கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

24 March, 2018

கோடையை சமாளிக்கலாம் வாங்க... பகுதி 1


கோடை வருவதற்கு முன்பே வெயில் வறுத்தெடுக்க ஆரம்பிச்சிருச்சு. கோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ் இங்கே....


தினமும் உணவில் பச்சை வெங்காயம், வெள்ளரி, வாழைத்தண்டு, மோர், மற்றும் புதினா ஆகியவற்றைத் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்...


இளம் வேப்பிலை, துளசி ஆகியவற்றை காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு, நீரில் கலந்து குளிக்கலாம். வியர்க்காமல் இருப்பதோடு, சரும வியாதிகளும், கோடை வெயில் கொப்பளங்களும் வராது.


மாதுளம் இலையை அரைத்துப் பூசிக் குளித்தால், சூட்டுக் கட்டிகள்,
உடற் வியர்க்குரு ஆகியன  நீங்கும்.


நா வறட்சி தணிய கொத்தமல்லி, கசகசா இரண்டையும் சிவக்க வறுத்து, அவற்றுடன் பனைவெல்லம், ஏலக்காய்பொடி சேர்த்து கஷாயம் செய்து அருந்தினால் தாகம் தீர்வதோடு பித்தமும் நீங்கும்.


வெளியே கிளம்பும்போது நெல்லிக்காய் ஒன்றிரண்டை வாயில் போட்டு மெல்லுங்கள். நாக்கு உலர்ந்து போகாமல் இருக்கும்.

உச்சி வெயிலில் வெளியே போகும்போது, ஒரு துண்டு எலுமிச்சம் பழத்தையோ, அல்லது ரோஜாப்பூவையோ கையில் கொண்டு செல்லவும். மயக்கம் வருவது போல் இருந்தால், முகர்ந்து பார்த்துக் கொள்ளவும்.


ஒரு நாள் விட்டு ஒருநாள் இரவு வெந்தயத்தை மோரில் ஊறவைத்து அரைத்து மறுநாள் காலை தலைக்குப் பூசிக் குளித்து வந்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.


இளம் பச்சை நிற கர்ட்டன்களை வீட்டின் ஜன்னலில் தொங்க விடுவது குளிர்ச்சி தரும்.


உடலின் வியர்வையை வெளியேற்றக்கூடிய பருத்தி துணிகளால் ஆன ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

மோரை அடிக்கடி குடிப்பதால் வெயிலினால் ஏற்படும் நரம்புத் தளர்ச்சி சரியாகும்...

2 comments:

  1. பயனுள்ள பகிர்வு நண்பரே

    ReplyDelete
  2. கோடை டிப்ஸ் பயனுள்ள தகவல்கள்! நன்றி!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...