கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label குழந்தை. Show all posts
Showing posts with label குழந்தை. Show all posts

30 December, 2013

இப்படி சொன்னால் விரல்கள் கூட சிரிக்கும்



வெறுங்கையை வைத்துக்கொண்டு
நான் என்னதான் செய்ய..!

என்னிடம் எதுவும் இல்லை
உருப்படியாய் பயன்படுத்த..!

ஏதாவது என்னிடம் இருந்திருந்தால்
கண்டிப்பாய் முன்னேறியிருப்பேன்...!

நம்ம கையில ஒன்னுமில்லை
எல்லாம் அவன் கையில்...!

இப்படியாய்..
கையை பிசைந்துக்கொண்டிருந்தவனை
பார்த்து சிரித்தன விரல்கள்...!


*****************************



வயிற்றில் கவ்விய தன்குட்டியை
பவ்வியமாக பற்றிக்கொண்டிருக்கிறது குரங்கு...!

ஈன்றெடுத்த ஆறு குட்டிகளுக்கு
படுத்து பாலுட்டிக்கொண்டிருக்கிறது நாய் ஒன்று..!

தேடிபிடித்த சில புழுக்களை அலகால்
குஞ்சுகளுக்கு ஊட்டுகிறது குருவி..!

ஆனந்தாய் முட்டி முட்டி பால்குடிக்கிறது
தன் தாயிடம் பசுங்கன்று...!

இவைகளையெல்லாம் ஏக்கமாய்
பார்த்துக்கொண்டிருக்கிறது தெருவோர குழந்தை...!

*****************************
 தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...!

14 December, 2013

இப்படிப்பட்ட குழந்தைங்க உங்க வீட்ல இருக்கா....!

குழந்தைகள் கொஞ்சும் போது நல்லாதான் இருக்கும்...
ஆனா நாம கொஞ்ச நேரம் இல்லன்னா அவ்வளவுதான்...
இந்த மாதிரியெல்லாம் உங்க வீட்டல செஞ்சியிருக்காங்களா..?










































 
 ரசித்தமைக்கு நன்றி...!

14 November, 2013

நிறங்களுக்கு முதலிடமா..? இது முற்றிலும் உண்மை..!



வண்ணமயமான பலூன்களை விற்றுப்பிழைக்கும் ஒருவன் புதியதாக வேறு ஒரு ஊருக்கு வந்தான்.

பஞ்சம் பிழைக்க வந்த இடத்தில் பலூன்களுக்கு வரவேற்பு இல்லாமல் இருந்தது. 

அவன் புதியதாக ஒரு விளம்பரம் செய்ய விரும்பினான். அதன்படி வண்ண வண்ண பலூன்களை ஹீலியம் வாயுவால் நிரப்பி மக்கள் கூட்டமாக இருக்கக்கூடிய இடங்களில் பறக்கவிடுவான். 

வானில் பறக்கின்ற விந்தையான பலூன்களை 'எனக்கு வேண்டும் ..உனக்கு வேண்டும்' என சிறார்களும் - ஏன் வயதானவர்களும்கூட வாங்கி வாங்கி மகிழ்ந்தனர்.

எப்போதெல்லாம் வியாபாரம் சோர்வடைகிறதோ அப்போதெல்லாம் 'பறக்கும் பலூன்கள்' மூலம் புதிய உற்சாகமான விளம்பரத்தைக்கொண்டு தனது வாழ்க்கையை ஓட்டி வந்தான். 
அவன் தனது வியாபாரத்தைச் செவ்வனே செய்துவந்தான்.

சில நாட்களுக்குப்பிறகு ஒரு கருப்பினச்சிறுமி, அவனிடம் கேட்டாள். "அண்ணே. அண்ணே..எல்லா வண்ணங்களிலும் பலூன்களைப் பறக்கவிடுரீங்க.. ஆனால் கருப்புக்கலர் பலூன் பறந்து நான் பார்க்கவே இல்லை. கருப்புவண்ணப் பலூன் பறக்குமா? பறக்காதா? என் சந்தேகத்துக்கு விடையளியுங்கள்" என்றாள்.

"அன்புக்குழந்தையே!.. கருப்பு நிறப்பலூன் என்றாலும் - அதனுள்ளே - ஹீலியம் வாயுவை அடைத்துப் பறக்கவிட்டால் பறந்தே தீரும். பலூன் வானில் பறக்கக்காரணம் அதன் வண்ணமன்று.. அதனுள்ளே அடைத்து வைக்கப்படும் வாயுவால்தான் அது பறக்கிறது. 

கருப்பாக இருந்தாலும் சிவப்பாக இருந்தாலும், என்ன வண்ணமாக இருந்தாலும் அது பறந்தே தீரும். இது சத்தியம்" என்றான்.

நீதி : உன் நிறம் கருப்பாக இருப்பதை ஒரு பொருட்டாக எண்ணாதே!.. உனக்குள் இருக்கும் எண்ணங்களை உலகறியச் செய். சரித்திரத்தில் உன் பெயர் நிச்சயம்.

குழந்தைகளின் மனதில் பிரிவினைகளை விதைப்பதை தவிர்த்து இந்த உலகில் தன்னம்பிக்கையோடும் வாழும் வழிமுறைகளை கற்றுக்கொடுப்போம்...  "Sharavin SirukathaigaL" என்ற நூலிலிருந்து



*********************************

இந்த குழந்தைகள் தினத்தில் நாமும் 
குழந்தைகளோடு குழந்தைகளாவோம்..

குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்...!

11 November, 2013

குழந்தைகளே ஜாக்கிரதை...


 

கோடி அணுக்களிலிருந்து பிரிந்து
ஒற்றை அணுவாய் உயிர்வளர்த்த
கர்ப்பத்திலிருந்து தப்பியதற்கு ஆச்சரியமா..?

ஆனந்தமா...!
பத்துமாதம் ஓய்வெடுத்த
கர்ப்பத் தடையை உடைத்ததற்கு...

இந்த பூமியில் மையம் கொள்ள வந்த
புத்தம்புது இளம் புயலே
ஒரு சேதி தெரியுமா உனக்கு..?

மூடிக்கிடந்த ஓட்டை உடைத்து
புதிதாய் உயிர்பித்து விட்டாய்
பசியோடு இருக்கின்றன பருத்துகள்...

உனக்கு வித்தியாசமான
தூண்டில்கள் தொட்டில்களாக இங்கு
அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றன

உனக்கொரு தாலாட்டு 
சினிமா பாட்டில் மட்டுமே...
 

ஒவ்வொரு கனமும் உன் நம்பிக்கை
கூண்டில் நிறுத்தப்படும் கலங்காதே...

புகழாரங்கள் கேட்டு 
வீண் கனவு வளர்க்காதே...
 

மீனுக்காக வலை விரித்து
கானலில் காத்திருக்காதே...

வளரும்போதே வளர்க்கப்பார்
 வாழ்க்கைக்கான தன்னம்பிக்கையை...!


தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..!

23 July, 2013

இதை குழந்தைகளிடம் சொல்லலாமா.. வேணாமா...? இது பெற்றோருக்கு...!





1. அம்மா என்றால் சமையல் செய்பவள், அப்பா என்றால் சம்பாதிப்பவர் என்ற கருத்துக்களை குழந்தைகளின் மனதில் விதைக்காதீர்கள். யார் வேண்டுமானாலும் எந்த வேலையையும் செய்யலாம், உயர்ந்தது, தாழ்ந்தது ஏதுமில்லை என்ற எண்ணங்களை விதையுங்கள்!



2.. எதுவாய் இருந்தாலும் அம்மா மட்டுமே அல்லது அப்பா மட்டுமே, அல்லது வீட்டில் உள்ள பெரியவர் மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்று இப்போதே கருத்து சுதந்திரத்தை மறுக்காதீர்கள்!



3. குழந்தைகள் பற்றிய முடிவுகளை, அவர்களிடம் கருத்துக் கேட்டு, அவர்களின் உணர்வுக்கும் மதிப்பு கொடுத்து முடிவு செய்யுங்கள். அவர்கள் சொல்லும் கருத்து அல்லது விருப்பம் உங்களுக்கு ஏற்புடையது அல்ல என்றால், அதை ஒரு தோழமையுடன் எடுத்துச் சொல்லுங்கள்! ஒருபோதும் உங்கள் அதிகாரத்தை பிரயோகிக்காதீர்கள்!



4. பகிர்ந்து உண்ணுதல், விலங்குகளிடம் அன்பு செலுத்துதல் போன்ற பழக்கங்களை விதையுங்கள். குழந்தையுடன் செல்கையில் நீங்களே ஒரு நாயையோ, பூனையையோ கல்லெடுத்து விரட்டி, வன்முறையை விதைக்காதீர்கள்! பெரும்பாலும் வீட்டு விலங்குகளுடன் பழகும் குழந்தைகளிடம் அன்பு நிறைந்திருக்கும், வன்முறை குறைந்திருக்கும். (அன்பு நிறைந்திருக்க நீங்கள் இங்கு கூறிய எல்லாவற்றையும் செயல்படுத்த வேண்டும்)



5. அந்த மாமா வந்தால், அப்பா வீட்டில் இல்லை என்று சொல்லு என்றோ, அந்த கடன்காரன் பேசுறானா போனில், நான் வீட்டில் இல்லை என்று சொல்லு என்றோ இப்போதே பொய் கூற பழக்காதீர்கள்.

6. "நம்ம சாதிக்காரங்க இவங்க"," நம்ம மதத்தை சேர்ந்தவங்க இவங்க" என்ற அறிமுகத்தை விட்டுவிட்டு, உறவுமுறை கொண்டோ, நட்பின் பின்புலம் கொண்டோ அறிமுகம் செய்யுங்கள்.



7.. உங்கள் குழந்தையை, உங்கள் மற்றொரு குழந்தையோ அல்லது வேறு ஒருவரின் குழந்தையோ, அடித்தாலோ, திட்டினாலோ, "திருப்பி திட்டு", "திருப்பி அடி" என்று வன்மம் வளர்க்காதீர்கள்! நாளை இவர்கள்தான் ஆயுதம் எடுப்பார்கள்.



8.. ஏன் அந்த தவறு நடந்தது? இனி இப்படி நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று சம்பந்தப்பட்ட குழந்தைகளிடமே தீர்வு கேளுங்கள்! மெதுவாய் இணக்கமான சூழ்நிலை உருவாகும். நாளை நல்ல சட்ட வல்லுனர்கள் உருவாகலாம்!



9."கத்தாதே சனியனே" என்று நீங்கள் கத்தி கொண்டு இருக்காதீர்கள். மலர்களை கொடிய வார்த்தைகளில் அர்ச்சிக்காதீர்கள்.



10.. பலபேர் முன்னிலையில் ஒருபோதும் உங்கள் குழந்தையை திட்டி, குறை சொல்லி வேதனை படுத்தாதீர்கள். குழந்தைகளுக்கும் சுயகௌரவம் உண்டு, எந்த வயதானாலும்.



11. "அண்ணன் சொல்வது போல நட", "அக்கா சொல்வது போல நட" என்று சொல்லாமல்," நீங்கள் இருவரும் பேசி முடிவு செய்யுங்கள்" என்று சமத்துவம் உருவாக்குங்கள். பெரியவர் முதுகில் சுமையையும், சிறியவர் மனதில் தாழ்வுணர்ச்சியையும் ஏற்படுத்தாதீர்கள்!



12. கூட்ட நெரிசல் மிக்க இடங்களில் குழந்தைகளை அழைத்துச் செல்வதை தவிர்த்து விடுங்கள்! அழைத்து செல்ல நேர்கையில், பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்!



13. ஒருபோதும் குழந்தையின் முன்னிலையில் புகைப்பிடிப்பது, மது அருந்துவது, அல்லது அதை வாங்கி வர பணிப்பது போன்ற அடாத செயல்களை செய்யாதீர்கள்!



14. குழந்தையின் சில சிறு வயது குறும்புகள், விலங்குகளையோ, பெரியவர்களையோ, சக குழந்தையையோ துன்புறுத்துவதாக அமைந்தால், குழந்தையின் எதிரே அந்த குறும்பை கண்டு சிரித்து, ரசிக்காதீர்கள். உங்கள் சிறு குழந்தை, குறும்பாய் வீட்டில் பாட்டியின் பல்லை உடைத்தாலோ, பூனையின் வாலைத் பிடித்து தூக்கி எறிந்தாலோ, குழந்தைக்கு எவ்வளவு வலிமை, பயமேயில்லை என் குழந்தைக்கு என்று குழந்தையின் எதிரே ரசித்தீர்கள் என்றால், பின்னாளில் வளரும் வன்முறையில் நீங்கள் ரசிப்பதற்கு ஏதும் இருக்காது!



15. உங்களால் செய்யக் கூடிய செயல்களை, தரக் கூடிய பொருள்களை, குழந்தையை அழ வைக்காமல் செய்து விடுங்கள், கொடுத்து விடுங்கள். அடம் பிடிக்க வைத்து, அழ வைத்தபிறகு செய்தால், குழந்தைக்கு அழுவதும், அடம் பிடிப்பதும் மட்டுமே இயல்பாகும்.



16. காய்ச்சல் என்பது ஒரு நோயின் அறிகுறியே தவிர, அதுவே நோய் அல்ல. உடலில் உள்ள கிருமிகளை அழிக்கும் பொருட்டு இயற்கையாய் உடலில் ஏற்படும் வெப்பம் அது. குழந்தைகளுக்கு காய்ச்சல் கண்டால், சிறந்த குழந்தை நல மருத்துவரை கண்டு, எதற்கான காய்ச்சல் என்று கண்டறிந்து பரிந்துரைக்கப்படும் மருந்துகளை குறித்த வேளையில், குறித்த இடைவெளியில் மட்டுமே தருக. நாமே மருத்துவர் ஆவதை தவிர்த்தல் நலம்!



17. பலபேர் முன்னிலையில் எப்போதும் குழந்தைகளை குறை கூறுவதோ, அடிப்பதோ, திட்டுவதோ...இது போன்ற எந்த செயல்களையும் செய்யாதீர்கள். உங்களை இதுபோல் பிறர் செய்தால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?



18. குழந்தைகள் சின்னஞ்சிறு பெரிய மனிதர்கள், இன்று நீங்கள் விதைப்பதை நாளை நீங்கள்தான் அறுவடை செய்ய வேண்டும். நல்லன விதைத்தால் நாளை நல்ல சமுதாயம் மலரும்!



19. நல்ல கல்வி, சுய சிந்தனை, கைத்தொழில், சத்துள்ள உணவு, மரியாதை, ஆரோக்கியம் மற்றும் உள்ளார்ந்த அன்பு இவையே எல்லா குழந்தைகளுக்குமான அடிப்படை தேவைகள்! உங்கள் வன்முறை அல்ல! (-Aatika Ashreen படித்தது...)

04 July, 2013

பள்ளிக்கு செல்ல உங்கள் குழந்தை அடம்பிடிக்கிதா....? உஷார் காரணம் இதுவாகக்கூட இருக்கலாம்...!

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் அழுகையை நிறுத்தவும், அவர்களின் மனதில் தைரியத்தை வளர்க்கும் சில வழிமுறைகளையும்,கோவை அரசு கல்லூரி உளவியல் பேராசிரியர் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளார்.


பள்ளிக்கூடங்கள் திறந்து மூன்று வாரங்களுக்கும் மேலாக ஆன நிலையில் பலரது குழந்தை தினமும் அழுது கொண்டே பள்ளிக்கு செல்கிறது. பள்ளிக்கு செல்ல மாட்டேன் என அடம்பிடிக்கிறது. கோவை அரசு கலைக்கல்லூரி உளவியல்(சைகாலஜி)பேராசிரியர் செல்வராஜூ கூறியதாவது:


குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் அழுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மனோதத்துவ காரணங்களே முக்கியமாகும். சிறு குழந்தைகளுக்கு உணவுக்கு அடுத்த முக்கிய தேவை காப்புணர்ச்சியாகும். வீட்டில் பெற்றோருடன் பாதுகாப்பாக இருக்கிறோம் என்னும் உணர்வே காப்புணர்ச்சி ஆகும்.


சிறு குழந்தைகளுக்கு தங்கள் வீட்டிலும், சுற்றுப்புறத்தலும் இவ்வுணர்ச்சி ஏற்படுதல் அவசியம். முதன்முதலில் குழந்தைகள் பெற்றோரை விட்டு பிரிந்து பள்ளிக்கு செல்லும் போது இக்காப்புணர்ச்சி சிறிது பாதிக்கப்படலாம். இது எல்லா குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி இருக்காது.


சற்று அதிக பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளே பள்ளிக்கு நீண்ட நாட்கள் அழுது கொண்டே செல்லும். தீவிர பாதிப்புக்கு ஆளாகும் குழந்தைகள் மனதில் காரணமற்ற கிலி உருவாகி, பள்ளிக்கு செல்வதை தவிர்க்க முயற்சிக்கும். இக்குழந்தைகள் அடம்பிடித்தல், தூங்கி எழுவதில் காலதாமிப்பை ஏற்படுத்தும்.


மேலும், இவர்களுக்கு பரந்த வெளியிடங்களை கண்டு இனம்புரியாத பயம் ஏற்படும். பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை பார்த்து கூட பயம் ஏற்படலாம். இதற்கு "அகோரபோபியா" என்று பெயர்.சில குழந்தைகள் சிறிய குடும்ப சூழ்நிலையில் பிறந்து வளர்ந்திருக்கும்.


இக்குழந்தைகள் கூட்டத்தைப் பார்த்தவுடன் மனதில் பயம் ஏற்பட்டு விடும். பள்ளிக் கூடத்திலும், வகுப்பறைகளிலும் காணப்படும் மாணவர் கூட்டத்தை பார்த்தாலே மனதில் பயம் தோன்றிவிடும். இந்த வகை பயத்துக்கு "டைமோபோபியா" என்று பெயர்.


இதேபோல் ஒரு சில குழந்தைகள் கூட்டுக் குடும்ப சூழ்நிலையில் பிறந்து, பெரிய வீட்டில் விளையாடி மகிழ்ந்து வளர்ந்திருக்கும். இத்தகைய குழந்தைகள் நெருக்கமான சூழலில், சிறிய வகுப்பறைகளை பார்க்கும் போது கூட மனதில் பயம் தோன்றி விடும். இந்த வகை பயத்துக்கு "கிளஸ்ட்ரோபோபியா" எனப் பெயர்.


இதுபோன்ற பயம் தோன்றும் போது, சிறு குழந்தைகள் அழும். அந்த இடத்தில் இருந்து விலகி ஓடத்துவங்கும். சில வேளைகளில் எதுவும் செய்யத் தோன்றாமல் செயலற்று ஒரே இடத்தில் நிற்பது உண்டு.
மேலும், பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு வந்த பின்னர். மாலையில் குழந்தை அழுவதற்கு காரணம் பரபரப்பான பள்ளிசூழ்நிலை முடிந்து, வீட்டுக்கு வந்தவுடன் அமைதியான சூழ்நிலையில் அதன் மனதில் பயம் தோன்ற ஆரம்பிப்பது தான்.


இவர்களிடம் ஏற்படும் தீவிர பயம் சில சமயம் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். உடல்நலம் பாதிக்கப்பட்டு காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு ஆகியன ஏற்படலாம். இவற்றை தவிர்க்க குழந்தைகளிடம் பயத்தை குறைக்க பெற்றோரும், ஆசிரியர்களும் ஆவன செய்ய வேண்டும்.


இப்பிரச்னைகளை தீர்க்க சில வழிகள்: தொடக்கத்தில் இருந்த பள்ளிக்கூடம் செல்வதை கட்டாயமாக்க வேண்டும். குழந்தை அழுகிறதே என ஓரிரு நாட்கள் விடுமுறை எடுப்பதை தவிர்த்து விட வேண்டும். சிறிது நாட்களில் பழக்கத்தின் காரணமாக குழந்தைகளுக்கு பயம் தானாக குறைந்து விடும்.


அழும் குழந்தைகளை ஆசிரியர் தன் அருகில் அமர வைத்து, பாதுகாப்புணர்வை அளிக்க வேண்டும். அன்புடன் கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும். ஓரிரு வாரங்கள் பெற்றோர் பொறுமையுடன் குழந்தைகளை கையாள வேண்டும். மற்ற குழந்தைகளின் தைரியமான நடத்தைகளை காண்பித்து விளக்க வேண்டும்.


பள்ளி நேரம் முடிந்ததும் வீட்டுக்கு அழைத்து வராமல், பள்ளி பூங்காவில் சிறிது நேரம் விளையாட வைக்கலாம். இதனால் குழந்தைகளின் பயம் வெகுவாக குறைந்து, அவர்களின் மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் வளரும். இவ்வாறு உளவியல் பேராசிரியர் செல்வராஜூ தெரிவித்துள்ளார்.
Related Posts Plugin for WordPress, Blogger...