கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label கருத்துக்கள். Show all posts
Showing posts with label கருத்துக்கள். Show all posts

24 September, 2013

சமூக வலைதளங்களை கண்டித்த பிரதமர்...! கொதிக்கும் வசகர்கள்..!


ஆட்சேபனைக்குரிய தகவல்களை பரப்பி, மக்களிடையே மத கலவரங்களை உருவாக்க, சமூக வலைதளங்கள் காரணமாக இருக்கின்றன; அது கண்டனத்திற்குரியது. நாட்டின் பல பகுதிகளிலும், மத கலவரங்கள் அதிகரித்து வருவதை ஏற்க முடியாது. மத கலவரங்கள் உருவாக காரணமானவர்கள், யாராக இருந்தாலும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய கடமை, மாநில அரசுகளுக்கு உள்ளது,'' என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். 

இந்த செய்தியை வெளியிட்ட தினமலர் இணையதளத்தில் காட்டமான கருத்தளித்த சிலவாசகர்களின் கருத்தை இங்கு பகிர்கிறேன்..!


Sanjay Kumar - Chennai,இந்தியா
Sanjay Kumar சர்தார்ஜி - உங்களுக்கு அதுக்கு மேல் பேச இத்தாலியில் இருந்து உரிமை கிடைக்கவில்லை. ஏதோ வந்தோமா குடுக்குற ஏலக்காய் டீ மற்றும் மசால் வடையை சாப்பிட்டோமா என்று இருக்காமல் ஓவரா கூவகூடாது

பி.டி.முருகன் - Trichirapalli,இந்தியா
பி.டி.முருகன்    சமூகம் என்பது என்ன? மக்கள் தானே சமூகம்? மக்களின் கருத்துகளை வலை தளத்துக்கு கொண்டு செல்ல கூடாது என்று அவசர சட்டம் போடலாமா என்று பார்க்கிறாரோ? எந்த வலை தளத்தில் மத உணர்வுகளை எவர் தோண்டுகிறார் என்று பார்த்து சரி செய்தால் நன்றாக இருக்கும்.


Sanjay Kumar - Chennai,இந்தியா
Sanjay Kumar வெட்கம் கெட்ட மனிதர், தன் மேல் உள்ள கையாலகாத தனத்தை அடுத்தவர் மேல் போடுவதில் இவர் மௌனியாக இருந்தே சாதிப்பார். கேவலம் வாக்கு வங்கிக்காக, சிறுபான்மையினர் மனதில் நஞ்சை மற்றும் அச்ச உணர்வை விதைத்ததே உங்கள் அன்னையார் தான்.

செல்வ.கமலகண்ணன் - ஸ்ரீமுஷ்ணம்,இந்தியா
செல்வ.கமலகண்ணன் ஏதேதோ சொல்லி பார்த்தாங்க எதையும் சரியா மக்கள் ஆதரிக்கிற மாதிரி தெரியலை சரி எதாவது சொல்லி வைப்போம் அது எப்பயாவது உதவும் சொல்லி பார்க்கிறாங்க அதை மக்கள் ஏத்துக்கிற ஜடியாவே இல்லை என்ன சொன்ன இவங்க சந்தோஷ படுவாங்கனு இவங்க தனிப்படை வச்சு விசாரிச்சாங்க அவங்க இவங்கிட்ட சொன்னது நீங்க ஆட்சியை கலைக்க போறாம்னு சொன்னா எல்லா மக்களும் ஆதாரிப்பாங்கனு அவங்க சொல்லிட்டாங்க அதான் இப்படி பேச்சு

ஆரூர் ரங - chennai,இந்தியா
ஆரூர் ரங எதப் பத்தி யார் பேசறதுன்னு விவஸ்தையே இல்லை இவங்க காங்கிரசோ அல்லது இவர்கள் ஆதரிக்கும் சிறுபான்மை தீவீரவாத இயக்கங்களோ சமூக வலைதலங்களையா நம்பியுள்ளன ? டெல்லி வாக்காளர் பட்டியலை வைத்தே சீக்கியர் வீடுகளைக் கண்டுபிடித்து கொன்று குவித்தபோது ட்வ்விட்டரும் பேஸ் புக்கும் இல்லையே.

டாடி எனக்கு ஒரு டவுட்டு உங்களின் தகவல் அறியும் உரிமை சட்டத்தை விட சமூக வலை தளங்களில் தகவல் உடனுக்கு உடன் கிடைக்கிறது அதுவும் நேரம் நாள் கடத்தாமல்...அதனால் மக்கள், நாட்டில் நடக்கும் அவலங்கள், அக்கிரமங்களை உடனுக்கு தெரிந்து கொள்ள முடிகிறது...உங்களுடைய ஆட்சி எந்த நிலையில் இருக்கிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்ளும் ஒரு உன்னத சாதனம் சமூக வலை தளங்கள் தான்...எனவே தடை செய்ய வேண்டியது உங்கள் ஆட்சியை தான்..சமூக வலை தளங்களை அல்ல...
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
Samy Chinnathambi இவரு எல்லாத்தையும் மூடிட்டு ராஜபக்சே மாதிரி அரசாங்கத்தை நடத்தலாம்னு பாக்கறாரு.......அடுத்ததா இந்த நாட்டில் குழப்பம் விளைவிப்பது ஊடகங்கள் தான் என்று சொல்லி பத்திரிக்கைகளுக்கும், டிவி சானல்களுக்கும் கட்டுப்பாடு கொண்டு வரவேண்டும் என்பார்...அதில் காங்கிரஸ் கட்சியையோ பிரதமரையோ விமர்சிக்க கூடாது என்பார்.......கையாலாகாத பிரதமரை கைபில்லையை போன்று இருப்பவரை விமர்சிக்காமல் வேறு யாரை விமர்சிப்பார்கள்? 


Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
Baskaran Kasimani காங்கிரசின் போலி மதவாத கொள்கையினால் வந்த கேடுகள்தான் இவை. சிறுபான்மையினரின் ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று காங்கிரஸ் செயல்படுவது - கிட்டத்தட்ட இந்தியாவை துண்டு போட எடுக்கும் முயற்சியே...

senthilnathan - ramanathapuram,இந்தியா
senthilnathan // சமூக வலைதளங்கள் முறையான வகையில் பயன்படுத்தப்பட வேண்டும். தவறான காரியங்களுக்கு பயன்படுத்தப்படுவதை, தடுத்து நிறுத்தவும், நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில், கடைபிடிக்கப்படும் அணுகு முறையை, மறுபரிசீலனை செய்ய, அனைவரும் முன்வர வேண்டும்// நீர் யாரை அழைக்கிறீர் . நீர் என்ன பிரதமர் தானே , தவறை கண்டுபிடித்ததே மிக தாமதம் இதில் யாரிடம் அனுமதி கேட்கிறீர் . இழுத்து மூடுங்கள்


Vettri - Coimbatore,இந்தியா
Vettri போலி மத சார்பின்மை பேசும் அரசியல்வாதிகளால் தான் மத மோதல்கள் உருவாகின்றன. சமீபத்தில் நடந்த கலவரத்தின் போது உத்தர் பிரதேஷ் மந்திரி ஒரு சாரரை விடுதலை செய்யுமாறு பணித்து இருக்கிறார். அவர் மீது மாநில அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அதை தட்டி கேட்க வேண்டிய மத்திய அரசு வாய் மூடி மவுனியாக இருந்தது ஏன்? ஆட்சி, அதிகாரம், சட்டம், போலீஸ் மற்றும் ராணுவம் அனைத்தையும் கையில் வைத்துகொண்டு சமூக வலை தளங்கள் மீது பழியை போடுகின்றனர். ஆட தெரியாதவனுக்கு மேடை கோணல்.


ரகு - chennai ,இந்தியா
ரகு புதிய கண்டு பிடிப்பு. அரசியல் வியாதிகள் தானே மத கலவரத்தை உருவாக்குகின்றது. போலி மதசார்பின்மை என்று கூறி கொண்டு ஒரு குறிப்பிட்ட மதத்தை தாக்குவது தான் இத்தாலி கொள்கை. மதத்தின் அடிப்படையில் சலுகை வழங்குவது இது எல்லாம் கலவரம் வெடிக்க காரணம் என்பதை மறந்து வலைத்தளங்கள் மீது குற்றத்தை சுமத்துவது வேடிக்கை. உங்கள் ஊழல்கள் வெளிச்சத்துக்கு வருவதற்க்கு வலைத்தளங்கள் காரணம். இதை பொறுக்க முடியாமல் வலைத்தளங்கள் மீது பாய்கிண்றீர்கள்.



Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
Baskaran Kasimani இப்பொழுதெல்லாம் எதற்க்கெடுத்தாலும் சமூக வலைத்தளங்களை பழி சொல்வது ஒரு பேஷன்.

தமிழ்நிதி - chennai,இந்தியா
தமிழ்நிதி இண்டர்நெட்டை அரபு நாடுகள் போன்று நம் நாட்டில் கட்டுபடுத்த வேண்டும். பாலுணர்வுகளை தூண்டும் மற்றும் அரசியல்வாதிகளை அவதூறாக சித்தரிக்கும் வலை தளங்களை தடை செய்ய வேண்டும். தவறான செய்திகளை நெட்டில் பரப்புவோருக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும். மத கலவரங்களை தூண்டிவிடும் வகையில் செய்திகளை வெளியிடுவோருக்கு தூக்கு தண்டனை கூட கொடுக்கலாம்.
 ‌
மேலும் கருத்துகளுக்கு...
 
என்னுடைய கருத்து...!

சமூக வளைதளங்கள் பெரும்பாலும் சில சமூக பிரச்சனைகளுக்கு எதிராகத்தான் குரல் கொடுத்துக்கொண்டு வருகிறது. ஏதோ ஒருசில தரம்கெட்டவர்களை வைத்துக்கொண்டு முழு சமூக வலைதளங்களை குறைச்சொல்வது தவறே...

சமூக வலைதளங்களில் மதஉணர்வை தூண்டும் செயல்கள் மட்டும் இல்லாமல், ஏமாற்றுவேலை, பெய்யான தகவல்களை பரப்புதல், காதல் வலை வீசுதல், சமீபத்தில் ஒரு சில கொலைகள் கூட இதனால் ஏற்பட்டிருப்பது நாம் பார்க்கிறோம். இப்படி ஒருசில தவறுகளை தவிர்த்துவிட்டு சமூக வலைதளங்களை ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுத்த சமூகம் விழையுமானால் எல்லாம் நன்றானதாகவே நடக்கும்...!

தங்களின் கருத்தையும் பதிவுசெய்யுங்கள்..!

02 September, 2013

நான் நாத்திகனல்ல...




கட்டும் காவியும்
சூட்டும் குல்லாவும்
நெய்யப்பட்டது ஒரே நூலில்தான்
மனம் இதனை ஏன் மறந்துபோயிற்று...!


நானும் கடைப்பிடிக்க கற்றுக்கொண்டிருப்பேன்
சாதியின் பெயரை இரத்த அணுக்களில்
அடைக்கப்பட்டிருந்தால்...


பசிக்காத வயிறும்

கரையாத கண்களும்
கலங்காத மனமும்
இன்னும்  காணமுடியவில்லை இந்த மண்ணில்...


இழக்க எத்தனையோ இருக்கிறது
சாதி மதக்கல்வெட்டுக்கள்
இந்த தேசத்தில்...


தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..!

19 March, 2013

திமுக விலகல்... கலைஞரின் நாடகமா...? தேர்தல் கருதியே விலகல்..வாசகர்களின் குமுறல்...!

மத்தியில் அரசு அமைத்துள்ள, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, தி.மு.க., விலகிக் கொண்டதாக, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, அறிவித்தார்.

இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதலை போர்க் குற்றம், இனப் படுகொலை என அறிவிக்க வேண்டும் என்ற திருத்தத்துடன், ஐ.“நா., மனித உரிமை அமைப்பில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகிய இருவருக்கும், தி.மு.க., தலைவர் கருணாநிதி இரண்டு தினங்களுக்கு முன் கடிதம் எழுதினார். இதை நிறைவேற்றவில்லை எனில், கூட்டணியில் நீடிப்பதில் அர்த்தமில்லை என்றும கூறினார்.

என தினமலர் இணையதளத்தில் செய்தி வெளியானது அந்த செய்தியில் வாசககள் கூறிய கருத்துகளில் சில...


Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
19-மார்-201316:11:21 IST Report Abuse
Ramasami Venkatesan பிரதம மந்திரி அலுவலகம் 2ஜி தீர்மானங்களில் தங்களுக்கு சம்பந்தமில்லை என்றும் இது மந்திரியின் தனிப்பட்ட முடிவு என்றும் கூறிவிட்டது. இனி கேஸ் சூடு பிடிக்கும். இன்னொரு மந்திரி சபை மாற்றம் இருக்கும் தேர்தலுக்கு முன்பே. தி மு க மந்திரிகள் இருவரும் வெளியே. கனிமொழி கேசும் தீவிரமாகும். வரும் பாராளுமன்ற தேர்தலில் தி மு க அம்பேல் ஆனால் (ஆனால் என்ன - ஆகும்) மேலும் தொடரும் வழக்குகள்.
////////////
JOHN SELVARAJ - CHENNAI ,இந்தியா
19-மார்-201316:03:18 IST Report Abuse
JOHN SELVARAJ கருணாநிதி இந்த வயதிலும் இலங்கைப் பிரச்சினை குறித்து மத்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை, காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகல் என முக்கிய முடிவுகள் எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்த தி.மு.க தலைவர், அடுத்த முதல்வர் என வலம்வந்துகொண்டிருக்கும் மு.க.ஸ்டாலினோ, பிறந்தநாள் முடிந்து 20 நாளாகியும், இன்னும் தமிழகமெங்கும் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மூழ்கியிருக்கிறார். இலங்கைப் பிரச்சினை தகித்துக்கொண்டிருக்கும் இந்நிலையில், மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தவேண்டிய இவர் இப்படி பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதுதான் அழகா? 
///////////////
MOHAMED GANI - MADURAI,இந்தியா
19-மார்-201316:02:29 IST Report Abuse
MOHAMED GANI இவ்வளவு பிரச்சினைகள், இலங்கைத் தமிழருக்கான போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கும் வேளையில், தி.மு.கவின் அடுத்த தலைவர் என்று கருணாநிதியாலேயே முன்மொழியப்பட்ட ஸ்டாலின் எங்கே என்றே தெரியவில்லையே? மானவர்கள் போராட்டம் தமிழகத்தில் உக்கிரமாக இருந்துகொண்டிருக்கும் வேளையில் இன்னும் கருணாநிதிதான் பத்திரிகை அறிக்கை, தலைவர்கள் சந்திப்பு என்று பிசியாக இருக்கிறாரே தவிர ஸ்டாலின் எதிலும் கலந்துகொண்டதாகத் தெரியவில்லை. போராட்டம் நடத்தும் மாணவர்களையும் சந்தித்திக்கவில்லை இவர் எப்படி அடுத்த தலைவராக வரமுடியும்?
/////////////
LOTUS - CHENNAI,இந்தியா
19-மார்-201315:56:27 IST Report Abuse
LOTUS வழக்கம் போல ஊளை முட்டையை போட்டுவிட்டு நல்ல முட்டையை எடுத்துவா என்று குழந்தைகள் விளையாடுமே அதுதான் நடந்துள்ளது........ ராஜினாமா அறிவிப்புக்கு பின்னே மணியோசை வந்துவிட்டதே ............. பார்லிமெண்டில் தீர்மான வாசகம் மாற்றப்பட்டு ஒரு சேர தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் இந்த ராஜினாமாவும் வாபஸ் பெறப்படும் என்று .............எங்காவது பூனை கருவாட்டை விட்டு விட்டு சைவமாக மாறுமா ? ............ பதவியில்லாத கருணா என்பது அவரது சரித்திரத்தில் இல்லாதது..... எனவே, ஊரெல்லாம் போராடும் பொது தான் மட்டும் வீட்டில் இருப்பதாக யாரும் நினைக்க கூடாது என்று ஒரு நாடகம்............ நம்புவதற்கு முட்டாள் பொதுஜனம் நாமும்.............. மொத்தத்தில் பிரச்சினைக்குரிய ஈழ மக்களுக்கு 5 பைசா பிரயோஜனம் இல்லாத உண்ணாவிரதங்கள், போராட்டங்கள் , ஊர்வலங்கள், ராஜினாமா நாடகங்கள் .......... பாவம் அவர்கள்..............
/////////

Aravindh Raman - Auckland,நியூ சிலாந்து
19-மார்-201315:51:06 IST Report Abuse Aravindh Raman 2ஜீ அலை ஊழலில் தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்ற கலைஞர் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்தே ஆக வேண்டும். இல்லையேல் கனிமொழி, தயாளு அம்மாள் மீதும் ராசா மீதும் இறுக்கு பிடி விழும் என்று பலர் முன்னர் இங்கே கருத்து எழுதி இருந்தனர்.... இப்போ? ஒட்டி இருந்தால் பதவியையும் குடும்பத்தையும் பாதுகாக்க வெட்டி விட்டால் வெறும் நாடகம்.. நான் தி மு க அடிவருடியோ கருணாநிதி ஆதரவாளனோ அல்ல..
//////////////
anu - chennai,இந்தியா
19-மார்-201315:44:48 IST Report Abuse
anu இந்த மாணவர்கள் போராட்டத்தை கருணாநிதியின் நாடகத்தால் நீர்த்து போக செய்து இலங்கை தமிழருக்கு தன்னால் மட்டுமே விடிவு உண்டு என்ற பிம்பத்தை ஏற்படுத்தி நம்ப வைத்துவிடுவார். மாணவர்களின் போராட்டம் தி.மு.க, திருமா, சிமான் போன்றவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தது என்னவோ உண்மை. 9 வருடம் சுகத்தை அனுபவித்துவிட்டு இப்போது ஆதரவு வாபஸ். இலங்கை தமிழர்கள் இவர்களை நம்பும் வரை இவர்களின் அரசியல் வியாபாரம் களைகட்டும். அட ஏமாளிகளா 
///////////////
Saravana Kumar - Dallas,யூ.எஸ்.ஏ
19-மார்-201315:27:41 IST Report Abuse
Saravana Kumar பிரமாதம் தலைவரே இனி எப்பவும் இல்லன்னு சொன்னீக பாருங்க, அது தான் ராஜதந்திரம்... ப.ஜ.க கு மெசேஜ் சொல்லியாச்சு.. காங்கிரஸ் இனிமே வேண்டாம், நாங்க அடுத்த கூட்டணிக்கு தயார்... நீங்க நீங்க தான்... அணைத்து இராஜதந்திரங்களையும் கரைத்து குடித்து விட்டாய்ட நீ அ.தி.மு.க கு முன்னாடி வெளிய வந்து கூவிட்டீங்க இனிமே ஜே. ஜே ஏதாவது பண்ணியாகணும்.. என்னமோ போங்க.. 
///////////////
sethu - Chennai,இந்தியா
19-மார்-201315:19:40 IST Report Abuse
sethu நம்பாதீர்கள் தமிழா உலகத்தில் நீங்கள் யாரை வேணாலும் நம்புங்கள், கருணாவை நம்பிடாதீர்கள். குதிரைஏய் குப்புற தள்ளி குழியும் பார்த்தது வேறு யாரும் இல்லை. சட்சாத் இந்த கருணாதான். மன்மோகன் தான் பிரதமர். எப்படிவேனாலும் நீங்கள் நம்புங்கள். ஆனால் கர்ணா பின்னாடி போகணும்னு நம்பிடாதீர்கள். ஈழத்தில் நடந்ததை தமிழகத்திலும் நடத்தி அரசியல் செய்து விடுவார் இந்த நல்லவர்.
////////////////
Uthukkaattaan - Padmagiriswaram,இந்தியா
19-மார்-201315:12:16 IST Report Abuse
Uthukkaattaan ஐயா, தேர்தல் நெருங்கிவிட்டது. எல்லா பக்கமும் காங்கிரஸ் படுதோல்வியடையும் என பேசிக்கொள்கிறார்களாம். இதோ வெளியேறி விட்டார். பிஜேபி யும் பாராட்டி விட்டது. பலவகையில் மானத்தை விற்று எல்லா வழியிலும் முயன்று எங்கள் தன்மான தானை தலைவர் பிஜேபி யுடன் கூட்டணியமைத்து விடுவார். வாக்காளகள்தான் பேமானிகள். சொல்லமுடியாது. இந்துக்கள் பாபர் மசூதியை இடித்தது சரி அது காலத்தின் கட்டாயம் என்று தமிழ் தாத்தா ஹிந்தி அத்வானி தாத்தாவுடன் ஒரே மேடையில் கூடிய விரைவில் பேசுவார். காமெடியை ரசித்து தலையில் அடித்துக்கொள்ள தயாராகுங்கள்
//////////////////
Imran - Chennai,இந்தியா
19-மார்-201315:04:46 IST Report Abuse
Imran வெறும் அரசியல் நாடகம் மாணவர் போராட்டம் தான் இதுக்கு காரணம். வாபஸ் வாங்கினா மட்டும் என்ன நடக்க போகுது. என்னிக்கு தமிழ்நாடு பத்தி கவலை பட்டாங்க. இத்தாலி காரங்க 2 பேர சுட்டதுகு அவங்க தூதர அனுப்ப கூடாதுன்னு சொல்றாங்க. ஆனா 20000 மக்களை கொன்ன ராஜ்யபக்ஷ இவங்க சிவப்பு கம்பளம் விரிக்கிராங்க. இவனாக மட்டும் யோக்கியமா. ஞாயமா அவன் வரும் போதே இத பண்ணி இருக்கனும். இப்ப மாணவர் போராட்டம் ஆரம்பிச்ச பின்னாடி கூட இத பண்ணலேன்னா நாளைக்கு ஒரு ஓட்டு கூட விழாது. இது கூட ஒரு கேவலமான அரசியல் நாடகம் தான் - உண்மையான ஒரு தமிழ் நாடு பிரஜை மக்கள் உண்மையா நினைப்பது இப்படி தான்  

///////////////

Snake Babu - Salem,இந்தியா
19-மார்-201315:00:59 IST Report Abuse
Snake Babu "சிங்கம் களம் இறங்கிடுச்சி" சொல்லனும்னு ஆசைதான். ஆனா முடியாதே அவ்வளவுக்கு பாதிபடைஞ்சிருக்கோம், மறுபடியும் ஒரு பல்டி வந்தது. இனிமேல தி மு க வால எழுந்திருக்கவே முடியாது. தாத்தாவுக்கு அப்புறம்தான் மாற்றம் வரும்னு எதிர்பார்ப்பு இருக்குது. இப்பவும் ஒரு சந்தர்ப்பம். பார்ப்போம் பொறுத்திருந்து 
/////////////////
Srinivasan Dhakshnamoorthy - Malaysia,மலேஷியா
19-மார்-201314:53:50 IST Report Abuse
Srinivasan Dhakshnamoorthy தமிழக மக்களே ......உங்களை முட்டாள் ஆக்க இதோ கருணாநிதியின் மற்றும் ஒரு கபட நாடகம் ....ஜெயலிதா வரும் பொது தேர்தலில் எந்த கட்சிஉடனும் கூட்டனி கிடையாது என்று அறிவித்து விட்டார் ....கருணாநிதி கு தெரியும் தமிழகதில் இனி எந்த மடையனும் காங்கரஸ் கு ஒட்டு போட மாட்டன் என்று ....நாட்டில் மெல்ல மோடியின் அதரவு பெருகுவது தெரியும் ...அகவே தற்போது எந்த காரணமும் கிடைக்காததால்....ஈழ தமிழர்களின் பிரிச்சனையை எடுத்து மீண்டும் பதவிகளை பிடிக்க முயல்கிறார் ......கருணாநிதி அவர்களே உணர்ச்சிவசப்படும் சராசரி தமிழன் எப்போதும் போல ஏமாறுவான் என்று நினைகாதிர்கள் .....உங்கள் துரோக வரலாற்றை மறக்க மாட்டோம் .....நீங்கள் பதவி க்காக எதையும் செய்பவர் என்பதை எக்காலத்திலும் நினைவு கொள்வோம் .....நீங்கள் , உங்கள் குடும்பம் , உங்கள் மந்திரிகள் , உங்கள் கட்சி காரர்கள் செய்த அத்தனை யும் எங்கள் பிள்ளை களுக்கு சொல்லிவளர்ப்போம் .....உங்களை ஒருபோதும் எதிர்காலம் தவரிபோய் குட உங்களை நல்ல தலைவரை நினைக்க விடமாட்டோம்  
 ///////////
Arul - Chennai,இந்தியா
19-மார்-201314:44:06 IST Report Abuse
Arul கருணாவின் நாடகம் : கேள்வி: நாடாளுமன்றத்தில் நீங்கள் கேட்டபடி திருத்தங்களோடு தீர்மானம் கொண்டு வரப்பட்டால், உங்களுடைய தற்போதைய முடிவை மீண்டும் பரிசீலனை செய்வீர்களா? பதில்: அதற்கு நேரம் அதிகமாக இருக்கிறது. இன்று மாலை வரையிலே நேரம் இருக்கிறது, நாளைக்கும் இருக்கிறது, 21ம் தேதிக்கு முன்பும் இருக்கிறது. அதற்குள் நாடாளுமன்றத்தில் நாங்கள் எண்ணியவாறு இந்தத் தீர்மானம் திருத்தங்களோடு முன்மொழியப்பட்டு, விவாதத்திற்குக் கொண்டு வரட்டும்.
//////////////
Uma Shankar Umashankar - Tirupur,இந்தியா
19-மார்-201314:42:39 IST Report Abuse
Uma Shankar Umashankar மற்றும் ஒரு அரசியல் நாடகம். மத்திய அரசில் இருந்து வெளியேற இதுவே சரியான சந்தர்பம். மிகவும் சாதுர்யமான காய் நகர்த்தல். இது தான் கலைஞர் ஸ்டைல். அடுத்து கூடாரத்தை பி. ஜே.பி. இடம் நகர்த்த சரியான டைம் . அரசியல் ஒரு நாள் கிரிகெட்டை விட நல்லா தான் இருக்கு. பார்போம் அம்மாவா அய்யாவா. யார் பி.ஜே.பி. யுடன் கூட்டனி என்று. 
//////////////
இன்னும் இருக்குங்க... இதுவே பேர்தும்ன்னு நினைக்கிறேன்...

05 November, 2012

தினமலரில் அரசு செய்தியும், அதிர வைத்த கருத்துக்களும்.


 //////////// தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், தட்டுப்பாடின்றி குடிமகன்களுக்கு, "சரக்கு' வழங்கும் வகையில், "டாஸ்மாக்' நிர்வாகம், 40 சதவீதம் கூடுதலாக "சரக்கு'களை, கடைகளுக்கு அனுப்பி வருகிறது. தீபாவளி அன்று மட்டும், 125 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ////////// என்று தினமலரில் ஒரு ‌அரசின் செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது...


அந்த செய்தியை படித்த நான், அந்த செய்தியில் வாசகர்கள் தந்த சில கருத்துக்களையும் இங்கு பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்...

அவைகள் சிரிக்கும் படியும், சிந்திக்கும் படியும், சுவாரஸ்யமாக இருந்தது அவைகளில் நான் ரசித்தவைகள் மட்டும் கீழே....

//////////s.maria alphonse pandian - chennai , இந்தியா
04-நவ-201211:11:03 IST Report Abuse
s.maria alphonse pandian எதற்கெடுத்தாலும் புரட்சி தலைவியை குறை சொல்வதெற்கென்றே ஒரு கூட்டம்....தடையில்லா மின்சாரம் வழங்காவிட்டாலும் தடையில்லா மது வழங்குகிறாரே...அதை பாராட்டலாமே? கல் நெஞ்சுகாரர்கள் ...///////////////

//////p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா
04-நவ-201210:49:43 IST Report Abuse
p.manimaran சீக்கிரம் குடிச்சிட்டு சாவுங்கடா?? நாட்டில் மக்கள் தொகை குறையட்டும்.  ////////////

7malai - Chennai,இந்தியா
04-நவ-201209:46:21 IST Report Abuse
7malai பிள்ளைகளுக்கு 13 வகை உணவு வழங்கவேண்டுமானால் அப்பனிடம் இப்படி காசைப்பிடுங்கிதானே ஆகவேண்டும்.



AyyalurMagideshwaran - Muscat,ஓமன்
04-நவ-201209:15:00 IST Report Abuse
AyyalurMagideshwaran குடிச்சி குடிச்சி குடலெல்லாம் அரிச்சு, சந்துலயும் சகதிலயும் சாஞ்சு கெடந்து, மான மருவாதியெல்லாம் எழந்து, முடிவெடுக்க முடியாதபடி மூளையும் ஒருநாள் மக்கிப்போய் நீ சாகக்கிடக்க ரெண்டு நாளைக்கி முன்னாடியே தேர்தல் வரும்... அப்பவும் கூட நன்றிக்கடனா மீண்டும் இதே ஆட்சிக்கு ஓட்டுபோட்டுட்டு செத்துப்போவாயடா ஞானக்குடிமகனே...


SENTHIL KUMAR - MADURAI,இந்தியா
04-நவ-201208:41:00 IST Report Abuse
SENTHIL KUMAR (தீபாவளி அன்று மட்டும், 125 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது) வாவ் சூப்பர்.. இது ஒரு நல்ல இலக்கு உங்கள் இலக்கு நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திகிறேன்.ஓட்டு போட்ட குடிமக்களின் ஆசையை நிறைவேத்தும் முதல்வர் அம்மா அவர்களே நீர் வாழ்க. 


arun kumar - UK,யுனைடெட் கிங்டம்
04-நவ-201208:10:11 IST Report Abuse
arun kumar ஜனநாயகக் கடமையாற்ற வாரீர் குடிமகன்களே ...




s.maria alphonse pandian - chennai ,இந்தியா
04-நவ-201206:44:25 IST Report Abuse
s.maria alphonse pandian நல்ல வேலை...காந்தி பிறந்த நாளன்று கடைகளை மூட மத்திய அரசின் ஆணை உள்ளது...இல்லாவிட்டால் அன்றைக்கும் 125 கோடிக்கான இலக்கை நிர்ணயித்திருப்பார்கள்...இந்த "டாஸ்மாக்" ஆட்சியாளர்கள்...


"Karuthu" KANDASAMY - Singapore,சிங்கப்பூர்
04-நவ-201206:23:06 IST Report Abuse
தமிழனை தப்பவிடகூடதுன்னு "target" வச்சு அடிக்கிறான்யா..... ஆஹாஆ

saravanan - Tuas South Ave 06,சிங்கப்பூர்
04-நவ-201206:09:42 IST Report Abuse
saravanan இதுவும் அம்மாவின் ஓராண்டு சாதனையோ? தடையில்லா மின்சாரம் கேட்டா,நீங்க தடையில்லா மதுபானம் கொடுக்குறீங்க பெருமையா இருக்கு.குடிப்பவனை யாராலும் திருத்த முடியாது,குறைந்ததது அடுத்த தலைமுறையையும் சேர்த்து கெடுக்காமல் இருந்தால் போதும்.நீங்க செய்ற இந்த சாதனை இன்னும் பல குடிமகன்களை தமிழ்நாட்டுக்கு பெற்று தரும் என்பது என் கருத்து
ammaiyatimai - chennai,இந்தியா
04-நவ-201205:58:45 IST Report Abuse
ammaiyatimai அண்டா குண்டானவ அடகு வச்சு பத்தல பத்தல பத்தல மப்பு பத்தல. போத இறங்கி போச்சு பைத்தியம் புடிச்சி போச்சி என்ன செய்ய இப்ப......... அம்மா ஆயியம்மா விலையில்லா ஒரு கட்டிங் குடும்மா.................ஓம் கிரீம் கிலீம் மிடாஸ் ச்வாஹா..........புத்தி கெட்ட தமிழன் மரண குழிக்கு போஹா....

லாடு லபக்கு தாஸ்... - லாடு லபக்கூர், இந்தியா
04-நவ-201201:45:38 IST Report Abuse
லாடு லபக்கு தாஸ்... தீபாவளியன்று "சரக்கு&39 விற்பனை இலக்கு ரூ.125 கோடி என்பது போதுமானதாக இல்லை../// மேலும் முயற்சி செய்தால் 250 கோடி இலக்கை எளிதாக அடையலாம்..//

tamil Selvan - chennai,இந்தியா
04-நவ-201201:08:56 IST Report Abuse
tamil Selvan எல்லா மக்களுக்கும் விலையில்லா குவார்ட்டர் கொடுத்தா மின்சாரம் இல்லா நேரத்தில் கொசு கடி தெரியாமல் தூங்கலாம்,அரசின் சூழ்ச்சியாக கூட இருக்கலாம் டாஸ்மாக் விற்பனை அதிகரிக்கவே மின்வெட்டை அமல் படுத்துகிறார்கள். 

tamil Selvan - chennai,இந்தியா
04-நவ-201201:03:17 IST Report Abuse
tamil Selvan தமிழ்நாட்டில் எது தட்டுப்பாடு வந்தாலும் இவர்களுடைய மிடாஸ் கம்பெனி சரக்குக்கு மட்டும் தட்டுப்பாடே வராது.தீபாவளி வருது பிறகு கிறிஸ்துமஸ் ,புத்தாண்டு பொங்கல் எல்லாம் வருது என்ஜாய் பண்ணுங்க மக்கா.


தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-நவ-201202:57:28 IST Report Abuse
தமிழவேல் ஆனா சரக்கு தரலைன்னா குடிமகன்க கிட்டேருந்து 70 கோடி கறக்க முடியாது......

Sentamil karthik - namakkal to chennai,இந்தியா
04-நவ-201203:18:46 IST Report Abuse
Sentamil karthikஒழுங்கான நிர்வாகம் கொடுக்க கூடியவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் ( இதை இன்னொரு முறை படியுங்கள் )... // இதை தான் இதையே தான் நானும் சொல்கிறேன் ... எங்கு கேட்கிறார்கள் அவர்கள் கண்களுக்கு கருணா , ஜெயா தவிர மற்றவர்கள் தெரிவதில்லை ... திமுக அப்படி செய்தது என்றால் அதிமுக மட்டும் என்ன ஒழுங்கா ?? என்கிறார்கள் .. இரண்டும் பணம் தின்னி கழுகுகள் என்று யாவரும் நன்கறிவர் ... இருப்பினும் அவர்களுக்கே ஓட்டை மாற்றி மாற்றி போடுவார்கள் ..நேர்மை , மனசாட்சி , தன்மானம் போன்றவை முதலில் இந்த கற்றோர் சபையான தினமலர் வாசகர்களிடமே இல்லை .. அப்பறம் எப்படி மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது ???...

அந்த பக்கத்தை பார்க்க

//////////....இது என்னுடைய கருத்து....////////

ஒரு நாடும்  அந்த நாட்டின் அரசும் மக்களுக்கு எது நல்லதோ எது அவசியமோ அதில் தான் அதிக அக்கறை செலுத்த வேண்டும். நாட்டில் இருந்து போதைப்பழக்கத்தை அறவே நீக்கிவிடமுடியாது அது சாத்தியமில்லாத விஷயம்தான். ஆனால் அதற்கான முயற்சியை துவங்க வேண்டியது ஒரு அரசின் கடமை. இலைறை காய் மறைவாக இருக்க வேண்டிய விஷயத்தை இப்படி பொதுவான விஷயம்போல் ஆக்கியிருப்பதுதான் வேதனைக்குறியதாக இருக்கிறது.

குடியில்லாத சமுதாயம் செய்வோம்.....
Related Posts Plugin for WordPress, Blogger...