கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label எச்சரிக்கை. Show all posts
Showing posts with label எச்சரிக்கை. Show all posts

31 March, 2018

பாம்பை நடுங்க வைக்கும் பெண்... அதிர்ச்சி செய்தி



பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. எவ்வளவு துணிச்சல் உள்ள ஆண்களும், பாம்பைக் கண்டவுடன் சிறிதுதூரம் பின்வாங்குவார்கள்.

காரணம், பாம்பு சிறிய உயிரினம் என்ற போதிலும், அதில் உள்ள கொடிய விஷம் மனிதர்களின் உயிரை சில மணிநேரங்களில் மாய்த்துவிடும் என்பதாலயே அதைக் கண்டு அஞ்சுகிறார்கள்.


ஆனால், இதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண், பாம்புகளை அனாசயமாகப் பிடித்து வருகிறார். இதை மக்களுக்கு சேவையாகச் செய்து, பாம்புகளை மக்கள் கொல்வதில் இருந்து காத்து வருகிறார். மக்களுக்கு பாம்புகள் குறித்த விழிப்புணர்வையும் ஊட்டி வருகிறார்.

திருவனந்தபுரம் மாவட்டம், நெடுமங்காடு வனப்பகுதிக்குள் இருக்கும் சிறிய கிராமமே பாலோடு. இங்குள்ள பச்சா எனும் மலைப்பகுதியில் வசிப்பவர் ஜே.ஆர். ராஜி(வயது 34). இவர்தான் பாம்புகளின் தோழியாக இருந்து துணிச்சலாக பாம்புகளை பிடித்து வருகிறார். திருமணமான ராஜிக்கு அனாமியா, அபிராமி என பெண் குழந்தைகள் உள்ளனர்.

பயிற்சியாளரிடம் ஒருநாள் மட்டுமே முறையான பயிற்சி பெற்ற ராஜி, கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 483 பாம்புகளைப்ப பிடித்து காடுகளில் பத்திரமாக விட்டுள்ளார்.

தனது பாம்பு பிடிக்கும் அனுபவம் குறித்து ராஜி நம்மிடம் கூறியதாவது:

''பாம்பு பிடிக்கும் கலையை நான் தொழிலாகச் செய்யவில்லை. இதை ஒரு சேவையாக எடுத்துச் செய்து வருகிறேன். மக்களுக்கு பாம்புகளைப் பற்றி விழிப்புணர்வும், அதேசமயம், பாம்புகளையும், மக்களையும் அழிவில் இருந்து காத்தும் வருகிறேன்.

என் தந்தை ஒரு ரப்பர் மரத்தொழிலாளி. நான் காடுகளில் வாழ்ந்து பழகியவள். இதனால், சிறுவயதில் இருந்தே பாம்புகளைப் பார்த்துப் பழகிவிட்டேன். சிறுவயதில் தேங்காய் சிரட்டைகளை வைத்து பாம்புகளை பிடித்து வந்தேன்.

பலநேரங்களில் பாம்புகளைத் தொட்டு விளையாடி இருக்கிறேன், ஆனால், ஒருபோதும் என்னை சீண்டியது இல்லை. இதையடுத்து, யுடியூப்பில் பாம்புகளை எப்படிப் பிடிப்பது என்பதைக் கற்றுக்கொண்டேன். அதன்பின் சிறிய அளவிலான பாம்புகளை மட்டும் பிடித்துவந்தேன்.

அதன்பின் கேரளாவில் உள்ள பாம்பு பிடிக்கும் வல்லுநரான பாபு பாலலயம் என்பவரிடம் என்னைப் பற்றிக்கூறி அவரிடம் முறைப்படி பாம்பு பிடிக்கும் நுனுக்கங்களை கற்றுக்கொண்டேன். எனக்கு ஒருநாள் மட்டுமே முறைப்படி பயிற்சி அளித்து, பாம்புகளின் வகைகளையும், அதன் குணங்கள், தன்மைகள், விஷம் தாக்கும் முறை ஆகியவற்றை கூறினார்.

இந்த பயிற்சிக்குபின் நான் முதன் முதலில் ஒரு கருநாகப் பாம்பு தான் பிடித்தேன். அதன்பின் நான் வீடுகளில், நகர்ப்புறங்களில் பிடிக்கும் பலவகையான பாம்புகளையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்து அதை காடுகளில் விட்டுவிடுவோம்.

நான் பாம்பு பிடிக்கும் விஷயத்தை மக்கள் அறிந்து வீடுகளில் எந்தவகையான பாம்புகள் இருந்தாலும் உடனடியாக எனக்கு போன் செய்து அழைக்கிறார்கள். இதற்காக நான் யாரிடமும் பணம் கேட்பதில்லை. சிலர் அன்பின் காரணமாக பணம் கொடுத்தாலும்கூட அதை மற்ற சேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்வேன்.

என்னுடைய கணவர் அனில்குமார் டிரைவராக பணிபுரிகிறார். அவரின் உதவியால் இருசக்கர வாகனம், நான்கு சக்கரவாகனம், லாரி போன்ற கனரக வாகனங்களையும் ஓட்ட கற்றுக்கொண்டேன்.

நான் முதலில் பாம்பு பிடிப்பதைப் பார்த்து எனது கணவர் மிகவும் அச்சப்பட்டார். ஆனால், இப்போது என்னைப் பற்றி கவலைப்படுவதில்லை.

பாம்புகளைப் பிடிக்கும் போது கையுறை ஏதும் போடமாட்டேன் வெறும் கைகளை மட்டும் பயன்படுத்துவேன். பாம்பு பிடிக்கும் கருவிகளை வைத்து பாம்பு பிடிப்பது எப்போதும் சிறிது ஆபத்தானது. சிறிது தவறாக பிடித்துவிட்டாலும், அல்லது எந்திரக் கோளாறு ஏற்பட்டாலும் நாம் கடுமையான விலை கொடுக்க வேண்டியது இருக்கும். ஆனால், நான் செய்யும் பணி நல்ல சேவையாக இருக்கிறது. எனக்கு எந்த சிக்கலும் வராமல் கடவுள் பாதுகாப்பார் என்று நம்புகிறேன்.''

இவ்வாறு ராஜி தெரிவித்தார்.

பாராட்டுகள் சகோதரி...
தி இந்து சொய்திகளில்....

01 June, 2013

தலைவர் ரஜினி நலமுடன் உள்ளார்… வதந்திகளை பரப்புவோருக்கு கடும் எச்சரிக்கை..!


கடந்த மூன்று தினங்களாக விஷமிகள் சிலர் வேண்டுமென்றே தலைவர் பற்றி சில வதந்திகளைப் பரப்பி வருகின்றனர், அது முற்றிலும் பொய்யானது என்பதை நன்கு தெரிந்த பிறகும்.

தலைவர் ரஜினி அவர்கள் நலமுடன் உள்ளார்… எந்த வதந்திகளையும் ரசிகர்கள் நம்ப வேண்டாம்!

இந்த நிமிடத்தில் தன் வீட்டில் அவர் விஜய் டிவி விருது வழங்கும் விழாவை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதே உண்மை.

ஆனால் கடந்த நான்கு தினங்களாக வெவ்வேறு வதந்திகளை சிலர் வேண்டுமென்றே பரப்பி வருகின்றனர்.

தலைவர் ரஜினி கோச்சடையான் இறுதிக் கட்டப் பணிகளில் மும்முரமாக உள்ளார். சில தினங்களுக்கு முன்புதான் படத்தின் இந்தி பதிப்புக்காக ஒரு பாடல் பாடியிருந்தார். தொடர்ந்து கேன்ஸ் விழாவுக்கு செல்லத் திட்டமிட்டிருந்தவர், கோச்சடையான் ட்ரைலரை இன்னும் சிறப்பாக தயாரிக்கச் சொல்லிவிட்டு, பயணத்தை ரத்து செய்தார். ஆனால் அவர் உடல்நிலை காரணமாகத்தான் பயணம் ரத்து செய்யப்பட்டதாக சிலர் பொய்ப் பிரச்சாரத்தை அவிழ்த்துவிட, அதை மறுத்து தயாரிப்பாளர் முரளி மனோகர் அறிக்கை வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

இன்று மாலை திடீரென்று மீண்டும் அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் ட்விட்டர் வழியாக றெக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்தன. காமெடி நடிகர் விடிவி கணேஷ் அனுப்பியதாக வெளியான ஒரு ட்விட்டை, பேஸ்புக்கில் பலரும் பகிர ஆரம்பித்தனர்.

அடுத்த சில நிமிடங்களிலேயே அது பொய்யானது என்ற உண்மையையும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சொன்னாலும் வதந்தி பரவிக் கொண்டே இருந்தது.

நாம் இது தொடர்பாக தலைவர் வீட்டில் விளக்கம் கேட்கக் கூட விரும்பவில்லை. காரணம், தலைவர் வீட்டில் நலமுடன் இருப்பதை நாம் நன்கு அறிவோம்.

இடையில் ஏராளமான நண்பர்கள் மற்றும் செய்தியாளர்கள் இதுகுறித்து நம்மிடம் விசாரித்தனர். அவர்களுக்காக ஒருமுறை தலைவர் வீட்டில் விஷயத்தைத் தெரிவித்தோம். அதற்கு அங்கிருந்து வந்த பதில், “தலைவர் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டுள்ளார். நாளை கோச்சடையான் டப்பிங் இரண்டாம் பகுதி பேசப் போகிறார். இதுபோன்ற வதந்தியையெல்லாம் நம்ப வேண்டாம்,” என்றார்கள்.

இந்த பதிலையே நம்மிடம் விசாரித்த அனைவருக்கும் தெரிவித்தோம்.

அடுத்த சில நிமிடங்களில் விடிவி கணேஷிடமிருந்து ஒரு அறிக்கை.

அதில், “என் பெயரில் வெளியான அந்த ட்விட் போலியானது. என் பெயரைப் பயன்படுத்தி யாரோ இப்படிச் செய்திருக்கிறார்கள். விரைவில் இதுகுறித்து சைபர் க்ரைமில் புகார் செய்யப் போகிறேன். இப்படி ஒரு வதந்தியில் என் பெயரை இழுத்துவிட்டது வருத்தத் தருகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

தலைவர் ரஜினி சொன்ன வார்த்தைதான்… ‘ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்!’

நண்பர்களே.. ரஜினி என்பது வெறும் பெயரல்ல… ரசிகர்களின் உணர்வில் கலந்தது. அந்த ‘உணர்வு’க்கு தெரியாமல் அவருக்கு ஒன்றும் ஆகாது! (நன்றி: என் வழி)

16 November, 2012

அநானமிகளுக்கு ஒரு எச்சரிக்கை...! துவங்கியது களையெடுக்கும் பணி...!


இணையத்தில் உலாவரும் தனிநபர்களைப் பற்றிய தகவல்களைக் கோருவதில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் இணைய பயன்பாட்டாளர்கள் 3467 பேர் பற்றிய தகவல்களைக் கோரி 2319 வேண்டுகோள்களை இந்தியா விடுத்திருக்கிறது. அமெரிக்காவோ இதுபோல் 7969 வேண்டுகோளை விடுத்திருக்கிறது. 

அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து பிரேசில் 3-வது இடத்தில் இருக்கிறது. அந்த நாடு இண்டர்நெட்வாசிகள் பற்றி 1566 வேண்டுகோளை கொடுத்திருக்கிறது. மொத்தமாக இண்டர்நெட்வாசிகள் பற்றிய 20,938 வேண்டுகோள்கள் கூகுளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

பொதுவாக ஜிமெயில் அக்கவுண்ட், சாட்டிங் விவரங்கள், ஆர்குட் விவரங்களைப் பற்றியே அதிகம் கேட்கப்பட்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ஆண்டு இதுபோன்ற தகவல்களைக் கோரும் வேண்டுகோள்கள் அதிகரித்தே வருகிறது என்கிறது கூகுள் வட்டாரம்.

நீதிமன்ற உத்தரவுகள் மூலமும் இத்தகைய தகவல்களைக் கோருவது இந்தியாவில் அதிகரித்தே வருகிறது. இணைய தளங்கள் மூலமாக நீதிமன்றங்களுக்கு தகவல்களைத் தருவதும் அதிகரித்தே வருகிறது. 

நடப்பாண்டில் இதுபோல் 596 தகவல்கள் நீதிமன்றத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது 20 நீதிமன்ற உத்தரவுகள் மூலம் எடுத்துக் கொடுக்கப்பட்டது. ஆனால் 2010 ஆம் ஆண்டு 125 விவரங்கள் இணையதளம் மூலம் நீதிமன்றங்களுக்குக் கொடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ரொம்ப உஷாராக இருக்கிறதா நினைக்கிற இண்டர்நெட்வாசிகளே! எச்சரிக்கை!

08 November, 2012

நம் நாட்டை கேலி செய்கிறதா தி ஹிந்து நாளிதழ்.. ! இதை நாம் எப்படி எடுத்துக்கொள்வது..?

சமீபத்தில் தொலைக்காட்சி விளம்பரம் ஒன்று மாணவர்கள் இருபிரிவாக பிரிக்கப்பட்டு கிராம மேம்பாடு மசோதாவைப் பற்றி பேச வேண்டும். நாடாளுமன்றத்தில் என்ன நடைபெறுகிறதோ அதே போல இருக்கவேண்டும் என்று கூறுகிறார் ஆசிரியர். 


விவாதம் தொடங்குகிறது. ஒருவர் எழுந்து மசோதாவை வாசிக்கிறார்... மற்ற பிரிவினர் அவரை பேச விடாமல் தடுக்கின்றனர். நாற்காலியை தூக்கி அடிக்கின்றனர்.பேப்பரை கிழித்து முகத்தில் வீசுகின்றனர். ஒரே கூச்சல் குழப்பம் நிலவுகிறது. அவர்களை அமைதி காக்குமாறு சபாநாயகர் கூறுகிறார். அந்த மைக்கும் பிடுங்கி உடைக்கப்பட்டுகிறது. 


கூச்சல் சப்தம் குறைக்கப்பட்டு மெல்லிய இசை ஒலிக்க "பிஹேவ் யுவர் செல்ப், இந்தியா!. யூத் ஆர் வாட்சிங்'( இந்தியாவே நீ எப்படி நடந்து கொள்கிறாய் என்பதை இளைஞர்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்) என்ற வாசகங்கள் திரையில் ஒளிர்கின்றன. 


தி ஹிந்து நாளிதழ் தயாரித்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் இந்த விளம்பரம்தான் இன்றைக்கு பரபரப்பாக பேசப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது. பெரும்பாலோனோர் விருப்பம் தெரிவிக்கும் இந்த விளம்பரத்தின் மூலம் தி ஹிந்து என்ன சொல்ல வருகிறது? இது அரசியல்வாதிகளுக்கான எச்சரிக்கையா? அல்லது வருங்காலத்தில் அரசியல் தலைவர்களாகப் போகும் இளைஞர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கின்றனரா? இந்தியாவின் நாடாளுமன்றத்தில் தினசரி நிகழ்வு இதுதானா? தொலைக்காட்சிகளில் லோக்சபா, ராஜ்யசபா நிகழ்வுகள் ஒளிபரப்பாகின்றன. 


சில சமயங்களில் கூச்சல் குழப்பம் நிகழ்வதுண்டு. ஆனால் நாற்காலிகள் உடைக்கப்படுவதும், மைக் பிடுங்கி அடிக்கப்படுவதும்தான் நாடாளுமன்றத்தின் அன்றாட நிகழ்வு என்பது போல்தானே இந்த விளம்பரத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. 


இதை பார்க்கும் வெளிநாட்டவர்கள் இந்தியாவின் நாடாளுமன்றத்தின் தினசரி நிகழ்வே இதுதான் என்று நினைத்துக்கொள்ள மாட்டார்களா? தி ஹிந்து, டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்கள் இடையேயான போர்தான் பெரும்பாலும் அவர்களின் விளம்பரங்களில் எதிரொலிக்கும். ஆனால் இப்பொழுது இந்த புதிய விளம்பரத்தின் மூலம் தி ஹிந்து நாளிதழ் சொல்ல வரும் தகவல்தான் என்ன? எதைப்பற்றியும் யோசிக்க வேண்டாம் என்றால் விளம்பரத்தை, விளம்பரமாக பார்த்துவிட்டு விட்டுவிடுங்கள்....

அந்த விளம்பரம்...
Related Posts Plugin for WordPress, Blogger...