கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

02 December, 2013

இனிமேல் யாரும் இப்படி சொல்லாதீர்கள்..!

 
 

எங்களை இல்லாதவர்கள் 
என்று சொல்லாதீர்கள்...
எப்போதும் குறையாத வறுமையை
வைத்துக்கொண்டிருக்கிறோம் நாங்கள்...!

எங்களை இயலாதவர்கள்
என்று சொல்லாதீர்கள்....
அடுத்தவருக்கு தெரியாமல்
தனித்து அழமுடியும் எங்களால்..!

எங்களை வீரமற்றவர்கள்
என்று சொல்லாதீர்கள்...
பசியை எதிர்த்து போராடும்
தைரியம் இருக்கிறது எங்களிடம்..! 

எங்களை திக்கற்றவர்கள்
என்று சொல்லாதீர்கள்....
எட்டுத்திக்கும் சூழ்ந்துக்கொண்டிருப்பது
எங்கள் வறுமை ஜாதிதான்..!

எங்களை பாதுகாப்பில்லாதவர்கள்
என்று சொல்லாதீர்கள்...
எப்போதும் எங்களுக்கு சூன்யமாய்
குடைபிடித்துக்கொண்டிருக்கிறது வறுமை கோடு...
 
 

9 comments:

  1. சோகம் நெஞ்சை பிழிகிறது உங்க கவிதையில்

    ReplyDelete
  2. வணக்கம்
    மனதை நெருடியது.. அருமை வாழ்த்துக்கள்

    புதிய பதிவாக என்பக்கம்-பொங்கல் தினத்தை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப்போட்டி..... வந்து ஆதரவு நல்கும்.....

    http://2008rupan.wordpress.com/2013/12/02/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%af%
    81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d/

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. /// எங்கள் வறுமை ஜாதிதான்..! /// கலங்க வைத்தது...

    கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

    ReplyDelete
  4. வலி நிறைந்த வாசமிக்க கவிதை.

    ReplyDelete
  5. ஹ்ம்ம்ம் வருந்த வைக்கும் கவிதை..

    ReplyDelete
  6. கருத்து, ஆழமான, சோகமான கவிதை!

    ReplyDelete
  7. நீண்ட நாளுக்கு பின் நல்ல கவிதை பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்! தொடருங்கள்!

    ReplyDelete
  8. உள்ளத்தை தொட்டுச் சென்ற கவிதை அருமை

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...