகிர்ந்துள்ளார்கள்.


வலையோசையில் என்னை அறிமுகப்படுத்தி, என்பதிவுகளையும் வெளியிட்ட விகடன் குழுவுக்கு என் நன்றிகள். 
Related Posts Plugin for WordPress, Blogger...