கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label அழைப்பு. Show all posts
Showing posts with label அழைப்பு. Show all posts

30 August, 2012

காணாமலேபோய் விட்ட டெரர் கும்மிஸ்...! என் சவாலை ஏற்பார்களா..?


அனைத்துலக காணாமற்போனோர் நாள் (International Day of the Disappeared) ஆகஸ்ட் 30-ம் நாளன்று உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 


உலகின் பல நாடுகளிலும் காவல் துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற்போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. 


"அனைத்துலக காணாமற்போனோர் நாள்" குறித்து பல்வேறு உலக தன்னார்வ அமைப்புகளின் சேவை குறித்து பொதுமக்களுக்கு விளக்கவும் இன்னும் தன்னார்வலர்களை சேர்ப்பதற்கும் இந்நாள் உதவுகிறது. (விக்கிபீடியா)


இந்நாளில் பதிவுலகில் இருந்து காணாமல் போய்விட்ட இந்த டெரர் கும்மிஸைப்பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும்.

கடந்த ஆண்டுகளில் இந்த டெரர் கும்மி குழுவினர்கள் டெரர் கும்மி தளத்திலும் தங்களுடைய சொந்த தளங்களிலும் நையாண்டி, நக்கல், மொக்கை, அறுவை, சண்டை, எகத்தாளம், ரம்பம், பிளைடு, என்ற பதிவுலகமே கேட்டிராத தலைப்புகளில் லேபிள்களில் பதிவிட்டுவந்தனர். அவைகள் படிப்பதற்கும் ஒருமாதிரியிருந்தாலும் ரசிக்கும்படியாக இருக்கும்.


இவர்கள் தினம் ஒரு பதிவை எடுத்துக்கொண்டு அதில் வெட்டு குத்து நடக்கும் அளவுக்கு கருத்துக்கள் குவியும்... இவர்களின் கருத்துக்கள் இடம்பெறாதா என்று ஏங்கிய பதிவர்களில் நானும் ஒருவன். இவர்கள் கும்மியடிக்க ஆரம்பித்தால் அடுத்த வருபவர்கள் பதிவை படிப்பதை விட்டுவிட்டு இவர்களின் கும்மிகளைத்தான் படிப்பார்கள். பதிவுகளும் மிக வித்தியாசமானதாகவே இருக்கும். நான்கூட எவ்வளவு முயன்றும் இதுபோன்ற வித்தியாசமான மொக்கை பதிவுகளை போடமுடியவில்லை.
 

யாரின் கண்பட்டதோ என்று தெரியவில்லை இவர்களின் ஆதிக்கம் பதிவுலகை விட்டே தற்பேர்து போய்விட்டது. இவர்கள் இல்லாத குறையால் அதிகமான மொக்கை பதிவுகள் படிக்க முடிவதில்லை. தினம் ஒரு கருத்துச்சண்டைகள் இல்லை. சுவாரஸ்யமான பதிவுலக மோதல்கள் இல்லை. (ஆனா நிம்மதியா இருக்கு..)

ஆகையால் கீழ்கண்ட இப்பதிவர்கள் தன்னுடைய பழைய பாணியில் மீண்டும் பதிவுலம் வரவேண்டும் என்று வரவேற்கவே இப்பதிவு...


  
டெரர் கும்மி குழுவின் உறுப்பினர்கள் :



    மேற்கண்ட இந்த குழுவினர்கள் எங்கிருந்தாலும் வந்து டெரர் கும்மி தளத்திலும் தங்களுடைய தளத்திலும் எழுத வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. மீண்டும் பழைய பாணியில் அவர்கள் திரும்புவார்கள் என்று நான் சவால் விடுகிறேன்.. என் சவாலை ஏற்பார்களா..?

    கோரி‌க்கையை ‌ஏற்று களத்தில் இறங்குவார்களா..? அல்லது அப்படியே காணாமல் போய் விடுவார்களா...?



     இதற்கு தங்களின் பதில் என்ன..? நீங்களே சொல்லுங்கள்...!

    23 April, 2012

    பதிவுலகில் ஒரு உறவு சங்கமம்... நம்ம ஆபீஷர் வீட்டுக்கல்யாணம்...



    தமிழகத்தில் வடகோடியான திருஎவ்வளூரில் (திருவள்ளூர்) இருந்து தென்கோடிக்கு பயணிக்கபோகிறேன். அதுவும் ஒரு சாதாரண நிகழ்வுக்காக அல்ல. உறவுகள் கூடும் அன்பான இருமணங்கள் இனையும் ஒரு நெகிழ்ச்சியான திருவிழாவில் கலந்துக்கொள்ள...

    இதுவரை முகம்பார்த்திடாத சில அன்பு உள்ளங்களைக் கண்டுணற, தூரத்தில் இருந்தே மனம் வீசிய அழகிய குறிஞ்சி மலர்களைத் தொட்டுணர, கம்பிகள் வழியே உரவாடிய சில உள்ளங்களை அன்புகள் வழியே அணைத்துக்கொள்ள... இதுவரை நிலத்தை பார்த்திடாத புது மேகம் போல் புறப்படுகிறோம்....

    கடந்த சில நாட்களாய்... இரவு முடிந்தால் சுற்றுலா சொல்லும் குழந்தையின் மனதோடே படுக்கிறேன். என் கண்முன்னே நிழலாடும் காட்சிகளை எதுகைமோனையில் வர்ணிக்க எனக்குள் புதியதாய் வார்த்தைகள் ஏதுமில்லை...


    வண்ணத்தில் தொடங்கி எண்ணத்தில் முடியும் அத்தனை வேறுபாடுகளையும் தூரத்தில் தூக்கி எரிந்து விட்டு அன்புக்கு அடிப்பணிந்து அரவணைத்துக்கொள்ள என் கரங்களும் நீள்கிறது தமிழகம் முழுமைக்கும்...


    எங்கெங்கோ இருந்துக்கொண்டு பதிவுகள் வழியே அறிமுகமாகி, கருத்தால் படைப்புகளால் பழகி... பழகி..., ஒவ்வொறு நாலும் தமிழ்விருந்து படைத்து நட்பு வளர்த்து,  செல்லமாய் சண்டையிட்டு நட்பை வளப்படுத்தி இன்று அதையும் தாண்டி உறவுகளாய் சங்கமிக்கப்போகிறோம்.


    தமிழகத்தின் மேற்கும் (சிபி செந்தில்குமார்) கிழக்கும் (நக்கீரன், ராஜபாட்டை ராஜா), வடக்கும் (நானும் வேடந்தாங்கல் கருணும்) தெற்கும் (தமிழ்வாசி பிரகாஷ் உள்ளபட அனைவரும்) தரணி‌போற்றும் தாமிரபரணி நதிக்கரை நகரில் சங்கமிக்கப்போகிறது...


    இன்னும் நிறைய நண்பர்களை சந்தித்து உறவாக்கிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது... இதுவரை வேலி அளவுக்கூட தாண்டாத என் நட்பின் எல்லை இன்றைக்குத் தமிழர் வாழும் நாடுகள் அனைத்திலும் பரவிக்கிடக்கிறது என்று என்னும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.


    தன்வீட்டு விழாவிற்கு பதிவுலக நண்பர்களை அழைத்த
    கௌரவப்படுத்திய   இதயம் கனிந்த அருமை நண்பர் திரு உணவு உலகம் சங்கரலிங்கம் ஐயா அவர்களின் இல்லத்திருமணத்தில் கலந்துக்கொள்வது பெருமைக்குரிய விஷயமே... அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...



    நெல்லை நோக்கிய பணயம்.... தாமிர‌பரணியில் சங்கமிப்போம் வாருங்கள் நண்பர்களே..!


    பயண விவரம் நானும் (9443432105), நண்பர் கருணும் (9042784428)
    நாள் : 24.04.2012 செவ்வாய் காலை 7.30  மணி
    குருவாயூர் எக்ஸ்பிரஸ், சென்னை.
    நெல்லை : 24.04.2012 மாலை 7.30 மணி அளவில்


    எங்களுடன் மதுரையில் தமிழ்வாசி பிரகாஷ் கலந்துக்கொள்வதாக வாக்கு கொடுத்திருக்கிறார்.


    10 August, 2011

    வேடந்தாங்கல் கருனுக்கு ஒரு எச்சரிக்கை.... (எதிர் பதிவு)


    இன்று இவர் வெளியிட்ட தொடர்பதிவு ஒன்று....
     தொ்டர்பதிவெழுதும் பதிவர்களை 
    கிண்டர் செய்வது போன்று உள்ளது.


    ஒரு பிரபல பதிவர் இப்படி செய்வது மிகவும் அபத்தமானது, மிகவும் கண்டிக்கத்தக்கது அப்படின்னு சொல்ல நான் வரல.....


    ங்கொய்யால... என்ன நெனச்சிங்க எங்கல...
    யார் தொடர் பதிவு ஆரம்பிச்சாலும் அதை நாங்கலும் தெடருவோம்ல....

    நண்பர்களே இதில் யாராவது பெயரை நான் மறந்து விட்டிருந்தால் அவர்களாகவே எனக்கு நன்றி சொல்லிவிட்டு இந்த தொடர்பதிவு எழுத மிக தாழ்மையுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
    நன்றி .. வணக்கம்.. சீக்கிரம்..சீக்கிரம் எல்லாரும் ஆரம்பிங்க..

    அப்படின்னு வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டதால் இத் தொடர் பதிவை நான் தொடர்கிறேன்...


    இதை தொடர நான் அழைப்பது...

    1. பண்ணிகுட்டி ராமசாமி 
    2. நிருபன் 
    3. பாட்டுரசிகன்
    4. தமிழ்வாசி பிரகாஷ் 
    5. விக்கியுலகம் 
    6. உணவு உலகம் 
    7. சித்ரா அக்கா 
    8. நம்ம லாப்டாப் மனோ 
    9. செங்கோவி 
    10. ராஜபாட்டை ராஜா 
    11. ஆமினா 
    12. நிகழ்வுகள் கந்தசாமி 
    13. கோகுல் 
    14. NAAI-NAKKS
    15. Kss.Rajh
    16. அம்பளடியாள்
    17. கூடல் பாலா 
    18. பரிவை . செ. குமார் 
    19. சௌந்தர் 
    20. செல்வா கதைகள் செல்வா 
    21. மாய உலகம் 
    22. யாழினி 
    23. ஆர். கே . சதீஷ் குமார் 
    24. துஷ்யந்தன் 
    25. ஷர்புதின்
    26. அரசன் 
    27. காட்டான் 
    28. சண்முகவேல் 
    29. மகேந்திரன் 
    30. ஐ,ரா . ரமேஷ் பாபு 
    31. புலவர் ச. இராமாநுசம் ..
    32. Reverie
    33. மதராசபவன் சிவக்குமார் 
    34. Nesan
    35. கலாநேசன் 
    36. இராஜராஜேஸ்வரி 
    37. செய்தாலி
    38. தமிழ் உதயம் 
    39. கிராமத்து காக்கை 
    40. M.R
    41. பிரணவன் 
    42. பாலா 
    43. ரியாஸ் அஹமது 
    44. சென்னை பித்தன் 
    45. வெட்டிப்பேச்சு 
    46. சங்கவி 
    47.அன்பு 
    48. ஹேமா 
    49. எம்.எஸ். ரஜினி பிரதாப் சிங் 
    50. ஷி - நிசி .
    51. நண்பர் FARHAN 
    52. மதிசுதா..
    கடைசியா டெரர் கும்மி குருப்ஸ் ..



    யாரும் தவறாக எடுத்துக்கொள்ள கூடாது...
    ஒரு நகைச்சுவையோடு எடுத்துக்குங்க......
    அப்படியே தங்களுடைய கருத்தையும் பதிவு செய்யுங்க...
    கிரேட் எஸ்க்கேப்...


    20 June, 2011

    முதுகெலும்பற்ற ஈனத்தமிழர்களல்ல நாம்.... (ஒரு அழைப்பு..)


    ற்பனைகள் செய்தால்கூட
    காணமுடியாத கொடும்காட்சிகள்...
    பாலினம் பாராது நிர்வாண கோலத்தில்
    உயிர் மூச்சை நிறுத்திய ஆணவத்தனம்...

    விலங்கினங்களை வதைத்தாலே
    வீறுகொண்டு எழுகிறது ஒரு அமைப்பு
    ஒரு இனப்படுகொலைக்கு எதிராக ஏன்
    தயக்கம் காட்டுகிறது இந்த உலகம்....

    யிர்களை அங்கே உறுக்குலைத்தபோது
    அறிக்கைகளும் வருத்தங்கள்  மட்டுமே
    இங்கிருந்து அனுப்பிவைக்கப்பட்டன
    இனி என்னச்செய்யப் போகிறோம்...

    கிளைகளை வெட்டும் போதே
    கேள்விகள் கேட்டிருந்தால்
    ஒரு இனத்தையே வேறருக்கும் போது
    வேடிக்கை பார்க்கும் நிலை வந்திருக்குமா?

    யிர்களை வதைக்கும் போது 
    வருத்தப்பட்டவர்களே... தற்போதைக்கு
    அந்த ஆத்மாக்களையாவது
    சாந்திப்படுத்துவோம் வாருங்கள்...

    முத்துக்குமரன் விட்டுப்போன
    நெருப்பு இன்னும் நீருப்பூக்கவில்லை
    என நிருபித்து
    தியாக சுடரேந்துவோம்...

    மெரீனாவில் கால் நனைக்கும்
    கடல்அலைகளிடம் சொல்லிவிடுவோம்....
    எந்திய தீபத்தில் கிளம்பும் சுடரில்
    தமிழ் ஈழம்  ஒருநாள் மலரும் என்று....

    நாம் ஏந்திநிற்க்கும் தீபங்கள்
    ஒரு நாள் தீப்பிழம்பாய்
    சிங்கள வெறிப்பிடித்தவர்களை
    தீக்கிறையாக்கும் என்ற நம்பிக்கையுடன்...





    ஈழப் படுகொலைகளை நினைவு கூறும் அதே சமயம், 
    இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட 
    543 தமிழக மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் 
    ஒன்று கூடுவோம்...

    நாள்: ஜூன் 26
    நேரம்: மாலை 5 மணி
    இடம்: மெரினா கண்ணகி சிலை.

    கவிதை வீதியில் இருந்து இதைப்படிப்பார் கண்டிப்பாக வர 

    முயற்ச்சிப்பீர்கள் என நம்புகிறேன்...
     

    ஒன்றுபடுவோம்... விடியும் ஒரு நாள்...

     
    Related Posts Plugin for WordPress, Blogger...