கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label கற்பனை. Show all posts
Showing posts with label கற்பனை. Show all posts

26 March, 2018

நிசப்தங்களற்ற மௌனங்கள்....


அலமாரி முழுவதும்
நிரம்பி வழிந்தது
கவிதை புத்தகங்கள்....

மனமோ கனகனத்தது
அடிவயிற்றில் 
இருவேளை பசி...

தூரத்தில் தெரிந்தது
சந்திரோதயம்....

நீரின்றி
வாடிக்கொண்டிருந்தது
அல்லி மலர்...

காலையில் 
உயிர்களை கொல்வது 
பாவம் என்றான்...

மாலையில் 
தூண்டிலுடன்
அஹிம்சைவாதி...

கேட்போருக்கு சொல்கிறேன்
சமுத்திரத்தின் ஆழம் 
இவன் சோகம்...

வானத்தின் அகலம் 
இவன் துயரம்...

இயற்கையே....

உறவுகளை 
மரணிக்கச்சொல்
உணர்வுகளை வேண்டாம்...

வறுமையை 
மரணிக்கச்சொல்
வயிறுகளை வேண்டாம்...

காலமே....
எங்களை மன்னித்து விடு
நாங்கள் மனிதர்கள் அல்ல
மண் பொம்மைகள்...

பூமியின் சுழற்சியை 
புரிந்துக் கொள்ள
முடியவில்லை..

வாழ்க்கையே... 
நீ எதில் உயிர்வாழ்கிறாய்
விடியலிலா....
அஸ்தமனத்திலா...

உலகம் 
இவ்வளவுதான் 

நிலவே 
நீ பூமிக்கு 
ஒளி கொடுக்கிறாய்....

பூமியோ 
உனக்கு இருள் கொடுக்கிறது...

பகைமையை 
மறந்துவிடு முற்செடியே
உன்னை அலங்கரிக்கவே
காத்திருக்கிறது  ரோஜா...

உலகம் 
மனிதர்களால்
நிறைந்திருக்கிறது...

மனிதர்கள்
சப்தங்களால் 
நிறைந்திருக்கிறார்கள்....

அதனால்தான்
யாருக்கும் கேட்பதில்லை...
என் மௌனங்கள்....


★★★★★★★★

வறுமை கால
 நினைவுகளோடு....

கவிதை வீதி சௌந்தர்...
(2002 டைரியிலிருந்து....)

09 March, 2018

நாமும் ஒரு காரணம் தான்.....







நிகழ்காலத்தோடு 
ஒட்டமறுத்து
எதிர்காலத்திற்குள் புகுந்து
சிறகிழந்து சிதைகிறது
மனசு...!


பயணிக்கும் வழிகளிலே 
வடிய வைத்துவிட்டோம்
உயிரணுவில் ஒட்டியிருந்த
வாழ்வை ரசிக்கும் 
தன்மையை...!


கோடி ஆண்டுகள் 
வாழப்போவதில்லை
தெரிந்தும் தெளிய மறுக்கிறோம்
இது நிச்சயமில்லாத 
வாழ்க்கை...!

 
 இனத்தை இனமழிக்கும் 
ஈன வரலாறு....
எந்த விலங்கிலும் இல்லை
இதில் விதிவிலக்காய்
மனிதன்...!


ஓடிமுடித்து 
திரும்பிப் பார்த்தால்
நம்மைப்பார்த்து சிரித்துவைக்கிறது
வீணாய் விட்டுவந்த 
தடங்கள்...!

 
சாய்ந்து ஓடும் 
இந்த புவியின் அச்சில்
எதையும் பொறுமையாய் கையாள
கைக்கொடுப்பதில்லை 
காலமும் நேரமும்...!

 
நாகரீகமும் பேராசையும் 
கைகோர்த்து கொண்டு
இன்னும் வேகமாய் 
இயக்குகிறது
இந்த உலகை...!


நினைவில் 
கொள்ளுங்கள்...


இழந்துவிட்டோமென 
கண்ணீர்வடிக்கும்
ஒவ்வொறு தருணங்களும்
நாம்  
உதாசினப்படுத்தியவையே...!

05 August, 2013

இப்போது பெயரில் என்ன இருக்கிறது...! /// 700 -வது பதிவு



பொய் சொல்வதையே 
பிழைப்பாக கொண்டிருந்தார்
அடுத்ததெரு அரிச்சந்திரன்....


வசரம் என்று உதவிகேட்டால்
தவறாமல் செய்கிறார் பத்துவட்டிக்கு
எங்க ஊர் காந்தி...!


டுத்தவன் நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டு 

அத்தனையையும் எனக்கே என்கிறார்
கடைசி தெரு புத்தன்...!


ன்வீட்டு விளக்கொளி

அடுத்தவர் வீட்டில் விழுகிறது என்பதற்காக
விளக்கை அணைத்தார் பக்கத்துவீட்டு பாரி...


ருக்கென்றால் உபதேசித்து
தனக்கென்று வந்தபோது கருவருத்தார்
கலியுகக் கண்ணன்...

 ற்போது பெயரில் ஒன்றும் இருப்பதில்லை
அழைக்கவும்... 

அடையாளம் சொல்லவும் தவிர...


கவிதைவீதியின்  -வது பதிவு....

ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி..!

Related Posts Plugin for WordPress, Blogger...