கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

26 March, 2018

நிசப்தங்களற்ற மௌனங்கள்....


அலமாரி முழுவதும்
நிரம்பி வழிந்தது
கவிதை புத்தகங்கள்....

மனமோ கனகனத்தது
அடிவயிற்றில் 
இருவேளை பசி...

தூரத்தில் தெரிந்தது
சந்திரோதயம்....

நீரின்றி
வாடிக்கொண்டிருந்தது
அல்லி மலர்...

காலையில் 
உயிர்களை கொல்வது 
பாவம் என்றான்...

மாலையில் 
தூண்டிலுடன்
அஹிம்சைவாதி...

கேட்போருக்கு சொல்கிறேன்
சமுத்திரத்தின் ஆழம் 
இவன் சோகம்...

வானத்தின் அகலம் 
இவன் துயரம்...

இயற்கையே....

உறவுகளை 
மரணிக்கச்சொல்
உணர்வுகளை வேண்டாம்...

வறுமையை 
மரணிக்கச்சொல்
வயிறுகளை வேண்டாம்...

காலமே....
எங்களை மன்னித்து விடு
நாங்கள் மனிதர்கள் அல்ல
மண் பொம்மைகள்...

பூமியின் சுழற்சியை 
புரிந்துக் கொள்ள
முடியவில்லை..

வாழ்க்கையே... 
நீ எதில் உயிர்வாழ்கிறாய்
விடியலிலா....
அஸ்தமனத்திலா...

உலகம் 
இவ்வளவுதான் 

நிலவே 
நீ பூமிக்கு 
ஒளி கொடுக்கிறாய்....

பூமியோ 
உனக்கு இருள் கொடுக்கிறது...

பகைமையை 
மறந்துவிடு முற்செடியே
உன்னை அலங்கரிக்கவே
காத்திருக்கிறது  ரோஜா...

உலகம் 
மனிதர்களால்
நிறைந்திருக்கிறது...

மனிதர்கள்
சப்தங்களால் 
நிறைந்திருக்கிறார்கள்....

அதனால்தான்
யாருக்கும் கேட்பதில்லை...
என் மௌனங்கள்....


★★★★★★★★

வறுமை கால
 நினைவுகளோடு....

கவிதை வீதி சௌந்தர்...
(2002 டைரியிலிருந்து....)

4 comments:

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...