கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

18 December, 2013

என்றென்றும் புன்னகை


அனுபவம் என்பது கடுமையான ஆசிரியன்:
முதலில் சோதனை, பிறகு படிப்பினையை அது அளிக்கிறது...

++++++++++++++++++++

நம் பிரச்சனை என்னவென்றால் நேரம் கிடைக்கவில்லை என்பதல்ல.. வழி தெரியவில்லை என்பதுதான்.. ஒவ்வொரு நாளுக்கும் இருபத்தி நான்குமணி நேரம் உள்ளது.. நம்முடைய வேலை வழ்க்கைக்கான வழியை கண்டறிவதுதான்...
++++++++++++++++++++

நம்மைப்பற்றியும், நம்மிடமிருந்தும், மற்றவர்களின் எதிர்பார்ப்பின் அடிப்படையிலும் நாம் உருவாக்கப்படுகிறோம். நாம் உருவாக்கப் படுகிறது. அந்த எதிர்பார்ப்பை நோக்கி அல்லது நம்மைப் பற்றி மற்றவர்கள் நம்புவதன் பேரில் நாம் வாழ்க்கை நடத்துகிறோம். உண்மையில் பார்க்கப்போனால், நம்மைப்பற்றி நாம் நினைப்பதை விட மற்றவர்கள் நம்மைப்பற்றி நினைப்பது மிகவும் முக்கியமானதாகி விடுகிறது.

++++++++++++++++++++

சிரியுங்கள் உங்களோடு இந்த உலகமே சிரிக்கும்...
அழுங்கள் நீங்கள் மட்டும்தான் அழுது கொண்டிருப்பீர்கள்...!
++++++++++++++++++++

தவறுகளைக் கண்டுப்பிடிப்பதால் அதிலிருந்து வெகுமதி கிடைக்கும் என்று சிலர் கருதுகிறார்கள். ஒவ்வொரு சிரமத்திலும் நல்லதையே சிலர் காண்கிறார்கள்...
++++++++++++++++++++

ஒரு கணவர் மனைவியிடம் சொன்னார். ”பதினாறு ஆ‌‌‌‌ண்டுகளாக நாம் தம்பதியராக இருந்தும். ஒன்றில் கூட நாம் ஒத்துப் போக முடியவில்லை“ என்றார். மனைவி சொன்னார்: “ இது பதினேழாவது”
++++++++++++++++++++

கருத்துக்களை உள்ளே கொண்டுவந்து சிறந்த முறையில் உபசரியுங்கள்.. அவற்றில் ஏதாவதுதொன்று அரசனைப் போன்றாகிவிடும்.
++++++++++++++++++++

எவ்வளவு விரைவில் அந்த வேலையை நீங்கள் முடித்து விட்டீர்கள் என்பதை மக்கள் மறந்துவிடுவார்க்ள. ஆனால் எவ்வளவு நன்றாக அதை செய்தீர்கள் என்பதை நினைவில் வைத்திருப்பார்கள்.
++++++++++++++++++++

மற்றவர்களை வழி நடத்த நீங்கள் முற்படுவதற்கு முன்பு, உங்களை நீங்களே நிர்வாகிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
++++++++++++++++++++

நேர்மையான நபராக இருந்து, சரியான செயலைக் செய்யக் கூடியவராக நீங்கள் இருந்தால் உதவியும் உற்சாகமும் பல திசைகளிலிருந்தும் வந்து சேரும்...
++++++++++++++++++++

நாளை எவ்வளவு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அந்த 
அளவுக்கு இன்றே செய்து முடிந்தால் நம் எதிர்காலம் நிச்சயமாக உறுதியாகிவிடுகிறது.
++++++++++++++++++++

வாழ்க்கையின் ஏணிப்படிகள் பல துண்டுகளால் ஆனது, நீங்கள் கீழே வழுக்கி விழும் பொழுது தான் அதை உணர்வீர்கள்
++++++++++++++++++++
 என் முகநூலிலிருந்து...
புன்னகையோடு ரசித்தமைக்கு நன்றி

7 comments:

  1. சிரியுங்கள் உங்களோடு இந்த உலகமே சிரிக்கும்...
    அழுங்கள் நீங்கள் மட்டும்தான் அழுது கொண்டிருப்பீர்கள்...!

    உண்மைதான்

    ReplyDelete
  2. ரசித்தேன்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. சிரியுங்கள் உங்களோடு இந்த உலகமே சிரிக்கும்...
    அழுங்கள் நீங்கள் மட்டும்தான் அழுது கொண்டிருப்பீர்கள்...!
    >>
    நிஜம்தான் சௌந்தர்

    ReplyDelete
  4. சிந்திக்க வைக்கும் anecdotes. Good decisions come from experience but experience comes from bad decisions. ...!

    ReplyDelete
  5. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_19.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  6. \\சிரியுங்கள் உங்களோடு இந்த உலகமே சிரிக்கும்...
    அழுங்கள் நீங்கள் மட்டும்தான் அழுது கொண்டிருப்பீர்கள்...!//

    உண்மை. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...